Saturday, April 29, 2017

பாரதிதாசன்

Bharathidhaasan

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

UGC orders audit of 10 central universities

Each committee will audit two universities and submit a report in a month.

The UGC has ordered an audit of 10 central universities at the behest of the HRD Ministry to probe complaints of financial, administrative and academic irregularities.
The higher education regulator set up five committees on April 25 to conduct an “academic, research, financial and infrastructure audit” of Aligarh Muslim University (AMU), Pondicherry University, Allahabad University, Hemwati Nandan Bahuguna Garhwal University in Uttarakhand, Central University of Jharkhand, Central University of Rajasthan, Central University of Jammu, Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya in Wardha, University of Tripura and Hari Singh Gour University in MP.
Each committee will audit two universities and submit a report in a month.
AMU and the Pondicherry University will be inspected by a panel with IIT Madras professor Shripad Karmalkar, Maharshi Dayanand Saraswati University VC Kailash Sodani, Guwahati University professor Mazhar Asif and professor Sankarshan Basu of IIM Bangalore as members.
Indian Council of Philosophical Research chairman S R Bhatt, Delhi University professor Muneesh Kumar, management expert Rakesh Mohan Joshi, professor Ganesh Kumar N of IIM Indore and retired bureaucrat Vijay Kumar Gupta have been asked to audit the central universities of Jharkhand and Rajasthan.
Audit reports of Allahabad University and Hemwati Nandan Bahuguna Garhwal University will be submitted by a panel
comprising Gautam Desiraju of IISc Bangalore, DU professor Prakash Singh, JNU professor Amita Singh and professor G. Sabarinathan of IIM Bangalore, among others.
The Central University of Jammu, Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya, the University of Tripura and Hari Singh Gour University will be inspected similarly by two panels.

NEET: Medical entrance server was hacked, two held, say cops

Raids are also being held in Delhi, Bengaluru, Bihar and other cities to nab the rest of the accused, which include some doctors, police said.

Written by Mahender Singh Manral | New Delhi | Published:April 29, 2017 4:44 am

With the arrest of two people, Delhi Police have cracked a case wherein computer servers were allegedly hacked during the National Eligibility and Entrance Test (NEET), held to admit students into postgraduate medical courses in December, 2016. Raids are also being held in Delhi, Bengaluru, Bihar and other cities to nab the rest of the accused, which include some doctors, police said. Police said the arrested persons have been identified as Abhishek Singh, a native of Varanasi, and Atul Vats, a native of Patna.

“Police received information on January 20 that some people cracked the online medical entrance examination, held between December 5 and December 13, after hacking the servers. With the help of technical surveillance, police identified the accused and teams were formed to unearth the conspiracy,” police sources said, adding that a case has been registered following a complaint by Inspector Ashish Kumar, who was the leading the investigation team before Inspector Lokendra Chauhan took over.

The two arrests were made on April 10 and the men were taken into police custody for 10 days. Explaining the modus operandi of the gang, police said they charged a huge amount of money from aspirants after assuring them of good ranks in the NEET postgraduate examination.

“The accused zeroed in on aspirants and struck a deal with them after taking a hefty amount. Vats met a person looking after the software used for the examination and roped him in. Singh, meanwhile, asked some doctors for help. The doctors would sit in a hotel in Dwarka and take the exam from there,” a senior officer said.

“On the day of the examination, the candidate at the examination centre would be able to send the questions to the doctors as the servers were compromised. The paper was solved by experts sitting in a hotel in Dwarka, who would send the answers back to them,” an officer said.

“Since the exam was computer-based, an agency from the US providing Educational Testing Services is being roped in to unearth the larger conspiracy,” the officer said

NO ONE CAN COMPEL A WOMAN TO LOVE SAYS SUPREME COURT


காஷ்மீர் இளைஞர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்தணும்: சுப்ரீம் கோர்ட்

பதிவு செய்த நாள் 29 ஏப்
2017
05:22



புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தும் மாணவர்கள், வன்முறையை கைவிட வேண்டும்; கல்லுாரிகளுக்கு திரும்ப வேண்டும். அப்போது மட்டுமே அமைதி திரும்பும்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுரை கூறியுள்ளது.

வழக்கு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கு எதிராக, பிரிவினைவாத அமைப்புகள் போராட்டங்களை துாண்டி வருகின்றன. பல்வேறு இடங்களில், வீரர்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 'அங்கு, பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். வீரர்கள், பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஜம்மு - காஷ்மீர் மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஒத்துழைப்பு:

இந்த வழக்கு நேற்று, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப, அரசு மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துவதை, மாணவர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.வன்முறையை கைவிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு திரும்ப வேண்டும். அரசு பேச்சு நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் கட்சிகளுடன் பேச்சு :

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.அப்போது அவர், கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம், பிரிவினைவாத அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்த முடியாது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் படை :

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி பெண்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த, பெண்கள் மட்டுமே உள்ள, துணை ராணுவ படை பிரிவை, அங்கு அனுப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வினோத் கன்னா இறுதிச்சடங்குக்கு வராத இளம் நடிகர்கள் மீது ரிஷி கபூர் சாடல்!

By எழில்  |   Published on : 28th April 2017 04:32 PM
rishi1

பிரபல ஹிந்தி நடிகரும், மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் வியாழக்கிழமை காலமானார். திரைத் துறையில் மட்டுமன்றி பொது வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய வினோத் கன்னாவின் மறைவு, அவரது ரசிகர்களையும், தொகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயோதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையொன்றில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வினோத் கன்னா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை காலை வினோத் கன்னாவின் உயிர் பிரிந்தது. மறைந்த வினோத் கன்னாவுக்கு கவிதா கன்னா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று மாலை வினோத் கன்னாவுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அதில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்ட மூத்த நடிர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுகுறித்து ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியதாவது:
அவமானகரமானது. இந்தத் தலைமுறையின் எந்தவொரு நடிகரும் வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் அவர் பணிபுரிந்துள்ளார். மரியாதை செலுத்த இந்தத் தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நான் இறந்தபிறகும் இதுபோன்ற சூழலுக்குப் பழகவேண்டும். இன்றைய நட்சத்திரங்கள் மீது கோபமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

NEWS TODAY 2.5.2024