Thursday, February 28, 2019

Nurses Can Practice Their Profession Throughout The Territory Of India: SC 

[Read Order] By: Ashok Kini30 Jan 2019 12:55 PM

https://www.livelaw.in/top-stories/nursing-practice-cannot-be-restricted-to-a-state-142514

Nurses can practice their profession through out the territory of India

“We, therefore, declare that consistent with their fundamental right under Article 19(1)(g) of the Constitution of India, to practice their occupation throughout the territory of India, legislation in the form of the Nursing Council Act of 1947 has not restricted nor does it purport to restrict their practice of nursing once a Degree or Diploma is granted by the State Authority to that State only.”,

The Supreme Court has observed that the Nursing Council Act of 1947 does not restrict the practice of nursing once a Degree or Diploma is granted by the State Authority to that State only.

The bench comprising Justice Rohinton Fali Nariman and Justice Navin Sinha declared thus while allowing special leave petition filed by Private Nursing Schools And Colleges Management Association against the Bombay High Court order.

The association had approached the High court seeking a declaration to the effect that the Indian Nursing Council does not have authority to grant recognition or affiliation and the authority vests with the State Nursing Council under the State Act. The High Court held that once the State Council grants recognition and/or affiliation and so far as Graduation and Post-Graduation courses are concerned, if Maharashtra University of Health Sciences grants affiliation and the State Council accords permission and issues letter of intent or permission, the Institution can offer training in Diploma or Degree Courses in Nursing and it is not mandatory for such Institutions to secure recognition/permission from Indian Nursing Council. But it added the following rider:

"It is imperative for such institutions, imparting training in nursing in Maharashtra State, (which have not been approved by the Indian Nursing Council), the State Council and Health University to publish on its website that the degrees and diploma awarded by such institutions shall have applicability only in the State and the candidates receiving such degree or diploma would be entitled to practice within the State only. The same shall also be mentioned in the diploma and degree certificates awarded by the institutions and the Universities in this regard and, the students shall be made known regarding this restriction by giving due publicity on the website while processing admissions to such institutions."

The Association approached the Apex court against this direction issued by the High court.

The bench, analysing the provisions of the Act, observed: "We may indicate that Section 14 deals with withdrawal of recognition which is a stage which has not yet been reached on the facts of this case. We, therefore, declare that consistent with their fundamental right under Article 19(1)(g) of the Constitution of India, to practice their occupation throughout the territory of India, legislation in the form of the Nursing Council Act of 1947 has not restricted nor does it purport to restrict their practice of nursing once a Degree or Diploma is granted by the State Authority to that State only."

Picture Courtesy: The Hindu
இ.எம்.ஐ - இ.எம்.ஐ - இ.எம்.ஐ : கனவெல்லாம் இ.எம்.ஐ!

Published : 26 Feb 2019 15:06 IST

ஜெமினி தனா

 


’கடன்’ என்பது கவுரவக் குறைச்சல் எனப் பார்க்கப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருப்பவர்கள்தான் நாம்! கடன் வாங்கிக் கழித்தல் என்கிற பாடங்களெல்லாம் கடந்த இருபது வருடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடன் வாங்கியாவது வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்பதே இப்போதைய தலைமுறையினரின் அசால்ட் நிலைப்பாடு என்பதை மறுக்க முடியாது. இதைக் கடன் என்று சொன்னால் இப்போது புரியாது. கடனின் சர்க்கரை தடவிய இன்னொரு பெயர்... இ.எம்.ஐ.

நம் அப்பாக்களும் தாத்தாக்களும் மாமாக்களும் சித்தப்பாக்களும் கூட கடன் வாங்கினார்கள்தான். படிப்புக்காக வாங்கினார்கள். தொழில் விருத்திக்காக வாங்கினார்கள். நோயுற்ற வேளையில் வாங்கினார்கள். ஆனால், இப்போது, அப்பா தாத்தாக்கள் எந்த விஷயத்துக்குக் கடன் வாங்கினார்களோ அதையெல்லாம் தாண்டி கடனை வாங்குவதுதான் சூழல்... மனோநிலை!

சம்பளம் கவரில் கொடுத்த காலம் போச்சு. இன்றைக்கு அக்கவுண்ட்டில்தான் சம்பளம். ஏடிஎம் மெஷின் தான் கேஷியர். மேலும் கார்டைத் தேய்த்தால், பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அக்கவுண்ட், ஆப், செல்போன்... யாருக்கு பணம் போடவேண்டுமோ போட்டுவிடலாம். ஆக, பழசையும், பணத்தையும் எண்ணிப் பார்ப்பதில்லை.

இந்த நிலைதான் இ.எம்.ஐ.யிலும். மிக்ஸி, குக்கர் வாங்குவதற்கு சுலபத் தவணைத் திட்டம் இருந்தது அந்தக் காலத்தில். இன்றைக்கு ஆயிரக்கணக்கான விலையில் ப்ரிட்ஜ் போன்ற பொருட்கள், பல்லாயிரக்கணக்கான டூவீலர்கள், ஏசி முதலான விஷயங்கள், பல லட்சக்கணக்கிலான கார்கள் என எல்லாவற்றுக்குமே இஎம்ஐ வந்துவிட்டது.

முன்பெல்லாம் ஒருவரிடம் கடன் வாங்கக் காத்துக் கிடக்கணும். வங்கியில் கடன் வாங்க, நடையாய் நடக்கணும். ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த ஏழாம் நாள், புதிய வங்கியில், புதிய கணக்கு. அலுவலகமே ஏற்பாடு செய்யும். ஆபீஸுக்கே வருவார்கள். அடுத்து, பதினைந்தாம் நாள், செக்புக், கார்டு முதலானவை வீட்டுக்கே வந்துவிடும். அடுத்த பத்தாம்நாள் சம்பளம் அந்த அக்கவுண்ட்டில் கிரெடிட்டாகும். அடுத்த நாள் முதல், சம்பள விஷயங்கள் தெரிந்துகொண்ட நிறுவனங்கள், ‘இந்த லோன் தர்றோம், அந்த லோன் தர்றோம்’ என்று போன் மேல் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி, வைக்காத வங்கி, பெயரே வாயில் நுழையாத வங்கி என்று கடன் தருவதற்கு க்யூ கட்டி நிற்கிற காலம் இதுவாகத்தான் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில், ‘எங்கே வேலை, என்ன வேலை, எவ்ளோ சம்பளம்’ என்று கேட்கும் பட்டியலில், ‘எவ்ளோ இஎம்ஐ, எதுக்கு இஎம்ஐ’ என்றும் கேட்கவேண்டியிருக்கிறது.

விளையாட்டாக ஒருவிஷயம் சொல்வார்கள். முன்பெல்லாம், சாலையில் செல்லும் நூறுபேரை நிறுத்தினால், அதில் பத்துபேருக்கு சர்க்கரை நோய் இருந்தாலே அதிசயம் என்பார்கள். இப்போது 90 பேருக்கு சர்க்கரை நோய். அதேபோல, இப்போது 90 பேர் இ.எம்.ஐக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டில் ப்ரிட்ஜ். இ.எம்.ஐ. ஹாலில் பிரம்மாண்டமான சோபா செட். இ.எம்.ஐ. படுக்கையறையில் ஏ.சி. - இ.எம்.ஐ. வாசலில் மூன்று பைக்குகள் - இ.எம்.ஐ. போர்வை போர்த்திக்கொண்டு நிற்கும் கார் - இ.எம்.ஐ. அவ்வளவு ஏன்...

வீடு... இ.எம்.ஐ. இப்படி, இ.எம்.ஐ. இன்றி அமையாது உலகு என்றாகிவிட்டது, இன்றைய பலரின் வாழ்க்கை! ஃப்ரிட்ஜ், சோபா, ஏ.சி.. டூவீலர்கள், கார், சொந்த வீடு என எல்லாமே ஸ்டேட்டஸாகப் பார்க்கப்படுகிறதே... என்ன செய்வது? என்று அலுத்துக்கொள்கிறார்கள் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர். ஒரேயொரு விதிவிலக்கு... இ.எம்.ஐ. என்பதையோ இந்த வங்கிக்கடன்களையோ ஸ்டேட்டஸ் லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை என்பது ஆச்சரியம்தான்!

மாதச் சம்பளம், இ.எம்.ஐ., பள்ளி, கல்லூரிக் கட்டணம், சீசன் டிக்கெட், மளிகை, பால், மருந்து மாத்திரைகள் என்று போய்க்கொண்டிருக்கும் வரைக்கும் குறையொன்றுமில்லை. திடீரென்று வண்டி மக்கர் செய்து, ரெண்டாயிரம் நாலாயிரம் செலவு வைத்தாலோ, நம் உடல் எனும் வண்டி மக்கர் செய்து, ஸ்கேனிங், டெஸ்ட்டிங் என்றானலோ கூடுதல் பிபி எகிற ஆரம்பித்துவிடும். ஒன்று முடிந்து அடுத்தது என்கிற ஆரவாரமில்லாத மனநிலையே நம்மிடம் இல்லை என்பதுதான் இங்கே பெருங்குறை!

அதேபோல, வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும், கதவு மாத்தணும், காருக்கு டிங்கரிங் ஒர்க் கொஞ்சம் பண்ணனும் என்று பட்டியலிட்டால், நம் குடும்பத்தலைவன்கள், தலைசுற்றி முதுகைப் பார்த்துவிட்டு ஒரு ரவுண்டு வந்துவிடுவார்கள்.

வாங்குகிற சம்பளத்தில் பாதிக்குப் பாதி இ.எம்.ஐ. என்றாகிவிட, போதாக்குறை கல்யாணமான புதிதில் போட்ட பாலிஸி, குழந்தை பிறந்ததும் ஆரம்பித்த பாலிஸி, ரெண்டாவது குழந்தை பிறந்த போது போட்ட பாலிஸி, மாதந்தோறும் நகைச்சீட்டு என்று எகிடுதகிடாக, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று இருக்கும் நிலை. இந்த சமயத்தில், அலுவலகத்தில் அரசியல், நாலுவருடமாக ப்ரமோஷன் இல்லை, எதிர்பார்த்த சம்பள உயர்வும் இல்லை... என்பன போன்ற காரணங்களுக்காக ‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ என்று ஆர்ப்பரிக்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியே உருவாக இருந்துவிட்டுப் போவதே புத்திசாலித்தனம் என்கிற மனநிலை... இ.எம்.ஐ. அன்பர்களின் ஒத்த சிந்தனை!

இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களின் சம்பளத்தால் இ.எம்.ஐ... அலுவலகச் சிக்கல்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றால் மன இறுக்கத்துக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள் என்பது சோகம். வேலையை விட முடியாது. வேறு வேலைக்குச் சென்றால், சர்வீஸ் கட்டாகிவிடும். எத்தனை விதமான சிக்கல்கள்?

’இந்த இ.எம்.ஐலேருந்து எப்படா மாப்ளே விடுபடப்போறே?’ என்று நண்பர்களோ உறவினர்களோ நலத்தை விரும்புபவர்கள் கேட்கும்போது, ‘அதுக்குத்தாண்டா மச்சான், ஒரு ப்ளான் வைச்சிருக்கேன். பேங்க்ல பர்சனல் லோன் கேட்ருக்கேன். அதை வாங்கி, சின்னச்சின்ன இ.எம்.ஐ எல்லாத்தையும் முடிச்சுத் தூக்கிப்போட்டுட்டு ரெண்டே ரெண்டு இ.எம்.ஐ. வீட்டுக்கு ஒண்ணு. பர்சனல் லோன் ஒண்ணுன்னு இருந்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்’ என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு சொல்வார்கள்.

பாவம்... கேட்பவர்கள்தான் கிறுகிறுத்துப் போவார்கள்!
வாட்ஸ் அப்பில் தொந்தரவு செய்கிறார்களா?- ஸ்க்ரீன்ஷாட்டோடு புகார் அளிக்க புதிய வசதி

Published : 23 Feb 2019 17:12 IST

க.சே.ரமணி பிரபா தேவி
 



  வாட்ஸ் அப்பில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.

இன்றைய ஸ்மார்ட் போனின் பிரிக்க முடியாத செயலி வாட்ஸ் அப். உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் குறுஞ்செய்திக்கான செயலியாக விஸ்வரூபமெடுத்துள்ளது.

அதே நேரம் வாட்ஸ் அப்பில் பல்வேறு விதமான போலி குறுஞ்செய்திகள், மார்பிங் படங்கள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பெண்களைக் கேலி செய்வது, ஆன்மிகத்தில் பெயரால் ஏமாற்றுவது தொடர்பான செய்திகளும் போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஆடியோ, வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். வெளிமாநில இளைஞர்கள் சிலரைத் திருடனாக நினைத்து பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவமும் உண்டு.

அதேபோல பழைய வீடியோக்களை சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்து பரப்பி விடப்படுகின்றன. அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதே குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவர் இந்து திருமணங்கள் குறித்து 2017-ல் பேசிய வீடியோ அண்மையில் பேசியதாகக் கூறப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஒரு செய்தியை ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் கட்டுப்பாடு விதித்தது.

இதற்கிடையே பெண்களின் எண்ணை எப்படியாவது வாங்கி, அவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தருபவர்களும் உண்டு. பிரதான எண் என்பதால், செல்போன் எண்ணை மாற்ற முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஆண்களில் சிலரும் இதே நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இதைத் தடுக்க இந்தியத் தொலை தொடர்புத் துறை இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வாட்ஸ் அப்பில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அவர்களின் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம்

எப்படிச் செய்வது?

உங்களுக்கு வரும் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுங்கள். அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணையும் ccaddn-dot@nic.in என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள். இந்த செய்தியைப் பெறும் தொலைத்தொடர்புத் துறை, தொலைதொடர்பு சேவை வழங்குநரிடம் இத்தகவலைக் கூறி, காவல்துறைக்கு உரிய தகவல்களை வழங்கும்.

முன்னதாக தொலைதொடர்பு சேவை வழங்குநர், ஆட்சேபனைக்குரிய, ஆபாச உள்ளடக்கங்களை அனுமதிக்க முடியாது என்று மத்திய அமைச்சகத்திடம் ஏற்கெனவே உறுதி அளித்திருப்பார். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களை எளிதில் முடக்க முடியும்.

சில வாட்ஸ் அப் எண்கள், மொபைல் நெட்வொர்க்காக இல்லாமல் வை-ஃபை நெட்வொர்க்காக இருக்கும். அவற்றை வை-ஃபை அளிக்கும் இணைய சேவை வழங்குநரின் உதவியோடு கண்டுபிடிக்க முடியும்.

இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வாடகை வீடு - ’டூலெட்’ போர்டு - அனுபவங்கள்!

Published : 27 Feb 2019 15:41 IST

ஜெமினி தனா





மூச்சை முட்டும் நெருக்கடி மிகுந்த நகரங்கள் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் போவது போல் தனி வீடுகள் எல்லாம் கூட்டு வீடுகளாக, அபார்ட்மெண்ட்டுகளாக மாறியிருக்கின்றன. அடுக்கடுக்காக அத்தனை வீடுகள் கண்ணுக்குத் தெரிந்தாலும், ‘டூலெட்’ போர்டும் தெரிவதில்லை. வாடகைக்கு வீடு தேடுவதும் பெரும் கவலை!

ஃப்ளாட்ஃபாரத்தில் வசிப்பவர்களும், விண்ணை முட்டும் உயர்ந்த ப்ளாட்களில் வசிப்பவர்களும், அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் ’என் வழி தனி வழி’ என்று எவ்வித பிரச்சினையிலும் பொருந்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் வேலை மாற்றல், குழந்தைகள் கல்வி, கட்டுப்படியாகாத வாடகை என்று சிக்கல்கள் வரிசைகட்டி அடிக்கும் போது, விழிபிதுங்கி, கைபிசைந்து, கால்வலிக்க வீடு தேடுபவர்கள் மிடில் கிளாஸ் என்கிற பாவப்பட்ட மக்கள்தான்.

’வீடு பிரமாதமா, எல்லா வசதிகளோடயும் இருக்கணும்’ என்பது ஒருவகை. ‘வீடு சுமாரா, குறைச்சலான வசதியோட இருந்தாலும் பரவாயில்ல. ஹவுஸ் ஓனர் டார்ச்சர் கொடுக்காதவரா இருந்தாப் போதும். அதுவே நிம்மதி’ என்று அலைபவர்கள் இன்னொருவகை.

இதில், இரண்டாவது வகைக்காரர்கள்தான், எக்கச்சக்கம்.

இருக்கிறவனுக்கு ஒரு வீடு.. இல்லாதவனுக்கு பல வீடு என்கிற பழமொழி, சாதாரண தருணங்களில் இனிக்கலாம். ஆனால், ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்வதற்காக, வாடகை வீட்டைத் தேடி அலைபவர்களிடம் இதைச் சொன்னால், அவர்கள் பார்வையிலேயே நம்மை எரித்துவிடுவார்கள்.

’வேலை தேடுறது, கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது, குடியிருக்க வீடு தேடுறதுன்னு மூணு தேடுதல் வாழ்க்கைல பெரிய அவஸ்தை. இதுல வீடு தேடுறது போல கொடுமை எதுவுமே இல்ல’ என்று தத்துவம் பேசுகிறவர்கள், பல வீடுகள் மாறி மாறி, குடியிருந்தவர்கள் என்பதை அந்தப் பேச்சு அனுபவத்திலேயே உணர்ந்துகொள்ளலாம்.

முதலில் ஏரியா பிடிக்கணும். அடுத்து அந்த ஏரியாவுக்கு வந்து செல்ல, பஸ், ரயில் வசதிகள் பார்க்கணும். மழைக்காலத்துல சிக்கலும் தண்ணீரும் வீட்டுக்குள்ளே வருமான்னு கவனிக்கணும். அப்புறம் தெரு. சாக்கடை, கழிவு நீர், குப்பைத்தொட்டின்னு சகலமும் கவனிக்கணும். இதுவும் ஓகேன்னு டிக் அடிச்ச பிறகு, வீடு.

அந்தக் காலத்துல, ‘வீடுன்னா வெளிச்சமா இருக்கணும்’ என்றார்கள். இப்போது ‘24 மணி நேரமும் லைட் போட்டுக்கிட்டே இருக்கணும்ங்கற மாதிரிதான் வீடு இருக்கு’ என்றாகிவிட்டது. ஆக, இருட்டு வெளிச்சம், லைட் என்பதை கணக்கில் சேர்க்கவேண்டாம்.

அதேபோல், காற்றோட்டமான வீடு என்பதையெல்லாம் மறந்து மாமாங்கமாகிவிட்டது. ‘ஜன்னல் திறந்து வைச்சா, லேசா வெளிச்சமும் கொஞ்சமா காத்தும் நிறையவே கொசுவும் உள்ளே வந்துரும்’ என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.

வாடகைக்கு வீடு தேடுபவர்களின் நிலையை அப்படியே ‘கட்’ செய்துவிட்டு, ஹவுஸ் ஓனர்கள் பக்கம் கொஞ்சம் வருவோம்.

‘எத்தினி பேரு’ என்பது முதல் கேள்வி. ‘எங்கே வேலை’ என்பது அடுத்த கேள்வி. ‘மாசம் பொறந்தா அஞ்சாம்தேதி வாடகை கொடுத்துடணும்’ என்பார்கள்.

‘பசங்க ரெண்டுங்களா? ரொம்ப வாலுத்தனம் போல இருக்கே? இந்த செவுத்துல கிறுக்குறது, பூனை வரையறதுன்னு செய்யக்கூடாது. ஆணி அடிக்கவே கூடாது. தண்ணியை சிக்கனமாத்தான் செலவு செய்யணும்’ என்பார்கள்.

‘முக்கியமா, மச்சினன் வேலைக்கு வந்துருக்கான். தங்கச்சி படிக்க வந்திருக்கு’ன்னு வந்து தங்கற பிஸ்னஸ்லாம் கூடாது. அப்படி தங்கறதா இருந்தா, வாடகையை ஏத்துவோம். அதை இப்பவே சொல்லிப்புட்டேன்’ என்று பிபி ஏற்றுவார்கள்.

அதேபோல, ஊர்லேருந்து அப்பா அம்மா, மாமனார் மாமியார்னு அடிக்கடி வர்றதா இருந்தா, தண்ணி செலவுதான் அதிகமாகும். அதனால, இதையெல்லாம் மைண்ட்ல வைச்சுக்கங்க’ என்று கிறுகிறுக்கவைப்பார்கள். இதில் முக்கியமான விஷயம்... இந்தப் பேச்சின் போதே, நாம் எந்த ஜாதி, என்ன பிரிவு, குலம் என்ன, கோத்திரம் என்ன, சைவமா, அசைவமா என்பதையெல்லாம் ‘மானேதேனே’ கேள்விகளால், கறந்திருப்பார்கள்.

’அட்வான்ஸ் எப்போ தர்றீங்க?’ என்று கேட்டுவிட்டு நம்மை உற்றுப் பார்ப்பார்கள். ‘இன்னும் ரெண்டுநாள்ல தரேன்’, ‘அஷ்டமி, நாளைக்கி நவமி. அது முடிஞ்சு தர்றேன்’ என்று சொன்னால்... ‘ஏற்கெனவே ரெண்டுபேர் பாத்துட்டு ஓகே சொல்லிட்டுப் போயிட்டாங்க. பாத்துக்கங்க’ என்று டிமாண்ட் காட்டுவார்கள்.

அட... இதுமட்டுமா?

ரொம்ப டெர்ரர் ஹவுஸ் ஓனர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புதிய ஒப்பந்தம் போடற மாதிரி பத்திரத்துல அக்ரிமெண்ட் போடுவாரு. வேறென்ன...வீட்டை காலி பண்ணிட்டுப் போகும்போது, நீங்க அழுக்காக்குனதுக்கு இவ்ளோ கலரடிச்சேன்..குழாயை மாத்தினேன்..இப்படி நீளமான பட்டியலைப் போட்டு, குளிர்ஜூரம் வரவைப்பாங்க.

நமக்கு வீடு வேணுமில்ல. அதனால தகராறு பண்ணாம தலையாட்டிடுவோம்னு மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா எல்லா வீட்டுக்காரரும் இப்படி இல்லங் கறதையும்சொல்லியே ஆகணும்,

என் தோழி ஒருத்தி, சமீபத்துலதான் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தா. வரும்போது அவங்க ஹவுஸ் ஓனரம்மாவும் இவளும் ஒரே அழுகாச்சிதான். அன்புன்னா அப்படியொரு அன்பு. அவ குழந்தைகளுக்கு அப்பத்தா, அம்மாச்சியோடு, இந்தப் பாட்டியும் சேர்த்து மூணு பாட்டியாம். இப்படி அனுசரணையா ஒருத்தருக்கொருத்தர் தாயா பிள்ளையா பழகுறவங்களும் இருக்காங்க.

விலைவாசி ஏறினாலும் நியாயமான வாடகைக்கு விடற தங்கமான வீட்டுக்காரங்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு காலத்தில அவங்களும் வாடகை வீட்டில இருந்தவங்களா கூட இருக்கலாம்தானே. ஒரு பொண்ணோட மனசு மட்டும்தான் இன்னொரு பொண்ணுக்குத் தெரியுமா. ஒரு வாடகை வீட்டுக் காரங்களோட மனசு முன்னாள் வாடகை வீட்டுக்காரங்களுக்குத் தெரியலாமே!

20 வருடங்களுக்கு முன்பு, டூலெட் போர்டில் வாடகைக்கு வீடு.. அடைப்புக்குறிக்குள் குடும்பத்தினர் மட்டுமே அணுகவும்னு கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள். பேச்சிலர்களை பேசக் கூட அனுமதிக்க மாட்டாங்க. ஆனா இப்போ நிலைமையே வேற!

ஆனா என்னிக்கு குடும்பத்துல இருந்து வெளியூரு வந்து தனியா தங்கி வேலை பார்க்கிற ஆணும் பெண்ணும் அதிகரிச்சாங்களோ... அப்ப எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு. இப்பவும் டூலெட் போர்டு வைக்கிறாங்க. ஆனா அதில், ‘பேச்சிலர்ஸ் ஒன்லி’ எனும் வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.

’ஆமாம்... ஐடி பசங்க வீட்டுக்குள்ளே இருந்தா, அடிச்சுப் போட்டா மாதிரி தூங்கிட்டிருக்காங்கன்னு அர்த்தம். வெளியே பூட்டு போட்டிருந்தா, வேலைக்குப் போயிட்டாங்கன்னு அர்த்தம். கிச்சன்ல கறையாகாது. தண்ணிச் செலவு கம்மியாத்தான் இருக்கும். அப்பா, அம்மாலாம் வந்து ரெண்டுநாலு நாள் தங்கமாட்டாங்க. முக்கியமா, கேக்கற அட்வான்ஸை தந்துருவாங்க. சொல்ற தேதில வாடகையைக் கொடுத்துருவாங்க.

அதனால, பேச்சிலர்ஸ்தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ்’ என்கிறார்கள் ஹவுஸ் ஓனர்கள் பலரும்!

வருடந்தோறும் வாடகை ஏற்றினாலும் கேள்வியே கேட்காமல் அப்படியே ஆகட்டும் என்று வரமளிப்பது போல் வாடகையை தந்துவிடுவார்கள்.

பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லையென்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் கூடக்குறைஞ்சு என்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு இன்றைய மிடில்கிளாஸ் மக்கள் வந்துவிட்டார்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் மனப்பாங்கோடு பல ஹவுஸ் ஓனர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனாலும் பேச்சிலர்களுக்கான டூலெட் போர்டுகள் ஒருபுறமும்.. பந்தாக்களை அள்ளிவீசும் வீட்டு ஓனர்களும் தமிழகம் முழுக்க இருந்தாலும் எங்களைப் போன்று நீங்களும் கூடிய சீக்கிரம் வீட்டை வாங்கி விடுவீர்கள். அதுவரை இங்கேயே இருக்கலாம் என்னும் புதிய பந்தத்தை தரும் வீட்டு உரிமையாளர்களும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

’டூலெட்’... ‘வீடு வாடகைக்கு’ விளம்பரங்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
  • மார்ச் 04 (தி) மகா சிவராத்திரி
  • மார்ச் 15 (வெ) காரடையான் நோம்பு
  • மார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை
  • மார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்
  • ஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்
  • ஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு
தமிழகத்தில் இன்று முதல் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்

Added : பிப் 28, 2019 00:54

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில்வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன.அத்துடன் போலி லைசென்ஸ்களும் புழக்கத்தில் உள்ளன.இதை தடுக்க கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழு வதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ.
அலுவலகங்களில் இன்று இந்த வசதி துவக்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.

சேலம் - காட்பாடி ரயில் நீட்டிப்பு

Added : பிப் 27, 2019 22:19

சென்னை, சேலத்தில் இருந்து, காட்பாடிக்கு இயக்கப்பட்டு வந்த பயணியர் ரயில், இன்று முதல், அரக்கோணத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், மாலை, 3:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:40 மணிக்கு காட்பாடி சென்றடையும். அங்கிருந்து, இரவு, 8:45 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:20 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து, அதிகாலை, 4:40 மணிக்கு புறப்பட்டு, காலை, 6:00 மணிக்கு காட்பாடியும், காலை, 11:15 மணிக்கு சேலம் சென்றடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 2.5.2024