Saturday, October 27, 2018

மாநில செய்திகள்

திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளிடம் துப்பாக்கிமுனையில் 150 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை



திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:02 AM
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மனைவி சம்சாத்பேகம்(வயது 45). தமிமுன் அன்சாரி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சம்சாத்பேகம் மற்றும் அவரது மகள் தமிமுன் யாஸ்மின்(18) ஆகிய இருவரும் பொதக்குடியில் உள்ள வீட்டில் இருந்து வருகின்றனர்.

நேற்று மதியம் சம்சாத் பேகம், மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்து கதவை தட்டினர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டினர்

சம்சாத்பேகம் கதவை திறந்து யாரென்று கேட்பதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அவரை தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர். நிலைமையை உணர்ந்த சம்சாத்பேகம் சத்தம் போடுவதற்குள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி சம்சாத்பேகம் மற்றும் மகள் தமிமுன் யாஸ்மின் ஆகிய இருவரையும் சத்தம் போடக்கூடாது, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பீரோ இருக்கும் இடத்தை காட்டச்சொல்லி அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து போன சம்சாத்பேகம் பீரோ இருக்கும் இடத்தை காட்டியுள்ளார்.

150 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் கொள்ளை

அவரிடமிருந்து பீரோவின் சாவியை பறித்துக்கொண்ட மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதன் உள்ளே சம்சாத்பேகம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள், தாய்-மகள் இருவரையும் வீட்டிற்குள்ளேயே தள்ளி விட்டு கதவை சாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் குறித்த படங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

வலைவீச்சு

கொள்ளை தொடர்பாக சம்சாத்பேகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூத்தாநல்லூர் போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடீர் ஆய்வு




சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சதாசிவம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:11 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரம், காரிப்பட்டியை சேர்ந்த தனம் ஆகிய இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வார்டில் மேலும் சிலர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கென்று சேலம் மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ள தனி அதிகாரியும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனருமான சதாசிவம் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பன்றிக்காய்ச்சலுக்கான போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது டீன் ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து இணை இயக்குனர் சதாசிவம் கூறும் போது, ‘சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்காக தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இவர்களில் 50 பேர் வரை உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு தற்போது யாரும் சிகிச்சை பெற்று வரவில்லை. பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்‘ என்றார்.
மாவட்ட செய்திகள்

சேலையூரில் 2 நாள் நடக்கிறது: பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்று பொருள் கண்காட்சி





பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது.

பதிவு: அக்டோபர் 27, 2018 04:27 AM
தாம்பரம்,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமையும்) சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.


இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

விழிப்புணர்வு கண்காட்சி

தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 1-1-2019 முதல் தடைவிதித்து உள்ளது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடைசெய்வது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப் புணர்வு கண்காட்சி நடத்த முடிவு செய்து உள்ளது.

இன்றும், நாளையும் நடக்கிறது

அதன்படி தாம்பரம் நகராட்சி சார்பில், சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள் பயன்படுத்துவது குறித்த 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்றுபொருள் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளான துணி, சணல் பை, பாக்குமட்டை, மக்காச்சோளம், காகித கூழ் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளை கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் பார் வைக்காக வைக்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

மக்கும் குப்பைகளை உரமாக்குவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கவும், குப்பைகளை அரைக்கும் எந்திரங்களின் பயன்பாடு, வீடுகளில் குப்பைகளை உரமாக்கும் செயல்முறைகள் குறித்தும் இந்த கண்காட்சியின்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

உயர்ந்த மனிதருக்கு உயரமான சிலை




இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார்.

அக்டோபர் 27 2018, 04:00

இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார். அவர் வேறு யாருமல்ல, ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் தான். அவருடைய பிறந்தநாள் 1875–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ந் தேதி ஆகும். 2013–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி அவரது பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி உலகிலேயே மிக உயரமான சிலையை அவருக்கு அமைக்கும் முயற்சியில் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளில் அந்த சிலை அமைக்கப் பட்டு, வருகிற 31–ந் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று சிலை திறப்பு விழாவும் நடக்கிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையே தன் வாழ்க்கை என்று வாழ்ந்தார். சுதந்திரத் துக்கு பிறகு, இந்தியா ஏக இந்தியாவாக இல்லாத நேரத்தில், ஒருங்கிணைந்த இந்தியாவாக ஆக்கிய பெருமை சர்தார் வல்லபாய் படேலையே சாரும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், துணை பிரதமராகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். நாட்டு வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றினார். அந்தநேரத்தில் இந்தியா ஏக இந்தியாவாக இல்லை. 565 சமஸ்தானங்கள் நாட்டில் ஆங்காங்கு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தன. வல்லபாய் படேல் அந்த சமஸ்தானங்களை எல்லாம் இந்தியாவோடு சேர்க்க மிகவும் பாடுபட்டார். ‘ஆடுகிற மாட்டை ஆடி கறக்கவேண்டும், பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும்’ என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப, பேச்சுவார்த்தை மூலமாகவும், போரிட்டும் அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவோடு ஒன்றிணைத்து ஏக இந்தியாவை உருவாக்கினார். இதனால்தான் அவரை இன்றளவும் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று போற்றுகிறது, புகழ்கிறது. ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் தியாகங்கள், அயராத பணிகள், உரியமுறையில் அங்கீகாரம் பெறவில்லை என்பது ஒரு பெரிய மனக்குறைவுதான்.

1950–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி காலமான சர்தார் வல்லபாய் படேலுக்கு, 1999–ம் ஆண்டுதான் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இப்போது பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மிக சரியான அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். குஜராத் மாநிலத்தின் ரத்த நாளமாக விளங்கும் நர்மதா ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்பது வல்லபாய் படேலின் கனவாகும். அங்கு அந்த அணை கட்டப்பட்டு ‘சர்தார் சரோவர் அணை’ என்று பெயரிடப் பட்டுள்ளது. அந்த அணையில் இருந்து 3.2 கி.மீட்டர் தூரத்திலுள்ள ஆற்று தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் மட்டும் 600 அடியாகும். பீடத்தின் உயரத்தையும் சேர்த்தால் 787 அடியாகும். ரூ.3,000 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப் பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு, செய்த தியாகங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கிறது. நிச்சயமாக அவரைப்பற்றி அனைவருக்கும் தெரிவிக்க பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாறு இந்தியா முழுவதிலும் சேர்க்கப்படவேண்டும். அதுவே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாக இருக்கிறது.
DB Jain College students protest against termination of two professors
The two professors, who had demanded an increment and better treatment, alleged that the college management unfairly dismissed five more faculty members earlier this year.

Published: 25th October 2018 07:47 AM |

Express News Service

CHENNAI: Around 100 students from DB Jain College in Thoraipakkam staged a sit-in protest on Wednesday after the management decided to terminate the services of two professors from the Commerce Department. Initially, the two professors sat outside the staff room in the morning and were soon joined by other staff and tens of students.

“All students are fond of the teachers. The college should not let them go. They have been terminating good faculty members unnecessarily. Students suffer because of this,” said a final-year student from the department, on condition of anonymity.

The two professors, who had demanded an increment and better treatment, alleged that the college management unfairly dismissed five more faculty members earlier this year. “Even after working for years, we still get a very low salary. When we asked for increment, they asked us to resign. They stated that we worked against the management,” said T Sivakumar, one of the two professors.


He added that the college asked them to tender an apology for working against the management. “I told them that I would sign an apology for asking for increment,” he rued.G Kothandaraman, the other professor who was fired, said that the college charged exorbitant fees from students even though it was government-aided. “Students pay nearly `30,000 each year. Whenever we take up these issues with the management, they threaten to dismiss us,” he said.

M Sakthivel Murugan, vice-principal of the college, said that the teachers were fired as they instigated students to protest and added, “the management has any right to terminate at any point of time giving one month’s salary.” He said that the management would officially issue the termination orders to both staff soon.
Expelled AIADMK leader Sasikala, Ilavarasi now officially students of Bangalore University

Expelled AIADMK leader V K Sasikala and her niece J Ilavarasi have both been officially registered for Bangalore University’s distance education course.

Published: 26th October 2018 10:04 AM 



V K Sasikala (File | EPS)

By Express News Service

BENGALURU: Expelled AIADMK leader V K Sasikala and her niece J Ilavarasi have both been officially registered for Bangalore University’s distance education course. As Ilavarasi was to go on parole, the authorities of the Bangalore University Distance Education department advanced their admission schedule from Saturday to Thursday and visited Parappana Agrahara Central Prison to complete the procedures.


Speaking after completing the admission process, Bangalore University’s Director of Distance Education department Professor B C Mylarappa said, “We received information from jail authorities that Ilavarasi was expected to go on parole. So, we visited the prison Thursday morning and completed the admission process for a certificate course in Kannada.” Sasikala had convinced Ilavarasi to get enrolled in the course with her. “Ilavarasi expressed her interest to join the course and we have completed the admission process for both of them,” said Mylarappa. With this, Sasikala and Ilavarasi have officially become students of Bangalore University’s correspondence course.

“Both were happy that they are enrolling in the course and we informed them that we will provide them with the study material and the teacher would come to the jail and teach them during contact classes,” said Mylarappa. However, for another 257 candidates who are also jail inmates, the university is yet to complete the admission process for distant education, which is to be done on Saturday.
A Facebook post helps a man reunite with his family

CHENNAI, OCTOBER 27, 2018 00:00 IST




Back in the fold:Devendra Dyan (centre) outside Madipakkam police station with his family and rescuers. 

Resident of Odisha had been in state of shock after he was cheated by an agent in Kerala


A man who was picked up by the police was reunited with his family in Odisha after he was identified through Facebook. A policeman at the Madipakkam police station posted on his Facebook seeking information about a man who was unable to furnish any detail about himself, but for his name.

Initially, the police suspected him to be a bike thief and during interrogation he gave his name as Devendra Dyan.

The police then ran a search on social networking sites like Facebook where they found his profile. They then put out a post requesting information about him. Soon, a man by name Chandrashekar confirmed his identity and gave the police Devendra’s Odisha address and telephone number. His parents were contacted, a police source said. It came to light that Devendra, an ITI-qualified personnel, went to Kerala in search of a job, where he was reportedly cheated by an agent.

He made away with his money and certificates. Unable to overcome this shock, Devendra had become mentally disturbed, the police said. They are unsure of how Devendra reached Chennai.

When Chandrashekar, along with Devendra’s uncle from Andhra Pradesh came to the police station on Wednesday, he was handed over to his uncle after completing the formalities, police said.

NEWS TODAY 2.5.2024