Sunday, November 30, 2014

DOCTORS GET LAKHS TO POSE AS FACULTY AT MCI CHECKS

Nov 30 2014 : The Times of India (Chennai)

Docs get lakhs to pose as faculty at MCI checks
rema nagarajan

They Help Colleges Fix Inspection

A senior doctor can reportedly earn as much as Rs 5-6 lakh within a couple of days just for showing up for a medical college inspection, and posing as a faculty member.

Inspections by teams from the Medical Council of India (MCI) for increasing the number of seats in a medical college, renewing its recognition or establishing a new one have been the subject of several court cases and CBI investigations for more than a decade. Yet, nothing seems to have changed. A senior doctor narrated to TOI how he was recently approached by a private medical college in Uttar Pradesh and offered several lakhs to be on its faculty list during an inspection.

A look at the CBI chargesheets and investigation into various cases from 2001 onwards shows that everything from leaking information about the so-called surprise MCI inspection to the concerned college, fixing inspections by selecting inspectors who will write the final report to buying faculty, residents and patients to fulfill the criteria for getting recognition have been resorted to. Things appear to have changed little today . According to Dr Mukul Kapoor, director of anaesthesia in Saket City Hospital, he was offered `5 lakh just to be present for the two days of the MCI inspection.“Within a few days, a senior person from the college called me, upping the offer to `6 lakh. I am an MCI-recognized PG teacher working in a non-teaching hospital, and so I get regular telephonic offers to come as ghost faculty (professor) for two days of the MCI inspection. I have kept away from the temptation,“ said Dr Kapoor. Just last month, Dr Ka poor received a mail from a so-called medical executive search firm regarding “urgent requirement of doctors for MCI inspection in Ghaziabad“.

They were looking for senior residents and assistant professors in anaesthesia at the rate of ` 15,000 per day for senior residents and ` 20,000 per day for assistant professors, specifically for two days. “Obviously, the medical college knew in advance about the so-called `surprise inspection' and was getting ready to place bogus faculty through these consultants.So they have been tipped off from within the MCI system. The fraud positioning of faculty and personnel has become such an open corruption that they are not even scared of sending such emails,“ said Dr Kapoor, who immediately forwarded the email to the health minister and his PA before the inspection date.He got no response from the ministry.

For full report log on to http:www.timesofindia.com

Soon, ATM-Style Machines to Help Citizens Log Police Complaints

There is good news for those who dread registering a complaint at a police station. The government may soon launch a hi-tech project that will minimise policemen's interference and make the police accountable for not taking note of complaints from citizens.

Prime Minister Narendra Modi will be briefed about this on Sunday in Guwahati before he addresses the senior police and intelligence officials of the country.

The solution which will be presented to PM Modi is much like an ATM machine, which will be installed at public sector banks, and allow a citizen to log a complaint. The complaint will be sent straight to relevant police station, thereby taking away the discretion of the police station of whether or not to take cognizance of a complaint.

And that's not all. A citizen can also write his/her complaint on a piece of paper and deposit that in the machine, which will also work as a telephone and a computer. The machine, called ICLICK, will log all such inputs and generate a number and receipt immediately for the complainant.

This step is being seen as means to empower weaker sections of society, who often bear the brunt of police negligence and callousness. "The receipt generated and log serves two purposes - it works as a daily diary entry whereas the logs would be available to senior officers who then use it to check with the concerned station," a senior officer associated with the project told NDTV.

A project was launched in Odisha in January this year on pilot basis, and the machine is running successfully in Bhubaneshwar. But the scope of complaints is limited to just cases of harassment of women.

Intelligence Bureau Director Asif Ibrahim now wants this concept to be extended to all crimes and spread across the country. "It is actually a simple idea, these machines can be kept alongside ATM machines - which are present in remotest places of the country," Mr Ibrahim said.

Sources have told NDTV that considerable time was spent on Saturday discussing this at the DGP Conference in Guwahati, which was presided over by Home Minister Rajnath Singh. "In principle, all Director General of States Police have accepted the idea," the officer said. The concept will now be placed before the Prime Minister on Sunday.

Although all state police chiefs have accepted the idea, there are still few hurdles to cross before the system becomes a reality. Chief Ministers and Home Departments of every state will have to accept this proposal as well. Also, funds - for buying and maintaining these machines - will have to be arranged. As of now the Intelligence Bureau has proposed that these machines can be housed in the ATMs of Public Sector Banks which have the largest network of ATMs across the country including rural areas.

VISAS TO BOOST MEDICAL TOURISM

FLIGHT CAPTAIN SAVES 153 LIVES

B.L.D.E. UNIVERSITY ADMISSION NOTICE M.D. AND M.S. 2014-15


Saturday, November 29, 2014

விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை பண்றே?நல்லாதானே பாடறார்"



ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "சிரித்து வாழ வேண்டும்" படத்திற்காக
"மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.எம்.சௌந்தர்ராஜனை வைத்து ஒரு பாடல்
பதிவு செய்து கொண்டிருந்தார்.அந்த ட்யூனை எவ்வளவோ முறை சொல்லிக் கொடுத்தும்
டி.எம்.எஸ்ஸால் எம்.எஸ்.வி. நினைக்கும் அளவுக்கு சரியாக பாட முடியவில்லை.

எவ்வளவோ பொறுமையுடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் "மெல்லிசை
மன்னர்".ஆனாலும் திருப்தி பெறாத நிலையே நீடித்தது.இறுதியில் டி.எம்.எஸ்.
"விஸ்வநாதா,இனி கோயில்ல போய் சுண்டலுக்கு பாடினாலும் பாடுவேனே ஒழிய உன் இசையில்
பாடமாட்டேன்" என்று கூறி வேகமாக
சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர் கூட ,"விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை
பண்றே?நல்லாதானே பாடறார்" என்றார்.இருந்தாலும் எம்.எஸ்.வியோ விடாமல்,"இல்லண்ணே
இன்னும் நான் நினைப்பது மாதிரிஅவர் இன்னும் பாடலை"
என்றார்.சுற்றியிருந்தவர்கள்"அவர்தான் கோவிச்சுகிட்டு போயிட்டாரே..எப்படி
கூட்டிட்டு வருவீங்க" என்றார்கள்."எப்படி கூட்டிட்டு வர்றேன்னு பாருங்க" என்று
சொல்லிச் சென்ற எம்.எஸ்.வி.நேராக டி.எம்.எஸ் வீட்டுக்குச் சென்று சாஷ்டாங்கமாக
அவர் காலில் விழுந்து,"உங்களைத் தவிர
இந்தப் பாடலை வேறு யாருமே அவ்வளவு சிறப்பாகப் பாடமுடியாது..அதனால் தயவு செய்து
வந்து பாடுங்கள்"
பின் என்ன?!யாராவது அன்புக்கு அடி பணியாமல் போவார்களா?!

டி.எம்.எஸ்ஸீம் வந்து எம்.எஸ்.வி. நினைத்தபடி பாடிக்கொடுத்தார்.அந்தக்
காலத்தில் மனித அகங்காரத்தை விட கலைக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டது
என்பது இந்த ஒரு செயல் மூலமாகவே நாம் அறிகிறோம்.

பாடல்: ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான்...மேரா நாம் அப்துல் ரகுமான்...


http://music.cooltoad.com/music/song.php?id=257582



--

கோகுல்குமரன்

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!


Photo: கலைவாணர் பிறந்த நாள் !

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!

என்.எஸ்.கிருஷ்ணன் ! பாகம் - 2
(ஆனந்த விகடன்)

என்.எஸ்.கே – மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!

உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். உடுமலைக்கவியை கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். "இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்" என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். "உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!" – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே- பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், "எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

"என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! "’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

"எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, "இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்" என்றார்!

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். "அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!

கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. "நாடகம், சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!" என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. "பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!" என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

சேலம் அருகே தாராமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. "மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! " என்றாராம்!


கலைவாணர் பிறந்த நாள் !

நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!

என்.எஸ்.கிருஷ்ணன் ! பாகம் - 2
(ஆனந்த விகடன்)

என்.எஸ்.கே – மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!

உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். உடுமலைக்கவியை கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். "இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்" என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். "உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!" – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே- பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், "எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

"என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! "’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

"எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, "இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்" என்றார்!

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். "அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!

கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. "நாடகம், சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!" என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. "பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!" என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

சேலம் அருகே தாராமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. "மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! " என்றாராம்!

NEWS UPTO 09.05.2024