Thursday, April 28, 2016

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

வி.தேவதாசன்
Return to frontpage

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.
‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.
‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.
இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:
கணினிமயம்
பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.
21 நாட்கள்
காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.
ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப் பட்டுவிட்டது.
சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

TN to fight NEET as pvt colleges watch

TN to fight NEET as pvt colleges watch


NEW DELHI:The state government has decided to appeal against the Supreme Court verdict on National Entrance Eligibility Test (NEET) for all medical admissions, which it says undermines its powers in tailoring medical admissions to suit the state's needs. But if the Centre has its way, NEET, which insists on 100% merit-based admissions, will turn the private medical education sector - known for capitation fees - on its head.

NEET will let state universities retain the 69% quota and allow private colleges and deemed universities admit 15% of students under the NRI quota. But NEET will insist that all medical colleges admit students based on the merit list it releases, said MCI vice-president Dr C V Bhirmanandam. "No university or college can deny admission to a student who has a higher rank unless they are eliminated because of reservation or because he/she can't afford fees in a private college," he said.

The executive committee will discuss schedules and common syllabus at a meeting in New Delhi on Thursday.

Tamil Nadu has been arguing that NEET discriminates against rural students as it would give a headstart to those who can attend coaching classes.

It also feels that the NEET encroaches upon the state subject of education. Admissions to medical colleges under the Tamil Nadu medical university are now based on Class 12 final examination marks, under the Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006.

he state will ask the apex court if the MCI regulations strengthened by its directive overrule the state act on these admissions. State officials said that their act could not be dismissed through a regulation.

"We will move the court asking if our act, which contradicts the MCI regulation, will be void. Our legal experts have told us that it will be unconstitutional to do so," said a senior health department official.
The state, along with its neighbours Kerala and Andhra Pradesh, opposed common entrance examinations when MCI introduced them in 2013. Tamil Nadu chief minister J Jayalalithaa - and many other political leaders - have been of the view that a common entrance would put students from rural areas at a disadvantage. In October 2015, Jayalalithaa wrote to Prime Minister Narendra Modi opposing NEET. "It would adversely affect the interests of students in the state, in particular those from weaker sections and from rural areas ... it infringes upon the state's right to determine the admission policies to medical educational institutions," she said.

On Wednesday, officials from the state health department said it would be too short a time for students in the state to prepare for a centralised examination. "Is it not unfair to ask a student who is completely unprepared for the entrance to compete with CBSE students who have been preparing for it for more than a year," asked an official who did not want to be named.

Treat AIPMT as phase 1 of NEET, health ministry likely to tell SC

TOI 


NEW DELHI: Students aspiring for admission into medical colleges are likely to face a common medical entrance test this year itself but in a phased manner.

In its tentative schedule to be presented to the Supreme Court on Thursday, the health ministry is likely to suggest that the All India Pre-Medical Entrance Test, 2016 (AIPMT) slated for May 1 be treated as Phase I of National Eligibility Entrance Test (NEET).

The Phase II of NEET can be conducted in mid-July for the rest of the candidates, who have not applied for AIPMT this year, official sources told TOI. However, apart from AIPMT, a slew of medical entrance tests slated to happen over the next couple of months are expected to be scrapped in the light of the SC directive.

"We have worked out a tentative schedule which will be submitted to the SC. Since it is too late to conduct a fresh test, we will suggest that All India PMT be treated as Phase 1 of NEET and a second phase can be conducted separately for those who have not applied for AIPMT," said an official.

he move comes in the wake of the apex court insisting on Wednesday that multiple entrance tests must be done away with and NEET must be conducted for 2016-17 session. It directed the Centre, Medical Council of India (MCI) and CBSE to sit together and frame a time-schedule for conducting NEET. It directed them to place before it by Thursday a dateline for the common entrance test.

Following the apex court's directive, senior officials from the health ministry, MCI and CBSE brainstormed on the issue for more than two hours to finally arrive at the tentative schedule, the official said.

நிதீஷ் குமாருக்குப் பெரிய சவால்!

By ஜா. ஜாக்சன் சிங்


மது இல்லாத மாநிலமாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது பிகார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனி பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற தீர்க்க தரிசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார்.
 பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருப்பதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மட்டுமன்றி, மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஒரு முதல்வராகவும் நிதீஷுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது.
 இதற்காக ஊடகங்களும், பிகார் மட்டுமன்றி பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் நிதீஷ் குமாரைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், இனி நிதீஷ்குமார் சந்திக்கப் போகும் சவால்களை அவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
 இப்போது பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்றதில்லை பிகார். மது விற்பனையால் பெறப்படும் வருவாயை பிரதானமாக நம்பியிருக்கும் கருவூலத்தைக் கொண்ட மாநிலங்களில் பிகாரும் ஒன்று.
 பிகாரில் கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் மட்டும் அரசு மதுபான விற்பனையால் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,501 கோடி. அதாவது அரசின் மொத்த வருவாயான ரூ.31 ஆயிரம் கோடியில் இது 15.95 சதவீதம்.
 பிகார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி - சீருடைத் திட்டம், முதியோருக்கான ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் நல உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதீஷ்குமார் நிறைவேற்றுவதற்கு இந்த மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயே அடிப்படை.
 இப்போது, இந்தத் திட்டங்களை "குடிமகன்'களின் உதவியின்றி நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் நிதீஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,071 கோடி கூடுதலாக செலவாகும்.
 மற்ற மாநிலங்களைப் போன்ற இயற்கை வளங்களும், தொழில் நிறுவனங்களும் பிகாரில் கிடையாது. விவசாயமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 
 எனவேதான், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பகுதிகளில் சொற்ப ஊதியங்களுக்கு பிகார் இளைஞர்கள் பணிபுரிகின்றனர். அதனால், உள்ளூர் மக்களிடமிருந்து மாநில அரசு பெறும் வரி வருவாய் மிகச் சொற்பமே.
 ஒருவேளை, அரசு நிதியுதவியோ அல்லது இலவசத் திட்டங்களோ எதிர்காலத்தில் நிறுத்தப்படுமானால் அதுவே அடுத்த தேர்தலில் நிதீஷ்குமாரின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகிவிடும். வறுமையின் பிடியிலும், ஜாதிய பின்னல்களிலும் கட்டுண்டுள்ள பிகார் மக்கள், மது ஒழிப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக நிதீஷுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூற முடியாது.
 இரண்டாவது பெரிய சவால், பூரண மது விலக்கை முறையாக அமல்படுத்துவதில்தான் இருக்கிறது. ஏனெனில், மது விலக்கு அமலில் இல்லாத, சொல்லப்போனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி பிகாரின் 22 மாவட்டங்கள் அமைந்துள்ளன. 
 அதேபோல், கள்ள நோட்டுகள், சட்டவிரோத ஆயுதங்களின் ஊடுருவல்களை அதிகம் காணும் நேபாள நாட்டின் எல்லையையொட்டியும் பிகாரின் சில மாவட்டங்கள் உள்ளன.
 இந்த எல்லைகளிலிருந்து மதுபானங்களும், கள்ளச்சாராயமும் பிகாருக்குள் நுழைவதைத் தடுப்பதும் மிகக் கடினம். எல்லைகளில் காவல் இருக்கும் போலீஸாருக்கு கையூட்டு கொடுத்துவிட்டு மதுபானங்களைக் கொண்டு வருவது என்பது அவ்வளவு கடினமான செயலாக இருக்காது. 
 அண்மையில், நேபாள எல்லையிலிருந்து பிகாருக்கு 2 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும் பட்சத்தில், நிர்வாகத் திறனற்ற அரசு என்ற கெட்டப் பெயரையும், மக்களின் அவநம்பிக்கையையும் நிதீஷ்குமார் ஒருசேர சம்பாதிக்க வேண்டி வரும். எனவே, இந்த விஷயத்திலும் அரசு அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
 மூன்றாவது சவால், பிகாரில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதில் உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிகாரில் 85 லட்சம் பேர் மது அருந்துகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையானவர்கள். 
 அப்படியிருக்க, இந்த பூரண மதுவிலக்கால் இத்தகையோரின் உடல்நிலையும், மனநிலையும் மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை குணப்படுத்துவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். இதுவும் நிதீஷ்குமாருக்குப் பெரிய சவால்தான்.
 பிகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. 1977-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்குரால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மேற்கூறிய பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
 இப்போது அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் மதுவிலக்கு நீடிப்பது என்பது முழுக்க முழுக்க முதல்வர் நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறனில்தான் உள்ளது. எது எப்படியோ, மதுவிலக்கு என்ற வார்த்தையையே மறந்தும் உச்சரிக்காத நம் நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் நலத்தை முக்கியமாகக் கருதிய நிதீஷ்குமார் துணிச்சல்காரர்தான்.

ஆயூஸ்' டாக்டர்களை மிரட்டி ஓடுக்கியது அரசு


தமிழக சுகாதாரத் துறையில், அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறோம். ஆனால்,
உண்மையில் அத்தகைய வளர்ச்சி கிடைத்துள்ளதா, டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்க
முடிகிறதா என்றால் இல்லை.

இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், மத்திய அரசின், தேசிய ஊரக சுகாதார திட்டமான, என்.ஆர்.எச்.எம்., நிதி உதவியில், தமிழகம் முழுவதும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், 2009ல், சிறப்பு பிரிவு துவக்கப்பட்டது. 
இதற்காக, சித்தா, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட, 475, 'ஆயுஷ்' டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். உதவியாக மருந்தாளுனர், உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனிப் பிரிவு துவக்கப்பட்டது. 'வாரத்தில், மூன்று நாள் வேலை, தினக் கூலி, 1,000 ரூபாய்' என்ற நிபந்தனையுடன் வேலை செய்கின்றனர். இது வாரத்தில், மூன்று நாட்கள் என்பது, ஆறு நாட்களாக மாற்றப்பட்டது.

இத்திட்டத்தில், ஆயுஷ் டாக்டர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; அலோபதி டாக்டர்களுக்கு, 45 ஆயிரம் ரூபாய் என, சம்பள விகிதத்திலும் குளறுபடி உள்ளது. சம்பளம் குறைவு என, பல டாக்டர்கள் ஓடி விட்டனர். மீதம், 200 பெண்கள் உட்பட, 375 பேர் வேலை செய்கின்றனர். காலி இடங்களுக்கு ஏற்ப, இந்த திட்டத்தில் பணியாற்றிய, மருந்தாளுனர்கள், யோகா டாக்டர்கள், சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டு, நிரந்தரம் செய்யப்பட்டனர்.

ஆனால், சித்தா, ஆயுர்வேதம் பிரிவு காலியிடங்களை, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பினர்; என்.ஆர்.எச்.எம்., என்ற, தேசிய ஊரக சுகாதாரத் திட்ட டாக்டர்களை, அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.தற்போது, மருத்துவமனை திறப்பது, சுத்தம் செய்வது, சிகிச்சை அளிப்பது, மருந்து வழங்குவது என, அனைத்து வேலைகளையும், டாக்டர்களே செய்கின்றனர். போதிய வசதிகளை செய்து கொடுங்கள் என்றால், அரசு காதில் வாங்கவில்லை. ஆனால், நிலவேம்பு கஷாயம் கொடுக்க மட்டும், நேரம், காலம் இன்றி வேலை வாங்கினர். விடுமுறை நாட்களிலும், ஆர்வத்துடன் வேலை செய்தும், சம்பளம் தரவில்லை.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பணியில் சேர்க்கப்பட்டதால், அ.தி.மு.க., அரசு, இந்த டாக்டர்களை புறக்கணித்து வருகிறது. ஏழு ஆண்டுகளாக, தினக்கூலிகளாக உள்ளனர். அரசு ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளாக போராடியும் கண்டுகொள்ளாதது போல், ஆயுஷ் டாக்டர்கள் பிரச்னையையும், அரசு கண்டு கொள்ளவில்லை. பெண் டாக்டர்களுக்கு, மகப்பேறு விடுப்பு கூட கிடையாது.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்த டாக்டர்களை, ஆட்சியாளர்கள் நெருக்கடியால், இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் போனிலும், நேரிலும் மிரட்டினர். சங்க மாநில தலைவரான எனக்கே, மிரட்டல் விடுக்கப்பட்டது. நெருக்கடியை சமாளிக்க முடியாமல், போராட்டத்தை தள்ளி வைத்தோம்.

மருத்துவ மையங்களுக்கு நீராவி குளியல் இயந்திரம், ஆயில் மசாஜ் இயந்திரம், பயிற்சி இயந்திரங்களை வாங்கி குவித்துள்ளனர். இவற்றை இயக்க ஆட்கள் இல்லை. இன்னும் வெட்கக்கேடு என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் செயல்படும், ஓமியோபதி மருத்துவமனைகளுக்கு, இரண்டு ஆண்டுகளாக மாத்திரைகளை கூட அரசு தரவில்லை; அப்புறம் எப்படி, சிகிச்சை அளிக்க முடியும்?மாவட்ட சுகாதார மருத்துவமனைகளில், கெஞ்சாத குறையாக கடன் வாங்கி, சிகிச்சைக்கு வந்தோருக்கு மருந்து கொடுத்து, டாக்டர்கள் சமாளித்தனர். கடைசி நேரத்தில், அரசு கொடுத்த மருந்துகள் கூட, கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் அளவில் கூட இல்லை. இந்த லட்சணத்தில் தான், பாரம்பரிய மருத்துவமனைகள் செயல்பட்டன. இனி வரும் புதிய அரசாவது, இதுபோன்ற பல சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.

டாக்டர் எஸ்.செல்லையா
மாநில தலைவர், ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் - என்.ஆர்.எச்.எம்., தமிழ்நாடு.
ஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 
ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகர், அமராவதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தற்போதே அங்கு, தற்காலிக தலைமைச் செயலக அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. 
தலைமைச் செயலக ஊழியர்களுக்காக, 5,000 வீடுகள் கட்டப்படுவதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 
மேலும், தற்காலிக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வாரத்தில் ஐந்து நாள் வேலை, 30 சதவீதம் கூடுதலாக, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்கவும், முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சொன்னால் போதாது

லகம் முழுவதும் ஒரு பெரிய அழிவு சக்தியாக, அணுகுண்டுக்கும் மேலான ஆபத்தாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்கள்தான். இதை உச்சநீதிமன்றமே தெளிவாக கூறியிருக்கிறது. 2012-ம் ஆண்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்ச், பிளாஸ்டிக் தீமைகள் பற்றி தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அபரிமிதமான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடும், அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தாத தன்மையும், நமது ஏரிகள், குளங்கள், கழிவுநீர் கால்வாய்களை அடைத்துக்கொள்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஒரு அணுகுண்டைவிட அதிக பாதிப்பை விளைவிப்பது பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக்கை முழுமையாக தடைசெய்வதை நாம் பரிசீலிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். நாட்டில் மட்டுமல்லாமல், கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆதிக்கம் இப்போது அதிகமாகி, கடலில் சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைத்துவிட்டது. அதனால்தான் Òஆழ்கடலில் உள்ள பிசாசுகள்Ó என்று பிளாஸ்டிக் பொருட்களை கூறுகிறார்கள். 

இந்தியாவில், எல்லோருக்கும் வழிகாட்டும் வகையில், கர்நாடக அரசாங்கம் கடந்த மாதம் பிறப்பித்த ஒரு ஆணையின்படி, எவ்வளவு தடிமன் என்று கணக்கில்லாமல், பிளாஸ்டிக் பைகள், பேனர்கள், கொடிகள், அலங்கார தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள், தட்டுகள், கப்புகள், விரிப்புகள் என்று எல்லாவற்றையும் தடைசெய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் பிரிவு 5-ன்படி இந்த சட்டத்தை பிறப்பிப்பதாகவும், இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பை தொட்டியில் போடுபவர்களுக்கும் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது. 

கர்நாடக அரசு தடை செய்துவிட்டது. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? என்பதுதான் இப்போது எல்லோரது பார்வையாக உள்ளது. அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் என்று எல்லா ஊர்களும் திருவிழா கோலம் காணுமே, இதுவும் கூடுதல் அழிவை ஏற்படுத்தும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்சில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்தலின்போது 40 மைக்ரானுக்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மீதும், அவற்றை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. 

2011-ம் ஆண்டே பிறப்பிக்கப்பட்ட சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் தயாரிக்கும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்களில், அந்த நிறுவனத்தின் பதிவு எண் அச்சிடப்படவேண்டும் என்று, யார் தயாரித்தார்கள்? என்று அடையாளம் காட்டுவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் முடிந்தவுடன் இந்த கொடிகள், பேனர்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து, அவற்றை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சியோ, அழிக்கவோ உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவுறுத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷனும் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு, பிறமாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையவுள்ளது. 

அதே நேரம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏராளமான அதிகாரம் உள்ளது. உயர்நீதிமன்றத்திலேயே ஒப்புதல் அளித்துள்ள இந்த நடவடிக்கைகளை சொன்னால் போதாது, செயலில் காட்டவேண்டும். இந்த தேர்தலில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான எந்த பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இந்த பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டம் என்ற ஆயுதம் அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கையில் இருக்கிறது. அதை பயன்படுத்துவது அவர்கள் 

NEWS TODAY 2.5.2024