Sunday, September 9, 2018

கட்டுரைகள்

கொடூர ‘அபிராமி’கள் உருவாவதற்கான காரணங்களைக் களைய வேண்டாமா?

By கார்த்திகா வாசுதேவன்  

|   Published on : 07th September 2018 02:56 PM  

தான் பெற்ற குழந்தைகளையே கொல்லக் கூடிய மனநிலை ஒரு தாய்க்கோ, தந்தைக்கோ வந்தால் அம்மாதிரியான மனநிலையை மருத்துவ மொழியில் Filicide என்கிறார்கள். 

இந்த மனநிலை உருவாக 2 விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி; அவை

1. Emotional Disconnectedness(கணவரிடத்திலும், குடும்பத்திற்குள்ளும், பெற்ற குழந்தைகளிடத்திலும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இல்லாமை),
2. சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாதிக்கப்பட்டவராகவோ (victim)அல்லது சாட்சியாகவோ(Witness) இருந்திருந்து அதனால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால் கூட மனநலப் பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம்.

அபிராமி விஷயத்தில் அந்தப் பெண் தன் கணவரை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவர் என்ற போதும் கூட கணவரை விடுத்து இன்னொரு ஆணை நாடக் காரணமாக அமைந்தது கூட உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரியாமலும், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவரிடத்தில் சரியான பதில் கிடைக்காமல் போனதாலுமாக இருக்கலாம். ஏனெனில் கணவர்களில் பெரும்பாலானோர், காதலிக்கும் போது காதலியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல்வது போல கல்யாணத்திற்குப் பிறகு முயல்வதே இல்லை. இது கணவன், மனைவி உறவுக்குள் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அத்தகைய புரிதல் வெளியில் கிடைக்கும்படியாகத் தெரிந்தால் அதை நம்பி அவர்கள் மோசம் போகும் படியாகிறது. குடும்ப அமைப்புக்குள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே க்வாலிட்டி டைம் செலவழித்தல், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு புரிதல் கணவன், மனைவி இருபாலருக்கும் அவசியம். அது இல்லாத பட்சத்தில் தான் மேற்கண்ட அவலங்கள் நேர்ந்து விடுகின்றன.

இப்படியானவர்கள் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சைக்கியாட்ரிஸ்டுகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்குமா? என்றால் அப்படி இல்லை என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி. இவரது யூ டியூப் நேர்காணலைக் காணும் போது இந்த உண்மை தெரிய வந்தது.

சைக்கியாட்ரிஸ்டுகள் பொதுவாக தங்களிடம் வரும் மனநல நோயாளிகளிடம் பிரச்னைகளைக் கேட்டு விட்டு உடனே அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுகிறார்கள். நிஜத்தில் பிரச்னைகள் மருந்துகளால் தீர்வதைக் காட்டிலும் பேசிப் பேசி மனதைக் கரைத்துத்தான் பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும். அது சைக்காலஜிஸ்டுகளின் வேலை. 1 மணி நேரமானாலும் சரி 2 மணி நேரமானாலும் சரி உளவியல் பிரச்னைகளுடன் எங்களை நாடுபவர்களை அமர வைத்து அவர்களது பிரச்னைகளுக்கான ஆணி வேரைக் கண்டடைந்து அதைக் களைய முயல வேண்டும். அப்போது தான் அவர்களை அந்தப் பிரச்னையில் இருந்து மீட்க முடியும்.

வாழ்க்கைப் பிரச்னை எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றி. இன்றைய இளைஞர், இளம்பெண்களில் 60% க்கும் அதிகமானோர் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வாழ்க்கையை ஆனந்த மயமாகவே வாழ ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த ஆனந்தம் என்பது உடனடி நிகழ்வாக நிகழ்ந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் தான் அவர்களுக்கிடையிலான பிரச்னையின் ஆழத்தை மேலும் அதிகரிக்கச் செய்து அபிராமி விவகாரம் போன்று சிலரது வாழ்வைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. உளவியல் கவுன்சிலிங் என்பது மிக நிதானமானதொரு நடைமுறை. அதற்கு பொறுமையும், புரிதலும் மிக மிக அவசியமாகிறது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல அதை அணுகினால் பலன் கிடைக்காது.

உலக அளவில் ஒரு பழமொழி உண்டு. கணவன், மனைவி பந்தத்தில் 7 ஆண்டுகள் ஒரு தம்பதியால் சேர்ந்து வாழ்ந்து விட முடிகிறதென்றால் அதன் பின் அவர்களுக்குள் பிரிவென்பதே நேராது என்பதே அது. ஆனால், இதில் விதிவிலக்குகள் உண்டு. இன்றைய இந்தியாவில் இது பெரும்பாலும் தற்போது சாத்தியப்படுவது இல்லை. சிலர் வயோதிக காலத்தில் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிவதும் இந்தியாவில் நிகழத்தான் செய்கிறது. காரணம் கணவன், மனைவிக்கிடையே எந்த வயதில் வேண்டுமானாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றங்களினால் பிரிவுகள் நேர்ந்து விடுவதுண்டு. உறவுகளின் எதிர்பார்ப்பை குறிப்பாக கணவனின் எதிர்பார்ப்புகளை மனைவியும், மனைவியின் எதிர்பார்ப்பைக் கணவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை சிக்கல் தான். அதை சிடுக்கு எடுக்காமல் நெடுங்காலம் அப்படியே விடும் போது ஏமாற்றத்துடன் இருப்பவர்களுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போலாகி விடுகிறது.

சதா ஏமாற்றத்தில் உழல்பவர்கள் தாங்கள் பிறரால் தனிமைப் படுத்தப் பட்டதாக உணரத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு சுயநலமும், சுயபட்சாதாபமும், தன்னை மட்டுமே பிரதானமென்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை வந்துவிடுகிறது. அதனால் தான் அபிராமி போன்றோர் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையின்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது மாதிரியான விபரீதங்களில் ஈடுபட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள். இவர்களுக்கு விமோஷனமே இல்லை.

தங்களுடைய சுயநலங்களுக்காகத்  திட்டமிட்டு கொஞ்சமும் ஈவு, இரக்கம் இன்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது, கணவரைக் கொல்வது, காதலனைக் கொல்வது, காதலியின் மீது ஆசிட் வீசுவது, முறைகேடான காதலை நிலைக்கச் செய்வதற்காக முன்னரே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நபரின் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவனது குழந்தையைக் கடத்தி கொலை செய்வது என்று விதம் விதமான சைக்கோத்தனங்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வை தாங்களே மேலும் நரகமாக்கிக் கொள்ள இப்படியானவர்கள் தயங்குவதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம்பெண், தனது அலுவலக சக பணியாளர் ஒருவருடன் முறையற்ற உறவைத் தொடர்ந்து வந்தார். அந்த நபர் முன்பே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். அவரைத் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்திலும், தன்னையும் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளச் சொல்லி மிரட்டுவதற்காகவும் இந்தப் பெண் அவனுடைய மகனைக் கடத்தி விடுகிறாள். கடத்தியவள் தனது மிரட்டல் பலிக்காது போனதும் அச்சிறுவனை நன்கு அறிந்தவளாக அவன் மீது பாசம் காட்டியவளாக முந்தைய காலங்களில் இருந்த போதும் கூட தனது எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரம் புத்தியை மறைக்க  நெஞ்சில் ஈரமின்றி அச்சிறுவனைக் கொன்று சடலத்தை ஒரு பெரிய டிராவல் சூட்கேஸில் வைத்து மூடி பேருந்து நிலையத்தில் அநாதரவாக விட்டுச் சென்று விட்டாள். சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்  தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கொலைக்கான காரணம் முறைகேடான உறவால் கிட்டிய ஏமாற்றம் என்று தெரிய வருகிறது.

அந்தப் பெண் பூங்கொடி புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கிருந்த பெண் கைதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளானதாக அப்போதைய நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இன்று இந்த அபிராமிக்கும் கூட இந்தக் கதி நேரலாம்.

அபிராமிக்குத் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பு வளர்த்துக் கொண்டு ஏமாந்திருக்கலாம். அது அவளுக்கும், அவளது கணவருக்குமிடையிலான பிரச்னை. ஆனால், இங்கு பழி, பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் இரண்டு பெற்ற தாயாலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தான் வேதனையிலும் வேதனை. அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்பது தான் புரியாத புதிர்?! அபிராமி தன் கடமைகளில் இருந்து விடுபட நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு கொலை தான் தீர்வு என்று முடிவு செய்தது அவளது வக்கிர மனதைக் காட்டுவதோடு அவளை சமூகத்தின் முன் இரக்கமற்ற அரக்கியாகவும் ஆக்கியிருக்கிறது.

இப்போது அரசும், சட்டங்களும் என்ன செய்ய வேண்டும்? அபிராமிகள் உருவாகாமல் இருக்க காரணங்களைத் தேடிக் களைய வேண்டுமா? அல்லது அபிராமிகள் மாதிரியான அம்மாக்களைத் தேடிக் கண்டடைந்து  அவர்களது குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமா?  நாட்டின் தீர்க்க முடியாத பல பிரச்னைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.


பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது” -தாயார் அற்புதம்மாள்

Published : 08 Sep 2018 17:22 IST

the hindu tamil



அற்புதம்மாள்: கோப்புப்படம்

பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள். கடந்த 27 ஆண்டுகளாக சிறை வாழ்வை அனுபவித்து 28-வது ஆண்டாகவும் அதனை தொடர்ந்து கொண்டிருக்கும் தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது என தீர்க்கமாக நம்புகிறார். தன் மகனின் விடுதலை குறித்து வரும் எதிர்மறை கருத்துகளை அவர் மென்மையாக புறந்தள்ளுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, எனவே இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது. தீர்ப்பின் நகல் 8 -ம் தேதி வெளியானது.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தன் மகன் விரைவிலேயே விடுதலையாகி விடுவான் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் அற்புதம்மாளை தொடர்பு கொண்டோம்.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார் என அவரது குரலிலேயே தெரிந்தது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என யாரும் காரணம் சொல்ல முடியாது. பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு கால நிர்ணயம் ஏதும் இருக்கிறதா என ஒன்னும் விளங்கல.

ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. நமக்கு ஒன்னும் புரியல. அதனால குழப்பமா இருக்கு. உத்தரவு நகல் இப்போதுதான் வந்திருக்கிறது. அதனடிப்படையில் முதல்வரை நேரில் சந்தித்து என் கோரிக்கையை வலியுறுத்துவேன். அது என் கடமை. இந்த நடைமுறைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு அதனை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

அதனால் அறிவு விடுதலையாவான் என எல்லோரும் நம்பிக்கையா இருக்கோம். எங்க நம்பிக்கை உண்மையாகனும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதுக்குப் பிறகு வெளியில் வந்திருந்தாலே என் மகன் வெளியில் வந்து 4 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என்கிறார் அற்புதம்மாள்.

தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தால் அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைத்தாண்டி அவர் இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

“சட்ட நிபுணர்கள் சொல்வது போன்று சீக்கிரம் என் மகன் என்னுடன் வந்துவிட வேண்டும் என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் காலம் கடந்துகொண்டே இருக்கிறது. 28 ஆண்டுகள் சிறை என்பது சாதாரணம் இல்லை. தமிழக அரசு இதனை விரைந்து கையிலெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்பதுதான் அற்புதம்மாளின் 28 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கிறது.

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து நான்கு ஆண்டு காலம் கடந்துவிட்டது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் அதிமுக அரசு தாமதம் இல்லாமல் ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அற்புதம்மாள்.

“அம்மா ஆட்சி நடத்துறோம்னு சொல்றாங்க. ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரண்டு முறை முயற்சி எடுத்தாங்க. இரண்டு தடவையும் மத்திய அரசு தடுத்தது. அம்மாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்பவர்கள் அவர் நிறைவேற்றிய சட்டப்பேரவை தீர்மானத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இவர்கள் விடுதலையாவதில் தடையில்லை தானே”, என்று எதிர்பார்ப்புடன் கேட்கிறார் அற்புதம்மாள்.

உடல் நலம் குன்றிய தன் தந்தையை காண்பதற்காக கடந்தாண்டு பேரறிவாளனுக்கு செப்டம்பர் மாத வாக்கில் 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது, பேரறிவாளனும் தங்கள் குடும்பமும் எப்படி சந்தோஷமாக இருந்தோம் என்பதையும் அற்புதம்மாள் பகிர்ந்துகொண்டார்.


பேரறிவாளன்: கோப்புப்படம்

“என் மகன் பரோலில் வந்து சரியாக ஓராண்டாகி விட்டது. சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சியாக இருந்து, திரும்பவும் அவன் சிறைக்கு சென்றபோது எனக்கு வேதனையாக இருந்தது. 60 நாட்கள் போனதே எங்களுக்கு தெரியவில்லை. எல்லோரும் அவனை சந்திக்க தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறைவாசியை இப்படி வரவேற்பார்கள் என யாரும் கற்பனை கூட செய்து பார்க்க மாட்டார்கள்.

தலைவர்கள் வந்தாங்க. அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அந்த 60 நாட்கள் எங்கள் வீடு கல்யாண வீடு போல் இருந்தது. விருந்து அது, இதுன்னு மகிழ்ச்சியா இருந்தோம். அவ்ளோ மகிழ்ச்சியா எப்படியிருந்துதுன்னு எனக்கு சொல்லத் தெரியல. சிறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடவில்லையென்றால் மறுநாள் தலைவலி, உடல்வலி வரும், ஆனால் இங்கே நேரம் கடந்து செய்தாலும் எனக்கு ஒன்றும் ஆகவில்லைனு அவனே சொன்னான்.

மனம்தானே எல்லாத்துக்கும் காரணம். ஆனால், 60 நாட்கள் 60 நொடியாக போய்விட்டது. அந்த சமயத்தில் அவன் உடனே விடுதலை செய்யப்பட்டு விடுவான் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால், அது இவ்வளவு நாட்கள் ஆகும் என நினைக்கவில்லை” என சொல்கிறார் அற்புதம்மாள்.

தன் மகன் நிச்சயம் இம்முறை விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கும் அற்புதம் அம்மாளுக்கு தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருக்கிறது.

“அவன் மீண்டும் இங்கே வந்து அனைவருடன் ஒன்று கலந்து வாழ வேண்டும். இயல்பான வாழ்க்கை அமைய வேண்டும். முதலில் வந்தவுடன் அவன் விருப்பப்படி பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். என் குழந்தை அமைதியாக வாழ வேண்டும். நிரந்தரமாக விடுதலையானவுடன் கல்யாணம் செய்யலாம் என்று கூறியிருந்தான். ஏனென்றால், அவசர அவசரமாக திருமணம் செய்திருந்தால் அந்த பெண்ணும் தானே சிறைக்கு அலைய வேண்டும். அதனால்தான் ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்தான்” என்கிறார்.

“இதற்கு மேலும் மத்திய அரசு இதனை எதிர்க்கும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதனைதான் அவர் பயன்படுத்தப் பார்ப்பாரே தவிர மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பாரா என தெரியவில்லை. நாம் எதிர்மறையாக எதையும் நினைக்க வேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் வணங்கிதானே ஆக வேண்டும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

தன் மகன் விடுதலையானாலும் மரண தண்டனை, மனித உரிமைகளுக்கான தனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்கிறார் அற்புதம்மாள்.

“எனது போராட்டம் நிச்சயமாக தொடரும். நம்மால் சும்மா இருக்க முடியாது. இப்போது நடத்தும் போராட்டமே வருங்காலத்தில் யாருக்கும் இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தானே. வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக எந்த அப்பாவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏதோவொரு நல்லது செய்ததாக இருக்க வேண்டும்” என்கிறார் அற்புதம்மாள்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முகப்பேரில் திருமண நிகழ்ச்சியில் மோதல்: கத்திக்குத்தில் காயம்பட்ட இளைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு: 3 பேர் கைது

Published : 08 Sep 2018 15:58 IST



சித்தரிப்புப்படம்

முகப்பேர், ஜெஜெ நகரில் திருமண விழாவில் சாதாரணமாக ஏற்பட்ட மோதலை மனதில் வைத்து வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28 ) இவர் தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த மதனுக்கும் (24 ) ஜெயக்குமாருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் திட்டி விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மதனுக்கு இது கவுரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதை விடக்கூடாது, தன்னை தாக்கிய ஜெயக்குமாரை பழிவாங்கவேண்டும் என்று துடித்துள்ளார். அன்று நள்ளிரவில் மதன் தனது நண்பர்கள் கிருஷ்ணன் (24), அமீர் (24) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்த ஜெயக்குமாரை வெளியே அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண வாக்குவாதம் என்று ஜெயக்குமார் சாதாரணமாக பேசிய நிலையில் மதன் தன்னிடம் இருந்த கத்தியால் ஜெயக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ஜெயக்குமாரை விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டனர்.

ஜெயக்குமார் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜெஜெ நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் ஆபத்தான நிலையில் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை முயற்சி வழக்கிலிருந்து (307) கொலை வழக்காக (302) போலீஸார் மாற்றினர். கொலை செய்த வழக்கில் மதன், அமீர், கிருஷ்ணன் மூவரையும் கைது செய்தனர்.

உலகிலேயே யார் சுறுசுறுப்பான மக்கள்; உலக சுகாதார நிறுவனம் அறிக்கை: இந்தியாவுக்கு எந்த இடம்?

Published : 08 Sep 2018 17:38 IST





உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் மக்கள் அதிகம் கொண்ட நாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. 168 நாடுகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சுறுசுறுப்புத் தன்மை, உடற்பயிற்சி, வேலை, விழித்திருக்கும் தன்மை, காலையில் எழுதல், உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து தரவரிசையை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. தி லான்சட் என்ற மருத்து இதழில் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகளவில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டு மக்கள்தான் அதிகம் சுறுசுறுப்பானவர்கள். அங்குள்ள மக்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே போதுமான அளவில் உடற்பயிற்சியில்லாமல், சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறார்கள்.

கடைசி இடத்தில் வளைகுடா நாடான குவைத் நாட்டு மக்கள்தான் சுறுசுறுப்பற்றவர்கள், சோம்பேறிகள். இந்த நாட்டு மக்களில் 67 சதவீதம் பேர், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இதில் இந்தியா 117-வது இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 34 சதவீத மக்களுக்குச் சுறுசுறுப்பு போதுமானதாக இல்லை, சோம்பேறிகளாகவும், உடற்பயிற்சியும், நடைப்பயிற்சி இன்றியும் இருக்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் மேலான மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது.

குவைத் தவிர்த்து அமெரிக்காவின் தீவுப்பகுதியான அமெரிக்கன் சமோ, சவூதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது. முறையான உடற்பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 168 நாடுகளில் 32 சதவீதம் அதாவது 55 நாடுகளைச் சேர்ந்த மக்களில் மூன்று பங்குக்கு மேலானவர்கள் போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.

168 நாடுகளில் 159 நாடுகளில் உள்ள பெண்களுக்கு போதுமான சுறுசுறுப்பு இல்லை, உடற்பயிற்சி இல்லை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 168 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கில் ஒருபகுதி மக்கள் நாள்தோறும் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. இதனால், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் உருவாகக்கூடும்.

குறிப்பாக இதய நோய், நீரழிவு நோய், உடல்பருமன், மனநிலை பாதிப்பு, வாழ்க்கைத் தரம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Published : 08 Sep 2018 20:31 IST




சேதமடைந்த 2000 ரூபாய் நோட்டு: கோப்புப்படம்


ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால் அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை.

இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.

இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும். அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது.

அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அரவணைப்பே தற்கொலைக்கான தடுப்பு மருந்து!

Published : 08 Sep 2018 11:30 IST

நீரை.மகேந்திரன்





உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் - செப்டம்பர் 10

‘தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’ என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்ஃபீல்டு ஜேமிசன். உலகில், சாதாரண மனிதர்கள் முதல் சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நீளமானது.

தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றன என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது.

சமீபகாலமாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, விபத்து, விவாகரத்து எனக் குடும்ப அமைப்புகளின் சிதைவால் ஏற்படும் குழப்பம், காதல் பிரச்சினைகளில் ஏற்படும் கோபம், பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வதாக அமைகிறது. இளைஞர்கள் மிக எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

ஆனால், தற்கொலை செய்துகொள்ள முனைபவர்கள் சாக விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம்தான் நம்மிடம் இருக்கிறது. உண்மையில், ‘அவ்வாறு முயல்பவர்கள் அந்தச் சூழலில் இருந்து தங்களைக் காப்பாற்ற யாருமில்லையே, தங்களை அரவணைக்க யாருமில்லையே’ என்ற அழுத்தத்தில்தான் அப்படியான முடிவைத் தேடுகிறார்கள் என்கிறார் வெ. இறையன்பு.

தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல்களை எழுதி வந்தவர், தற்போது தற்கொலை எண்ணத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க, ‘உச்சியிலிருந்து தொடங்கு’ என்ற தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி நூலைக்கொண்டு வந்திருக்கிறார். ‘உலகத் தற்கொலைத் தடுப்பு நாளை’ முன்னிட்டு அவருடன் உரையாடியதிலிருந்து ...

இன்றெல்லாம் மிக இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்களே. என்ன காரணம்?

சிறு வயதில் பாலியல்தொல்லை களை அனுபவித்தவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களிடையே தற்கொலை எண்ணம் தலைதூக்குவதற்கு ஐந்து மடங்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன வயதில் ஒரு குழந்தை எப்படி நடத்தப்படுகிறது என்பதுதான், அதன் தன்னம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர், தற்கொலையில்தான் சாவார் என்பது உண்மையா?

தற்கொலை குறித்து நிறைய கற்பிதங்கள் இருக்கின்றன. தற்கொலை பற்றி நிறையப் பேசுகிறவன் செய்ய மாட்டான், ஒரு முறை தோற்றவன் மறுபடி முயல மாட்டான், சோர்ந்திருந்தவன் மகிழ்ச்சியடைந்தால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டான், தற்கொலை செய்யத் தீர்மானித்து விட்டவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பன போன்ற பல பொய்யான தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன.

எப்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சாப்பிடுவதிலும், தூங்குவதிலும் பெரிய வித்தியாசம் இருப்பது, நண்பர்களிடமிருந்தும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் விலகியிருப்பது, போதைப்பொருள் உட்கொள்வது, தோற்றத்தில் அக்கறையில்லாமலிருப்பது, பள்ளிப் பாடங்களைப் புறக்கணிப்பது, விரும்பும் செயல்களைச் செய்யாமலிருப்பது, மற்றவர்கள் பாராட்டைப் பொருட்படுத்தாம லிருப்பது, வன்மத்துடன் செயல்படுவது, வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டுவது, பழக்கவழக்கங்களில் மாற்றம், சாவு குறித்த புத்தகங்களை அதிகம் வாசிப்பது போன்றவை எச்சரிக்கைக்குரிய நடவடிக்கைகள்.

வன்மத்தின் அடிப்படையில் நிகழும் தற்கொலைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

வன்மத்தை மற்ற வர்கள் மீது திருப்பினால் அது கொலை. தன் மீதே திருப்பிக்கொண்டால் அது தற்கொலை. திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் மரணங்களை நான் சார் ஆட்சியராக இருந்தபோது விசாரித்திருக்கிறேன். அவர்களில் பலர் சின்ன மனஸ்தாபத்தில் மடிந்து போனவர்கள். தன் சாவால் கணவனோ மாமியாரோ வருத்தமடைய வேண்டும் என்ற நோக்கமே அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

தற்கொலை தவறு என்ற புரிதல்கொண்ட படித்தவர்கள்கூட தற்கொலைதான் தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதேன்?

பணியிடத்தில் கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்கள், அது ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை காரணமாக இத்தகைய தற்கொலைகள் நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அதிக அளவில் நடைபெறுகிறது.

தற்கொலைகளைத் தடுக்க, ஒரு நிர்வாகியாக நீங்கள் சொல்லும் தீர்வு என்ன…?

வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டிய வேலை இது. மதிப் பெண்களோ பணமோ முக்கியமல்ல என்பதைக் குழந்தைகளிடம் பெற்றோர் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். குழந்தைகளின் போக்கை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசனை, மனநல மருத்துவம் போன்றவற்றால் சரி செய்ய முயல வேண்டும். நண்பர்களும் பதின்ம வயதில் வித்தியாசமான போக்குடைய மாணவர்களை அறிந்து, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதற்கடுத்து, போதைப் பொருட்களை உட்கொள்கிறவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. முதியவர்களின் தனிமையைப் போக்கும் சூழலும் அவசியம். இவற்றை ஒரே நாளில் மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு அவசியம்.
சேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு



சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை கலெக்டர் ரோகிணி அறிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 09, 2018 05:00 AM

சேலம்,

நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி மற்றும் மாவட்டத்தில் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆறு மற்றும் மேட்டூர் காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

குரூப்-4 தேர்ச்சி, அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம்



குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளாா்.

பதிவு: செப்டம்பர் 09, 2018 03:45 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி இணையம் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது,

அதையொட்டி. குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

எனவே, கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வருகிற 18-ந்தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்



கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான்.

பதிவு: செப்டம்பர் 08, 2018 15:09 PM

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது.

அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.

உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
'யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாத எம்.பில்., படிப்பு ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டது சரியே'

Added : செப் 09, 2018 03:19

சென்னை:'பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., ஒப்புதல் வழங்காத படிப்பை, நிகர்நிலை பல்கலையில் படித்தவர்கள், ஊக்க ஊதியம் பெற உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, சிவன் தாக்கல் செய்த மனு:பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்; ௨௦௦௯ல், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலையில், எம்.பில்., பட்டம் பெற்றேன். அதன் அடிப்படையில், எனக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. 

ஊக்க ஊதியம்

பல்கலை மானிய குழு சட்டப்படி, இந்த, எம்.பில்., பட்டம் செல்லாது என்பதால், ஊக்க ஊதியம் வழங்க, தணிக்கை அதிகாரி ஆட்சேபனை தெரிவித்தார்.இதையடுத்து, ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, கோவையில் உள்ள தணிக்கை அதிகாரி உத்தரவிட்டார். அவரின் உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவரைப் போல, மேலும், ௧௨ பேரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர், கே.கார்த்திகேயன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர்கள், உயர் கல்வி பெறுவதன் வாயிலாக, மாணவர்கள் பயன் அடைய வேண்டும். அந்த நோக்கத்துக்காக தான், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்கள் பெறும் பட்டங்கள், செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.திறந்தவெளி பல்கலைகள், அங்கீகாரமில்லாத பல்கலைகளில் பெறும் பட்டங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத படிப்புகளை, ஊக்க ஊதியம் பெற, பரிசீலிக்க முடியாது. சட்டப்படியாக வழங்கப்படும் படிப்புகளுக்கு மட்டுமே, ஊக்க ஊதியம் வழங்க முடியும்.

எனவே, யு.ஜி.சி., ஒப்புதல் அளிக்கும் பட்டங்கள் மட்டுமே, வேலை வாய்ப்புக்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கும், செல்லத்தக்கதாக கருத முடியும். மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டங்கள், சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

நடவடிக்கை

ஏனென்றால், தொலைதுார கல்வி வழியாக வகுப்புகள் நடத்த, விநாயகா மிஷன் பல்கலைக்கு, அனுமதி வழங்கப்படவில்லை. யு.ஜி.சி.,யின் சுற்றறிக்கையை மீறி, வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யவும், யு.ஜி.சி.,க்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அபூர்வமாக தான் இத்தகைய நடவடிக்கைகளை, யு.ஜி.சி., எடுக்கிறது.

பல்கலைகளின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களின் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை, யு.ஜி.சி., உறுதி செய்ய வேண்டும். யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாத பாடங்கள் பற்றி, மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.படிப்பை முடித்த பின் தான், அவர்களுக்கு, அந்த விபரம் தெரிய வரும். அதனால், அனுமதி இல்லாத வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கும் கடமை, யு.ஜி.சி.,க்கு உள்ளது.

எனவே, மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டத்துக்கு, ஊக்க ஊதியம் பெற உரிமை இல்லை. அவர்கள் பெற்ற ஊக்க ஊதியத்தை வசூலிப்பது குறித்து, ௧௨ வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி

Added : செப் 09, 2018 01:11 |




குடியாத்தம்: ஆசிரியைக்கு, காதல் குறுந்தகவல்களை அனுப்பி, தொல்லை கொடுத்து வந்த பள்ளி மாணவனிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின், ஆங்கில பாட ஆசிரியை மாலா, 24. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் ஒருவன், காதல் கொண்டான்.இதையறிந்த ஆசிரியை,புத்திமதி கூறி, அவனை திருத்தப் பார்த்தார். அதை பொருட்படுத்தாத மாணவன், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, காதல் ரசம்சொட்டும் குறுந்தகவல்களை, அனுப்பிக் கொண்டே இருந்தான்.பள்ளிச் சுவரில், ஆசிரியை குறித்து காதல் கவிதைகளை எழுதினான்.கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, 160 காதல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை புகார் செய்தார். அதிகாரிகள் விசாரணையில், புகார் உறுதிப்படுத்தப்பட்டது.'இது குறித்த விசாரணைஅறிக்கை, கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேலுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
5 'டீன்' பதவிக்கு 10 பேர் பரிந்துரை

Added : செப் 09, 2018 01:55


சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, ஐந்து, 'டீன்' பணியிடங்களுக்கு, 10 பேரை, மருத்துவ கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில், 22 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. அதில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, தேனி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், ஐந்து மாதங்களுக்கும் மேலாக, டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு, மூத்த டாக்டர்கள், பொறுப்பு டீன்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலியாக உள்ள, ஐந்து பணியிடங்களுக்கு, 10 சீனியர் டாக்டர்களின் பெயர்களை, மருத்துவ கல்வி இயக்ககம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ஐந்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், ஓரிரு நாட்களில் பணியிடங்கள் நிரப்பப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.




மும்முனை!

களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்
இடைத்தேர்தல் களத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., - அழகிரி  dinamalar 09.09.2018



திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது, அழகிரியும், அவரதுஆதரவாளரும், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்க திட்டமிட்டுள்ளதால், மும்முனை போட்டியால், இரு தொகுதிகளும் களைகட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், வெற்றிக்கான வியூகங்களை, அழகிரி அமைத்து வருவதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மகுடம் சூடும் பதவிக்கு, மன்னர் காலத்திலிருந்து, தந்தை - மகன், அண்ணன் - தம்பி இடையே போரும், படுகொலைகளும் நிகழ்ந்த வரலாறு உண்டு. அரசியல் அதிகாரம் மற்றும் பதவி நாற்காலிக்காக, ரத்த உறவுகளிடம் போட்டியும், மோதலும் உண்டு என்பதற்கு, தி.மு.க.,வும், எடுத்துக்காட்டாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அமைதி காத்து வந்தார். அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உயிரோடு இருந்த போது, அழகிரி யை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், அழகிரியை கட்சியில் சேர்க்க, அவரது தம்பி ஸ்டாலின் விரும்பவில்லை. இதனால், அவரை கட்சியில் சேர்க்க முடியாமலேயே, கருணாநிதி மரணம் அடைந்தார். தந்தையின் மறைவுக்கு பின், ஸ்டாலின், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்வார் என, அழகிரி எதிர்பார்த்தார். இருந்தும், அழகிரியை அறவே கண்டுகொள்ளவில்லை, ஸ்டாலின்.


'தி.மு.க., தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழு தேர்வு செய்ததால், அவரை, நானும் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்' என, அழகிரி, ஒரு படி இறங்கி வந்தார். அதற்கும், ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை. இதனால், கருணாநிதி மறைவின், 30வது நாளன்று, தன் பலத்தை நிரூபிக்க, சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு பிறகும், ஸ்டாலின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவில்லை. ஆனால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் மாவட்ட செயலர்கள் சிலரும், அழகிரி இணையவேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 'திருவாரூர் தொகுதியில், உதய சூரியன் சின்னத்தில், நான் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு கட்சி ஆதரவு தர வேண்டும்' என, ஸ்டாலினிடம், தங்கை செல்வி மூலமாக, அழகிரி துாது அனுப்பியுள்ளார். 'அழகிரியை, கட்சியில் சேர்க்கவே வழியில்லை என்கிற போது, வேட்பாளராக, எப்படி அறிவிக்க முடியும்' என, ஸ்டாலின் மறுத்து விட்டார். எனவே, திருவாரூரில், உதயசூரியன் சின்னத்தை எதிர்த்து போட்டியிட, அழகிரி தயாராகி உள்ளார். தேர்தல் பணிகள் தொடர்பாக, தன் ஆதரவாளர்களிடம், ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:

திருவாரூர் தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற, கருணாநிதியின் சொந்த செல்வாக்கு மற்றும் அவரது குடும்பத்திற்காக கிடைத்த ஓட்டுகள் தான் முக்கிய காரணம். அங்கு, உதயசூரியன் சின்னத்தை விட, கருணாநிதி என்ற பிம்பம் தான், முக்கிய பங்கு வகித்தது. அழகிரி போட்டியிட்டால், அவருக்கு தேர்தல் பணியாற்ற, தமிழகம் முழுவதும் இருந்து, 5,000 தொண்டர்கள் வருவர். அதற்கு, அவர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு, நடந்து முடிந்த அமைதி பேரணியே சாட்சி. ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து, போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு கூறி வெளியேறிய, முன்னாள் பிரதமர், வி.பி.சிங், அலகாபாத் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, அனில் சாஸ்திரி களமிறங்கினார். கடும் நெருக்கடியில், வி.பி.சிங் வெற்றி பெற்றார்.

அதேபோல, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில், பொதுச்செயலராக இருந்த பகுகுணாவுக்கு, மத்திய அமைச்சர் பதவி தரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், அலகாபாதில் வெற்றி பெற்ற, தன், எம்.பி., பதவியை, ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எனவே, கருணாநிதியின் மகன் என்ற, அனுதாப அலையில், அழகிரி, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க., வேட்பாளரை தோற்கடிப்பார். திருவாரூர் தொகுதி வாக்காளர்களிடம், 'கருணாநிதியின் மகன் நான். தி.மு.க., தொண்டர்களின் வேட்பாளர்' என்ற, கோஷத்தை முன்வைத்து, தேர்தல் களத்தை சந்திக்க, அவர் தயாராகி விட்டார்.தொண்டர் படையை களத்தில் இறக்கி, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் துவக்க உள்ளோம். அதேபோல, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., - தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, அழகிரி தன் ஆதர வாளரை நிறுத்தி, வெற்றி பெற வைக்க திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில், அழகிரியும் குதிக்க திட்டமிட்டுள்ளதால், இரு தொகுதிகளும், மும்முனை போட்டியால் களைகட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - நமது நிருபர் -
Didn’t know till doctors said she was pregnant: Mother

DECCAN CHRONICLE. | KATHELENE ANTONY & 

PublishedSep 8, 2018, 2:53 am IST

Woman shares trauma of second husband raping 13-year-old.


Priya says that he used to wake her up at night when everyone else was asleep and rape her. This had been going on for months until she got pregnant, Vanitha suspects.

Chennai: “She only confided in the doctor,” Priya’s mother, Vanitha says, “for some reason, she does not want to tell me.” Over a week ago, when doctors scanned 13-year-old Priya’s stomach after she complained of discomfort informed them that she was four months pregnant. It is only then that her mother came to know of her child being raped repeatedly by her stepfather.

Now, admitted to Kilpauk Medical Hospital, the trauma continues to haunt her. Priya’s brother, Ganesh, too, has been unable to attend school as his peers either make fun of him or ask intrusive questions.

Priya* (name changed) says the only reason she did not complain was that Inbanesan, her stepfather had threatened to kill Vanitha if she said anything. “I already lost my father, I cannot lose my mother and my new father too. That’s why I did not say a word,” Priya says.

Priya’s mother met Inbanesan, a year after her husband committed suicide.

They fell in love and were married in 2012. “My children lived away from me for four years. I asked them to move with me only after I was sure Inbanesan would be able to provide for them,” Vanitha says.

Vanitha works in a packing company and earns Rs 6,000. The house which she rented when her children came back to live with her costs Rs 4,500. The needs of the children, including school fees, was taken care of by Inbanesan, Vanitha says, because of which she didn’t doubt him even once.

Priya is now healthy and has recovered from the complications involved in an abortion. She will be discharged from the hospital on Saturday. “Her period had not come since the month of May. But when we visited a doctor twice, they had said that it is only because she is anaemic,” Vanitha says.

Priya’s grandmother says that Priya had pointed out that her belly was growing and they should have realised it just then. “She eats a lot of groundnuts. I assumed it was gas built-up. After the doctors said anaemia, we had no reason to question it.” she says.

Vanitha’s concern now, is will Priya be able to go back to a normal life. “My son’s friends already have so many questions. I’m sure her friends will too because word got out. I hope she has the strength to deal with it,” she says.

Vanitha says that many fingers were pointed at her for not being aware. “I have been living with him for seven years now. And he did everything for my children. I did not even dream that such a thing could have been done to my child,” she says.

Priya says that he used to wake her up at night when everyone else was asleep and rape her. This had been going on for months until she got pregnant, Vanitha suspects. “How was I to know? She did not tell me anything and when we went to the hospital twice, he even accompanied us, Now I realise it may have been to eliminate any chance of a doubt” she says.

Although such incidents may be avoidable, a comprehensive sex education class may have helped Priya pinpoint her bodily changes due to the pregnancy, experts say. “Age appropriate life skills is a must. It has to start with the family. Parents, teachers and peers need to create a space for children to freely express themselves,” an official from the Child Protection Office said. However, he believes that it is unfair to expect these of all families. “In her case, her father is no more, and her mother works all day. She really did not even live with the mother for a large part of her childhood. She didn’t have anyone to confide in,” he says.
Madras HC raps UGC for not taking action against varsities

DECCAN CHRONICLE.

PublishedSep 9, 2018, 6:00 am IST

In their petitions, the petitioners challenged an order of the department of school education, denying incentive increment to them.



Madras High Court

Chennai: Madras high court has pulled up the University Grants Commission for rarely taking action against the deemed universities, which are offering unapproved courses and exploiting poor students.

Disposing of petitions from S. Sivan and 12 other teachers, Justice S.M. Subramaniam said the petitioners are not entitled for grant of any incentive increment for the qualification of M.Phil degree obtained by them from the Vinayaka Missions University, which are not approved.


In their petitions, the petitioners challenged an order of the department of school education, denying incentive increment to them.

The judge said this court was of an opinion that the degree of M.Phil now acquired by petitioners was invalid in view of the fact that the Vinayaka Missions University was not authorised to conduct courses through distance education mode.

M.Phil conducted by Vinayaka Missions University through distance education mode was in violation of the circular issued by the UGC. In this regard, the UGC was empowered to initiate appropriate penal action under the provisions of the UGC Act and its Regulations. It was left open to the UGC to initiate appropriate action in view of the fact that the poor students were exploited in this manner by such deemed universities for their personal gains, the judge added.

The judge said, “In the event of serious irregularities by such deemed universities, the UGC is competent to initiate all appropriate action, even to cancel the status of deemed universities. However, such actions are rarely taken by UGC for the reasons not known to the court.

The UGC is the authority to regulate the courses to be conducted by various universities across the country. Such being the status of the UGC under the statute, they are duty bound to inspect and vigil over such illegal activities of the universities so as to ensure that the interest of the students, who all are studying in the universities are protected.

The students who may not be aware of such approval or recognition to be obtained from the UGC, ultimately after completion of the degree, they came to know that such courses are not approved by the UGC. Thus, the university concerned must be accountable and answerable and the authorities of the UGC and the UGC are also duty bound to initiate all appropriate action against such universities which are all conducting the courses not approved by the UGC or through its regulations”.
Madras HC gets differently-abled girl MBBS course seat

DECCAN CHRONICLE. | J STALIN

PublishedSep 9, 2018, 6:15 am IST

Without appreciating the said proposition, the single judge has dismissed the petition, the bench concluded.



Madras High Court

Chennai: Coming to the rescue of a physically handicapped girl, who was denied MBBS seat for the academic year 2016-2017 on the ground that her disability percentage was higher than what was prescribed, the Madras high court has directed the authorities to admit her in MBBS course for the academic year 2018-2019 immediately, without insisting her to undergo the Neet, if the candidate is found otherwise eligible on merit for that academic year.

Disposing of an appeal from K.Nandhinee, a division bench comprising Justices Huluvadi G.Ramesh and K.Kalyanasundaram gave the directive and set aside an order of a single judge, which dismissed her petition.

The bench said the facts reveal that the appellant has secured eligible cut off mark to be selected for pursuing MBBS course during 2016-2017 under the physically handicapped quota earmarked in the prospectus by the Selection Committee, Directorate of Medical Education and as per the Disability Certificate issued by the District Medical Board, Villupuram, her medical disability was assessed at 70 per cent (Orthopedically handicapped). Therefore, it was clear that as stated in clause 41 (iii) (a) of the prospectus that at the first instance in the reservation of seats, candidates with disability of lower limbs between 50 per cent to 70 per cent shall be considered, the appellant was entitled to get MBBS seat. But, her case was rejected by assessing her disability as 80 per cent by the expert committee constituted by the Directorate of Medical Education, the bench said.

“But, in our considered view, though the appellant has got 80 per cent of disability on her lower limbs, then also, she is eligible to get MBBS seat for the reason that the Locomotory Disability of the lower limbs of the appellant will not affect her in any way in pursuing her studies”, the bench added.

The bench said clause 41 (iii) (a) of the prospectus further proceeds that in case candidates were not available in that category, then candidates with disability of lower limbs between 40 per cent and 50 per cent may be considered. When that is so, higher disability of lower limbs at 80 per cent will not disentitle the appellant pursuing her medical course. The appellant can very well attend the college and complete her medical course with some artificial aid. But, the same has not been taken into consideration during selection by the authorities. Without appreciating the said proposition, the single judge has dismissed the petition, the bench concluded.

The bench pointed out that the special government pleader appearing for the authorities had submitted that only those who emerged successful in Neet were entitled to get seats in MBBS course during 2018-2019 and the name of the appellant would be considered in the next academic year after emerging successful in Neet.

“But, we are of the view that originally, the appellant has applied for MBBS course during 2016-2017 and got all eligibility and entitled to get admission. But, due to the improper consideration of her case by the authorities, already, she has lost two valuable years. That apart, during 2016-2017, passing in Neet for pursuing medical course was not mandatory. If now also, her case is rejected on that ground, it would be very difficult for her to undergo the Neetfor no wrong committed by her”, the bench held.
Fake mobile chargers can be deadly, here’s how to identify them

DECCAN CHRONICLE.

PublishedSep 8, 2018, 5:04 pm IST

While brands like Samsung provide their proprietary chargers, there are several manufacturers who sell fake ones which are build for cheap.



Reports have been emerging about smartphones getting blasted during charging, killing their owners. (Photo:Pixabay)

How do you know that the original-like charger of your smartphone is not fake? And, it’s not making any harm to your smartphone?

While brands like Samsung, Apple and OnePlus provide their proprietary chargers, there are several manufacturers who sell fake ones which are build for cheap.

Not only these phony units infuse problems in your smartphones such as low performance, slow charging and reduced device life, they may also conclude being fatal for you. Reports have been emerging about smartphones getting blasted during charging, killing their owners. For instance, an old man and daughter were recently killed due to their continuously charging smartphone getting exploded.

None of us want such incidents to happen and in order avoid any mishap due to a fake charger, here are the ways to check if yours is original from brands such as Samsung, Apple, OnePlus, Xiaomi, Huawei and Google.

Apple:

In order to check if your Apple charger is original, there are two things which differentiate them — the ‘Designed by Apple in California’ lettering and the dark Apple logo. On fake chargers, the logo colour may be faint or the aforementioned lettering may be absent.

Samsung:

Similar to Apple, even the original Samsung chargers might be tough to identify. However, if your charger is counterfeit, the adapter will bear the words ‘A+’ and ‘Made in China’ on it.

OnePlus:

OnePlus is known to offer one of the fastest charging technologies with its Dash Charger. However, you could be fooled with a similar-looking fake one from the retailers. Always remember, after connecting to the original OnePlus adapter, your phone battery symbol will be accompanied by a flash symbol rather than a standard charging icon.

Xiaomi Mi:

Xiaomi’s Mi devices are excessively popular but there are several fake Mi chargers available out there. In this case, the length of the cable acts as the identifier since the original cable measures more than 120cms along with a not-too-large adapter module.

Huawei:

In order to identify the fake Huawei charger, scan the barcode information on the charger and check if it matches with the details printed on the adapter. Both the information will be similar for an original charger.

Google Pixel:

The only way to check the originality of a Pixel smartphone charger is by the charging speed. Google provides fast chargers with its smartphones and the charging speed is slow only if the charger unit is fake.

(Source)
Relieving pain one exercise at a time on World Physiotherapy Day

On World Physiotherapy Day, physiotherapist A Venkataganesh talks about the scope, challenges and advancements in the field of physiotherapy Dumbbells, swiss balls and cycling machines.

Published: 08th September 2018 03:42 AM 



Physiotherapist A Venkataganesh has been a yoga instructor for 15 years

  D Sampathkumar

Express News Service

CHENNAI: On World Physiotherapy Day, physiotherapist A Venkataganesh talks about the scope, challenges and advancements in the field of physiotherapy Dumbbells, swiss balls and cycling machines. No, this is not a gym, we’re at a physiotherapy clinic which resembles the clinical version of a gym. Physiotherapist A Venkataganesh is busy attending to one of his patients. We are seated next to a skeletal apparatus in his cabin. The bones and joints are fixed by the prototype of nuts and bolts. There is a picture board that explains the different types of muscles in our body.

Venkataganesh has been in the field for 20 years. His interest towards exercise and bio mechanics drove him to take up physiotherapy as a career. He has a Bachelors degree in physiotherapy and a Masters degree in psychology. He went on to pursue his international diplomas in orthopedic manual therapy, myofascial therapy and instrument-assisted soft tissue mobilisation. “Physiotherapy is a medicine through exercise. We need to walk the talk. And to do that we need to be fit, understand the body movements, and impart the knowledge to patients. When people are in pain they open up to listen. Targeted exercise when said to give an immediate relief becomes a cultivated habit. Pain relief is the greatest incentive for them.”

The therapist has been a yoga instructor for 15 years. He is currently working with a tennis academy in OMR. From experience, he believes that if there is no diversion for a therapist then it eventually leads to exhaustion after four years. Handling multiple patients can be physically and emotionally challenging. Venkataganesh is a cyclist and he has trained in tai chi, martial arts, silambam and Russian ballet. He has also studied books on dance, which he uses to study the dynamic postures of a patient. “Presence of mind and serious self discipline are the most important qualities that help maintain calm. I brought in yoga into physiotherapy in 2004. Meditation helps me live in the moment.



Emotionally, we should have detached-attachment. One has to see things as they are. As long as there’s weakness there is pain. The option is not to get emotional but stronger,” says the therapist highlighting two of his specialties. One is the suspension therapy for diabetic patients, and the other is incline plane to improve the joint and strength pressure. “Above the age of 65, it gets tougher. The case of terminally ill patients is similar. We can give therapy to an extent but the cooperation from the body is not effective,” the therapist adds.

Occupational hazards are common and physiotherapy is not an exception. “Standing for hours causes strain on the legs, stiffness in lower back, wrist, shoulder and hip. We need to train harder,” he says. The therapist believes that with increased awareness among people for a quality life, the scope for physiotherapy has also widened. Some of the sectors include outpatient, health and wellness, rehabilitation, fitness and sports. “Earlier we used to examine people when they’re stationary. Now everything is monitored in motion. The initial criteria used to be to check a person’s balance, endurance and coordination.

Now we have the advancements in science and medicine to work on power, agility and explosive power. We can go one step beyond the muscles to study the soft tissues lying beneath and strengthen the muscle fibres. In fact, I can work on improving just the energy level of the patients through yoga. There is more to just easing pain in functionality,” says Venkataganesh while stressing that patients must be listened to very carefully by paying attention to the gestures. Hidden cues are important in this field.
Enforcement Directorate searches nine places over Rs 90-crore bank fraud

They also diverted business proceeds which resulted in a pecuniary loss of around `90 crore to the SBI, sources said.

Published: 09th September 2018 02:46 AM 



Enforcement Directorate(Image from official website for represenational purpose)

By Express News Service

CHENNAI: The Enforcement Directorate conducted searches at nine places in Virudhunagar, Madurai, Coimbatore and Chennai on Saturday after Indhumathi Refineries (IRPL), a Virudhunagar-based company came under scanner for its alleged bank loan fraud to the tune of `90 crore.

It is learnt that the IRPL had availed 46 letters of credit from the SBI, which were issued against bogus firms or fake invoices for a value of around `87.36 crore which was devolved on the bank later due to insufficient funds in their account. They also diverted business proceeds which resulted in a pecuniary loss of around `90 crore to the SBI, sources said.

The bank had filed a complaint with the CBI in Bengaluru, who registered an FIR, conducted investigation and filed charge-sheet against IRPL, and its directors and partners - R Shenbagan, R Rajan, Raji Shenbagan, Thirumagal Rajan and few employees of IRPL and State Bank of India, among others.

ED sources said that R Shenbagan, R Rajan, S Raji, and R Thirumagal did not disclose the details of financial transactions or properties involved and the bank accounts as such the searches were carried out.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...