Thursday, December 31, 2020

‘Retirement age move will hurt job prospects’

‘Retirement age move will hurt job prospects’

TIMES NEWS NETWORK

Hyderabad: 31.12.2020

The state government’s decision to enhance the retirement age of all government employees has not gone down well with the unemployed youth in the state who want the government to first fill vacancies in various departments.

The government has announced the enhancement of retirement age in government sector jobs from 58 years to 60 years.

Many students who TOI spoke to were disgruntled by the move as they demanded that the government should first fill vacancies and then raise retirement age. “By enhancing the retirement age, the government is further reducing the opportunities for youth who have been waiting for government job notifications in education, police and various other departments for many years,” said Manavatha Roy, chairman, Telangana Joint Action Committee of Unemployed Youth, that held a protest at Arts College, Osmania University, on Wednesday.

With nearly 26,000 government employees scheduled to retire in next three years, students say the move closes their opportunity to bag a government job.

தடம் புரள்கிறதா இந்திய ரயில்வே?


தடம் புரள்கிறதா இந்திய ரயில்வே?

31.12.2020

காட்சி ஒன்று: ரயில் ஒன்று அதன் தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில்வே கேட் நெருங்கி வரும் சமயத்தில் ரயிலின் முன் பெட்டியிலிருந்து இருவர் இறங்கி வேகவேகமாக ஓடுகின்றனர். ஆளுக்கு ஒருபுறம் என இருபுறமும் உள்ள கேட்டை மூடுகின்றனர். பிறகு, வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது. கேட்டைக் கடந்த பிறகு, ரயில் மீண்டும் நிற்கிறது. இப்போது பின் பெட்டியிலிருந்து இருவர் இறங்கி வேகவேகமாக ஓடுகின்றனர். மூடப்பட்ட கேட்டைத் திறந்துவிட்டு மீண்டும் ஏறிக்கொள்கின்றனர். இது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த காட்சி அல்ல. 2019 ஜூன் முதல் கரோனா ஊரடங்கு முன்பு வரை, காரைக்குடி - திருவாரூர் மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் காட்சிதான் இது. 140 கிமீ தூரம் நீளும் இந்த வழித்தடத்தில், அறுபதுக்கும் மேலாக ரயில்வே கேட்டுகள் உள்ளன. ஒவ்வொரு கேட் வரும்போதும் இதுதான் நடைமுறை. விளைவு, இரண்டரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவைக் கடக்க 7 மணி நேரம் ஆகிறது. கூடுதல் தகவல், அந்த ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது.

காட்சி இரண்டு: கரோனா ஊரடங்கால், ஊட்டிக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் இடையே நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை, ஊரடங்குத் தளர்வைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த முறை சிறிய மாற்றம். ரயிலை இயக்குவது அரசு அல்ல; தனியார். இருக்கைகள் அவ்வளவு தூய்மை. விமானத்தில் இருப்பதுபோல், நவநாகரிகத் தோற்றத்தில் பணிப் பெண்கள் வரவேற்கிறார்கள். பயணிகளுக்கு நொறுக்குத்தீனிகள், தண்ணீர் வழங்கப்படுகின்றன. பயணக் கட்டணம் ரூ.3,000. முன்பு ரூ.30. இதுபோன்று தனியாருக்கு வாடகைக்கு ரயிலை விட்டு ரயில்வே துறைக்கு வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் புதிதல்ல என்று ரயில்வே துறை விளக்கம் அளித்த பிறகும் ‘ஊட்டி ரயில் தனியார்மயமாக்கப்படுமா?’ என்ற கேள்வி மீண்டும் மீண்டும் விவாதத்துக்குள்ளாகிறது. இந்திய ரயில்வே நுழைந்திருக்கும் புது யுகத்துக்கான இரு காட்சிகளாக மேற்கண்ட இரண்டையும் சொல்லலாம்.

ஏன் இந்த வேறுபாடு?

ஒரு அரசு தனது மக்களுக்கு அளிக்க வேண்டிய சேவையை வணிகமாகப் பார்க்கத் தொடங்குவதன் வெளிப்பாடு இது. ரயில்வே துறைக்கு வருவாய் தரக்கூடிய முக்கியமான வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிப்பது, 200 கிமீ தொலைவுக்கும் கூடுதலாக இயங்கும் பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவதற்கான திட்டம், வணிகரீதியாகப் பெரிய அளவில் லாபம் கிடைக்காத தடங்களில் இயக்கப்படும் ரயில்களை, அதாவது குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்களைப் படிப்படியாக நிறுத்துவதற்கான முயற்சி என ரயில் சேவையை வணிகமாக அணுகும் போக்கு அதிகரித்திருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சமீப காலத்தில் முதன்மையான இலக்காக இருந்துவருகிறது. அதன் பகுதியாகவே கடந்த ஏழு ஆண்டுகளாக, ரயில்வே துறைக்கு, சூழல் மாற்றத்துக்கு ஏற்ப போதிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், பல மாநிலங்களில் ரயில்வே தொடர்பான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எப்படி?

இந்திய அளவில் வளர்ச்சிப் படிநிலையில் தமிழகம் முன்வரிசையில் இருக்கிறது. ஆனால், இங்குள்ள ரயில்வே கட்டமைப்பு ஏனைய மாநிலங்களைவிடவும் பின்தங்கியிருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தின் ரயில் அடர்த்தி 32 ஆக இருக்கிறது. ஆனால், வளர்ச்சிப் படிநிலையில் பின்தங்கியிருக்கும் உத்தர பிரதேசம், பஞ்சாப், பிஹார், வங்கம் போன்ற மாநிலங்களின் ரயில் அடர்த்தி தமிழகத்தைவிட அதிகமாக இருக்கிறது. காரணம், தமிழகத்தில் புதிய இருப்புப் பாதைத் திட்டங்கள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. நிதி ஒதுக்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம் முக்கியக் காரணமாக உள்ளது. இந்த ஆண்டு ஆந்திரத்தில் புதிய ரயில் பாதை அமைக்க ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு ரூ.2.7 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2003-க்குப் பிறகு தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட 10 புதிய வழித்தடங்களில் இருப்புப் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது (மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி, திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, அத்திப்பட்டு – புத்தூர், ஈரோடு – பழனி, சென்னை – மகாபலிபுரம் – கடலூர், ஸ்ரீபெரும்புதூர் – ஆவடி – இருங்காட்டுக்கோட்டை – கூடுவாஞ்சேரி, மொரப்பூர் – தர்மபுரி, ராமேஸ்வரம் – தனுஷ்கோடி, சத்தியமங்கலம் – மைசூரு). ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்காததால் இந்தத் திட்டங்கள் எல்லாம் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலையில் உள்ளன.

முழுக்கவுமே ஒன்றிய அரசின் மீது மட்டுமே எல்லாக் குறைகளையும் தூக்கிப்போட்டுவிட முடியவில்லை. இந்தத் திட்டங்கள் முடங்கிக்கிடப்பதற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஒரு மாநிலத்தில் ரயில்வே பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்றால், அம்மாநில அரசு ரயில்வே துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டும். ரயில்வே பணிகளுக்குத் தேவையான நிலங்களை வழங்க வேண்டும். மேலும், அந்தப் பணிகளுக்கான செலவினங்களிலும் 50% பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக அரசு நிலம் வழங்குவதிலும், நிதி தருவதிலும் சுணக்கம் காட்டுவதான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மேலும், அரசியல் களத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக – அதிமுக இரு கட்சிகளும் உள்ள நிலையில், இதற்கான பொறுப்பை இரு தரப்புகளுமே ஏற்க வேண்டிய சூழல் இருக்கிறது.

நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்

புதிய ரயில் பாதைத் திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதை விடவும் கொடுமையானது மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி கிடப்பில் போடப்படுவது. காரைக்குடியிலிருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இருந்துவந்த ரயில் சேவை, அகலப்பாதைப் பணிக்காக 2006 முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக, சென்ற ஆண்டு அந்தப் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், இன்னும் அந்த வழித்தடத்தில் சென்னைக்கு ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதுபோலவே மதுரை – போடி வழித்தடத்திலும் அகலப்பாதைப் பணிக்காக ரயில் சேவை 2008-ல் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து அந்தப் பணிகள் தற்போதுதான் நிறைவை எட்டியிருக்கின்றன. பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட பிறகு, ரயில் சேவை தொடங்கப்படாமல் தாமதிப்பதை என்னவென்பது?

ரயில் சேவை இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாகப் பிணைக்கிறது என்றாலும், அந்தச் சேவை எல்லா இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சேர்ந்திருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது இருக்கும் பெரும்பாலான ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டவை. சுதந்திரத்துக்குப் பிறகு குறிப்பிடும்படியாகப் புதிய பாதைகள் போடப்படவில்லை. தவிரவும், தற்போது இருக்கும் வழித்தடங்களில் 64% மட்டுமே மின்மயமாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் புதிய தடங்கள் அமைத்தல், இரட்டை வழிப்பாதை அமைத்தல், மீட்டர் கேஜ் பாதைகளை அகலப் பாதைகளாக மாற்றுதல், மின்மயமாக்கம் என ரயில் சேவையை விரிவாக்கும் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அரசு – தனியார் கூட்டமைப்பானது தவிர்க்க முடியாத ஒன்றாக இன்றைய நிலையில் மாறியிருப்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ள முடியாது. ஆனால், தனியாரை எந்தெந்தப் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதில் அரசுக்குத் தெளிவு வேண்டும்.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த 2 பேர் கைது

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த 2 பேர் கைது


31.12.2020

இறந்தவரின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக 2 பேரை அடையாறு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னர் தெருவில் வசிப்பவர் சுவாமிநாதன் (65). இவர் அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள மனை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 3-வது குறுக்குத் தெரு, தனலட்சுமி அவென்யூவில் உள்ளது.

அந்த மனையை நான் பராமரித்து வருகிறேன். இதை சில மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று அபகரித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார். அதன்படி, அடையாறு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ‘சம்பந்தப்பட்ட மனை எவாலின் கேளிப் என்பவருக்கு சொந்தமானது என்றும், இவர் 1989-ம் ஆண்டு இறந்து விட்டதால், அவரின் வாரிசுதாரரான நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவர் பெயருக்கு மாற்றம் செய்து பட்டா பெறப்பட்டதும், நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அந்த மனையை தனக்கு தெரிந்த சுவாமிநாதன் பராமரித்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில்தான் இறந்துபோன எவாலின் கேளிப் வேறு ஒருவருக்கு மனையை அனுபவிக்கவும், விற்கவும் அங்கீகாரம் கொடுத்தது போல போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக சாலிகிராமம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த நேசன் டிக்சன் கிரிஸ்டோபர் (44), விருகம்பாக்கம், பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் (45) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விடைபெறும் 2020: கரோனா இருளில் கல்வி ஒளி

விடைபெறும் 2020: கரோனா இருளில் கல்வி ஒளி

ஒட்டுமொத்த உலகமும் கரோனா வைரஸால் ஸ்தம்பித்துப்போன நிலையில் கல்வி கற்றல் தொடங்கி தேர்வுகள்வரை கல்வித் துறையிலும் அது பெரும் தாக்கம் செலுத்தியது. இதைத் தாண்டி இந்த ஆண்டு கல்வித் துறையில் பல நடவடிக்கைகளும் சட்டத் தீர்ப்புகளும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. 2020இல் நிகழ்ந்த கல்வித் துறை சார்ந்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு:

திரையில் முடங்கிய வகுப்பறைகள்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்குக் கட்டுப்பாடுகளின் விளைவாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் நடப்புக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இணையவழியில் நடத்தப்பட்டன. இணையவழி வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் போன் அல்லது கணினி அவசியம் என்பதால் பல ஏழைக் குடும்பங்களுக்கு பொருளாதாரச் சுமை அதிகரித்தது. பல குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான பாடங்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின. ஆனால், தொலைக்காட்சி வசதிகூட இல்லாமல் தெருவோரம் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதில் பங்கேற்க முடியவில்லை. கல்லூரிகளில் இறுதி ஆண்டுகளுக்கான வகுப்புகள் தமிழகத்தில் டிசம்பரில் தொடங்கினாலும் சென்னை ஐஐடியில் 190-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

நீட் தேர்வும் தமிழகமும்

பள்ளிகளில் பொதுத் தேர்வுகள், கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இறுதித் தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டாலும் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவு/தகுதித் தேர்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டனர். அதேநேரம் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றார்கள். முதல்முறையாக தமிழகத்தின் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் தேசிய தேர்ச்சி விகிதத்தைவிட (56.44) அதிகமாக இருந்தது.

யுமருத்துவக் கல்விம் இட ஒதுக்கீடும்

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017இலிருந்து, தமிழக மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் முடிவு நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்திலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் நடப்புக் கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. ஆனால், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இந்தாண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தெரிவித்து விட்டது.

மாற்றங்களுக்கான கொள்கை

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் இந்தப் புதியக் கல்விக் கொள்கையானது இந்தியாவில் பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. இந்தப் புதிய கல்விக்கொள்கைக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சை

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அதன் துணைவேந்தர் சுரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையானது. ஆனால் சாதிவாரி இடஒதுக்கீடு கேள்விக்குள்ளாகும், கட்டணம் உயரும் என்பது உள்ளிட்ட காரணங் களுக்காக மத்திய அரசின் உயர்சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவையில்லை என்று தமிழக அரசு கூறியது. இவற்றுக் கிடையில் உதவிப் பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் ஊழல் செய்ததாக சுரப்பா மீது எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசனை தமிழக அரசு நியமித்தது.

அதிகரிக்கும் இடைநிற்றல்

கல்வியில் மிகவும் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை கூறியது. 2015-16இல் இவ்விரு வகுப்புகளில் படித்த 8 சதவீத மாணவர்கள் இடைநின்றிருந்தனர், 2017-18இல் இந்த விகிதம் 16.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு (2011), கிராம நிர்வாக அதிகாரித் தேர்வு (2016), குரூப் 2 (ஏ) தேர்வு (2017), குரூப் 4 (2019) தேர்வுகளை எழுதியவர்கள் முறைகேடான வழிகளில் தேர்ச்சிபெற்றிருப்பதும் அவர்களில் சிலர் அரசுப் பணிகளைப் பெற்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்குகளின் விசாரணையை தமிழக காவல்துறையும் சி.பி.சி.ஐ.டி. பிரிவும் மேற்கொண்டுவருகின்றன. முறைகேடான வழியில் தேர்ச்சிபெற்று அரசுப் பணியில் உள்ளவர்கள், ஊழல் முகவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

நம்பிக்கை வெளிச்சம்

மதுரையைச் சேர்ந்த பார்வைத் திறனற்ற இளம்பெண் பூரணசுந்தரி குடிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 286ஆவது இடத்தில் தேர்ச்சிபெற்றுள்ளார். பெற்றோர், நண்பர்கள் துணையுடன் நான்காவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கும் பூரணசுந்தரி மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வெளிச்சமாகத் திகழ்கிறார்.

இருப்பிடத்தை அறியும் மென்பொருளை நீக்க ஆப்பிள், கூகுள் நடவடிக்கை

இருப்பிடத்தை அறியும் மென்பொருளை நீக்க ஆப்பிள், கூகுள் நடவடிக்கை

31.12.2020

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பில் மற்றும் கூகுள் ஆகியவை தங்களது பயன்பாடுகளிலிருந்து, இருப்பிடத்தை அறிய உதவும் எக்ஸ்-மோட் சோஷியல் மென்பொருளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை தொழில்நுட்ப சேவைகளை தங்களது பயன்பாடுகளின் மூலம் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. மேலும் பயனர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் தங்கள் இயக்க முறைமைகளின் கீழ் இயக்கும் ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிடத் தரவுகளை சேகரிக்கும் எக்ஸ்-மோட் மென்பொருளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது ஸ்மார்ட்போன்களிலிருந்து சேகரிக்கப்படும் இருப்பிடத் தரவுகளை அரசுக்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-மோட் மென்பொருள் தொழில்நுட்பம் 400 க்கும் மேற்பட்ட ஆப்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் தங்கள் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தங்கள் நிறுவன பயன்பாடுகளிலிருந்து எக்ஸ்-மோட் மென்பொருளை கால அவகாசம் வழங்கியுள்ளது.

Dailyhunt

ரஜினியின் முடிவால் மாறிப்போன தோதல் களம்

ரஜினியின் முடிவால் மாறிப்போன தோதல் களம்

31.12.2020

'ஆண்டவன் எச்சரிக்கையாக கருதுகிறேன். அரசியல் கட்சியைத் தொடங்க முடியவில்லை' என்று ரஜினிகாந்த் தனது முடிவை வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துவிட்டாா்.

இந்த முடிவை கடந்த நவம்பா் 30-இல் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்திலேயே ரஜினி எடுத்திருந்தாா் என்றாலும், அவருக்கு இருந்த அரசியல் அழுத்தம் அப்படிச் சொல்லவிடாமல் தடுத்துவிட்டது. பிறகு, ஜனவரியில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவித்தாா்.

ஆனால், தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதையும்விட, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு நோய் எதிா்ப்பு சக்தியைக் கையாளுவதில் அவரது உடலுக்கு உள்ள முரண்பாட்டின் காரணமாக அந்த விருப்பத்தில் தொடா்ந்து நீடித்து இருக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

ஹைதராபாதில் நடைபெற்ற 'அண்ணாத்த' படப்பிடிப்பில் படக்குழுவினா் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிலை நீடித்தால் ரஜினி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவா்கள் எச்சரித்ததற்குப் பிறகு அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவைக் கைவிட்டுள்ளாா். இதையே ஆண்டவனின் எச்சரிக்கை என்றும் கூறி, அரசியல் பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாா்.

களம் மாறியது: ரஜினியின் இந்த முடிவால் அரசியல் களமே மாறியுள்ளது. முன்னாள் முதல்வா்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் தோதல் களம் ஒரு சோா்வைத் தந்துவிடும் என்பதுபோலதான் இருந்தது. அதை ரஜினியின் அரசியல் அறிவிப்பு மாற்றி வைத்தது. திமுக - அதிமுக என்கிற இரு துருவ அரசியலுக்கு ரஜினி முடிவு கண்டுவிட்டாா் என்றெல்லாம் பேசப்பட்டது.

அதைப்போல ரஜினியின் வருகையால் அதிமுகவின் வாக்குகள்தான் சரியும், திமுகவின் வாக்குகள்தான் சரியும் எனவும் விவாதிக்கப்பட்டது. திமுக - அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ரஜினியின் வருகையை அச்சத்துடனேயே அணுகின.

ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் அவா்களால் பெரிய அளவிலான பாதிப்பைத் தோதல் களத்தில் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதிமுகவா - திமுகவா என்பதுபோலவே களம் உருவாகியுள்ளது. அதுவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியா, எதிா்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினா என நேரடி மோதலாகவும் உருவாகியுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி படிப்படியாக கட்சியினரின் முழு ஆதரவையும் பெற்று அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதுதான், அவா் முதல்வா் வேட்பாளராக சந்திக்கும் முதல் தோதல். கருணாநிதியின் மறைவைத் தொடா்ந்து திமுகவின் தலைவா் ஆனாா் மு.க.ஸ்டாலின். அதைத் தொடா்ந்து மக்களவைத் தோதலைச் சந்தித்து, திமுகவை வெற்றிபெறச் செய்தாா் என்றாலும், முதல்வா் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் தோதலும் இதுதான்.

அதனால், கருணாநிதி - ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் என்கிற இரு துருவ மோதலாக உருவாகியுள்ளது.

பேரத்துக்கு வாய்ப்பு குறைவு: ரஜினியின் வருகையைப் பயன்படுத்தி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சித்தன. காங்கிரஸ் மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்பது வரையும்கூட யோசித்தது. இப்போது அதற்கான வாய்ப்பு குறைந்து போயிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ள முடியுமோ அவற்றைச் செய்துவந்தன. முதல்வா் வேட்பாளா் குறித்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே வெளிப்படையாகவே கருத்து மோதல்கள் இருந்தன.

அதிமுகவோடு பாமக பலவகையிலும் முரண்டு பிடித்து வந்தது. தேமுதிக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்து தனித்துக்கூட போட்டியிடுவோம் என்பதுபோல மிரட்டி வந்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் எல்லாம் குறைந்து போயுள்ளன.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு அணிகளைக் கடந்து மூன்றாவது அணி ஒன்று உருவானாலும் அதனால், பயன் இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோதலில் திமுக - அதிமுக அணிக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாகத் தோதலைச் சந்தித்தன. அந்த அணியால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்தது ஆட்சியாளா்களுக்கு சாதகமாக அமைந்தது. அதிமுக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மீண்டும் அதிமுக - திமுக என்கிற இரு துருவ அரசியல் களமாகவே வரப் போகும் தோதல் களம் அமைய உள்ளது. ஆனால், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழா் கட்சி போன்றவை இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அது முடிவுகளை பாதிக்கக் கூடும்.

இதற்கிடையில் ரஜினி தனது அறிக்கையில், தோதல் அரசியலுக்கு வராவிட்டாலும், மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றும் கூறியுள்ளாா். இதை எடுத்துக்கொண்டு ரஜினி ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக தோதல் நேரத்தில் அறிக்கை வெளியிடலாம். அப்படி, ரஜினி குரல் கொடுத்தாலும், அரசியல் கட்சியே தொடங்காமல் அவா் விலகியுள்ள நிலையில், அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியா, மு.க.ஸ்டாலினா என்பதுதான் அரசியல் யதாா்த்தம்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

Medical equipment for delivery remain unused at PHC

Medical equipment for delivery remain unused at PHC

This, when a room containing delivery equipment and furniture in Perumbakkam's own PHC lies locked up.

Published: 31st December 2020 04:02 AM | Last Updated: 31st December 2020 04:02 AM


Express News Service

CHENNAI: Delivery and women's health equipment worth approximately `12 lakh to `15 lakh donated through a NGO to the Perumbakkam Primary Health Centre (PHC), which serves a population of around 1.2 lakh, has been lying unused for a year-and-ahalf. On an average, every month this year, 160-180 women in Perumbakkam, mostly slum dwellers, who shifted from urban areas to the Tamil Nadu Slum Clearance Board tenements, were to give birth.

This is a marked increase from the average 120-140 women who were expecting per month last year. All these women are forced to travel 25 km to the Tambaram Government Hospital, or to the Medavakkam PHC. This, when a room containing delivery equipment and furniture in Perumbakkam's own PHC lies locked up.

In 2019, an NGO provided 24 pieces of medical equipment for delivery and women's health, along with generators, air conditioners a n d C C T V cameras, to the PHC on behalf of a large Japanese Corporation. The medical equipment included a microprocessor laboratory centrifuge, cell counter, fetal doppler (to detect fetal heartbeat), ECG machine, cardiotocography machines (to record fetal heartbeat and uterine contractions) among others.

It also supplied medical equipment for breast and cervical cancer. This equipment too is not being used. When contacted, a staff of the NGO that facilitated the supply of equipment said, "We are constantly following up and are not sure why the equipment is not being used." Residents at the Slum Board settlement said a settlement of its size without easily-accessible maternity care was unacceptable. 

"We have to take expecting mothers to Tambaram even in the dead of the night. At night, the doctor is not available at the PHC (in Perumbakkam)," said Dhana, a resident. When contacted, a senior health official said he would ask the officials to check and report back to him on the issue.

NEWS TODAY 2.5.2024