Sunday, April 26, 2015

விதிமுறையும் நடைமுறையும்!

Dinamani

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தார்மிக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், செயல்பாடுகளையும், சட்டம் போட்டும், உத்தரவு பிறப்பித்தும், விதிமுறைகளை உருவாக்கியும் உறுதிப்படுத்துவது என்பது எந்த அளவுக்கு நமது நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது. மாநில ஆளுநர்களும், இந்தியக் குடிமை, காவல், வெளியுறவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்த முற்பட்டிருப்பதை வரவேற்பதா, துரதிர்ஷ்டம் என்று வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

மாநில ஆளுநர்களுக்குப் புதிதாகப் பதினெட்டு அம்ச சட்ட திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மாநில ஆளுநர்கள் விருப்பப்படி சொந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவிட முடியாது. ஆண்டொன்றுக்கு 73 நாள்கள், அதாவது 20% நாள்கள் மட்டுமே, பதவி வகிக்கும் மாநிலத்தை விட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள முடியும் என்கிற கட்டுப்பாட்டை ஆளுநர்களுக்கு விதித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு.

தங்களது தனிப்பட்ட அலுவல், குடும்ப நிகழ்வுகளைக்கூட அரசுமுறைப் பயணமாக்கிச் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆளுநர்கள் அடிக்கடி பயணிக்கும் போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இனிமேல், மாநில ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் உள்நாட்டுப் பயணமாக இருந்தால் ஒரு வாரம் முன்பாகவும், வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் ஆறு வாரங்களுக்கு முன்பாகவும் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். அவசர நிமித்தம் உள்நாட்டுப் பயணம் மேற்கொண்டால், பயணம் செய்த பிறகு அல்லது புறப்படும் முன்பு குடியரசுத் தலைவரிடம் அறிவித்தால் போதும். வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் இதுவும் அனுமதிக்கப்படவில்லை.

முந்தைய மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அகற்றப்பட்டு, மோடி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கும் நிலையில், இதற்குப் பின்னால் அரசியல் பழிவாங்குதல் இருக்கிறது என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டதுபோல, ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. அதற்கு அன்றாடத் தேவை இல்லாவிட்டாலும், திடீர் அவசியம் நேரும்போது தயாராக இருத்தல் வேண்டும். ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு, நரேந்திர மோடி அரசின் பாராட்டுதற்குரிய நிர்வாக முடிவுகளில் ஒன்று.

அடுத்ததாக, இந்திய குடிமைப் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் ரூ. 5,000-க்கும் அதிக மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து ரூ.25,000-க்கு அதிகமான பரிசுப் பொருள்களைப் பெற்றால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ரூ.5,000 மதிப்புள்ள பரிசுப் பொருள் மட்டுமல்ல, இலவச கார் அல்லது வாகனத்தைப் பயன்படுத்துதல், விமான டிக்கெட் பெறுதல் அல்லது தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குதல், அவர்கள் செலவில் 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுதல் போன்றவையும் அடங்கும்.

இந்த நடைமுறை புதியதல்ல. இதுநாள் வரை இதே நிபந்தனையானது, பரிசுப் பொருளுக்கு ரூ.1,000 ஆகவும், உறவினர்களிடமிருந்து பெற்றால் தெரிவிக்க வேண்டிய பரிசுப் பொருள் மதிப்பு ரூ.5,000 ஆகவும் இருந்தது. தற்போது இதன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஆனால், இந்த நிபந்தனையை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யாராவது தண்டிக்கப்பட்டார்களா என்றால், இல்லை.

2014-15ஆம் நிதியாண்டுக்கான அசையாச் சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையும் புதிதல்ல. ஆனாலும், பலரும் இதைத் தாக்கல் செய்வதே இல்லை. இதற்காக எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

1991-ஆம் ஆண்டு முதலாக இதுநாள் வரை 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஆனால், இவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இவர்களில் சிலர் ஓய்வு பெற்று சென்றுவிட்டார்கள். இவர்களில் பலர் மீது வழக்குத் தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தும் வழக்குகள் முடிவுறவில்லை.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தால், அடுத்த தேர்தலில் அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு மக்களாட்சியில் குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரியோ, நீதித் துறையில் இருப்பவர்களோ எந்தவிதக் கேள்வி கேட்புக்கும் உள்பட்டவர்களாக இல்லை. அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் ஆகியோரின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஏதாவது அமைப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி விடலாம். அரசு அதிகாரிகளை இதுபோன்ற உத்தரவுகள் கட்டுப்படுத்துமா, அவர்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். உத்தரவைக் காட்டி பயமுறுத்தவாவது முற்பட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் மகிழ்ச்சி!

ஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..



கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்



அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .


அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .

எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட் ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”

ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன..எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை ர்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்

ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.

- பூ.கொ.சரவணன்

குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம்

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விவரம்: குவைத்தில் அதிகம் வாழும் வெளிநாட்டினர் என்ற சிறப்பை இந்திய சமூகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டவர் உள்ளனர். குவைத்தில், விசா காலாவதியான பிறகும், சட்டப்புறம்பாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் எவ்வளவு?

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவில் குவைத் வாழ் இந்தியர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, இங்கு இந்தியாவைச் சேர்ந்த, 6 லட்சம் ஆண்களும், 2 லட்சம் பெண்களும் உள்ளனர். இவர்களில், 2.80 லட்சம் பேர் வீட்டு வேலை செய்கின்றனர். அதில், 1.90 லட்சம் பேர் ஆண்கள்; 90 ஆயிரம் பேர் பெண்கள். வீட்டு வேலை, தோட்ட வேலை, ஓட்டுனர், சமையல், துப்புரவு உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், வீட்டு வேலை செய்வோருக்கு, 2,500 டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கும் திட்டம் அறிமுகமானது. இதன் காரணமாக, குவைத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தியர்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், கட்டுமானம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், பட்டய கணக்கு தணிக்கையாளர்களாகவும், ஐ.டி., வல்லுனர்களாகவும் உள்ளனர்.

கல்வி மையங்களில்...:


இவர்களை சார்ந்து, மனைவி, குழந்தைகள் என, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். 42 ஆயிரம் மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட இந்திய கல்வி மையங்களில் படிக்கின்றனர். குவைத்தில், இந்தியருக்கு, பல்கலை., மட்டத்திலான கல்வி வசதி கிடையாது. சென்ற ஆண்டு, குவைத்தில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டன. இதனால், தனியார் துறை நிறுவனங்களில், இந்தியர்களின் பங்களிப்பு, 8 சதவீதம் அதிகரித்தது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய எண்ணெய் நிறுவனங்களில், 24 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் செவிலியர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். மிகச் சிறிய அளவில் இந்திய விஞ்ஞானிகளும், குவைத்தில் உள்ளனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஹவுஸ்புல்': ரயில், பஸ்களில் ஜூன் 10ம் தேதி வரை டிக்கெட் இல்லை: கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகள் திணறல்

பள்ளித் தேர்வுகள் முடிந்துள்ளதால், கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு, 'ஹவுஸ்புல்' என்ற நிலையை தாண்டி, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளது. நெடுந்தூர அரசு விரைவு பஸ்களிலும் ஜூன் மாதம், 10ம் தேதி வரை, பெரும்பாலான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு, சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆன்மிக சுற்றுலா, கோவில் திருவிழா, உறவினர் வீட்டிற்கு செல்வது, ஊட்டி, கொடைக்கானல் என, கோடை வாசஸ்தலங்களுக்கும், விடுமுறைக்கு செல்வோர் அதிகம். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கடந்த, இரண்டு வாரங்களாக ரயில்களில் முன்பதிவு சூடுபிடித்தது.

காத்திருப்போர் பட்டியல்:

தற்போது முன்பதிவு உச்சத்தை அடைந்துள்ளது. இதன் தாக்கமாக, ஜூன், 10ம் தேதி வரை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், குருவாயூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், அனந்தபுரி, நெல்லை, பாண்டியன், பொதிகை என, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று உள்ளது. சேலம், கோவை மார்க்கமாக செல்லும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் என்ற நிலையே நீடிக்கிறது. தஞ்சை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவு முடிந்துள்ளது. ரயில் முன்பதிவு முடிந்துள்ளதால், அடுத்தகட்ட முயற்சியாக, அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், முக்கிய வழித்தடங்களில் சில சிறப்பு பஸ்களை களம் இறக்கி உள்ளது. இந்த சிறப்பு பஸ்களிலும், உடனுக்குடன் முன்பதிவு முடிவுக்கு வந்து விடுகிறது. வசதியின் அடிப்படையில் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிப்பதால், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்படி, ரயில், பஸ்களில் முன்பதிவு முடிவுக்கு வந்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தற்போது, நெல்லை, மதுரைக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை, ஓரிரு நாட்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இது, பயணிகளுக்கு பெரியளவில் உதவவில்லை. தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மார்க்கங்களில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும். தற்போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இம்மாதத்துடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மே மாதம் முழுவதும் ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு, பயணிகள் அதிகளவில் படையெடுப்பர். தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில், வாரத்திற்கு குறைந்தபட்சம், மூன்று நாட்களுக்கு என்ற அடிப்படையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்?

கோடை விடுமுறையின் போது, ஊட்டி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கிவிடும். மேலும், சுட்டெரிக்கும் வெயில் சூழலில் இருந்து தப்பிக்க, இந்த இடங்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், முக்கிய நகரங்களில் இருந்து, ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

HC confirms no pension for those who quit govt. jobs

The Madras High Court Bench here has refused to direct Commercial Taxes Department and the Accountant General (Accounts and Entitlements) to grant monthly pension along with arrears to a Junior Assistant who had resigned from service way back in 1978.

Dismissing the writ petition filed by the former employee K.R. Krishnamoorthy, Justice S. Vaidyanathan said such a direction could not be issued since the Tamil Nadu Pension Rules, 1978 do not contemplate grant of pension to government servants who had resigned from service on their volition.

“From a reading of the rules, it is very clear that those who had resigned from service entails forfeiture of past service. In the present case, since the petitioner had resigned from service, he is not entitled to the relief sought for in this writ petition,” the judge observed.

In his affidavit, the writ petitioner had claimed to have joined the Commercial Taxes Department as a Lower Division Clerk in 1967 and to have completed probation in the cadre of Junior Assistant in 1974 before resigning the job, due to family problems, in 1978.

Thereafter, he made several representations to the government authorities seeking grant of monthly pension but his efforts did not fructify and hence he had filed the present writ petition in 2013 with a plea to order grant of pension as well as the arrears.








Opposing the plea, the Accountant General stated that pension would not be granted to employees who had resigned from the job irrespective of the number of years they had served the government. The benefit was only for those attain the age of superannuation, die in harness or retire voluntarily.

Kumbakonam Junction to be Mahamaham-ready by December

Of the Rs. 4-cr. worth proposals sent to Railway Board, Rs.1 cr. sanctioned already

All works related to railway facility improvement in Kumbakonam will be completed by December, well ahead of the Mahamaham slated for February next, according to Southern Railway General Manager Ashok Kumar Aggarwal.

Speaking to the media after inspecting the development works at Kumbakonam Junction on Friday, Mr.Aggarwal said proposals worth Rs. 4 crore have been forwarded to the Railway Board for improving facilities in the junction and meeting the needs of devotees during the Mahamaham.

The Railway Ministry has so far released Rs.1 crore following which some of the important works have been taken up, he said. They included platform extension to accommodate 24 coaches, overbridge for Platform Three, additional sanitation and drinking water amenities, among other things. The railways has already remitted Rs. 16 lakh as fee to the Kumbakonam Municipality to connect the drainage lines to the main underground drainage system.

In the run up to the Mahamaham, special train services would be operated for 20 days and 50 temporary toilets and bathing sheds would be installed on the junction premises.

Mr.Aggarwal assured that all development works in Kumbakonam junction would be completed by December to meet the Mahamaham rush in February. All stations in the Thanjavur-Mayiladuthurai section would get a facelift ahead of the festival, he said. On the track doubling work apace in the Tiruchi Division, Mr.Aggarwal said while the Golden Rock-Thanjavur section work would take another two years to be completed, survey on the Kumbakonam-Villupuram stretch has been completed at a cost of Rs. 2 crore and has been forwarded to the Railway Ministry for approval.

Divisional Railway Manager, Tiruchi, Atul Kumar Aggarwal, Senior Divisional Operations Manager Rathi Priya, Senior Divisional Commercial Manager Padmadoss, and other railway officials were present.

King Institute may house National Institute of Ageing

About eight acres of the King Institute of Preventive Medicine’s campus may soon house the National Institute of Ageing.

A five-member Central government team, which is in the State to examine sites for the establishment of an All India Institute of Medical Sciences (AIIMS), arrived in Guindy on Saturday morning to take a look at the campus.

Speaking to the press, Dharitri Panda, joint secretary, ministry of health and family welfare, said the team has noted there are many trees on the Guindy campus, and have asked for a mapping of the trees in order to minimise damage during construction of the institute.

“The institute will be a 200-bed specialist geriatric facility linked to Madras Medical College (MMC). We can increase the number of beds later, if necessary. Research, training and producing specialists are among its aims.

There will be 15 postgraduate seats in geriatric medicine at the institute,” she said.

The Rs. 150-crore project has been approved in the 12{+t}{+h}Five Year Plan, she said. Among other facilities, the institute will have a Frail Elderly Clinic, an Aids and Appliances Clinic, and an Implants and Cosmetic Clinic.

The institute will be one of only two in the country, with the other at AIIMS in Delhi. “We decided to locate the institute in Chennai partly due to MMC’s contribution to this field,” she said.

GGH Block

Rajiv Gandhi Government General Hospital (GGH) is set to get a new tower block for outpatients.

The hospital will also get a block for the urology and nephrology departments as well as a separate rheumatology block, said J. Radhakrishnan, State health secretary, at the golden jubilee celebrations of the urology department on Friday.

S. Geethalakshmi, director of medical education, said the kidney transplants performed by the department had helped a number of patients. She also highlighted the importance of starting fellowship courses for specific surgeries as well as holding live workshops.

R. Vimala, hospital dean, said a postgraduate students’ hostel is also coming up.





NEWS TODAY 2.5.2024