Friday, March 4, 2016

Convocation set to go down in history


TOI 

Kolhapur: The 52nd convocation ceremony of the Shivaji University, Kolhapur (SUK), to be held on Saturday, will witness the most degrees being handed out to engineering graduates this year.

According to an SUK report, with 11,832 degrees, engineering and technology graduates are topping the charts among the total 52,160 graduates, who will receive degree certificates this year. Students from the commerce faculty will be following second with 11,287 degrees. This is followed by the science stream with 9,224 degrees.

Mahesh Kakade, the controller of examinations (CoE), SUK said that this is the highest number of conferred degrees recorded in the history of the university. Of the total degrees, 24,360 will be conferred in presence, while 27,800 will sent to the students via courier. Apart from this, as many as 301 PhD and MPhil scholars too will also be awarded their degrees during the event.

The Institute of chemical technology (ICT) vice-chancellor and Padmashri awardee G D Yadav will be the chief guest at the event. Yadav was selected for the award earlier last month.

"We will confer degrees to 26,071 male candidates. In all, 26,089 female students will get their degrees this convocation ceremony," he said.

According to a university official, the main event for the convocation ceremony will take place at the Lokkala kendra on the university campus. The distribution of degrees will begin as early as 7.30am till 12.30pm and later from 5pm to 6pm to manage the crowd at exam center 2 in the campus. The main event, according to the officials, will begin at 1.30pm at the university campus.

The officials added that the whole event will be webcast on the university website at www.unishivaji.ac.in.

For the proper management of crowd, a team of volunteers has been formed to handle the crowd, which is estimated at more than 50,000 people. The necessary security management is the top priority for the university. Entry will be allowed from the university's gate number two for the general public, while VIPs can enter from gate number one.

During the main event Priyanka Patil, a student of MA English will be conferred with the coveted president's medal for her overall excellence in the sports, cultural activities, academics and community services during the academic year 2014-15.

The SUK started operations in 1962 with 34 affiliated colleges and around 14,000 students with five postgraduate departments on campus. Today, the number of affiliated colleges has gone up to 282 and the student strength up to three lakh with 40 postgraduate departments on campus. The university imparts education in 10 major faculties of arts, social science, commerce, education, fine arts, law, medicine, science, ayurvedic medicine, engineering and technology.

Ola goes micro, to offer rides starting at Rs 50

TIMES OF INDIA

CHENNAI: In a bid to be the cheapest cab operator in the city, Ola has introduced a new category in its operations micro'. With the minimum fare being `50, it could be the equivalent of a short-distance autorikshaw ride one can get in the city.

The new category will have smaller and entry-level cars like WagonR, Datsun Go with a minimum fare of `50.These cars have smaller engines and higher mileage. Ola has also introduced a base fare of `40 for the first time."The meter reads `40 when the trip starts and every kilometre after that will cost `6 with a ride time charge of `1 per minute," said a source in Ola. For example, a 1km trip would cost `46 plus ride time charges but the payable fare would be `50 plus ride time charges, `50 being the minimum micro fare. Ola mini costs `80 for the first 4km and `10km after that.

On the app, the availability of this category is very low.Sources in Ola say this a pilot project. "The demand is very high for the category . We wil scale it up soon," the source said.

In early February, Uber slashed its fares by Rs 2 on both UberGo and UberX cabs. The former costs `6km while the latter is available at `7km UberGo has a base fare of Rs 30 and a ride time charge of 1 km. Other cheap options in the city include Taxi For Sure (TFS), which is owned by Ola It has a minimum fare of `59 for the first 3km and `8km af ter that. It has a higher ride ti me charge of `1.5km though Ola introduced two-whee ler services in Bengaluru charging `2km with a mini mum fare of `30. The compa ny , however, declined to com mit a similar service in the city.

பல்கலைக் குளறுபடிகள்


Dinamani


பல்கலைக் குளறுபடிகள்

By அ. அறிவுநம்பி

வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட பலநாட்டுப் பேராளர்களும் அவரவர் முகவரி அட்டைகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அப்படி என்னுடைய முகவரி அட்டையைப் பெற்றுக் கொண்ட மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இந்தியாவிற்கு வந்தார்.
புதுவையில் என்னுடைய அறைக்கு அவர் வந்து இருவருமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, சில கடிதங்களை அஞ்சல்காரர் தந்து சென்றார். அந்த உறைகளைப் பிரித்தபோது அவற்றில் இரண்டு வெவ்வேறு பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட காசோலைகள் இணைக்கப்பட்டிருந்தன. அதனுடைய வடிவம், வண்ணம் இரண்டையும் பார்த்த அந்தப் பேராசிரியர் இரண்டு காசோலைகளையும் கையிலெடுத்தார்.
"ஆமாம், ஒன்றில் ஐநூறு ரூபாய் எனவும் மற்றொன்றில் ஆயிரம் ரூபாய் எனவும் எழுதப்பட்டுள்ளதே.. வெவ்வேறு பணிகளுக்கான சன்மானமா அந்தத்தொகை' என்று கேட்டார். இல்லையில்லை இரண்டுமே முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகளை மதிப்பிட்டமைக்கான மதிப்பூதியம் என்றபோது அவர் வியப்புற்றார்.
அதெப்படி ஒரே பணிக்கு இரண்டு விதமான மதிப்புத்தொகை இருக்க முடியும் என்ற அவரின் கேள்வி அடர்த்தியானது. அமைதியாகப் பதில்கூற ஆரம்பித்து ஒரு பல்கலைக்கழகம் ஐநூறு ரூபாய் என்பதை ஆயிரம் ரூபாய் என மாற்றிவிட்டது. இன்னொரு பல்கலைக்கழகம் இன்னும் தொகையை உயர்த்தவில்லை என்றேன்.
"ஓ! ஒன்று, தனியார் பல்கலைக்கழகம் மற்றது அரசுசார் பல்கலைக்கழகம் அப்படித்தானே?' என்ற அவரை, அவசரமாக இடைமறித்து, "இரண்டுமே ஒரே அரசின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள் தான்' என்றபோது அவருக்குக் கோபமே வந்துவிட்டது.
"ஒரே மாதிரியான ஆய்வு நூல்; ஒரே முறையிலான மதிப்பீடு; ஒரே டாக்டர் பட்டம். இப்படியிருக்கும் போது ஒரே அரசாங்கம் எப்படி இரண்டுவிதமாக மதிப்பீட்டுத் தொகையை வழங்குகிறது' என்ற அவரது வாதத்திற்குச் சட்டென்று விடை தர இயலவில்லை. ஒரே பணிக்கு ஒரே அளவிலான மதிப்பூதியம் வழங்குவதுதானே அரசின் பணியாயிருக்க முடியும் என்ற அவருடைய கருத்து மெத்தச் சரிதான்.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட குளறுபடிகள் ஆய்வுப் படிப்பில் இன்னும் உண்டு.
ஆய்வேட்டை ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் ஒப்படைத்தபிறகு, அந்த ஆய்வேடுகள் பல்வேறு பேராசிரியர்களுக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பப்பெறும். இதிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. சான்றாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முன்பெல்லாம் ஒப்படைக்கப்பெற்ற மூன்று ஆய்வேடுகளும் வெளியூர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு மட்டுமே அனுப்பப்பெறும்.
இந்த நடைமுறை இப்பொழுதும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆனால், மதுரை உள்பட தமிழகப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆய்வேடுகள் மட்டுமே புறநிலைத் தேர்வாளர்களுக்கு மதிப்பீட்டிற்காக அனுப்பப்பெறுகின்றன. மூன்றாவது ஆய்வேடு ஆய்வுநெறியாளருக்கே மதிப்பீட்டுக்காக அனுப்பப்படுகின்றது.
ஆய்வேட்டின் உருவாக்கத்திற்கு மேற்பார்வையாளராக இருக்கும் அவரே மதிப்பிடுவது சரிதானா என்பது கல்வியாளர் பலரின் ஐயப்பாடு. அவருடைய வழிகாட்டலில் உருவான ஆய்வேட்டில் குறைகள் இருப்பின் அதனை மதிப்பீட்டறிக்கையில் அவரால் தர இயலாது. பிழைகள் உள்ள ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க அவர் எப்படி இசைவு தந்து, ஆய்வேட்டில் கையெழுத்திட்டிருக்க முடியும்?
எனவே, மூன்று மதிப்பீடுகளில் ஒன்று நிச்சயமாகச் சாதகமான மதிப்பீடாகிவிடுவதை இம்முறைமை மறைமுகமாக உண்டாக்கிவிடுகிறது. இதனைத் தவிர்க்க, மூன்று ஆய்வுநூல்களும் புறநிலை வல்லுநர்களுக்கே அனுப்பப்பெறுவதில் என்ன சிக்கல் என்பது புரியாத புதிர். இப்படிச் செய்வதால் மதிப்பீட்டுத் தொகையிலும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மூன்றாவதாக, பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப் பெறுவதிலும் குளறுபடிகள் உள்ளன. ஆய்வேட்டை மதிப்பீடு செய்த வெளியூர்ப் பேராசிரியர்களில் ஒருவரை இந்தப் பொது வாய்மொழித் தேர்வுக்கு அழைப்பதே சரியானது, முறையானது.
ஏனெனில் பக்கம் பக்கமாகப் படித்து ஆய்வேட்டின் நிறை குறைகளை அலசி மதிப்பீட்டறிக்கையை உருவாக்கிய அவர்களால் வாய்மொழித் தேர்வில் வினாக்களை முன்வைக்கவும் தேர்வை நடத்தவும் இயல்பாக இயலும்.
அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் போன்றவை இதனை நடைமுறையாகக் கொண்டுள்ளன.
ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வேறு நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆய்வேட்டை மதிப்பிடாத நான்காம் நபர் வாய்மொழித் தேர்வினை நடத்த அழைக்கப்படுவார். அவர் மதிப்பீட்டறிக்கை எதுவும் தர வேண்டியதில்லை. வாய்மொழித் தேர்வை மட்டும் நடத்துவார்.
ஏற்கெனவே மதிப்பீடு செய்திராத நான்காம் தேர்வாளரை அழைக்கும்போது அவர் ஆய்வேட்டைப் படிக்கக் கால நேரம் கூடுதலாகும். ஏற்கெனவே மதிப்பீட்டாளராக இருந்தவரை அழைக்கும்போது காலவிரையம் ஏற்படாது.
மதிப்பீடு செய்பவர் ஒருவர், வாய்மொழித் தேர்வை நடத்துபவர் (மதிப்பீடு செய்யாத) வேறொருவர் என்ற நிலைப்பாடு சரியானதா என்பது கல்வியாளர்கள் முன்நிறுத்தப்படும் கனமான வினா ஆகும். இன்னொரு வியப்பினைத்தரும் நடைமுறையையும் இங்கே பதிவு செய்வது சரியானதாக அமையும்.
ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர், அவரை வழிநடத்திய பேராசிரியர் இருவரையும் புறநிலைத் தேர்வாளர் அறிந்து கொள்ளக்கூடாது எனக் கருதிய பல்கலைக்கழகங்கள் ஆய்வேட்டின் மேலட்டையிலும், முகப்புப் பக்கத்திலும் ஆய்வாளரின் பதிவு எண்ணை மட்டுமே குறிக்கவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துள்ளது. ஆய்வாளர் நன்றியுரையையும் இணைக்கக்கூடாது. இது மந்தனம் (ரகசியம்) காக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காம்.
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் பேராசிரியர்களை வெளியூர்ப் பேராசிரியர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?
இதிலே இன்னொரு பகுதியையும் எடுத்துக்கூற வேண்டும். ஆய்வு நெறியாளர்தான் மதிப்பீடு செய்வதற்காக வெவ்வேறு நிறுவனப் பேராசிரியர்களின் பட்டியலையே தன் பல்கலைக்கழகத்திற்கு வழங்குகிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வெளியூர்ப் பேராசிரியர்கள் தம் மதிப்பீட்டறிக்கையை ஆய்வு நெறியாளருக்கும் அனுப்ப வேண்டும்.
இங்கே ரகசியம் காக்கப்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை; தேவையும் இல்லை. இங்கே அமையும் வேடிக்கை ஒன்றைக் கவனிக்கலாம். ஆய்வாளரின் பெயர் ஆய்வேட்டின் அட்டை, முகப்புப் பக்கம் போன்றவற்றில் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தும் பல்கலைக்கழகங்கள் சறுக்கலைச் சந்திக்கும் இடம் ஒன்று உண்டு.
பல்கலைக்கழகங்களில் ஆய்வேட்டை ஒப்படைக்கும் ஆய்வாளர்கள் இதழ்கள், ஆய்வுத் தொகுப்புப் போன்றவற்றில் வெளியிட்டுள்ள தம் கட்டுரைகளில் இரண்டைக் கண்டிப்பாக ஆய்வேட்டின் பிற்பகுதியில் இணைக்க வேண்டுமென்பது கட்டாய விதி. எனவே, அந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் அவரவர்களின் பெயர்களுடனே ஆய்வேட்டில் இணைக்கப்பெற்றிருக்கும்.
மேலட்டையில் பெயரைப் பொறிக்க முடியாத ஆய்வாளர்களின் பெயர்கள் அவர்கள் இணைத்துள்ள கட்டுரைகளில் அப்படியே முனைமுறியாமல் ஒளிரக் காணலாம். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழிக்கு இந்தக் குறிப்புகளைச் சான்றாக்கலாம்.
இரண்டாவதாக, மதிப்பீட்டறிக்கையை உருவாக்கும் தேர்வாளர்கள் இன்னாருக்குப் பட்டம் வழங்கலாம் என அந்த ஆய்வாளரின் பெயரை எழுதிப் பரிந்துரை செய்வதே சரியானது, உகப்பானது. அதை விடுத்து, இந்த எண்ணுக்குப் பட்டம் வழங்கலாமென மதிப்பீட்டறிக்கையில் எழுதும் போது ஒரு மாதிரியாக இருப்பதாக மதிப்பீட்டாளர்கள் பலரும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் ஒரே அமைப்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இது போன்ற குளறுபடிகள் நிகழ்கின்றன. ஆய்வுப் படிப்பில் இவை எப்போது சரிசெய்யப்படும் என்பதே ஓர் ஆய்வாகிவிட்டது என்பதே உண்மை.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையை பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன.

Thursday, March 3, 2016

எம்ஜிஆர் 100 | 13 - கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

Return to frontpage


எம்.ஜி.ஆரை மாலை அணிவித்து வரவேற்கிறார் கவியரசு கண்ணதாசன்.

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

என்று வரும்.

பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

Conversion of PIO cards: Last date for application extended till June 30


Conversion of PIO cards: Last date for application extended till June 30


NEW DELHI: Government today extended the last date for applying for conversion of PIO cards to OCI cards to June 30 from March 31.

Announcing the decision, the External Affairs Ministry Spokesperson tweeted, "And some good news for Diaspora on PIO/OCI Merger: The last date for applying for conversion of PIO Cards to OCI Cards is now 30 June, 2016."
The Person of Indian Origin (PIO) card was first implemented in 2002 as a benefit to foreign nationals who could establish at least a third generation tie to Indian origin. The PIO card is valid for travel, work, and residence in India for a period of 15 years.

The OCI card was implemented in 2005, carried more expansive benefits than the PIO card, and was valid for the holder's lifetime.

However, in 2014, the government decided to merge the two schemes for the benefit of NRIs ..



பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

THE HINDU TAMIL

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் களில் முதலிடம் பெற மாணவர் களிடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் (சென்டம்) வாங்குவதற்காக, மாணவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். எனினும், எல்லோருக்கும் ‘சென்டம்’ கிடைப்பதில்லை. தேர்வு எழுதி முடிக்கும்போது, ‘சென்டம்’ எடுக்க வாய்ப்பில்லை என்று உணரும் மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடு போட்டு கொடுத்துவிட்டு, அந்த தேர்வை புறக்கணித்து விடுகின்றனர்.
பின்னர் உடனடி மறுதேர்வு எழுதி, ‘சென்டம்’ வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற பழக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த கல்வித்துறை, நடப்பாண்டில் தேர்வு தொடர்பான விதிகள் குறித்த புத்தகத்தின் 42-ம் பக்கத்தில் வரிசை எண் 11-ல் புதிய விதியை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வு அறையில் மாணவர்களுக்கான விதி முறைகளை அறிவிக்கும்போது, தேர்வு எழுதிய அனைத்து பக்கங் களிலும் கோடு போட்டு கொடுக்கும் மாணவர்களிடம், இது ஒழுங்கீன நடவடிக்கை, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த 2 பருவ தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், விடைத்தாள் திருத்தத்தின்போதும் புதிய மாற்றம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் உயிரியியல் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உயிரியியல் பாடத்துக்கான விடைத்தாள் திருத்துவதிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை, உயிரியியல் தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரி- தாவரவியல், உயிரி- விலங்கியல் எனத் தனியாக விடைத்தாள்களை எழுதுவர். அவை தனித்தனியாக திருத்தப்பட்டு, கூட்டு மதிப்பெண்கள் வெளியிடப்படும். இவ்வாறு தனித்தனியாக திருத்தப்படும்போது, அரை மதிப்பெண் வந்தால், ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி முழு மதிப்பெண் கொடுக்கப்படும்.
உயிரி-தாவரவியல், உயிரி- விலங்கியல் என இரண்டு பிரிவிலும் தலா அரை மதிப்பெண் எடுக்கும்போது, ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி இரண்டு அரை மதிப் பெண் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்க, ஒவ் வொரு பிரிவுக்கும் ‘ரவுண்ட் ஆப்’ விதியை தவிர்த்து, இரண்டு பிரிவின் மதிப்பெண்களையும் சேர்த்த பின்னர் ‘ரவுண்ட் ஆப்’ விதியை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 11 - என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்


Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.




நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.

NEWS TODAY 2.5.2024