Saturday, November 29, 2014

போர்க்களமாகும் பொங்கல்! ஆர்.சி. ஜெயந்தன்

ரசிகர்களே கற்பனை செய்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இனிக்கப் போகிறது 2015-ன் பொங்கல். பொங்கல் மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு மூன்று மாஸ் நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் களத்தில் ஒரே நேரத்தில் மோதவிருக்கின்றன. இதனால் தமிழக பாக்ஸ் ஆபீஸின் நிலவரம் இப்போதே கலவரமாகிக் கிடக்கிறது. காரணம் தமிழகத்தில் மொத்தம் 963 திரையரங்குகளும் அவற்றில் 1110 திரைகளும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ ஐ’, கௌதம் மேனன் – அஜித் கூட்டணியில் உருவாகிவரும் ‘ என்னை அறிந்தால்’, சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ ஆம்பளை’ ஆகிய மூன்று படங்களும் எவ்வளவு திரைகளைக் கைப்பற்றும்? எல்லாப் படங்களும் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியுமா? ரசிகர்களின் பாக்கெட் தாங்குமா என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டோம். ‘கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத் திரையரங்குகளும், ரசிகர்களும் எதிர்கொள்ளாத ‘கோல்டன் மொமெண்ட்’ என்றே 2015 பொங்கல் வெளியீட்டைச் சொல்லிவிடலாம்” என்கிறார் ஸ்ரீதர்.

காரணம் “பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மூன்று தினங்கள் வரிசையாக விடுமுறைகள் விடப்படுகின்றன. ரசிகர்கள் மேலும் இரண்டு தினங்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஐந்து நாட்களும் பொங்கலைக் கொண்டாடித் தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை அடுத்தடுத்த தினங்களில் பார்ப்பதற்குப் புதிய புதிய படங்கள் இருக்க வேண்டும். அதுவே அவர்கள் மனதுக்குப் பிடித்த இயக்குநர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் எத்தனை கொண்டாடுவார்கள் என்பதை ஒரு தியேட்டர் அதிபராக அறிவேன்” என்கிறார் ஸ்ரீதர். மேலும் விக்ரம் படத்துக்கு 400, அஜித் படத்துக்கு 400, விஷால் படத்துக்கு 310 என்று திரைகளைப் பிரித்துக் கொடுப்பதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இதனால் படங்களின் வசூலும் பாதிக்காது” என்கிறார்.

ரசிகர்களின் பாக்கெட்

இது சாத்தியம்தானா? “கடந்த பத்தாண்டுகளாகவே கிராமப் புறங்களில் உள்ள திரையரங்குகளில் கூட மாஸ் ஹீரோ படங்கள் ஒரே நாளில் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தவே செய்கிறது. படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடப் பெரும்பான்மையான உயர்தரத் திரையரங்குகளில் பிளாட்டாக உயர்த்தப்படும் நுழைவுக் கட்டணம் ரசிகர்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கவே செய்யும்.

என்றாலும் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவை குறித்த கவலை எதுவுமற்று ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். காரணம் முதல் இரண்டு வாரத்துக்குத் திரையரங்குகள் நோக்கிப் படையெடுப்பவர்களில் பாக்கெட் மணியைக் கொண்டு படம் பார்க்க வரும் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் ரசிகர்களே அதிகம். மூன்றாவது வாரத்திலிருந்தே ஃபேமிலி ஆடியன்ஸை ஓரளவு எதிர்பார்க்க முடியும்” என்கிறார் வலைப்பதிவரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.

கூட்டணி பலம்

அப்படியானால் பொங்கலைப் போர்க்களமாக்கப் புறப்பட்டிருக்கும் இந்த மூன்று படங்களில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒன்று பின்வாங்குமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை தான் தற்போது நிலவி வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் மூன்று படங்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 8-ம் தேதியே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ‘கிங் ஆஃ ஓபனிங்’ என்று புகழப்பட்டும் அஜித், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே 800 திரையரங்குகளில் வெளியாகி ஓபனிங் வசூலை அள்ளிவிட்டு, பொங்கலுக்கு 400 திரைகளாகக் குறைத்துவிடுவது என்ற திட்டத்தில் களமிறங்க இருக்கிறார்களாம். இதனால் கௌதம் மேனனுடன் முதல் முறையாகக் கூட்டணி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ வசூலில் பின்தங்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

எதிர்பார்ப்பில் முதலிடத்தில் இருக்கும் ‘ஐ’ படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக்கல், கிராபிக்ஸ் தரம், ஒப்பனை, விக்ரமின் நடிப்பு, ஷங்கர் பிராண்ட் பொழுதுபோக்கு ஆகியவை படத்தைத் தீபாவளிக்கே எதிர்பார்க்க வைத்தன. ஆனால் படத்திற்கு வியாபாரத் தரப்பிலும், பின்னணி இசை சேர்ப்பு, கிராஃபிக்ஸ், விக்ரம் பேச வேண்டிய மூன்று விதமான குரல் பாணிகள் ஆகியவை காரணமாக நீண்டுகொண்டே சென்ற படத்தின் பணிகளும் படத்தைப் பொங்கலுக்குத் தள்ளிச் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டதாகச் சொல்கி றார்கள். என்னதான் இழுவையான வெளியீடு என்றாலும் ‘ஐ’ படத்துக்கான எதிர்பார்ப்பு தமிழகத்தைத் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் இந்திப்பட ஃபாக்ஸ் ஆபீஸ், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மூன்றாவதாகச் சுந்தர்.சி – விஷால் கூட்டணியின் பலமும் கம்பீரமாகவே இருக்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களால் கொண்டாடப்படும் இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி, அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘அரண்மனை’ படத்தை இயக்கியிருந்தார். வசூல் சாதனை படைத்த இந்தப் படத்தில் கதையும் காட்சியமைப்புகளுமே ரசிகர்களை தியேட்டருக்குக் கூட்டம் கூட்டமாக இழுத்தது.

அதேபோல விஷால் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்கள் தொடர்வெற்றியைச் சந்தித்திருக்கின்றன. மேலும் ஏ.வி.எம். நிறுவனத்தைப் போல ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்து, சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் விஷால். இதனால் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஆம்பளை’ படம் ஆரம்பிக்கும்போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்துப் படத்தை முடிக்கும் கட்டத்தில் இருப்பதால், “ஆம்பளை பொங்கல் போட்டியிலிருந்து வெளியேறும் என்ற பேச்சுக்கு இடமில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார் விஷால்.

ஒட்டுமொத்தமாகப் பொங்கல் தினத்தில் ஆரம்பித்து அடுத்துவரும் மூன்று நாட்களிலும் ரசிகர்கள் பொங்கல் சினிமா பார்த்துச் செலவழிக்க இருக்கும் தொகை ஒட்டு மொத்தமாக ரூ.120 கோடி என்று உத்தேசமாகக் கணக்கிட்டுச் சொல் கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள்.

Friday, November 28, 2014

குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!



இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..

Kids Health

மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.

மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம். இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/ .National Geographic Kids

National Geographic Kids

அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.


வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.

Kidsmart

இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.


சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.

உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!

- சா.வடிவரசு

என்ன இருந்த போதும் இன்று ஹியூஸ் இல்லை.


விளையாட்டு வினையாகிவிடும் என்பது பழமொழியாகத்தான் இருந்தது கடந்த 25ஆம் தேதிக்கு முன்னால் வரை...

அந்த நாளில் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரின் கிரிக்கெட் மைதானத்தில், 22 வயது இளம் வீரர் சீன் அபோட் தனது எல்லையிலிருந்து பந்தை எடுத்துக் கொண்டு ஓடத்தொடங்கும் போது கூட `இந்த பந்து சிக்சர் பறந்து விடுமோ` என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும்.

பந்து கையை விட்டு நழுவியதும் தரையில் பட்டு ஆளுயரம் எழுந்து பந்தை எதிர் கொண்ட பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸை நோக்கி செல்ல, கண் இமைக்கும் நேரத்தில் பந்து தலையில் தாக்கியதில் தரையில் மயங்கி விழுதார் பிபிப் ஹியூஸ்.

அந்த நிமிடம் முதல் ஒவ்வொரு நிமிடமும் கிரிக்கெட் உலகைத் தாண்டி அனைவரிடமும் பதட்டமும் பரபரப்பானதாகவும் மாறிப்போனது. தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தபோதும், தனது குடும்பத்தாரையும் ரசிகர்களையும் தவிக்க விட்டு. கோமா நிலையிலேயே மரணத்தைத் தழுவி உள்ளார் ஹியூஸ்.

பிலிப் ஹியூஸ் ஒரு நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். சிறுவயதில் ரக்பி வீரராக கலக்கிய பிலிப், கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்ததால் கிரிக்கெட் வீராரகவும் தன்னை வளர்த்து கொண்டார் தனது 17ஆவது வயதில் சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் 141 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய நாட்டின் தேர்வுக்குழுவினர் பார்வையும் பிலிப் மீது பட்டது.

உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வந்த ஹியூஸ் க்கு காத்திருந்தது 2009ஆம் ஆண்டு. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியில் நான்காவது பந்திலேயே ஸ்டெயின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த இன்னிங்க்ஸில் 75 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தாலும்,

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹியூஸின் ஆட்டம் வெளிப்பட தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 160 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி 175 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தார். ஆனால் ஆஷஸ் தொடரில் இடம் பெறுவார் என்ற போது இவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திப்பதில் சிரமம் உள்ளது என அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் 2011ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது சைமன் கேட்டிச் காயத்தால் வெளியேற மீண்டும் ஹியூஸிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சரியாக ஆடாததால் அணியில் இடம் பறிபோனது. பின்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு சதமடித்து ஹியூஸ் தனது தேர்வை நியாயப்படுத்தினார்.

இடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அணியில் நான்கு வெளிநா ட்டு வீரர்கள்தான் இடம் பெற முடியும் என்பதால் பிலிப் ஹியூஸ் ஆடும் அணியில் இடம் பெறவில்லை.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடிய ஹியூஸ் 6 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் சீன் அபோட்டும் இவரோடு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அதில் ஹியூஸுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு முன் தனது திறமையை நிரூபிக்க தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காகக் களமிறங்கினார். அப்போதுதான் இந்த மறக்கவியலாத சோக விபத்து நடந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபோட் வீசிய பந்து தலையை பதம் பார்த்தது. மயங்கி விழுந்த ஹியூஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 27ஆம் தேதி இறந்தார். இவரின் இழப்பு கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறியது. இவருக்கு பந்து வீசிய சீன் அபோட் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் , முன்னாள்,இன்னாள் வீரர்களும் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹியூஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர் பயன்படுத்திய ஹெல்மெட் சரியான பாதுகாப்பு வசதியுடன் இல்லை என்று கடுமையாக விவாதிக்கப் படுகிறது. ஹியூஸ் பழைய ஹெல்மெட் அணிந்திருந்தார் என்று ஹெல்மெட் கம்பெனி ஒரு வித்தியாச விளக்கம் கூறுகிறது. என்ன இருந்த போதும் இன்று ஹியூஸ் இல்லை.

கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசசாளரது மிகப்பெரிய ஆயுதம் பவுன்சர். அப்படி ஒரு பவுன்சர் பந்து தான் ஹியூஸை தாக்கியது. இந்த மரணத்தால் இனி எந்த வேகப்பந்து வீச்சாளரும் பவுன்சர் வீச பயப்படுவார். எந்த பேட்ஸ்மேனும் இனி ஹெல்மெட் அணியும் போது கண்டிப்பாக ஹியூஸை நினைப்பார். கிரிக்கெட் ஆட போகிறேன் என்று தெருவில் ஒரு சிறுவன் கிளம்பினாலும், அவனது பெற்றோர் ஹியூஸை நினைவுப்படுத்துவார்கள்.

ஹியூஸ் எனும் வீரன் மறைந்தாலும் அவன் இனி வருங்கால கிரிக்கெட்டைப் பாதுகாக்கும் பணியைச் சிறப்பாக செய்துவிட்டுச் சென்றுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் ஹியூஸின் மறைவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவே பதிவாகும்.

- ச.ஸ்ரீராம்

CHANGING THE NAME OF US CURRENCY TO RUPEE CHANGING THE NAME OF INDIAN CURRENCY TO DOLLAR"

If you take a look on the journey of Rupee against Dollar since 1947, its not possible to match 1 INR = 1 USD in next decade.

The Indian currency has witnessed a slippery journey since Independence. Many geopolitical and economic developments have affected its movement in the last 66 years.

When India got freedom on August 15, 1947, the value of the rupee was on a par with the American dollar. There were no foreign borrowings on India's balance sheet.

To finance welfare and development activities, especially with the introduction of the Five-Year Plan in 1951, the government started external borrowings. This required the devaluation of the rupee.

After independence, India had chosen to adopt a fixed rate currency regime. The rupee was pegged at 4.79 against a dollar between 1948 and 1966.

Two consecutive wars, one with China in 1962 and another one with Pakistan in 1965; resulted in a huge deficit on India's budget, forcing the government to devalue the currency to 7.57 against the dollar.

The rupee's link with the British currency was broken in 1971 and it was linked directly to the US dollar.

In 1975, value of the Indian rupee was pegged at 8.39 against a dollar.

In 1985, it was further devalued to 12 against a dollar.

In 1991, India faced a serious balance of payment crisis and was forced to sharply devalue its currency. The country was in the grip of high inflation, low growth and the foreign reserves were not even worth to meet three weeks of imports. Under these situations, the currency was devalued to 17.90 against a dollar.

1993 was very important. This year currency was let free to flow with the market sentiments. The exchange rate was freed to be determined by the market, with provisions of intervention by the central bank under the situation of extreme volatility. This year, the currency was devalued to 31.37 against a dollar. The rupee traded in the range of 40-50 between 2000 and 2010.

It was mostly at around 45 against a dollar. It touched a high of 39 in 2007.

The Indian currency has gradually depreciated since the global 2008 economic crisis.

Dental Council proposes bridge course in MBBS for dentists

File:Dental Council of India logo.png
The Dental Council of India is proposing a three-year bridge course in MBBS for BDS graduates in a bid to enable them to provide both medical and oral health care in rural areas.

Talking to reporters here on Friday, Dental Council of India (DCI) President Dibyendu Mazumdar said there was a shortage of medical professionals in rural areas. A good number of BDS graduates come out every year. These graduates had already been trained in many aspects of treatment during their five-year course. With a further three-year MBBS course these graduates can meet the requirement of medical professionals in rural areas, he said.

At the inaugural ceremony of Karnataka State Dental Conference on Friday, DCI Vice President Y. Bharath Shetty said the Council was considering use of the massive resource of health professionals for rural health care. "The Medical Council of India might have opposition (for the bridge course) as we will be entering in their domain," he said. The curriculum will be framed and passed in the general body of the DCI before submitting it to the Government, he added.

Dr. Mazumdar said the DCI has proposed changes in the curriculum for the BDS and MDS courses that were awaiting approval of the Government. The new BDS course with nine subjects would cover aspects namely basic and advance life support mechanisms. In the third year of the new BDS course, subjects related to forensic medicine will be studied. The DCI was proposing to increase the number of professors and staff.

Dr. Mazumdar said the DCI has made rural service compulsory for the BDS graduates. Of the one year internship period, the BDS graduates have to work for three months in a rural area. The DCI was closely monitoring it and action was proposed against colleges that are not making arrangements for rural service.

The conference was organised by the Indian Dental Association’s Dakshina Kannada Branch. The organisers felicitated A.M.C. Saldanha, an old dentist practicing in Mangaluru.

தொடரும் மது, புகை, ஈவ்டீஸிங் தொந்தரவுகள்: கேள்விக்குறியாகும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு - உதவிக்கு வராத ‘ஹெல்ப்’லைன், போலீஸார்



மிகவும் பாதுகாப்பானது என்று மக்கள் நம்பி பயணம் செய்யும் ரயில்களில் போதை ஆசாமிகளின் தொந்தரவு இருப்பதாக பல பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்களைப் பற்றி டிடிஆர், ஹெல்ப்லைன், போலீஸ் என யாரை தொடர்பு கொண்டு கூறினாலும் தீர்வு கிடைப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களின் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இங்கும் அங்கும் சுற்றுவதைப் பார்க்கலாம். ரயில்களிலும் காக்கிச் சட்டையினர் ரோந்து வருவார்கள். அனைத்து ரயில்களிலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த அளவுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கிறதா? ரயில் பயணம் அனைத்துப் பயணிகளுக்கும் முழு பாதுகாப்பானதாக இருக்கிறதா? ‘இல்லை’ என்கிறது சமீபத்திய உதாரணங்கள்.

போதை ஆசாமிகள்

கடந்த 19-ம் தேதி. கன்னியா குமரி எக்ஸ்பிரஸின் ஏ1 ஏ.சி. பெட்டியில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் புறப்படுகின்றனர் ஒரு பெண் மருத்துவரும், அவரது தாயும். பக்கத்து கேபினில் ஒரு பெண், அவரது மகள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதமாக அந்த கேபினில் ஏறுகின்றனர் 6 ஆண்கள். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது மதுக் கச்சேரி தொடங்குகிறது. பயந்துபோன பெண் தன் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவரின் கேபினில் தஞ்சமடைகிறார். ‘நாங்கள் அரக்கர்களா? கடித்து தின்றுவிடுவோமா’ என்று திட்டு கிறது மதுக் கூட்டம். அடைக்கலம் கொடுத்த மருத்துவருக்கும் திட்டு விழுகிறது.

ஒதுங்கிய டிடிஆர், போலீஸார்

அவர்களது நாற்றத்தையும் நாராச வார்த்தைகளையும் எத்தனை நேரம் பொறுப்பது? டிடிஆரிடம் முறையிட, ‘‘அது என் வேலை இல்லை’’ என்று கூறி ஒதுங்கிக்கொண்டார். பின்னர் ரயில்வே ஹெல்ப் லைனுக்கு (9962500500) தெரிவித்தார். விழுப்புரத்தில் ஏறிய போலீஸார், அந்த நபர்கள் இருந்த கேபினை எட்டிப் பார்த்தனர். ‘‘எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறிவிட்டு இறங்கிப் போய்விட்டனர். புகாரை எழுதி தயாராக வைத்துக் கொண்ட மருத்துவர், விருத்தா சலம் சந்திப்பு வந்ததும் போலீஸாரிடம் கொடுத்தார். அதன் பிறகும், நடவடிக்கை இல்லை. ‘‘எங்கே வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணுங்க. ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று எக்கா ளமாக சிரித்துவிட்டு நெல்லையில் இறங்கியது போதை இறங்கிய ‘ஒய்ட் அன் ஒய்ட்’ கும்பல். ‘‘போட்டோ எடுத்து வைத்திருக் கிறேன். ரயில்வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க இருக்கிறேன்’’ என்றார் அந்த பெண் மருத்துவர்.

புகார் கொடுத்ததன் விளைவு

இன்னொரு சமீபத்திய உதாரணம். சென்னை - மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைக்குழந்தை யுடன் ஒரு இளம் தம்பதி. விழுப் புரம் கடந்து சென்றபோது, போதை யில் இருந்த 3 ஆண்கள், அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருக்கின்றனர். தட்டிக் கேட்ட கணவனுக்கு சரமாரி அடி. ஹெல்ப்லைனில் தொடர்பு கொண்டும் ஒரு போலீஸ்கூட வரவில்லை. மீண்டும் அவர்கள் புகார் கொடுத்தனர். கும்பகோணம் சந்திப்பு வந்ததும், போலீஸார் அங்கு வந்தனர். ‘‘நீங்கள்தானே புகார் கொடுத்தது. காவல் நிலையத் துக்கு வந்து கைப்பட புகார் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, வலுக்கட்டாயமாக இறங்கவைத்துள்ளனர். புகார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்ட பிறகே அனுப்பினர். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அந்த தம்பதி பேருந்தில் ஏறிச் சென்றனர்.

ரயிலுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக சென்று மது அருந்துவது, எதற்கும் யோசிக் காமல் பயணிகளின் நடுவிலேயே உட்கார்ந்து மது அருந்துவது, புகை பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது என பல சம்பவங் கள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடக்கின் றன. சிக்குபவன் அப்பிராணி என்றால், போலீஸார் மிரட்டுவதும் ரெண்டு தட்டு தட்டுவதும் வழக்கம். கூட்டமாக இருந்தாலோ, கறைவேட்டியினர் என்றாலோ போலீஸார் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் பயணிகள்.

ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்ராம் கூறும்போது, ‘‘எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஒரு போலீஸ்காரர் கட்டாயம் இருப்பார். பிரச்சினைகள் குறித்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் போதும். மேற்கொண்டு விவரம் தேவைப் பட்டால் போலீஸார் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வார்கள்’’ என்றார்.

புகார்கள் வந்தும் வழக்கு இல்லை

சட்ட விதிமுறைகள், பயணி களுக்கு சாதகமாகத்தான் இருக் கின்றன. அவற்றை செயல்படுத்து வதில்தான் குறைபாடு இருப்பதாகக் கருதுகின்றனர் பயணிகள். ஜிஆர்பி - 9962500500, ஆர்பிஎப் - 9003161710, இலவச ஹெல்ப்லைன் - 1322 ஆகிய எண் களில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் 7708061804 என்ற எண்ணிலும் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட பயணி கள். கடந்த 3 மாதங்களில் மேற்கண்ட எண்களுக்கு 300-க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.

சூட்கேஸில் முடங்கிய பட்ஜெட்?

பயணிகளின் பாதுகாப்புக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டது. ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை, பெண்களின் பாதுகாப்புக்காக ரயில் களில் ஆர்பிஎப் பெண் படையினர் எண்ணிக்கை அதிகரிப்பு, மகளிர் பெட்டிகள் அதிகரிப்பு, பயணி களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம். இதெல்லாமும் பட்ஜெட் அம்சங்கள்தான். இத்தனை நல்ல அம்சங்களும் ரயில்வே மந்திரியின் பட்ஜெட் சூட்கேஸுக்குள் மட்டும் தான் இருக்குமா? அன்றாட செயல் பாட்டுக்கு வருவது எப்போது? என்ற சாமானியப் பயணியின் கூக்குரலும் நியாயமாகத்தான் தெரிகிறது.

போதையில் 6 பேர் நடந்து கொண்ட விதம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘அரசியல்வாதிகள் என்பதற்காக பொது இடத்தில் தவறு செய்வதை பொறுத்துக்கொள்ள வேண்டிய தில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்’’ என்றார்.

நடமாடும் காவல் நிலையம் வருமா?

நெல்லை, அனந்தபுரி, திருவனந் தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடமாடும் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் இருப்பார்கள். ரயில்களில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக இவர்களிடம் புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ரசீதும் கொடுக்கப்படும். பயணிகள்- குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில் களிலும் நடமாடும் காவல் நிலையம் அமைத்தால் மது ஆசாமிகள், புகை ஆசாமிகள், ஈவ்டீஸர்களிடம் இருந்து பெண் பயணிகள் தப்பிப்பார்கள். கவனிக்குமா ரயில்வே?

கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்



வேகமான பவுன்சரால் தான் ஒரு பேட்ஸ்மேன் தாக்கப்படுவார் என்று கிடையாது. ஆஃப் ஸ்பின் பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர் உண்டு. ஸ்டம்பின் பைல்ஸ் பட்டு கண் பறிபோனவர் உண்டு. ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட் சொல்வது முக்கியமானது. வீசப்படுகிற பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த ஹெல்மெட்டாலும் உங்களை காப்பாற்றமுடியாது.

பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்

1932-33 டெஸ்ட் தொடரின்போது இங்கிலாந்து பவுலர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்தினால், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்ஃபீல்ட்டின் மண்டை ஓடு உடைந்தது.

நரி கான்ட்ராக்டர்

1962-ல் பார்படாஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் சார்லி கிரிஃப்பித் பந்துவீச்சில் இந்திய அணி கேப்டன் நரி கான்ட்ராக்டரின் தலையில் அடிபட்டது. மூக்கு, காதுகளில் ரத்தம் வழிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கான்ட்ராக்டருக்கு ஆறு நாட்கள் நினைவு திரும்பவில்லை. ரத்தம் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கமே வரவில்லை. கடைசியாக, ஒரேயொரு டெஸ்ட் ஆட நினைத்தார் கான்ட்ராக்டர். ஆனால் அதற்கு அவர் மனைவி அனுமதிக்கவில்லை.

இவென் சாட்ஃபீல்ட்

1975-ல் இங்கிலாந்து பவுலர் பீட்டர் லீவர் வீசிய பந்தினால் ஹெல்மெட் போடாமல் ஆடிய நியூஸிலாந்து வீரரான சாட்ஃபீல்ட்டின் தலையில் பலமான அடிபட, நாக்கு தொண்டைக்குள் சிக்கியதில், உடனே மயக்கமானார். இங்கிலாந்தின் பிசியோதெரப்பிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் தக்க நேரத்தில் முதலுதவி அளித்து சாட்ஃபீல்டின் உயிரைக் காப்பாறினார். சம்பவம் நடந்தபோது சாட்ஃபீல்டைக் கொன்றுவிட்டதாக தவறாக எண்ணி, லீவர் மைதானத்திலேயே அழுதார்.

ராமன் லம்பா

1998-ல் முன்னாள் இந்திய வீரரான ராமன் லம்பா, டாக்காவில் நடந்த கிளப் ஆட்டத்தின்போது ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட ஓவரில் மூன்று பந்துகளே மீதமுள்ளதால் ஹெல்மெட் தேவையில்லை என முடிவெடுத்தார் லம்பா. அந்த சமயம் பார்த்து பேட்ஸ்மேன் வேகமாக லம்பாவின் பக்கம் அடிக்க, பந்து அவர் முன்தலையைத் தாக்கிவிட்டு கீப்பர் பக்கம் சென்று கேட்ச் ஆனது. விக்கெட்டை கொண்டாட எல்லோரும் ஓடிவந்தபோது கீழே விழுந்து கிடந்தார் லம்பா. பிறகு எழுந்து, தடுமாறியபடி பெவிலியனுக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நினைவிழந்தார். சிலநாள்கள் கழித்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38.

அப்துல் அசீஸ்

1959-ல் பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் கராச்சி அணிக்காக ஆடிய அப்துல் அசீஸின் நெஞ்சில் ஆஃப் ஸ்பின்னரின் பந்து பதம் பார்க்க, உடனே கீழே தடுமாறி மயங்கி விழுந்தவருக்குப் பிறகு நினைவு வரவேயில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்தார். அப்போது அவருக்கு வயது 17.

மார்க் பவுச்சர்

தென் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சருக்கு நடந்தது விநோதம். ஸ்டெம்பிலுள்ள பெயில்ஸால் இடது கண்ணை இழந்தவர். 2012ல் பயிற்சி ஆட்டம் ஒன்றில், இம்ரான் தாஹீர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அப்போது ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ், கீப்பிங் செய்துகொண்டிருந்த பவுச்சரின் இடது கண்ணைத் தாக்கியது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண் மோசமாக பாதிக்கப்பட்டதால், 998 சர்வதேச டிஸ்மிஸல்களோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பவுச்சர்.

NEWS TODAY 2.5.2024