Sunday, October 1, 2017

ஒளிரும் நட்சத்திரம்: விஜய் சேதுபதி

Published : 28 Jul 2017 10:08 IST




ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்

1. கடந்த சில ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் இயக்குநர் சீனு.ராமசாமி. காளிமுத்து- சரஸ்வதி தம்பதியின் மகனாக 16.01.1978-ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி.

2. விஜய் சேதுபதியின் தந்தை சிவில் இன்ஜினீயர். பணி நிமித்தம் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்ததால், தனது உயர்நிலைக் கல்வியைச் சென்னையில் பயின்றார். பள்ளிக்காலத்தில் விளையாட்டிலோ பிற தனித்திறமைகளிலோ ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி, அதிகம் கேள்வி கேட்பவராக வளர்ந்தார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் வணிகவியல் பயின்று பி.காம். பட்டம் பெற்றார்.


3. குடும்பத்துக்கு உதவும் விதமாக துபாய் சென்று ‘கணக்காளராக’ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த வேலை பிடிக்காமல் போனதால் சென்னை திரும்பினார். விஜய் சேதுபதியின் இந்த முடிவை அவருடைய அப்பா பாராட்டியதோடு “ உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய். உன் மனம் சொல்வதைக் கேள்” என்றார்.

4. காதல் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளின் தந்தையாக மாறிய விஜய் சேதுபதியிடம் அவருடைய நண்பரான ஒளிப்படக் கலைஞர் ஒருவர்,“ உனது கண்களும் முகமும் ஒரு நடிகனுக்குரியவை” என்று கூறிச் சென்றார். நண்பர் கூறியது முகஸ்துதி அல்ல என்பதைப் புரிந்துகொண்ட விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பது என்று முடிவெடுத்தார். இதைக் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது ‘ஆர்வக்கோளாறு’என்று விமர்சிக்கப்பட்டார்.

பட கம்பெனிகளைத் தேடிச் சென்று நடிக்க வாய்ப்பு தேடியபோது, அவரது ஒளிப்படங்களை வாங்கிக்கொள்ளவே பலர் மறுத்தனர். இதனால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைப் பயில விரும்பினார். ஆனால், அங்கே நடிப்புப் பிரிவில் சேர இடம் இல்லை. அதனால் ‘கணக்காளராக’ கூத்துப்பட்டறையில் பணியில் சேர்ந்தார். 2005-ல் சுனாமி விழிப்புணர்வு வீதி நாடகங்களைத் தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்களில் கூத்துப்பட்டறை அமைப்பு நடத்தியது.

அதன் நடிகர்கள் குழுவில் இணைந்துகொண்ட விஜய் சேதுபதி, முதல்முறையாக வெகு மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்தவெளியில் நடித்தார்.

5. அதன் பின்னர் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் துணை நடிகராகப் பல படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒன்று ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. பின்னர் ‘புதுப்பேட்டை’, ‘லீ’ ஆகிய படங்களில் சில காட்சிகளில் நடித்தார். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்தவரை ‘பெண்’ தொலைக்காட்சித் தொடரின் மூலம் முகம் தெரியவைத்தார் இயக்குநர் சி.ஜே.பாஸ்கர். தொடரில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கிய குறும்படங்களின் வழியாக இணையத்தில் அறியப்படும் இளம் நடிகராக ஆனார்.

6. 2010-ல் வெளியான ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதன் பின்னர் சாகச நாயகன் பிம்பம் இல்லாத கதாபாத்திரங்களுக்கான நடிகராகக் கொண்டாடப்பட்டு வருகிறார். ‘சூது கவ்வும்’ தாஸ், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பிரேம் குமார், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சுமார் மூஞ்சி குமாரு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ முருகேசன், ‘ஆரஞ்சு மிட்டாய்’ கைலாசம், ‘இறைவி’ மைக்கேல், தற்போது ‘விக்ரம் வேதா’வில் வேதா என சாமானிய மக்களின் மத்தியிலிருந்து எழுந்துவரும் எளிய, விளிம்புநிலைக் கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டிவருகிறார்.

7. தனது இயல்பான நடிப்புக்காக விஜய் சேதுபதி எந்த நடிப்பு உத்தியையும் பின்பற்றுவதில்லை. 39 வயது நிரம்பிய விஜய் சேதுபதி ‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயதுக்காரராகவும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 55 வயது முதியவர் தோற்றத்திலும், ‘றெக்க’ படத்தில் 25 வயது இளைஞராகவும் தனது கதாபாத்திரங்களுக்காக வெளிப்படுத்தும் நம்பகமான நடிப்பின் மூலம் எதிர்காலம், கடந்த காலத்துக்குப் பயணித்துக்காட்டி பார்வையாளர்களை வசீகரித்துவருகிறார்.

8. ‘ஆரஞ்சு மிட்டாய்’, இப்போது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனத் தமிழ் வாழ்க்கையைப் பேசும் படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, திரையுலகில் கவனிக்கத்தக்க பங்களிப்பைத் தந்திருக்கும் 100 சமகாலக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழா எடுத்து அவர்களுக்கு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மூலம் தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கிக் கவுரவப்படுத்தினார்.

9. தன் திரையுலக வாழ்க்கையில் திட்டமிடலோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் பயணம் செய்துவரும் இவர் குடும்பத்தையும் நண்பர்களையும்பெரிதும் நேசிப்பவர். பள்ளியில் அவருடன் படித்த உயிர்த் தோழன் சூர்யா பதினோராம் வகுப்பு படிக்கும்போது இறந்துபோனார். அவரது நினைவாக தன் மகனுக்கு சூர்யா என்று பெயர் சூட்டியிருக்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தன் மனைவி, பிள்ளைகளை வெளியூர் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவழைத்துவிடுவார்.

10. ‘விக்ரம் வேதா’ படத்தில் ‘ஒரு கதை சொல்லட்டா சார்?’ என்று கதை சொல்லித் தப்பிக்கும் ‘வேதாளம்’ விஜய் சேதுபதி, நிஜ வாழ்க்கையில் தனது சொந்தப் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவர். தனது ரசிகர்களிடம் “ நான் உட்பட எந்த நடிகரையும் பின்பற்றாதீர்கள்” என்று கூறிவருவதோடு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தயக்கம் ஏதுமின்றி கருத்துக்கூறுபவராகத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.


நண்பரின் பார்வையில்...

சின்னத்திரையில் வெற்றிகரமான இயக்குநர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெற்றிருப்பவர் ‘சித்தி’ மெகா தொடர் புகழ் சி.ஜே.பாஸ்கர். சினிமாவில் அடிவைக்கும் முன்பு விஜய் சேதுபதி இவரது இயக்கத்தில் ‘பெண்’ என்ற தொடரில் நடித்திருந்தார். இன்றுவரை நட்பு பாராட்டி வரும் விஜய் சேதுபதி பற்றி சி.ஜே.பாஸ்கர் என்ன சொல்கிறார்...


“ நடிப்பின் மீது ஆர்வம் அடங்காத இளைஞனாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதியை நான் எப்படிப் பார்த்தேனோ அதே விஜய் சேதுபதியைத்தான் இன்றும் பார்க்கிறேன். ஒரு விஷயத்தின் மீதான ஆர்வத்தை அணையாமல் பார்த்துக்கொள்ளப் பொறுமையும் அர்ப்பணிப்பும் வேண்டும்.

உள்ளே எரிந்துகொண்டிருக்கும் அந்த ஜோதியை அணையாமல் பார்த்துக்கொள்கிற துடிப்புள்ள இளைஞனாக இன்றுவரை இருக்கிறார்.

அவரைத் தம்பி என்றுதான் அழைப்பேன். அவ்வளவு எளிய, எளிதில் அணுக முடிகிற, பழகிவிடுகிற சகஜமான ஒருவராக இருப்பார். அவரின் இந்த சகஜத் தன்மைதான் அவரது எல்லாக் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அதனால் அவர் ஏற்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களுக்கு எளிதில் பிடித்துவிடுகின்றன.

விக்ரம் வேதா வரை அவரிடம் இந்த சகஜத் தன்மையைக் காணலாம். கதாபாத்திரங்களைத் தனது நடிப்பால் பயமுறுத்தாதவர் விஜய் சேதுபதி. அதுதான் அவரின் வெற்றி ரகசியம்”.

தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்
வரலாறு தந்த வார்த்தை - 2: ‘வாழைப்பழ’ காமெடி!

Published : 26 Sep 2017 11:20 IST

ந.வினோத் குமார்





பழம் என்றாலே பிரச்சினைதான் போல. ஞானப்பழம் என்றாலும் சரி. வாழைப்பழம் என்றாலும் சரி. சுட்டபழம் என்றாலும் சரி!


சரி, சரி…விஷயத்துக்கு வருவோம். நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்த மேலாளர், யாரையுமே கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் சில விஷயங்களைச் செய்துவிடுவார். சில நாட்களுக்குப் பிறகு, அவருக்கும் மேலே இருக்கும் ‘ஊப்பர்வாலா’, ‘யாரைக் கேட்டு இதெல்லாம் செய்தாய். இந்த கம்பெனியை ‘Banana republic’ ஆக நினைக்காதே!’ என்று செம ‘ரெய்டு’ விடுவார். ஊடக நிறுவனங்கள் பலவற்றில் மேற்சொன்ன சொற்றொடரை அடிக்கடி கேட்கலாம்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில், அவ்வப்போது ஏதேனும் விபரீதம் நடந்துகொண்டே இருக்கும். அதைக் குறிப்பிடவே இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக, இது கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கையாளப்படுகிறது.

சரி… இந்தச் சொற்றொடர் பிறந்ததற்குக் காரணமே வாழைப்பழம்தான் என்றால் நம்புவீர்களா? ஆம். 19-ம் நூற்றாண்டில், அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்குவேடார் போன்ற தென் அமெரிக்க நாடுகள் பலவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தன. அங்கு வாழைப்பழம் அதிகமாக விளையும். எனவே, வாழைப்பழம்தான் அந்த நாடுகளின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக இருந்தது.

தவிர, இந்த நாடுகளில் அவ்வப்போது ஆட்சிக் கலைப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற அரசியல் குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்குக் காரணம், தங்களின் இலக்குகளைச் சாதிப்பதற்கு, வெளிநாட்டிலிருந்து வந்த பழ நிறுவனங்கள் அந்த நாடுகளில் பல கைங்கரியங்களை நிகழ்த்தியதுதான்.

‘அவன் கிடக்கான். பித்தளை தட்டுல சாப்பிடுறவன்’ என்று ஒருவரை அவமானப்படுத்த எப்படிப் பித்தளையைப் பயன்படுத்துகிறோமோ, அதுபோல வளர்ந்த நாடுகள், சுய புத்தி இல்லாமல், யார் எது சொன்னாலும், அதற்கேற்றபடி ஆடி வந்த மேற்சொன்ன நாடுகளைச் சிறுமைப்படுத்த ‘வாழைப்பழக் குடியரசு’ என்று அழைத்தன.

இப்படித்தான் இந்தச் சொற்றொடர் மக்களின் புழக்கத்துக்கு வந்தது. சரி… இந்தச் சொற்றொடரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஓ.ஹென்றி!

ஆக, அந்த ‘இன்னொரு பழம்’, இதுதானா?
பொறியியல் என்னும் பொறி: மீட்சிக்கான முயற்சிகள் பலன் தருமா?

Published : 26 Sep 2017 11:33 IST

எஸ்.எஸ். லெனின்






இந்தியாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை 2018-ம் ஆண்டில் மூட முடிவுசெய்துள்ளது, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளில் 7 சதவீதத்தினர் மட்டுமே முழுமையான பணித்திறன் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஆனால், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டின் பொருளாதார, தொழில்துறை, சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித்துறை சரிவு கண்டது எப்படி? இழந்த பொலிவை மீண்டும் பொறியியல் கல்லூரிகள் பெறுமா?

170 ஆண்டு பாரம்பரியம்

நடைமுறையில் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்வி முறை பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தொடங்கப்பட்டது. 1847-ல் உத்தரப்பிரதேசம் ரூர்க்கியில் தாம்சன் கட்டுமானப் பொறியாளர் பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐ.ஐ.டி.-ரூர்க்கியான இதுவே நாட்டின் முதல் பொறியியல் கல்லூரியாக அறியப்படுகிறது. அதை அடுத்து, கல்கத்தா சிவில் பொறியியல் கல்லூரி (1856), பூனா பொறியியல் கல்லூரி (1858) ஆகியவை திறக்கப்பட்டன.

இந்த வரிசையில் சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஐரோப்பாவுக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் இதுவே. 1794-ல் நில அளவைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இது 1858-ல் கட்டிடப் பொறியியல் பள்ளியாக மாற்றப்பட்டது.

ஆக, இந்தியாவின் நவீன பொறியியல் கல்வி. 170 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது தேச வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க அதிக அளவிலான பொறியாளர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் தனியாருக்குத் திறந்துவிட்ட சில ஆண்டுகளில் பொறியியல் கல்வியின் போக்கு மாறியது. புற்றீசலாய்த் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகியதும், பொறியியல் உயர் கல்வி அதன் தனித்துவத்தை இழந்தது.

பொறியில் சிக்கும் மாணவர்கள்

பள்ளிபடிப்பின்போதே பெரும்பான்மையானவர்களின் உயர் கல்வி இலக்காகப் பொறியியல் கல்வி திணிக்கப்படுகிறது. மாணவரின் விருப்பத்தை அறியாது பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமென சுயநிதிக் கல்லூரிகளில் பெற்றோர் சேர்த்துவிடுகின்றனர். அத்தகைய சுயநிதிக் கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா எனச் சரிபார்ப்பதும் இல்லை. கல்லூரி முகப்பின் பிரம்மாண்டம், வசிப்பிடத்துக்கு அருகிலிருப்பது, இடைத்தரகர்கள், கல்லூரி நிர்வாகத்தின் கவர்ச்சியான வாக்குறுதிகள் போன்றவற்றில் ஏமாந்து தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடுகின்றனர். இதன் விளைவு, முதலாமாண்டில் தேர்வெழுதும் இந்தியப் பொறியியல் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தோல்வியடைவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுத் தெரிவிக்கிறது. போதிய கல்வித் தகுதியோ பயிற்றுவிக்கும் திறனோ அற்ற ஆசிரியர்கள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், வளாகத் தேர்வு நாடகங்கள், வரம்பு மீறும் கட்டணங்கள் ஆகியவையும் பொறியில் சிக்கிய எலியாகப் பொறியியல் மாணவர்களைத் தவிக்கவிடுகின்றன.

பணித்திறன் இல்லாத பட்டதாரிகள்

டெல்லியைச் சேர்ந்த ‘அஸ்பயரிங் மைண்ட்ஸ்’ என்கிற வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிறுவனம் கடந்தாண்டு நாடு முழுவதும் வேலைதேடும் பொறியியல் பட்டதாரிகளை மையப்படுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டது. 2013-ம் ஆண்டு பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகளில் 1.5 லட்சம் பேரிடம் ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தது. இதில் 97 சதவீதப் பொறியியல் பட்டதாரிகளின் பணித்தேர்வு ஐ.டி. அல்லது பாரம்பரியப் பொறியியல் துறைகள் சார்ந்தே இருந்தன. ஆனால், அவர்களின் பணித்திறனைச் சோதித்தபோது 3 சதவீதத்தினர் மட்டுமே ஐ.டி. துறைக்கான தகுதியையும், 7 சதவீதத்தினர் மட்டுமே பாரம்பரியப் பொறியியல் துறைக்கான தகுதியையும் பெற்றிருந்தனர். பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி அலைவதும், படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலைகளில் அமர்வதும் இந்தப் பணித்திறன் பற்றாக்குறையாலேயே. ஆனால், இந்தியாவிலிருக்கும் 10,363 பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 29 லட்சம் பேர் ஆண்டுதோறும் சேர்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் படிப்பை வெற்றிகரமாக முடித்து வேலைவாய்ப்பு சந்தைக்குள் நுழைகிறார்கள்.

காற்று வாங்கும் கல்லூரிகள்

2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் 527 கல்லூரிகள் பங்கேற்றன. அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான 2.23 லட்சம் இடங்களில் 1.57 லட்சம் இடங்கள் மட்டுமே பூர்த்தியடைந்தன. 148 கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கையைப் பெற்றன. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வி வர்த்தகத்தில் இறங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய சேர்க்கை இல்லாதபோது அதிலிருந்து விலக விரும்புகின்றன. தேசத்துக்குக் கிட்டத்தட்ட 25 சதவீதம் பொறியாளர்களை ஆண்டுதோறும் வழங்கிவந்த தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் பல மூடுவிழா காண்கின்றன. ‘தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரி விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தை இணையதளங்களில் பார்க்கலாம். நடப்பாண்டில் 11 தமிழகப் பொறியியல் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பிலான ஆய்வில் அடிப்படைத் தகுதிகள்கூட இல்லாத 44 கல்லூரிகளின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

என்ன ஆச்சு பொறியியல் படிப்புக்கு?

பொறியியல் உயர் கல்வியின் சரிவுகளை உற்றுக் கவனிக்கும் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகவே மாற்றம் கோரி மத்திய அரசை வலியுறுத்திவந்தனர். ஒரு வழியாக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதன்படி பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மீளாய்வு செய்து மேம்படுத்தும் பணியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மும்முரமாக உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு நாடு முழுமைக்குமான பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் தரமான பட்டதாரிகளை உருவாக்கவும், அதன்மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை பொறியாளர்களின் வேலைவாய்ப்பு திறன் உயரும் என்றொரு கணக்கை முன்வைக்கிறார்கள். இவற்றுடன் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு இரண்டையும் இணைத்து ஒற்றை அதிகார அமைப்பாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உயர் கல்விக்குப் புத்துயிரூட்ட உத்தேசித்துள்ளனர்.

இத்தகைய திட்டங்கள் பொறியியல் கல்வியின் சரியும் செல்வாக்கை மீட்டுத் தருமா, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித் துறைக்கு வேறென்ன மாற்றங்கள் ஏற்றம் தரும், மருத்துவப் படிப்பைப் போன்றே பொறியியலுக்கான ஒற்றை நுழைவுத் தேர்வும் தமிழக மாணவர்களைத் தத்தளிக்கச் செய்யுமா, பொறியியல் கல்வியில் நாட்டம் கொண்ட பெற்றோரும் மாணவரும் தெளிவு பெறுவது எப்படி? போன்ற அச்சுறுத்தும் பல கேள்விகள் இன்று நம் முன்னே.

7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்.

7வது ஊதியகுழு கணிப்பான்
உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்.

7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் 


7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்







Note: **போக்குவரத்து படி குறித்து 7வது ஊதிய குழு 19 உயர்வகை நகரங்களாக சுட்டிக்காட்டி உள்ளது. அவைகள் டெல்லி, சென்னை, கொல்கத்தா, கிரேட்டர் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, ஹைதராபாத், சூரத், நாக்பூர், புனே, ஜெய்பூர், லக்னௌ, கான்பூர், பாட்னா, கொச்சின், கோளிகூடு, இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் காஜிதாபாத்

உங்களது மாற்று அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் - 1.1.2016 முதல்







No daily allowance on LTC to central govt staff

DH News Service, New Delhi, Sep 22 2017, 1:39 IST


The Central government employees will not get a daily allowance on leave travel concession (LTC) from now onwards.

Any incidental expenses and the expenditure incurred on local journeys will not be admissible under the LTC, a Department of Personnel and Training (DoPT) order said.

Earlier, the employees were entitled to an allowance according to their ranks.

At the same time, travel by premium or Suvidha trains and services such as Tatkal will now be allowed on the LTC, the order said.

The LTC allows the grant of leave and ticket reimbursement to employees to travel to their hometowns and other places under specified circumstances.

“Flexi fare (dynamic fare) applicable in Rajdhani/ Shatabdi/Duronto trains shall be admissible for the journey(s) performed by these trains on the LTC, the order said.

“However, this dynamic fare component shall not be admissible in cases where a non-entitled government servant travels by air and claims reimbursement for the entitled class of Rajdhani/Shatabdi/Duronto trains,” it said.

“Reimbursement for the purpose of LTC shall be admissible for journeys performed in vehicles operated by the government or any corporation in the public sector run by the central or state government or a local body,” it said.
Read more at Medical Dialogues: 

How to get your Unique Permanent Registration Number with Medical Council Of India 

http://medicaldialogues.in/how-to-get-your-unique-permanent-registration-number-with-medical-council-of-india/

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...