Sunday, September 30, 2018

ஆன்மீகம். பிதுர் தோஷம்

கடுமையான பிதுர்தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஹோமம்!

Published on : 29th September 2018 11:27 AM  

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் அமாவாசை வழிபாடு செய்கிறோம். 

ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருவதாக ஐதீகம். 

ஒரு சிலர் வெளிநாடுகளில் சென்று வேலை செய்யும் நிலை ஏற்படும் பட்சத்தில், தன் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் என்று எதுவுமே கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுவர். அதனால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், நாளடைவில் அது பிதுர் தோஷமாகவும், கால சர்ப்ப தோஷமாகவும் மாறி அவர்களது சந்ததியினரை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும். 

இதனால், வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுதல், திருமணத்தடை, உத்தியோக தடை, குழந்தைபேறு தாமதமாகுதல், விபத்து நேருதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். மிகக் கடுமையான பிதுர் தோஷத்தால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும். 

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும், எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்தச் சம்பவம் நிகழ்ந்தால் தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிரவதிப்பதாக அர்த்தம். 

வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம். கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டியது அவசியம். 
 

சிறப்புக் கட்டுரைகள்

தனிநபர் கடனும், தங்க நகை கடனும்







நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

பதிவு: செப்டம்பர் 29, 2018 11:56 AM
தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில செய்திகள்

ஆகம விதிகளுக்கு புறம்பாக ‘சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று விளக்கு ஏற்றி பெண்கள் உறுதிமொழி’



ஆகம விதிகளுக்கு புறம்பாக சபரிமலைக்கு நாங்கள் போகமாட்டோம் என்று கூறியபடி சென்னை கங்காதீஸ்வரர் கோவிலில் பெண்கள் விளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பதிவு: செப்டம்பர் 30, 2018 05:15 AM

சென்னை,

‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் பாரத் இந்து முன்னணியின் மகளிர் அணி சார்பில் சென்னை மாநகர மகளிர் அணி தலைவி லட்சுமி மற்றும் கோவாவில் இருந்து வந்திருந்த, இந்து ஜனக்குருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஜெய்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள் சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10.30 மணி அளவில் திரண்டனர். பின்னர், பெண்கள் அய்யப்ப சாமியின் சரணங்களை கூறியபடி, விளக்கு ஏற்றி கோவிலை வலம் வந்தனர். பின்னர் கொடிமரம் அருகில் விளக்குளை வைத்து ‘ஆகம விதிகளுக்கு புறம்பாக சபரிமலைக்கு செல்ல மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் லட்சுமி, சுகந்தி ஜெய்குமார் மற்றும் மாநிலத்தலைவர் ஆர்.டி.பிரபு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘உடல் ஒத்துழைக்காது’

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் இந்துக்கள் மனம் புண்பட்டு இருப்பதுடன், தமிழகம் போர்க்களமாக மாறி வருகிறது. இந்து தர்மம் இயற்கையுடன் தொடர்புடையது.

குறிப்பாக பொங்கல் அன்று சூரியனை வழிபடுவது, பஞ்சபூதங்களை வழிபடுவது போன்றவற்றை கூறலாம். பிரம்மச்சாரிய விரதம் இருக்கும் சபரிமலை அய்யப்பன் சாமியை தரிசிக்க 48 நாட்கள் விரதம் இருந்து தான் செல்ல வேண்டும். ஆனால் உடல் ரீதியாக பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது. உடலும் ஒத்துழைக்காது.

கலாசாரத்தை சிதைக்க முயற்சி

உலகில் உயர்ந்த தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்துக்கள் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறுவது கிடையாது. தர்மம் பற்றி தெரியாத தீயசக்திகள் புகார் அளித்து நம்முடைய தர்மத்தையும், கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தி சிதைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தரமாட்டோம். தர்மம் மோசமான பாதையை நோக்கி செல்வதால் தான் அய்யப்ப சாமி கோபம் கொண்டதால் தான் கடந்த மாதம் கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டது.

எனவே தர்மத்தை காக்க ஆகம விதிகளின் படித்தான் அனைவரும் நடக்க வேண்டும்.

சீரழிக்க கூடாது

நீதிபதிகள் மதம் சார்ந்த விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் போது, பெரும்பான்மையினர் தலைமுறை தலைமுறையாக மதிக்கும் மதநம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கக்கூடாது.

வெளிநாட்டினரே நம்முடைய கலாசாரத்தை பின்பற்றி வரும் நிலையில், நாம் நம்முடைய கலாசாரத்தை சீரழிக்க கூடாது. எனவே நாங்கள் ஆகம விதிகளுக்கு புறம்பாக இளம் வயதில் சபரிமலைக்கு செல்ல மாட்டோம். எனவே தற்போது வழங்கிய தீர்ப்பை பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கங்காதீஸ்வரர் கோவிலில் பெண்கள் அதிக அளவில் திரண்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை





இளம்பெண் கற்பழிப்பு காரணமாக, ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 30, 2018 04:45 AM
ஏற்காடு,

சுற்றுலா வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டனர்.

ஈரோட்டை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கடந்த 27-ந் தேதி சுற்றுலா வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்து கொண்டு அறையை விட்டு வெளியேறி ஏற்காடு அண்ணா பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களான ஏற்காடு ஜெரினாகாடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 31), மஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்த குமார்(32) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்து உதவி செய்வது போல நடித்து பணம் பறித்தனர். அந்த பெண்ணை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று விஜயகுமார் கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்காட்டில் நேற்று முதல் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்கக்கூடாது என தடை விதித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவிட்டனர்.
மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் மாரடைப்பு




சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 30, 2018 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூருக்கு 248 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டு பிரஜையான புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 80), அவருடைய மனைவி ஆதியம்மா (74) ஆகியோர் பயணம் செய்தனர்.

விமானம் நடுவானில் பறந்து சென்றபோது ராமச்சந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதியம்மா, இதுபற்றி விமான பணிப்பெண்ணுக்கு தகவல் கொடுத்தார். அவர், விமானிக்கு தகவல் தெரிவித்தார்.

அவசரமாக தரை இறங்கியது

உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி மாரடைப்பால் துடித்துக்கொண்டு இருப்பதாகவும், விமானத்தை அவசரமாக சென்னைக்கு திருப்பி கொண்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து விமானத்தை அவசரமாக சென்னையில் தரை இறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த விமானம், மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த விமான நிலைய டாக்டர்கள் குழுவினர், விமானத்தில் ஏறி ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவி ஆதியம்மா ஆகியோரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

உயிரிழந்தார்

இதையடுத்து அந்த விமானம் 246 பயணிகளுடன் நள்ளிரவு 1.20 மணிக்கு மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார். இது பற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய செய்திகள்

சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி




சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதியளிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேரள முதல்-மந்திரியுடன் இன்று தேவஸ்தானம் ஆலோசனை நடத்த உள்ளது.

பதிவு: செப்டம்பர் 30, 2018 05:15 AM
திருவனந்தபுரம்,

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்கள் அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.

இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் ஆகிய 4 பேரும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

ஆனால், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, மத நம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிட கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். இருந்தபோதிலும், பெரும்பாலான நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்தது.

இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கேரள அரசு வரவேற்று உள்ளது. இதுபற்றி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதும், அங்கு வரும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு என்றும் கூறினார்.

தேவஸ்தானம் போர்டு தலைவர் கே.பத்மகுமார் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, சபரிமலையில் கோவிலுக்கு செல்ல பெண்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கே.பத்மகுமார் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இது தொடர்பாக கே.பத்மகுமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் முதல்-மந்திரியுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Ministry of health and Education New Delhi with holding nomination of MCI Members


NEWS TODAY 2.5.2024