Thursday, August 4, 2016

புதிய எப்1எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஆப்போ


`ஆப்போ எப்1எஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று மும்பையில் ஆப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

தற்போது ஸ்மார்ட்போன் உப யோகிக்கும் அனைவரும் வெவ் வேறு விதமாக செல்பி எடுத்துக் கொள்வது பிரபலமடைந்து வரும் சூழலில் ஆப்போ நிறுவனம் எப்1எஸ் ஸ்மார்ட்போனில் செல் பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு கேமரா வசதிகளை மேம்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை `செல்பி எக்ஸ்பெர்ட்’ என்றே ஆப்போ நிறுவனம் கூறுகிறது. 16எம்பி பின்பக்க கேமரா வசதியுடன் கைரேகை அடையாள வசதியும் இதில் உள்ளது. மேலும் எப்1எஸ் ஸ்மார்ட்போனில் `பியூட்டிபை 4.0’ என்ற புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சரியாக துல்லியமாக செல்பிகளை எடுக்கமுடியும்.

5.5 அங்குல தொடுதிரை வசதி யும், 3ஜிபி ராம் மற்றும் 32ஜிபி ராம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்டா கோர் பிராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3075 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக் கிறது.

கேமரா தொழில்நுட்பத்தில் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஆப்போ நிறுவனம் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன் சந்தையிலும் முன்னணியில் இருந்து வருகிறது என்று ஆப்போ நிறுவனத்தின் சர்வதேச துணைத்தலைவர் மற்றும் ஆப்போ இந்தியா தலைவருமான ஸ்கை லீ தெரிவித்தார். மேலும் எப்1எஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு போட்டாகிராபிக் தொழில்நுட் பத்தை கொண்டிருக்கிறது. செல்பி எடுப்பதற்குரிய வசதிகள் இந்த போனில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

முன்பக்கத்தில் ஸ்மார்ட்போன் உரிமையாளர் தனது முகத்தை காட்டிவிட்டால் போதும் 0.22 விநாடிகளில் இந்த எப்1எஸ் ஸ்மார்ட்போன் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு ஸ்மாட்ர்போனை திறக்கச் (unlock) செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...