Tuesday, November 27, 2018

தலையங்கம்

சிறப்பு நிதியை கேளுங்கள்




தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை சமீபத்தில் வீசிய ‘கஜா’ கோரப்புயல் புரட்டிப் போட்டு விட்டது.

நவம்பர் 27 2018, 03:30

12 நாட்களாகியும் இன்னும் இந்தப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி உதவி கோரியுள்ளார். வெள்ளச்சேதத்தை பார்வையிட மத்தியகுழு வந்தது. எல்லா இடங்களையும் பார்வையிட்டு இன்று டெல்லி செல்கிறது. இந்தக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், துயரத்தையும் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் கற்பனைக்கும் மீறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழக அரசு நிதிகோருவதும், மத்திய குழு வருவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். ஆனால், ஒரு நேரமும் தமிழக அரசு கோரிய நிதிக்கு பக்கத்தில்கூட மத்திய அரசாங்கத்தின் நிதி வந்து சேரவில்லை. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளச்சேதத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25,912 கோடியே 45 லட்சம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,759 கோடியே 55 லட்சம்தான். 2016-ம் ஆண்டு வார்தா புயலோடு ரூ.22,573 கோடியே 26 லட்சம் கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,793 கோடியே 63 லட்சம்தான். இதுபோல கடந்த ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய ‘ஒகி’ புயலுக்காக ரூ.9,302 கோடி கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் வழங்கியது ரூ.413 கோடியே 55 லட்சம்தான். இப்போது ரூ.15 ஆயிரம் கோடி தேவையான ஒன்று. ஆனால், மத்திய அரசாங்கம் மாநில தேசிய பேரிடர் மீட்புநிதியில் இருந்தும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் மட்டும் பணம் ஒதுக்கினால் நாம் கேட்கும் இவ்வளவு தொகையை நிச்சயமாக பெறமுடியாது.

இந்த ஆண்டுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடியைத்தான் நிதிக்குழு ஒதுக்கியிருக்கிறது. இதில் 90 சதவீத தொகை மத்திய அரசாங்கமும், 10 சதவீததொகை மாநில அரசும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இந்தத் தொகையில் ஏற்கனவே சில ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகையைத்தான் மத்திய அரசாங்கம் ஒதுக்க முடியும். இதுபோல, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் கொஞ்சம் தொகையைத்தான் வழங்க முடியும். மேலும் மத்திய அரசாங்கத்தின் சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து அவர்கள் ஒதுக்கீடு செய்யமுடியும். ஆனால், இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவான தொகையாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘வார்தா’ புயல் சமயத்தில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்திலிருந்து ரூ.2 கோடியே 6 லட்சம்தான் கொடுத்தார்கள். எனவே, பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், மத்திய அரசாங்கத்துறைகளில் இருந்தும் ஒதுக்கீடு பெறுவதோடு மட்டுமல்லாமல், பிரதமரிடம் இந்தப்புயலின் கோரத்தை எடுத்துக்கூறி, இதற்கென தனியாக சிறப்பு நிதி கேட்பதுதான் சாலச்சிறந்ததாகும். மத்தியகுழு அறிக்கை நிச்சயமாக புயலின் கோரத்தை வெளிக்காட்டும் வகையில் இருக்கும். ஆனால், ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பதற்கேற்ப, பேரிடர் மீட்பு நிதியை மட்டும் எதிர்பார்த்தால் போதிய நிதி கிடைக்காது. பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து ‘கஜா’புயலுக்கு சிறப்பு நிவாரண நிதியைப்பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
‘No exemption from poll duty’, teacher kills self

Ashish.Mehta@timesgroup.com

Jaipur:27.11.2018

Nearly 17 days after a physical training instructor (PTI) posted at a government school near Hanumangarh committed suicide, police are investigating the motive after a suicide note purportedly written by the teacher went viral.

The suicide note reveals that the teacher committed suicide after he failed to get exemption from election duty as a booth level officer (BLO). Police have now taken the suicide note on record and are verifying if it is authentic.

Police identified the PTI as Sohan Singh, who had committed suicide at his house in Sector 6 at Hanumangarh Junction on November 9. Police say they did recover any suicide note from the spot at that time.

However, Singh’s family members alleged that they had the suicide note but that the police refused to acknowledge it at that time. On Sunday, the suicide note went viral, after which the family members again requested the police to take the suicide note on record.

“Sohan Singh has stated in the suicide note that since December 2017, he had been requesting the local election officer to exempt him from election duty as a booth level officer. Singh says that the person earlier assigned this duty was injured and that he was assured by the authorities that when that person is fit, Singh would be exempted from the duty,” a senior police officer said on Monday.
WhatsApp ‘XXX’ group admin held in Mumbai

Added Woman To It Without Her Consent

Ahmed.Ali@timesgroup.com

Mumbai:27.11.2018

In a first for Mumbai, a WhatsApp group administrator has been arrested for adding a woman’s mobile number without her consent to a group that shares pornonographic content.

Mustaq Ali Shaikh, 24, a carpenter from Bengal, is now in police custody, arrested under IPC sections for outraging the modesty of a woman, and under 67 and 67-A of the IT Act. Police, who made the arrest on Thursday, said this was a lesson for all administrators to be cautious on who they add and what is posted.

Investigating officer Maruti Shelke said the complainant, a housewife, said her number was added to the group, ‘Triple XXX’, in September. “She thought it was a prank by friends but found pornographic photos and videos flooding the group. She then lodged a complaint,” said Shelke.

In her complaint, she said that when she looked at the administrator and 12 group members’ numbers in the morning, she realised she did not know any of them. Senior inspector Bharat Bhoite said that after registering a complaint, the police found that Shaikh’s phone number was from West Bengal. “Just when we were about to send a team to West Bengal, the mobile service provider told us Shaikh was very much in Mumbai. He was arrested from the Sion-Dharavi area,” he said.

“During interrogation, he apologised and said that he may have accidentally added the complainant’s number. He said he thought the number belonged to his brotherin-law and did not remember how he had the complainant’s number. He said he had no intention to hurt anybody and that the group was formed by his friend with no woman members,” added Shelke.

The police have seized Shaikh’s phone and have sent it to the Forensic Science Laboratory to retrieve its data. Cops have also sought the call detail reports of other group members who could become witnesses against Shaikh.

The maximum punishment Shaikh could get under the IT Act, 2000, is up to five years imprisonment for the first time. If he commits the crime again, he can be sent to jail for up to seven years and fined Rs 10 lakh. In July, a group administrator from Madhya Pradesh was arrested for allegedly posting anti-national messages. In August too, a group administrator from Bengaluru was arrested for circulation of communally provocative messages.



The maximum punishment Shaikh could get is up to five years’ imprisonment for the first time. If he commits the crime again, he can be sent to jail for up to seven years and fined ₹10 lakh

Sunday, November 25, 2018

Malware
Google removed 13 apps from Play Store that were installing malware on devices

 
Pointed out by a researcher, these apps were downloaded by more than half a million Android users.

M Devan 

 
Saturday, November 24, 2018 - 17:41


There has always been some apprehension on the safety of apps on the Android Play Store. Google follows a very open policy with developers who place their apps on the Play Store, which is quite different from what Apple does. It is much more difficult to get a placement in the App Store on Apple devices than it is on Google’s Play Store.

Now a researcher has come up with hard evidence of at least 13 apps, which masquerade as gaming apps and in reality, contain malware. Google has immediately arranged to have these 13 apps removed from the Play Store. But the unfortunate part is these apps have already been downloaded 560,000 or over half a million times. And a couple of these apps were even part of the list of ‘trending’ apps on the Play Store.

The apps, when downloaded, do not seem to have any functionality and simply crash. They have been designed as imitations of genuine games. The researcher who exposed this is one Lukas Stefanko of the cybersecurity firm ESET and he has posted a tweet with the details and even a video demo on how these apps would behave on your mobile. Such researchers, when they stumble across anything serious, first inform the company responsible for the lacunae and leave them adequate time to set the wrong right. Its only when the company fails to take action, they share the details in public.

As can been seen in this case, Google was the first to be told about these apps and the company has promptly removed the offending apps out of the Play Store. The next thing to be taken care of is how these half a million device owners can clean up their phones. The 13 apps had similar sounding titles like truck simulator luxury car driving simulator. This is not the first time Google has had to encounter situations where apps on the Play Store have been found to be harmful.
12 வயசு சிறுமியிடம் 63 வயது தாத்தா சேட்டை... ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை அறிவித்த நீதிபதி! 

By Hemavandhana Published: Saturday, November 24, 2018, 10:55 [IST] 

தீர்ப்பை வாசிக்க மருத்துவமனைக்கே சென்ற நீதிபதி- வீடியோ கடலூர்: தீர்ப்பு சொல்ல ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் கடலூர் மாவட்ட ஜட்ஜ் டி.லிங்கேஸ்வரன்!! பென்னாடத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 63 வயசானாலும் அதற்கேற்ற குணம் இல்லாத சங்கரநாராயணன், 12 வயசு சிறுமி கிட்ட வேலையை காட்டியிருக்கார். போன வருடம் தன் பகுதியிலேயே வசிக்கும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க போய், இந்த விவகாரம் பெரிதாகி கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டிருந்தது. 

கூண்டில் நிறுத்தினர் 

நீதிபதி டி.லிங்கேஸ்வரன்தான் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பல கட்ட விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரமும் வந்தது. கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு என தேதி கூறப்பட்டது. அதற்காக சங்கரநாராயணனை அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். நீதிபதியும் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். மயங்கி விழுந்தார் அப்போது சங்கரநாராயணன்தான் குற்றவாளி என்று தீர்ப்பில் நீதிபதி சொல்லி கொண்டிருந்தார். 

இதை கேட்டதும் சங்கரநாராயணன் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் ஜட்ஜ் உட்பட எல்லோருமே அங்கு பதட்டமடைந்தார்கள். பலத்த பாதுகாப்பு உடனடியாக 108 ஆம்புலன்ஸில் சங்கரநாராயணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி ஜட்ஜ் சொன்னார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சங்கர நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.கூடவே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

ஆஸ்பத்திரியில் நீதிபதி நேத்து சங்கர நாராயணன் திரும்பவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் இன்னும் உடம்பு சரியாகவில்லை. மருத்துவமனையில்தான் சிகிச்சை போய் கொண்டு இருக்கிறது. அதனால் நீதிபதி நேற்று சாயங்காலம் நேராக ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். தீர்ப்பை வாசித்தார் படுக்கையில் படுத்து கொண்டிருந்த சங்கரநாராயணா அருகில் நின்ற நீதிபதி, "சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சங்கரநாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை" என்று தீர்ப்பை வாசித்து முடித்தார். இத்துடன், சங்கரநாராயணன் கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பை வாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தீர்ப்பை வழங்க ஆஸ்பத்திரிக்கே நீதிபதி நேரில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-judge-t-lingeswsaran-visited-accused-hospital-pronounced/articlecontent-pf338503-334943.html

காயமே இது மெய்யடா 10: ‘சிக்கல்’ தீர்க்கும் இரவுத் தூக்கம்!

Published : 24 Nov 2018 11:29 IST




ஒவ்வொரு உயிர்ப் பொறியும் வெப்பத்தைச் சுயமாக உருவாக்கிக்கொண்டும் வெளியேற்றிக்கொண்டும் இருக்கிறது. அதேபோல உடல், நீர்ச் சமநிலையையும் எப்போதும் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

எனவே, உடலுக்கு எப்போது நீர் வேண்டும் என்பதை அறிவால் புறத்தில் இருந்து தீர்மானிக்க முடியாது. எப்போது தீர்மானிப்பது?. உடலுக்கு நீர்த் தேவை ஏற்படும்போது தாகமெடுக்கும். அப்போது நீர் அருந்த வேண்டும். லிட்டர் கணக்கில் அளவு வைத்தோ, இலக்கு வைத்தோ அல்ல!

நீர் அருந்துவதற்கும் மல வெளியேற்றத்துக்கும் முக்கியமான தொடர்பு உண்டு என்பதால், இப்போது நாம் அது பற்றிப் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக, குழந்தையின் நீர்த் தேவையைப் புறக்கணிக்கிறோம் என்பதால் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

குழந்தை எதற்காக அழுகிறது?

குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் சுமார் எழுபது சதவீதம் நீர் உண்டு என்றாலும், பாலில் உள்ள நீர், செரிமானத்துக்குத் துணை செய்யும். ஆனால், செரிமானத்தின் கூடுதல் தேவைக்கும், உடலின் வெப்ப - நீர்ச் சமநிலையைப் பேணவும் வளர்ச்சிதை மாற்றச் செயல்பாட்டுக்கும் உடலுக்குத் தனியாக நீர் அவசியம்.

அவசியமான போதெல்லாம் குழந்தைக்கு நீர் புகட்டினால்தான் மல வெளியேற்றம் எளிதாக இருக்கும். பெரும்பாலான தாய்மார்களிடம் தம் குழந்தைக்குப் பாலைத் தவிர தனியாக நீர் புகட்டும் பழக்கம் இல்லை. டயபர் உபயோகம் ஒருவகையில் வெப்பத்தை உள்நோக்கித் திருப்புகிறது என்றால், இன்னொரு வகையில் குழந்தை உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போதும் உள்வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

குழந்தையின் அழுகைக்கான காரணங்களைப் பெற்றவர்கள் நுட்பமாகக் கவனித்தால் மட்டுமே அவதானிக்க முடியும். குழந்தை தன் அனைத்துத் தேவைகளையும் அழுகையின் வழியாக மட்டுமே அறிவிக்க முடியும். அதன் தேவைகள் அனைத்தையும் பாலுக்கான அழுகை என்றே தட்டையாகப் புரிந்துகொள்கிறோம்.

பசியெடுக்கிறபோது பாலுக்காக அழும். குழந்தைக்குத் தாகம் எடுக்கிறபோது நீருக்காக அழும். பாலுக்கு அழுகிறதா நீருக்கு அழுகிறதா என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? நம்முடைய உணர்வு நுட்பமாயிருந்தால் அழுகை பாலுக்கானதா நீருக்கானதா என்பதை அறிய முடியும்.

அப்படிப் பிரித்தறிய முடியாத பெற்றோரைப் பெற்ற குழந்தையின் நிலை? இதில் ஒரு சிக்கலும் இல்லை. குழந்தை அழத் தொடங்கியதும் லேசாகச் சூடேற்றிய (காய்ச்சி ஆற வைத்து அல்ல) வெந்நீரை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் தேவை நீரெனில் நீரைக் குடிக்கும். குடித்துவிட்டு ஒரு இனிய புன்னகையை மலர்த்தி நன்றி தெரிவிக்கும்.

அப்போது நீர் தேவைப்படவில்லை, பால்தான் வேண்டும் என்றால் இரண்டு வாய் நீரை உறிஞ்சி ‘புளிச்’சென்று துப்பிவிட்டு, மறுபடியும் முன்னிலும் தீவிரமாக அழத் தொடங்கும். அப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும், குழந்தை பாலுக்கு அழுகிறதென்று.

ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டாம்!

பச்சிளங் குழந்தைப் பருவத்திலேயே குறைந்தபட்ச தாக – பசி உணர்வு முறைப்படுத்தப்படும் போதுதான், அது தன் இதர உணர்வுகளையும் முழுமையாக அடைவது சாத்தியமாகும்.

தனது தண்ணீர்த் தேவையை அறிவிக்கத் தெரியும்வரை முதலில் நீரைக் கொடுத்துவிட்டு அதனை மறுக்கிறபோது உணவைக் கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதுவே மலச் சிக்கலைத் தவிர்ப்பதற்கான முதன்மை நிலை.

அடுத்து, மிக அரிதான கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் டயபர் பொருத்துவதைத் தவிர்க்க வேண்டும். டயபரால் குழந்தையின் மென்மையான உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து பிறகு பார்ப்போம். குழந்தைப் பருவத்தில் மலச் சிக்கல் தோன்றுவதற்கும் ஆசன வாயில் மென்னுணர்வு மரத்துப் போவதற்கும் டயபர் ஒரு காரணி என்பதை அழுத்தமாக நினைவுறுத்திக் கொள்வோம்.

டயபர் போலவே ஆசனவாய் வழியாக வெப்பம் உள்நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு முக்கியக் காரணி, நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமல் அமர்ந்திருத்தல். மழலைப் பள்ளியில் குழந்தையை ‘ஆடாமல் அசையாமல் உட்கார்’ என்று சொல்வதே பெரிய வன்முறை. ஆடாமல் அசையாமல் இருக்க முடியாதது மட்டுமல்ல, அதற்குரிய மன நெருக்கடியும்கூட மலச் சிக்கலை உருவாக்கும்.

பல நேரம் மன நெருக்கடியே மலத்தை இறுகச் செய்துவிடும். குழந்தைப் பருவத்தில் எதன் பொருட்டும் அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது, உடல் வளர்ச்சியைக் குன்றச் செய்யும்.

சீக்கிரமாகத் தூங்குவது நல்லது

இரவு தாமதமாகப் படுப்பதும் மலச்சிக்கலுக்குக் காரணியாக இருக்கும். இரவில் விழித்திருக்கும் நேரத்தில் உடல் கூடுதலான வெப்பத்தை உருவாக்க நேரிடும். இருட்டத் தொடங்கிய பிறகு இயற்கையை மீறி பின்னிரவில் விழித்திருப்பதைச் சிலர் சாதனையாகவும், சிலர் கொண்டாட்டமாகவும், பலர் தியாகம் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றனர். அதன் முதல் கேடு, மலச் சிக்கல் அல்லது முழுமையாகச் செரிமானம் ஆகாமல் உணவு மலமாகிவிடுதல்.

பல வீடுகளில் ‘எங்க இந்த வாண்டுங்க ஆட்டம் அடங்கவே பன்னிரண்டு மணி ஆகுது. நாம எங்க சீக்கிரமா தூங்குறது’ என்று சலித்துக்கொள்வதுபோல், தமது குழந்தைகளின் துறுதுறுப்பில் பெருமிதம் கொள்கின்றனர்.

இரவு பத்து மணிக்காவது படுக்கைக்குச் சென்று விளக்கணைப்பதும், காலையில் காற்றின் தூய்மை முழு வீச்சில் இருக்கும் ஐந்தரை மணிக்கு விழிப்பதும் உடல் நலனுக்கு ஏற்ற பழக்கம் என்பதைப் பெரியவர்கள் உணரும்போதுதான் சிறு வயதினரும் அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியும்.

பகலில் எவ்வளவு நீண்ட தூக்கமும் இரவு நேரத்து ஆழ்ந்த, குறைவான தூக்கம் தரும் உடல் நலனைத் தர முடியாது. குறிப்பாக, செரிமானம், மலப்போக்கில் இரவுத் தூக்கக் குறைவு கண்டிப்பாகக் கெடுதல்களைத் தரும்.

வேண்டும் சுதந்திர உணர்வு

பல லட்சங்களைக் கொட்டி பிரபலமான பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் பிடிக்கும் பெற்றோர், அதன் கழிவறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. எத்தனை பெரிய பள்ளிகளிலும் கழிவறைப் பராமரிப்பு படு மோசமாக இருப்பதைக் காண முடியும். விதி விலக்காக ஒன்றிரண்டு நல்லவை இருக்கலாம்.

வீட்டில் கழிப்பதைப் போன்ற சுதந்திரமான மன உணர்வு கிடைக்கப் பெறாத இடங்களில் குழந்தைகள் மலம், சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இந்தக் கழிப்பு அம்சங்களை அவர்கள் வெளிப்படையாகப் பேசவும் நாம் அனுமதிப்பதில்லை. அதுபோக வகுப்பு வேளையில் இயற்கையின் அழைப்பை வேடிக்கைப் பொருளாக்கிய கலாச்சாரம் நமது சமூகத்தில் நிலவுகிறது.

விளைவு சிறுநீரையும் மலத்தையும் பள்ளிகளில் கழிக்க விருப்பமில்லாமல் அடக்கி அடக்கி, ஏழெட்டு வயது பள்ளிப் பருவத்திலேயே மலச்சிக்கல் பிரச்சினையும் சிறுநீரகக் கல் பிரச்சினையும் தற்காலத்தில் பரவலாகி வருகிறது.

பள்ளிக் கழிப்பறையைத் தவிர்க்க, குழந்தைகளின் இயற்கை அழைப்பு தொடர்பான மன நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு, இரவில் பத்து மணிக்கேணும் படுப்பது. இரவில் சீக்கிரமாகத் தூங்கினால்தான் காலையில் அரக்கப்பறக்க இல்லாமல் காலைக்கடன்களைக் கழிக்க ஏதுவாக இருக்கும்.

போதிய மன அவகாசத்துடன் கழிப்பதுதான் உடலுக்கு முழுமையான நலம் பயக்கும். தற்காலப் பதற்றக் கலாச்சாரமே மலச் சிக்கல் தொடங்கி பலவிதமான நோய்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. தனது வனத்தில் சுதந்திரமாகப் பாம்பு ஊர்ந்து செல்வதுபோல, மலம் லாவகமாக ஊர்ந்து செல்ல வேண்டும். நம்மில் எத்தனை பேர் அத்தகைய போக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறோம்?

(தொடரும்)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த நபர்: திருவான்மியூரில் கவனத்தை திசை திருப்பி துணிகரம்

Published : 23 Nov 2018 15:56 IST



பணத்தை எடுக்கும் நபர்கள் பின்னர் மோட்டார் சைக்கிளில்தப்பிசெல்லும் சிசிடிவி காட்சி

திருவான்மியூர் அருகே கொட்டிவாக்கத்தில் பைனான்ஸ் தொழில் செய்பவர் கவனத்தை திசை திருப்பி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (45). வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று பகல் திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார்.

தன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000 பணத்தை எடுத்துக்கொண்டு அதைப் பையில் வைத்து தனது சைக்கிளின் ஹாண்டில் பாரில் மாட்டிக்கொண்டு மார்க்கெட் சென்று வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை புத்து கன்னியம்மன் கோயில் அருகில் பூமிநாதன் செல்லும் போது அவரது சைக்கிள் செயினில் துணி சிக்கியதால் சைக்கிள் நின்றுவிட்டது. இதனால் சைக்கிளை நிறுத்திவிட்டு சக்கரத்தின் இடையே சிக்கிய துணியை எடுக்கும் முயற்சியில் பூமிநாதன் ஈடுபட்டார்.

அப்போது ஒரு நபர் அவர் தோளைத்தட்டி சார் பணம் உங்களுடையதா என்று பாருங்கள் என சில அடி தூரத்தில் கிடந்த 10 ரூபாய் நோட்டைக் காண்பித்துள்ளார். நன்றி அய்யா என்று சைக்கிளில் மாட்டியிருந்த துணியை எடுப்பதை விட்டுவிட்டு 10 ரூபாயை எடுக்க பூமிநாதன் சென்றார்.

அப்போது ஒரு நபர் அந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி அவருடைய சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தயாராக வந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

பத்து ரூபாய் லாபம் என சந்தோஷத்துடன் திரும்பிய பூமிநாதன் தனது சைக்கிளில் மாட்டப்பட்டிருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார். அங்குமிங்கும் தேடினார். ஆனால் பணப்பை போனது எங்கே என்று தெரியவில்லை. தனது பணம் பறிபோனது குறித்து பூமிநாதன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரைப் பெற்ற போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குள்ள கடை ஒன்றில் கண்காணிப்பு கேமரா பதிவு சிக்கியது. அதில் சைக்கிளுக்கு பத்தடி முன்னால் ஒரு நபர் நிற்பதும், பத்து ரூபாயை எடுக்க பூமிநாதன் செல்வதும், அந்த நேரத்தில் அந்த நபர் சைக்கிள் ஹாண்டில் பாரிலிருந்து பணப்பையை எடுப்பதும் எடுத்தவுடன் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்பதும் அதில் அந்த நபர் பணப்பையுடன் தப்பிச்செல்வதும் பதிவாகியுள்ளது.

பூமிநாதன் வங்கியில் பணம் எடுத்ததைக் கவனித்த கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து அவரது கவனத்தை திசை திருப்ப சைக்கிள் சக்கரத்தில் துணியை மாட்டவைத்து நிற்க வைத்துள்ளது. அப்போது பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் பூமிநாதனைக் கடந்து நின்றுகொண்டார்.

மோட்டார் சைக்கிள் பூமிநாதனுக்குப் பின்னால் பத்தடி தொலைவில் தயாராக நின்றுள்ளது. மூன்றாவது நபர் பூமிநாதன் துணியை எடுக்கும்போது 10 ரூபாயை கீழே போட்டுவிட்டு தகவல் சொல்லிவிட்டு கடந்து போயுள்ளார்.

பூமிநாதன் பத்து ரூபாயை எடுக்கச் செல்லும்போது காத்திருந்த நபர் பணப்பையை எடுக்க பத்தடி தொலைவில் தயாராக நின்ற பைக் அருகில் வந்து நிற்க எளிதாக தப்பிச் சென்றுள்ளனர். இப்படியா 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உள்ள பணத்தை இழப்பீர்கள் என போலீஸார் பூமிநாதனைக் கேட்டுள்ளனர்.

பூமிநாதன் வைத்திருந்த பைக்குள் ரூ. 50 ஆயிரம் பணமும், 2 பாஸ்புக்கும் இருந்தன.

திருவான்மியூர் போலீஸார் வழிப்பறி நபர்களைத் தேடி வருகின்றனர்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...