Sunday, June 28, 2015

ரயிலில் 'இ - டிக்கெட்' எடுக்கஇனி ஆதார் எண் அவசியம்


முராதாபாத்:'ரயில் பயணத்திற்கான இ - டிக்கெட்டு களை, ஆன் - லைனில் பதிவு செய்வதற்கு அடையாளமாக, ஆதார் அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லையெனில், டிக்கெட் பதிவு செய்ய முடியாது' என்று ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.ஆன் - லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 'ஆதார் எண் இல்லை என்றால், ஆன் - லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது' என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.இ - டிக்கெட் பதிவு செய்ய விரும்பும் பயணி, ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், தன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவை பரிசீலித்த பின், நுகர்வோருக்கு 'பாஸ்வேர்டு'வழங்கப்படும். இதை பயன்படுத்தி,
டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...