Thursday, August 11, 2016

ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'

ஆக.9-ல் அன்றும் இன்றும்: ரயில் கொள்ளையில் ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'


தலைப்புச் செய்தியாகி இருக்கிறது கடந்த 9-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

இதுபோல் ஒரு ரயில் கொள்ளை 91 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. இந்திய வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது அது. 'ககோரி சதி' அப்படித்தான் அந்த நிகழ்வு இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி எனும் இடத்தில் அந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது. பின்னாளில் ககோரி புரட்சி என பெயர் வழங்கப்பட்டது.

கொள்ளை அரங்கேற்றப்பட்டது எப்படி?

1925 ஆகஸ்ட் 9 உத்தரப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்து லக்னோ நகருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் பிரிட்டிஷ் கருவூலத்தின் பணம் அடங்கிய பெட்டியும் இருந்தது. அந்தப் பெட்டியில் ரூ.8000 இருந்தது. அதை எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். இந்துஸ்தான் புரட்சிகர கூட்டமைப்பின் (Hindustan Republican Association) உறுப்பினர்களில் சிலரே அந்தத் திட்டத்தை தீட்டினர். அஸ்பக்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத் ஆகிய மூன்று இளைஞர்களும் அந்த சதித் திட்டத்தை தீட்டினர்.

அதன்படி பணப் பெட்டியுடன் சென்ற அந்த ரயிலில் ஏறிய புரட்சிப் படையினர் துப்பாக்கி முனையில் ரயில் ஓட்டுநரையும் கார்டையும் சிறைப்பிடித்தனர். ரயிலில் இருந்து ரூ.8000-த்துடனான பணப் பெட்டியையும் மிக நேர்த்தியாக கொள்ளையடித்துச் சென்றனர்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சேலம் - சென்னை ரயில் கொள்ளை சம்பவத்தை ககோரி கொள்ளை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி நிலைத்தகவல்கள் பதியப்படுவதால் ககோரி புரட்சியை நினைவுகூர்வது அவசியமாகிறது.

ஆனால் இரண்டு கொள்ளை சம்பவங்களின் நோக்கமும் நிச்சயமாக வெவ்வேறு.

தமிழில்: பாரதி ஆனந்த்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...