Saturday, February 27, 2016

நிதி ஆலோசனை : திடீர் வேலை இழப்பைச் சமாளிப்பது எப்படி?

logo

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி அதிகமோ அப்படி, திடீரென்று வேலை இழக்கும் அபாயமும் அதிகம். அதுபோன்ற ஒரு சூழலில், பொருளாதார ரீதியாக தடுமாறாமல் இருப்பது எப்படி? இதோ சில ஆலோசனைகள்...

* எப்போதும் சொல்லப்படும் விஷயம்தான் என்றாலும், சேமிப்பே நமக்கு ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும்.

* மாதச் சம்பளத்தைப் போல 3 முதல் 5 மடங்கு தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. உதாரணத்துக்கு, மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் எனில், ரூ. 90 ஆயிரம் முதல், ரூ. 1.50 லட்சம் வரை வைத்திருப்பது அவசியம். இந்த அளவு தொகையை சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவீதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவீதத் தொகையை ‘லிக்விட் மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

* மாதமாதம்தான் சம்பளம் வருகிறதே என்று எண்ணாமல், சில முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பலர், தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

* முதலீடு நல்ல விஷயம் என்றாலும், கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. சிலர், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று பெர்சனல் லோன் பெற்று, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கக்கூடும். கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

* பள்ளி கல்விக் கட்டணம், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகச் செலுத்திவிடலாம். இப்படிச் செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின் போதும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணமின்றி தவிக்க வேண்டியிராது.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், வேலை இல்லாத நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால் திகைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 60 சதவீதத்துக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள தொகையை முதலீடு செய்யலாம். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

* இன்றைய சூழலில் கடன்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், கூடுமானவரை கடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வீட்டுக் கடன் போன்ற சொத்துச் சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. இதற்கு வட்டியும் குறைவு. எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்துவது தலைவலியாக இருக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்காக நமக்கு வேலை போனது என்று அலசி ஆராய்ந்து அந்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை இழந்த காலத்தில் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வது, மேலும் உயர்ந்த வேலைக்குச் செல்ல உதவும்.

இருக்கிறது ... ஆனால் எதிர்பார்த்த அளவில் இல்லை

logo

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தனது 2–வது ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இவர், ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல, கணக்காயர். எனவே, எதையுமே நன்றாக ஆராய்ந்து, வரவு–செலவு, லாப– நஷ்டம், நன்மை–தீமைகளையெல்லாம் பார்த்துத்தான், எந்த முடிவையும் எடுப்பார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுப் பயணம் வந்த அவர், பொதுவாக தமிழக மக்களின் மனங்களில் உள்ள ஒரு எண்ணத்தை பிரதிபலிக்கும் கருத்தை சொன்னார். ரெயில்வே திட்டங்களை பொறுத்த மட்டில், கடந்த பல ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அதற் குரிய பங்கை பெறவில்லை, இதையெல்லாம் சரிசெய்ய மத்திய அரசாங்கம் உறுதிபூண்டு இருக்கிறது என்று நெற்றியடியாக கூறினார்.

‘ரெயில்வே மந்திரியே இப்படி கூறிவிட்டார். அப்படி யானால், நிச்சயமாக இந்த ரெயில்வே பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வரும்’ என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்திருந்தது. இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 11–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கே, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு 2023 கண்ணோட்டம் அறிக்கையில், முக்கியமான 10 ரெயில்வே திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மேலும், மாநில அரசு பங்களிக்க தயாராக உள்ள சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் வழிப்பாதை, சென்னை–மதுரை–கன்னியாகுமரி அதிவேக பயண ரெயில் இணைப்பு, மதுரை–கோயம்புத்தூர் அதிவேக பயண ரெயில் இணைப்பு நிறைவேற்றுவதற்கு தனியாக அமைப்பு அமைக்கவேண்டும் என்பது உள்பட கடந்த பல பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டு, தொடங்கப் படாமல் இருக்கும் பல திட்டங்களை குறிப்பிட்டு, இதை யெல்லாம் நிறைவேற்ற பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

எல்லோருமே ரெயில்வே பட்ஜெட்டில் இவையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. ஆனாலும், வரவேற்கத்தக்க அளவில் சில பொது அறிவிப்புகளும், தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பயணிகள் ரெயில் கட்டண வருவாயும், சரக்கு ரெயில் கட்டண வருவாயும் குறைந்துள்ள நிலையில், அதை சரிக்கட்டுவதற்கு பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வோ, சரக்கு ரெயில் கட்டண உயர்வோ அறிவிக்காமல், கட்டண உயர்வு இல்லாத மற்ற இனங்களில் வருவாயைப் பெருக்க அவர் தீட்டியுள்ள திட்டங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை ஆகும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சென்னை அருகே நாட்டிலேயே முதல்முறையாக, ரெயில்வே மோட்டார் வாகன சரக்கு முனையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பது, நிச்சயமாக பாராட்டுக்குரியது. பொதுத்துறை, தனியார்துறை பங்களிப்புடன் டெல்லியையும், சென்னை யையும் இணைக்கும் வகையில், சரக்கு ரெயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை சென்னையோடு நிறுத்திவிடாமல், தூத்துக்குடி வரை நீடிக்கவேண்டும். காரக்பூர்–விஜயவாடா சரக்கு ரெயில் வழித்தடத்தையும் தூத்துக்குடி வரை இணைத்தால், நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மாநில அரசின் துணையோடு சென்னை புறநகர் ரெயில் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மற்றபடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல திட்டங் களுக்கு அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஓரளவு நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக திட்டங் களுக்காக 2,064 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பதுபோல, தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அடிக்கடி ரெயில்வே மந்திரியை சந்தித்ததன் விளைவாக, மொரப்பூர்–தர்மபுரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, எந்த இடத்துக்கு என்று குறிப்பிடாமல் பொதுவாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இனி தமிழக எம்.பி.க்களும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் இந்த பொது அறிவிப்புகளின் பலனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுவதற்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கும் வாதாடி, போராடி, வற்புறுத்தி பெறவேண்டும்.

பதின் பருவம் புதிர் பருவமா? - விளிம்புக்குத் தள்ளும் ஒரு வழிப் பாதை?

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்


டாஸ்மாக்கும், ‘குவார்ட்டர் சாங்’ எனப் போதையில் பாடும் சோகப் பாடலும் இல்லாத தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘எல்லாப் பிரச்சினைகளுக்கும், மதுதான் தீர்வு’ என்பதுபோல் நகைச்சுவை நடிகர்கள் மதுவுக்கு ‘பிராண்ட் அம்பாசடர்’ ஆக மாறி நடித்துக் கொண்டிருக்கும் வேதனையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆபத்தான ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சாதாரணமாகக் காண்பிப்பதன் மூலம், அது தவறு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். இதைக் கூர் உணர்ச்சியைக் குறைத்தல் அல்லது Desensitization என்று சொல்வார்கள். சினிமாக்களில் காண்பிக்கப்படுவதெல்லாம் நடிப்புதான் என்பதையும், அதில் காண்பிக்கப்படும் எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவராது என்பதையும் வளர்இளம் பருவத்தினருக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வீழ்ச்சி போக்கு

சமீபகாலமாக இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரி வயது குறைந்துகொண்டே வருவதற்குச் சினிமாவும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் போக்கு இளைஞர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான விஷயம். புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தில் ஆரம்பித்துக் கஞ்சா, ஹெராயின் உட்படப் பல வகை போதைப் பழக்கங்களை வளர்இளம் பருவத்தினரிடையே பார்க்க முடிகிறது.

பொதுவாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் உருவாவதில்லை. குடும்பச் சூழல், சமுதாயம், கல்வி, பொருளாதார நிலை, தனிப்பட்ட குணநலன், மரபணு மாற்றம் போன்றவை சேர்ந்த கலவைதான், போதைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகும் தன்மையைத் தீர்மானிக்கின்றன.

குடும்பச் சூழல்

ஒரு குழந்தை வளரும்போது, நல்ல குடும்பச் சூழல்தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளம். வளர்இளம் பருவத்தில்தான் ஒருவருடைய குணநலன் முதிர்ச்சி அடைய ஆரம்பித்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். ஆராய்ச்சி முடிவுகளின்படி சிறுவயதில் பெற்றோரில் ஒருவரை இழப்பது, குடும்ப வன்முறைகளைக் கண்கூடாகப் பார்ப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவை இளம் வயதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்குச் சாதகமான குடும்பச் சூழல் என நிருபிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் பங்கு

தீவிரமான போதை அடிமைத்தனத்துக்கு உட்படும் நபர்களில் 80% பேரின் தந்தை, அதேபோன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு முதல் மாதிரிப் பெற்றோர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பா தினமும் போதையில் வருவதையே பார்த்து வளரும் சிறுவனுக்கு, தானும் குடித்தால் தவறில்லை என்ற எண்ணம் வருவது இயற்கைதானே.

ஒரு விலங்கைக்கூடத் திரும்பத் திரும்ப அடித்தால், ஒன்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் அல்லது எதிர்க்கத் தொடங்கும். மனிதனின் கற்றுக்கொள்ளுதலும் அப்படித்தான். பெற்றோரின் போதைப்பழக்கச் சூழலில் வளரும் வளர்இளம் பருவத்தினர், ஒன்று தாங்களும் போதைப்பழக்கத்துக்கு உள்ளாவார்கள் அல்லது அவர்களுடைய எதிர்ப்பு குணரீதியான, ஆக்ரோஷமான நடவடிக்கை மாற்றங்களாக, படிப்பில் பின்தங்குதல் போன்றவையாக வெளிப்படும்.

பரம்பரை வியாதியா?

‘ஆள் பாக்கிறதுக்கு மட்டுமல்ல, குணமும் அப்பாவை மாதிரியே அச்சுஅசலாக இருக்கிறது’ என்று குழந்தைகளைக் கொஞ்சுவதுண்டு. இது உருவ ஒற்றுமைக்கு மட்டுமல்ல, போதைப் பழக்கத்துக்கும் பொருந்தும். மரபணுக்கள் மூலமாகவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் தன்மை பெற்றோரிடமிருந்து வாரிசுகளுக்குச் செல்வதால், சிலருக்கு இது பரம்பரை நோயாகவே மாறிவிடுகிறது. வளர்இளம் பருவத்திலேயே போதைப் பழக்கத்தை ஆரம்பிக்கும் நபர்கள், பெரும்பாலும் இந்த மரபணு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் குளோனிங்கர் என்ற மனநல மருத்துவர் நிருபித்திருக்கிறார்.

‘அப்படியானால் அப்பா குடிகாரராக இருந்தால் மகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்க முடியாதா?’ என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இங்குதான் வளரும் சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. மரபணுக்கள் 60% வரை இதைத் தீர்மானித்தாலும் ஆதரவான குடும்ப, சமுதாயச் சூழல், கல்வி, பொருளாதார முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இதைத் தடுக்கமுடியும்.

நட்பு வட்டம்

பெரும்பாலான வளர்இளம் பருவத்தினருக்குப் போதைப்பழக்க அறிமுகம் நண்பர்கள் மூலம்தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாகத் தூண்டுதல், போதைப் பொருட்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவையும், ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம், நாளடைவில் எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடரும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.

பின்பு குடிப்பதற் கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதைக் குடிப்பதற்கான சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை ஏற்படும். மனதுக்கு உற்சாகம் இல்லாத நேரம் மற்றும் தோல்விகளால் துவண்டு கிடக்கும் நேரத்தில் ‘சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்’ என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்குப் போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களிடம் வளர்இளம் பருவத்தினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்களும் இவர்களுடைய தனிமை, தோல்வி, விரக்தியான நேரத்தில் ஆதரவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களுக்கு இளம்பருவத்தினர் செவிசாய்ப்பதைத் தடுக்க முடியும்.

(அடுத்த வாரம்: தனிமையும் மனநோயும்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 10 - எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. சென்ற ரயில் வழி நெடுக மக்களின் உற்சாகமான வரவேற்பு காரணமாக, 10 மணி நேரம் தாமதமாக மதுரை சென்றது என்றால் இப்போது நம்ப முடிகிறதா? ஆனால், 43 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.

துரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.




1967-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டப் பேரவைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். 1977-முதல் நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக முதல்முறை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டபோதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றதால் 1984-ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோதும் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இரண்டு தேர்தல்களில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் எம்.ஜி.ஆர்.




- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

Friday, February 26, 2016

Confusion reigns over 'approved' courses


Pune: The recently released handbook of the All India Council of Technical Education (AICTE) for the academic year 2016-17 is expected to create some problems regarding the nomenclature of 'approved courses'.
While the University Grants Commission's July 2014 guidelines had created a number of issues lot of problems with educational institutions, colleges since they had to cancel various courses as per guidelines, AICTE's handbook will create fresh again is going to create problems as it mentions courses that were cancelled by UGC have been mentioned in the AICTE handbook.

In July 2014, after finding discrepancies in various heads under which colleges and universities were offering courses, UGC had tried to normalise the courses by issuing a gazette for specification of degrees. Universities and other institutes were asked to adhere to the nomenclature specified by the UGC gazette strictly from this academic year onwards. This had caused a several lot of problems with management courses as many colleges were running courses that had beenwhich were derecognized by the UGC.

W N Gade, vice chancellor of Savitribai Phule Pune University, said, "This is a serious matter and if it is not resolved immediately, it will create problems for the colleges as well as students taking admission to these courses. Many a times, both the Union government agencies work independently without consulting each other and this leads to both of them taking a contradictory stand and going to court against each other."

Pointing towards out to the problems faced by management colleges last year when several courses were derecognized by UGC, Gade said, "The university gets caught between AICTE and UGC. We are a traditional university and we have to follow UGC guidelines. However, for technical courses, we require have to get AICTE approval. Now, if a college starts a course recognized by AICTE but not by UGC, it will not get recognition by National Assessment and Accreditation Council (NAAC). Now NAAC accreditation , which is compulsory. Moreover, since students will already be admitted to the course, they will have to move court which will again lead to a huge controversy. In the meantime, it is the university and the students will suffer the most. Hence there is a need for coordination between central agencies deciding fate of students across the country."

A B Dadas, director of Neville Wadia Institute of Management Studies and Research added, "This is exactly the kind of confusion the top bodies create due to which institutes and students suffer. For inclusion of a course in the UGC gazette, the university has to send a proposal. In our case, the Pune varsity sent proposals for approval after the gazette was published due to which many students pursuing management courses were left in the lurch after their course had been deemed illegal by UGC." Dadas added that cases related to these issues are going before both There are cases going on in both the Bombay high court and the Supreme Court over the same problem. "Not just us, institutions across the country are facing this problem because both top bodies refusing to work together," he stated.

No Takers for AICTE Institutes


By Babu K Peter

Published: 21st Feb 2016 10:18:41 AM

http://www.newindianexpress.com/thesundaystandard/No-Takers-for-AICTE-Institutes/2016/02/21/article3288143.ece

KOCHI:If you thought it was only engineering seats that are waiting to be filled, you are mistaken. As many as 18,68,345 seats from a slew of courses ranging from MBA to hotel management and catering have been finding no takers for the last three to four years in the colleges affiliated to the All India Council for Technical Education (AICTE), across the country.

The situation is acute in southern states with Tamil Nadu, one of the leading education destinations, leading the list with 2,79,827 vacant seats, followed by Andhra Pradesh with 1,83,911 and Karnataka and Kerala with 85,323 and 40,938 seats respectively.

Courses facing the crisis include pharmaceutical sciences, hotel management, engineering and technology, MCA, management, applied arts and crafts and architecture and planning. “Supply disproportionate to demand is the basic reason for seats remaining vacant in colleges,” said K Sasikumar, president of the Kerala Self Financing Engineering College Managements Association (KSFECMA).

As per the data available on the AICTE website, there are 10,329 affiliated institutions across the country. These institutions together have intake capacity of 39,56,234 but the total enrollment in 2015-16 academic year is 20,97,889.

Tamil Nadu has 1,347 colleges with an intake of 5,88,955. But enrolment in 2015-16 is 3,09,128 showing a huge difference of 2,79, 827. Kerala has 365 colleges and total intake capacity of 1,11,623 but enrolment in 2015-16 stood at 70,685.

Enhancement of number of seats during the last 10 years was not need-based. With reference to MBA, the number of IIM, which was four earlier, now stands at 12. In addition to the numerous private self-financing colleges, many universities also launched AICTE-approved courses.

As the number of seats increased, admission became just seat-filling exercises with an eye on profit and compromising the attitude and quality of the students. “This, coupled with low quality teachers of second line private colleges, made the situation worse and students who pass out started facing difficulties in finding a job,” said K A Zakariya, director of Deen Dayal Upadhyay Kaushal Kendra (DDUKK) under the Cochin University of Science and Technology (CUSAT).

New health varsity VC takes charge

Nashik: Dr Deelip Govindrao Mhaisekar, the new vice-chancellor of the Maharashtra University of Health Sciences (MUHS), has stressed the need for interdisciplinary research in the field of medicine and the importance of doctor-patient communication.

Mhaisekar took charge as the vice-chancellor (VC) on Thursday. Speaking to newspersons on Friday, he talked about his vision for the medical students, the university and the patients. He was accompanied by MUHS registrar Dr Kashinath Garkal, controller of examination Dr Kalidas Chavan and public relations officer Dr Swapnil Torne.

Mhaisekar said the merits different streams of medicinal sciences varied from one another. Hence, research in various streams was important, which could be taken up soon for the benefit of patients.

He said there was a huge dearth of seats for post-graduation courses, as compared to degree courses in all the "pathies" of medicine. "A large number of doctors have taken degrees in different pathies. However, it is not possible to give admission to all of them for post-graduation courses. In this backdrop, efforts will be taken up to start fellowship programmes to enhance the skills of degree doctors, which is also aimed at providing quality services to patients," Mhaisekar said.

Meanwhile, the issue of attacks on doctors in various parts of the state and the country by the relatives of patients also came up during the media briefing. The new VC said communication skills of doctors would go a long way in preventing such incidents. "We are planning to start communication skill lessons for the post-graduate students of medicine," he said.

Mhaisekar said they would be studying the conditions of the University Grants Commission to provide sufficient scope of research to medical students. He that there were quite a few problems of employees pending at the government level and sincere efforts will be taken to solve them in the near future.

NEWS TODAY 2.5.2024