Tuesday, January 28, 2020

High Courts Weekly Round-Up

High Courts Weekly Round-Up: bAllahabad High Court/b b /b bNo Religion Prescribes Use Of Loudspeakers For Worshipping: Allahabad HC Declines Mosques' Request To Install Loudspeaker For Azaan/bb [Masroor Ahmad & Anr. v. State of UP/b...

'It's A Malafide and Desperate Attempt': Delhi Court Rejects A Plea By Nirbhaya Convict's Father Challenging The Credibility Of The Sole Eye Witness

'It's A Malafide and Desperate Attempt': Delhi Court Rejects A Plea By Nirbhaya Convict's Father Challenging The Credibility Of The Sole Eye Witness: Additional Sessions Judge Ajay Kumar Jain has dismissed a plea moved by the father of one of the convicts, wherein the credibility of the sole eye witness in the case was challenged as being ...
கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றுக்குள் அரை கிலோ முடி- அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 

28.01.2020 

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்டுகள் துகள்கள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, திட உணவுகளை உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். திரவ உணவை மட்டுமே உட்கொண்டுள்ளார்.


இந்நிலையில், கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ததில் திட வடிவில் கட்டி இருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக அக்கட்டி அகற்றப்பட்டு, தற்போது சிறுமி நலமாக உள்ளார்.

இதுதொடர்பாக குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமியின் வயிற்றில் தலைமுடி, ஷாம்பு பாக்கெட் துகள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தோம்.

பின்னர், மருத்துவக் குழுவினர் சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் 500 கிராம் எடையில் கட்டிபோல் இருந்த தலைமுடியை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

சிறுமியின் தாய்மாமா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அந்த அதிர்ச்சியில் சிறுமி கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதுகுறித்து பெற்றோருக்கு தெரியவில்லை. இதன்காரணமாக தனது தலைமுடியை பிய்த்து அவ்வப்போது வாய்க்குள் போட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு இந்தச் செயல் நடந்திருக்கும் என கருதுகிறோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுமி நலமாக உள்ளார்.

சிறுவர்களையும் பாதிக்கும்

அவருக்கு உளவியல் ஆலோசனை தரப்படுகிறது. மன அழுத்தம் பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் என்றில்லை. சிறுவர்களும் அதனால் பாதிக்கப்படலாம். சிறுவர்களிடம் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.
வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி வழக்கு தள்ளுபடி நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்

28.01.2020 

நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் உட்பட யாருக்கும் விலக்கு அளிக்க முடி யாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து சிறு பான்மை மருத்துவக் கல்லூரியான தங்களுக்கு விலக்கு அளிக்க வேண் டும் எனக் கோரி வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘நீட் தேர் வுக்கு விலக்கு கோரியது தொடர்பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டதே, தற் போது அதில் மீண்டும் புதிதாக என்ன இருக்கிறது” என கேள்வி எழுப்பினர்.

சிஎம்சி தரப்பில், ‘‘நீட் தேர்வை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்த உத்தரவை எதிர்த்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நீட் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்பதால் அது தொடர்பாக வாதிடுகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டது.

மாற்றியமைக்க முடியாது

அப்போது நீதிபதிகள், ‘‘ஏற் கெனவே மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்பது தொடர் பாக உச்ச நீதிமன்றம் விரிவாக உத்தரவிட்டுள்ளது. அதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இந்த விஷயம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட ஒன்று. நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கும்போது அதில் சிறு பான்மைக் கல்லூரி என்பதற்காக மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருக்காக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மாற்றியமைத்துக் கொண்டு இருக்க முடியாது. நீட் தேர்வை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமே (எய்ம்ஸ்) பின்பற்றும்போது நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? இதில் நாங்கள் திட்டவட்டமாக இருக் கிறோம். இந்த விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம்இல்லை’’ என்று தெரிவித்தனர்.

அதையடுத்து சிஎம்சி கல்லூரி தரப்பில், அந்த மனுவை வாபஸ் பெற அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது.

அதற்கு முதலில் அனுமதி மறுத்த நீதிபதிகள், பின்னர் வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தெய்வமே சாட்சி: பெண்ணை வணங்க வேண்டுமா? 




ச.தமிழ்ச்செல்வன்

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா திடீரென்று ஒரே நாளில் ஆகிவிடவில்லை. ஒரே ஒரு காரணத்தாலும் இது நிகழ்ந்துவிடவில்லை. பல்வேறு வழித்தடங்களின் மூலம் நாம் இன்று இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். எல்லா வழித்தடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கல்லும் முள்ளும் அகற்றப்பட வேண்டும்.

பெண்கள் மீது இந்தியச் சமூகம் கொண்டிருக்கும் இரட்டை மனநிலை நாம் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம். பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடுவது அந்த இரட்டை மனநிலையில் ஒன்று. ஆணுக்குக் கீழாகப் பெண்ணை வைப்பது இன்னொரு மனநிலை. இவ்விரு மனநிலைகளின் வேரைக் கண்டடைய பெண் தெய்வங்களின் கதைகளை வாசித்து விவாதிப்பது உதவியாக இருக்கும்.

நாட்டுப்புறத் தெய்வங்கள்

‘பெண்ணைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா’ என்று ஏன் பாரதி பாடினான்? கும்பிடுவதற்குப் பின்னால் இயங்கும் சமூக உளவியல் என்ன? இந்த உளவியலுக்கும், ஆணாதிக்க மனோபாவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. தெய்வங்களில் இரண்டு வகை உண்டு. பெருந்தெய்வங்கள் ஒரு வகை. சிறு தெய்வங்கள் எனக் குறிக்கப்படும் நாட்டுப்புறத் தெய்வங்கள் இன்னொரு வகை. நிறுவனமயமாக்கப்பட்ட பெருமதங்களான சைவம், வைணவம், வைதீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை கொண்டாடும் தெய்வங்கள் பெருந்தெய்வங்கள். இத்தெய்வ வழிபாடுகள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, அம்மதங்களின் மறை நூல்களை (பைபிள், குர் ஆன், சைவத் திருமறைகள் போல்) முன்னிறுத்திச் செய்யப்படுபவை.

ஆனால், நாட்டுப்புறத் தெய்வங்கள் எனப்படுபவை நம்மோடு வாழ்ந்து மறைந்த மனிதர்கள்தாம். அவர்கள் இறந்த பின் நடுகல் நட்டோ பீடங்கள் எழுப்பியோ வழிபடப்படுபவை. பொதுவான ஆகம விதிகளுக்கோ எந்த மதத்தின் வழிபாட்டு முறைகளுக்கோ, சாத்திரங்களுக்கோ கட்டுப்படாதவை இத்தெய்வங்கள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியான தோற்றக்கதையும் அக்கதையை அடிப்படையாகக் கொண்ட தனித்தனி வழிபாட்டு முறையும், படையலிடும் பழக்கமும் உண்டு. ஒரு வகையில் இத்தெய்வங்களை ‘மதச்சார்பற்ற சாமிகள்’ என்றுகூடச் சொல்லலாம்.

ஆதிக்கம் செலுத்தும் சிறுதெய்வங்கள்

பொ.ஆ. 6-7-ம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாவும் திரித்து உள்வாங்கிக்கொண்டது பிற்கால வரலாறு. ‘சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்’ என்று ஏழாம் நூற்றாண்டின் அப்பர் தேவாரம் இத்தெய்வங்களை வெளித்தள்ளி நிறுத்தியது. ‘பிண்டத்திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும் உண்டற்கு வேண்டி ஓடித்திரியாதே’ என்று நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகளைப் பெரியாழ்வார் திருமொழி இகழ்ந்து புறமொதுக்கியது. வாழ்ந்து மடிந்த மனிதர்களும் மனுசிகளுமே நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பதால் இவற்றுக்குத் தெய்விக அந்தஸ்தை வழங்கவோ தம் பிள்ளைகளுக்கு இத்தெய்வங்களின் பெயர்களைச் சூட்டவோ ‘மேலோர்’ இதுவரை முன் வரவில்லை.

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மனங்களைக் கட்டி ஆண்டவையாகவும் ஆள்பவையாகவும் இத்தெய்வங்கள் திகழ்கின்றன.

1916-ல் திருநெல்வேலி மாவட்ட கெஜட்டியர் நூலைத் தொகுத்த ஆங்கிலேயரான ஹெச்.ஆர்.பேட் அந்நூலில், “சிவனோ விஷ்ணுவோ ஆதிக்கம் செலுத்துவதைவிடவும் இம்மாவட்ட மக்களின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் சாமிகளாக இருப்பவை பாபநாசம் மலையில் குடிகொண்டிருக்கும் சொரிமுத்தையனும் அங்குள்ள இதர சிறு தெய்வங்களுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சனங்களின் சாமி

ஆகவே, மக்கள் தொகையில் பெரும் பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கூட்டு உளவியலில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தெய்வங்கள் குறித்த ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 30-40 ஆண்டுகளாக இத்தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் உரிய கவனம் பெற்றுவருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், கிராம தேவதைகள், சிறு தெய்வங்கள் என பல பெயர்களில் அழைக்கப்படும் இத்தெய்வங்களைக் ‘கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுவார். பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள், சனங்களின் சாமிகள் என்று விளிக்கும் மரபை உருவாக்கியது.

சாதி மறுத்துக் காதலித்த குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை உள்ளிட்ட பல நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைப்பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் நா. வானமாமலை. மக்களின் வாய்மொழியில் மட்டுமே உலவுகின்ற அத்தெய்வங்களின் தோற்றக்கதைகளைக் கொண்டு, அத்தெய்வங்கள் எக்காலத்தில் எந்தச் சமூகப் பொருளாதாரப் பின்னணியில் மனிதர்களாக வாழ்ந்தார்கள், அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்கிற ஆய்வுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்வார்.

பசும்பாலே படையல்

மேற்சொன்னவையெல்லாம் ஒரு பின்திரையாகவும் முன்னுரையாகவும் இருக்க, நம்முடைய பயணம் பெண்கள் குறித்த நம் ஆணாதிக்கச் சமூகத்தின் மனக்கட்டமைப்பின் ஒரு வழித்தடத்தில் தொடரவிருக்கிறது. நாட்டுப்புறத் தெய்வங்களில் ஆண் தெய்வங்களும் உண்டு, பெண் தெய்வங்களும் உண்டு. பெண் தெய்வங்களின் தோற்றக்கதைகளை முன்வைத்து இன்றைய பெண்களின் இடமும் இருப்பும் குறித்த உரையாடலை முன்னெடுக்க முடியும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களுக்கு எழுத்தறிவும் எண்ணறிவும் புகட்டத் தொடங்கப்பட்ட ‘அறிவொளி இயக்க’த்தின்போது அதில் பங்கேற்ற எம் போன்றோர், மக்களுக்குக் கற்றுக்கொடுத்ததைவிட, அவர்களிடம் கற்றுக்கொண்டு திரும்பியதே அதிகம். பேராசிரியர் ச.மாடசாமியின் தலைமையில் நாங்கள் மதுரையில் ‘கருத்துக் கூடம்’ ஒன்றை அமைத்து, மக்களிடம் கற்றுக்கொண்டவற்றை முறைப்படுத்தித் தொகுத்தோம். அத்தொகுப்பில் தென் மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாட்டுப்புறத் தெய்வக்கதைகள் ஒரு பகுதி. அத்தொகுப்பிலிருந்தும் வேறு சில ஆய்வாளர்கள் தொகுத்தவற்றிலிருந்தும் சில பெண் தெய்வங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு நாம் விவாதிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கொம்புசித்தம்பட்டிக்கு வடக்கே பொம்மக்கோட்டைக்கு அருகே உள்ள ஒரு பெண் தெய்வத்தின் பெயரும் அவரை வழிபடும் முறைகளும் நம் கவனத்தை ஈர்த்தன.

இந்தச் சாமியைக் கமுதிப் பக்கமிருந்து வண்டி பிடித்து வந்தும் கும்பிட்டுப் போகிறார்கள். மற்ற ஊர்க்காரர்களும் வந்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் அதிகமாக இருக்கும். பொம்மக்கோட்டையிலும் மற்ற ஊர்களிலும் ஆடு, மாடுகளுக்குப் பால் சுரக்காவிட்டாலும், குழந்தை பெற்ற பெண்களுக்குத் தாய்ப்பால் இல்லாவிட்டாலும் இங்கு வந்து நேர்ந்துகொள்கிறார்கள். இந்த அம்மனுக்குப் படையலாகப் பசும்பாலைத்தான் தருகிறார்கள். மாடு கன்று போட்ட 30 நாள் கழித்து பால் பீய்ச்சி, அந்தப் பாலைத்தான் விரதம் இருந்து கொண்டு வந்து இந்தச் சாமிக்குப் படைக்கிறார்கள்.

இந்தச் சாமியின் பெயர் மலட்டம்மா. மலடு, மலடி என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டு ஒரு சாமியா? இந்த மலட்டம்மாவின் தோற்றக்கதை என்ன? பால் ஏன் படையல் பொருளானது?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com
வங்கி ஊழியர் 2 நாட்கள், 'ஸ்டிரைக்'

Added : ஜன 28, 2020 00:16

சென்னை:ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 31 முதல் நடக்கும், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில், 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31, பிப்ரவரி, 1ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர், சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:வேலை நிறுத்தத்தை கைவிட்டால் பேச்சு நடத்துவதாக, இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்தது. ஆனால், வேலை நிறுத்தத்திற்கு முன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண கூறினோம். ஆனால், இந்திய வங்கிகள் சங்கம், அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.எனவே, இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட, ஒன்பது சங்கங்கள் பங்கேற்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
திட்டவட்டம்! 'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே.

Added : ஜன 28, 2020 01:55

புதுடில்லி,:'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி தாக்கல் செய்த மனுவையும், தள்ளுபடி செய்தது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவது, நாடு முழுதும் கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து, தமிழகத்தின் வேலுாரை சேர்ந்த, சி.எம்.சி., எனப்படும், கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மருத்துவக் கல்லுாரியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம். 'எனவே, நீட் தேர்விலிருந்து எங்கள் கல்லுாரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது. தெளிவான உத்தரவுஇந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம் என ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக போதிய விவாதங்கள், ஆய்வு நடத்தியாகி விட்டது. நீட் தேர்வு நடைமுறை, நாடு முழுதும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு தனியார் கல்லுாரிக்கு மட்டும், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது.

மாற்ற முடியாது

ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்காக நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நிலுவையில் உள்ளது.

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...