Monday, September 10, 2018

Cabinet advice binding on guv, say legal experts
Rajiv Case Convicts Await Guv’s Signature


TIMES NEWS NETWORK  10.09.2018

Legal experts and lawyers representing two of the seven convicts in the Rajiv Gandhi assassination case on Sunday said the Tamil Nadu governor Banwarilal Purohit is bound by the decision taken by the council of ministers and has to act on it. He can delay the decision, but cannot deny it, said a section.

Leading constitutional lawyer Mohan Parasaran felt the directive of the Supreme Court is clear and the governor has to now act by going by the state cabinet resolution to release the convicts. “The Supreme Court has clearly said the state government has all the powers and the state cabinet has resolved for the early release of the convicts. The governor is bound by that and they will be released. Governor is the constitutional functionary and he has to only act on the advice of the state cabinet resolution,” Parasaran told TOI.

Counsel for Nalini Sriharan, M Radhakrishnan concurred that the Supreme Court’s direction last Thursday clearly stated that the “authority concerned” would be at liberty to decide Perarivalan’s application as deemed fit and the “authority concerned” is the Tamil Nadu government. “The Supreme Court cannot give a direction to either the President or the governor. So, the direction is only to the state government,” he said. “The governor can delay the release, but cannot deny it,” he added.

Political analyst Tharaasu Shyam, however, presented a different view. “The executive powers of any state government is only within the boundaries of the state. Naturally, that applies in the case of a state governor too. We should take into account that earlier, a five-member Supreme Court bench has already ruled that this (Rajiv Gandhi assassination case) is a CBI case and hence concurrence of the Union government is must to remit the sentence of the convicts,” he said.

Hence, the appropriate government here is the Union government and not the state government, he said, adding, “The present state government has done this only to divert the attention away from the issues surrounding it”.

Meanwhile, A G Perarivalan’s counsel S Prabhu termed the 2014 cabinet decision as a mere political statement, because of which it was challenged in the Supreme Court. He urged the government to submit a comprehensive report along with the resolution. “The report should shed light on the reformation, health and family aspects of the convicts,” Prabhu said.

SC ruling banning lawyer strikes: BCI calls for nationwide protest

TIMES NEWS NETWORK  10.09.2018

Chennai:

Lawyers across the country are up in arms against the recent Supreme Court judgment restraining Bar Associations from giving calls for strike, boycott or abstention of court proceedings in any event.

The top regulatory body of advocates, the Bar Council of India (BCI), has called for a nationwide demonstration condemning the move to ‘throttle their democratic rights’ in October at New Delhi.

It is not only the judgment — dated March 28 — that bothers the legal fraternity, but also the move made by the Union government to ‘take away the powers of Bar Councils over legal education’ by introducing the draft bill of the higher education commission of India (Repeal of University Grants Commission Act), 2018.

This apart, a communication issued by the Union ministry of law, dated June 7, to the BCI asking for a consolidated report on strikes, abstaining from work by advocates/ bar associations, the loss caused and action proposed for the quarter from January to March 2018 has irked the legal fraternity.

In the four page detailed communication dated September 5, issued to all the state bar councils, the BCI has asked all the bar associations of the country to conduct an awareness drive on September 17 to drive home the point that such judgments are passed ‘to shut mouth of the leaders of lawyers and to directly or indirectly help the government in passing anti-lawyers legislatures such as the Draft Bill of Higher Education Commission of India to override the provisions of the Advocates Act, 1961’.

“All the bar associations will hold a meeting of the general body therein they would discuss threadbare, what is the purport, what is the consequences of the judgment wherein not only the leader of the bar rather every member of the bar is going to be affected,” the communication said.

There will also be a nationwide agitation beginning from the Supreme Court to the Parliament which will be held in October. “The date will be decided later, but we are going to hold a demonstration in Delhi,” the letter said.

The BCI has also resolved to demand the abolishment of Section 34 of the Advocate Act, which empowers the high courts to frame rules regarding the condition on which a person can practice in the high courts and subordinate courts.

Times View

Unfortunate. That best describes the Bar Council of India’s instigation of lawyers across the country to assemble in Delhi and take out a rally to the Supreme Court or the Parliament. If the Centre’s proposal to assume jurisdiction over legal education is the reason, bar leaders must move courts for remedy — just as they would advise their clients hit by state policy.

The pathetic standard of legal education, in fact, offers decent justification for the Centre to strip the BCI of its say over law syllabi and colleges. If the apex court’s recent ruling totally outlawing strikes and boycotts is the reason, then the BCI should welcome it instead of planning a siege on the constitutional seats such as the Supreme Court or the Parliament. Call for ban on post-retirement posts for judges looks motivated, given the timing of the demand. The Centre should deem the siege threat as a misadventure and tackle it with an iron hand.
TN resolves to release 7 Rajiv convicts
Recommendation To Purohit Based On SC Order; But No Deadline Yet

D Govardan & Shanmughasundaram J TNN

Chennai:

A week after the Supreme Court asked the Tamil Nadu governor to consider the mercy petition of A G Perarivalan in the Rajiv Gandhi

assassination case, the state cabinet met on Sunday and passed a resolution asking governor Banwarilal Purohit to release all the seven convicts in the case under Article 161 of the Constitution.

“The recommendation of the state cabinet, headed by chief minister Edappadi K Palaniswami, will be sent to the governor immediately,” fisheries minister D Jayakumar told reporters at the end of the cabinet meeting that lasted for two hours. “The governor is the executive authority. He will execute the government’s decision,” Jayakumar said without committing to a deadline.

State law minister C Ve Shanmugam said the government was firm on ensuring that Amma’s (Jayalalithaa’s) resolve to release the prisoners was “realised”. “This comes under the provision of Article 161 of the Constitution, and based on the Supreme Court’s recent order, we have recommended to the governor to release them,” Shanmugam said.

“The SC has clearly said the state government has the powers to act on this. The cabinet has now resolved to recommend the release of all the seven convicts. The governor is bound by that and they will be released soon,” noted lawyer and constitutional expert Mohan Parasaran told TOI. All the seven convicts, Nalini Sriharan, Murugan alias Sriharan, Perarivalan alias Arivu, Robert Payas, Ravichandran, Santhan and Jayakumar, are in jail for the last 27 years.


Experts divided on prisoners’ freedom

While most legal experts and the convicts’ counsels say the governor has to act as per the recommendation of the cabinet — with some saying that he may at best delay the decision but cannot deny it — political analyst like Tharaasu Shyam differ. “The executive powers of a state lies within the boundaries of the state. SC has already ruled that it is a CBI case, and remission is possible only with the Centre’s concurrence,” he said. P 5

FRESH HOPE

Perarivalan’s mother meets CM, thanks him

Even as the convicts hope for an early release, it is pertinent to note that CBI had argued, even in the recent past, that its Multi-Disciplinary Monitoring Agency (MDMA), probing the larger conspiracy aspect behind Rajiv’s assassination, had proved the role of all the convicts, including Perarivalan, and the same had been upheld by the top court.

The Supreme Court had earlier ruled that the Centre’s approval was mandatory for releasing the convicts as the case was being probed by the CBI.

In August 2011, the Tamil Nadu assembly had passed a
resolution to recommend to the Centre to commute the death sentence of the convicts to life term imprisonment. Subsequently, in February 2014, the then chief minister J Jayalalithaa had announced that her government has decided to release all the seven convicts in the wake of the SCcommuting the death sentence of some convicts into life imprisonment.

Meanwhile, Perarivalan’s mother Arputhammal met the chief minister and thanked the government for taking a decision favouring the release of her son and six others. “It has brought peace to the families of the seven, who have been in jail for 27 years,” she said.

ஆளுநரே! அறக்கடமையாற்ற முன்வருக!

By பழ.நெடுமாறன் | Published on : 10th September 2018 02:54 AM |

இருண்ட சிறைக் குகையில் 27 ஆண்டு காலத்திற்குப் பிறகு மின்னல் கீற்றுப் போல ஒளி பரவத் தொடங்கியுள்ளது. 6-9-2018 அன்று உச்சநீதிமன்றம் வரலாற்று முதன்மை வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது. "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றுள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு அளிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஏற்று முடிவெடுக்கலாம்' எனக் கூறியுள்ளது.

1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சி.பி.ஐ.-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு 26 பேரைக் கைது செய்தது. இதில் 13 பேர் தமிழ் நாட்டுத் தமிழர்கள். 13 பேர் ஈழத் தமிழர்கள் என்பது தற்செயலானதன்று. புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் 7 ஆண்டு காலம் நடைபெற்று 1998-ஆம் ஆண்டு ஜனவரியில் 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்தது. ஒரு கொலை வழக்கில் 5 பெண்கள் உட்பட 26 பேருக்கு ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது உலக நீதிமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
உலக மனித உரிமை அமைப்புகளில் முதன்மையான சர்வதேச மன்னிப்பு சபை இத்தீர்ப்பை "நீதித்துறை படுகொலை' எனக் கூறியது. இதை ஒட்டி இந்தியாவெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. 26 தமிழர்கள் உயிர் காப்பு வழக்கு நிதிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் 27-2-1998 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக 24-8-1998 அன்று நீதியரசர்கள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, அப்துல் காதர் காத்ரி ஆகிய மூவர் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டது. 26 பேரின் சார்பில் மூத்த வழக்குரைஞர் என். நடராசன் வாதாடினார். இது குற்றவியல் சட்டப்படி தொடரப்பட வேண்டிய கொலை வழக்கே தவிர கொடிய தடா சட்டத்தின் கீழ் தொடரப்பட வேண்டிய வழக்கு அல்ல என்பது அவருடைய வாதத்தின் மையமாக அமைந்தது. 23-9-1998 அன்று தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை 15-1-1999 வரை (சுமார் 4 மாத காலம்) நடைபெற்றது. இறுதியாக 11-5-1999-இல் உச்சநீதிமன்ற ஆயம் தனது தீர்ப்பை வழங்கியது.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப் பெற்றது. இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 19 பேரும் விடுதலை செய்யப் பெற்றனர். இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வினாவை எழுப்பியது. ராஜீவ் கொலையாளிகள் என சி.பி.ஐ. சிறப்புப் புலன் விசாரணைக் குழுவினால் குற்றம் சாட்டப்பட்டு, தடா நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 19 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படாமல் போயிருக்குமானால் இந்த 19 பேரும் மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்கள். அப்படியானால் இந்த நீதி பிழைபட்ட நீதியோ என்ற அய்யப்பாடு மக்களுக்கு எழுந்தது.
இதைத் தொடர்ந்து 4 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப் பெற்றது. மாணவர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற பல தரப்பினரும் மரண தண்டனை ஒழிப்பு மாநாடுகள் நடத்தினார்கள்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் நெட்டு சீனிவாசராவ், டேவிட் அன்னுசாமி, சுரேஷ், பி. டி. ஜானகி அம்மாள், பி. சந்திரசேகர மேனன், பி. பி. உமர் கோயா, எஸ். ஆர். சந்திரன் போன்றவர்களும், முன்னாள் சி. பி. ஐ. தலைமை இயக்குநராக இருந்த வி. ஆர். லட்சுமி நாராயணன், முன்னாள் துணை வேந்தர்களான முனைவர் வசந்தி தேவி, முனைவர் கே. எம். வஹாயுதீன், முனைவர் எம். ஏ. கரீம் போன்றவர்களும் பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்களான கே. ஜி. கண்ணபிரான், பால கோபால், ஹென்றி டிபேன், முகுந்தன் மேனன் போன்றவர்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஹிரேன் முகர்ஜி, சுனித் குமார் சாட்டர்ஜி, சிம்ரஞ்சித் சிங் மான், ஜே. ஆர். ஜேட்லி, மோகினி கிரி போன்றவர்களும் குரல் கொடுத்தனர்.

17-10-1999 அன்று அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் நால்வரின் கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. அவர் அதை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார். உடனடியாக நால்வர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூத்த வழக்குரைஞர் கே. சந்துரு (பிற்கால நீதியரசர்) ஆளுநரின் ஆணை செல்லாது என்று வாதாடினார். தமிழக அமைச்சரவையின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு அரசியல் சட்டப்படி கிடையாது என்பதுதான் அவரின் வாதமாகும்.

அரசியல் சட்ட அமைப்பின் 181-ஆம் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆளுநரின் ஆணையைப் பரிசீலனை செய்ய இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. மூத்த வழக்குரைஞர் கே. சந்துரு உச்ச நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளை எடுத்துக்காட்டி ஆளுநரின் ஆணை செல்லாததாகும் என வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் கே. கோவிந்தராசன் 25-11-1999 அன்று அளித்தத் தீர்ப்பில் பின் வருமாறு குறிப்பிட்டார்:

"அரசமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் இந்திய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். அதைப் போன்று ஆளுநர் என்பவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். அவரிடம் அந்த மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். அரசியல் சட்டத்தில் உள்ள 72-ஆம் மற்றும் 161-ஆம் பிரிவுகள் முறையே குடியரசுத் தலைவர் மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு கருணை மனுக்களில் மன்னித்தல் முதலிய அதிகாரங்களை வழங்கியுள்ளன.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் ஆகியோர் தமது அமைச்சரவைகளின் உதவியுடனும் ஆலோசனையுடனும் மட்டுமே செயல்படுவர். அவர்கள் நேரடியாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இயலாது. தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டினை முடிவு செய்யும் பணியானது நிர்வாகப் பணியாகும். எனவே மாநில அரசால் அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைக்கு இணங்கவே ஆளுநர் செயற்பட வேண்டும்.
ஆளுநர் ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக அரசியல் சட்ட அமைப்பினைப் பின்பற்றவில்லை; உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. எனவே அவரது ஆணை சட்டப்படியாகச் செல்லத்தக்கதல்ல. எனவே, இந்த ஆணை நீக்கப்படுகிறது. மனுதாரர்கள் மனுவின் மீது அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று அதற்குப் பிறகு புதிய ஆணையை அவர் பிறப்பிக்கலாம்' என தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஆளுநராக இருந்த பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்தாலும் பயனிருக்காது என்பதை உணர்ந்து அவ்வாறு செய்யவில்லை.
இந்தத் தீர்ப்பின் நகலுடன் நால்வரின் மரண தண்டனைக்கு எதிராக 12 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை 30-11-1999 அன்று ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மாபெரும் ஊர்வலமாகச் சென்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியிடம் அளித்தோம். ஆனால் நளினிக்கு மட்டும் கருணைக் காட்டப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் கருணைக் காட்டப்படவில்லை.

அதன் பிறகு குடியரசுத் தலைவருக்கு மூவர் சார்பின் கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தாமதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 18-2-2014 அன்று மூவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, அப்போதைய ஜெயலலிதா அரசு ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. தமிழக சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதியது. ஆனால் மத்திய அரசு இந்த விடுதலை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்டு 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் செப்டம்பர் 6-ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்கா, கே. எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய ஆயம் "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அதை ஆளுநர் பரிசீலித்து முடிவு எடுக்கலாம்' என்று கூறியது.
வாழ்வின் வசந்த காலமான இளமைப் பருவத்தை சிறையில் தொலைத்து விட்ட இந்த 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தமிழக அமைச்சரவைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1999-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அமைச்சரவைக்குள்ள இந்த அதிகாரத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் 7 பேரையும் விடுதலை செய்ய உறுதி பூண்டிருந்தார். அதில் குறுக்கிட்ட தடைகள் அகற்றப்பட்டுவிட்டன. தற்போது தமிழக முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவை 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த மனித நேய நடவடிக்கையை ஏற்று மக்கள் விருப்பத்தை மதித்து தனது அறக்கடமையை ஆளுநர் நிறைவு செய்வார் என நம்புகிறோம்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி

Added : செப் 10, 2018 04:38

சென்னை : அரசு ஊழியர்கள், வீடு கட்டுவதற்காக வாங்கிய முன்பணத்தை, அரசுக்கு மொத்தமாக திருப்பி செலுத்த வசதியாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், சொந்தமாக வீடு கட்ட, வங்கிகளில் கடன் பெறுவதற்கு பதில், அரசே குறிப்பிட்ட தொகையை, முன்பணமாக வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, 40 லட்சம் ரூபாய் வரை, முன்பணமாக பெற முடியும். இத்தொகை, மாத தவணையாக, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படும். இதற்கு, குறைந்த பட்ச வட்டியும் விதிக்கப் படும்.

தவணை காலம் முடிவதற்குள், அசல் தொகையை, மொத்தமாக செலுத்த விரும்பும், அரசு ஊழியர்களுக்கு, சரியான விதிமுறைகள் இல்லை. அசல் தொகையை, மொத்தமாக செலுத்த தேவையான நிதி ஆதாரம் பற்றி, அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, புதிய விதிமுறைகளை, அரசு பிறப்பித்துள்ளது.

 வீட்டுக்கடன் முன் பணத்தை, முன்னதா கவே திருப்பி செலுத்த விரும்புவோர், அதற்கான நிதி, எவ்வழியில் திரட்டப்பட்டது என்பதற் கான ஆதாரத்துடன், தங்கள் துறையின் மேலதிகாரிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்

 இந்த விண்ணப்பம், அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, அந்த மேலதிகாரி ஆராய வேண்டும்

 துறை மேலதிகாரியின் அனுமதிக்கு பின், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், அசல் தொகையை, எந்த அதிகாரியிடம் செலுத்த வேண்டுமோ, அவரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 அப்போது, துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ள விபரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும், தலைமை கணக்காயருக்கும் தெரிவிக்க வேண்டும். இதன் பிறகே, பணத்தை செலுத்த முடியும்

 பணத்தை செலுத்தியதும், அதுகுறித்த ஆவணங்களை, தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 'பந்த்' பஸ், ரயில், ஆட்டோ ஓடுமா

Added : செப் 10, 2018 03:56

புதுடில்லி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று 'பந்த்' அறிவிக்கப்பட்டு இருப்பதால் பஸ், ஆட்டோ போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை எகிறி வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் 30ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.40 ஆக இருந்தது. நேற்று 83.22 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று 'பந்த்' நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 3:00 வரை 'பந்த்' நடக்கிறது. அதன்பின் 4:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் மட்டும் 5:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இக்கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் பஸ் மற்றும் ஆட்டோக்களை ஓட்ட முடிவு செய்து உள்ளனர். தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஐ.என்.டி.யு.சி., - தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., போன்ற தொழிற்சங்கத்தினர் பஸ் மற்றும் ஆட்டோக்களை இயக்குவது இல்லை என முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் இன்று குறைந்த அளவே பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி.,க்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டாய கடையடைப்புக்கு மிரட்டல் விடுப்போர் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்

Added : செப் 10, 2018 01:09




மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நவீனமாகும் பஸ் ஸ்டாண்ட் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.

கடைகளை காலி செய்ய நோட்டீஸ் : ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி இடத்தில் கடைகள், விடுதி, டூவீலர் பார்க்கிங் செயல்படுகின்றன. இவற்றை காலி செய்தால் தான் பணிகளை துவக்க முடியும். அதற்கு ஏற்ப வரிபாக்கிகளை செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காலி செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.

டூரிஸ்ட் பிளாசா : இங்கு தற்போதுள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டில் சுற்றுலா பணிகளுக்கான தகவல்கள், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய 'சுற்றுலா பிளாசா' அமைகிறது. 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து மீனாட்சி கோயிலுக்கு பேட்டரி கார்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து மதுரையிலுள்ள பாரம்பரிய சின்னங்கள் பொலிவுப்படுத்தப்படவுள்ளன.

விரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், '' சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம்

Added : செப் 09, 2018 23:55


ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னிதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் செப். 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.அன்று காலை 10:30 மணிக்குமேல் 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து தினமும் காலையில் மண்டபம் புறப்படுதலும், இரவு திருவீதி புறப்பாடும் நடக்கிறது. செப்.17 இரவு தங்ககருடசேவையும், செப். 19 பெரியபெருமாள் சயனசேவையும், செப்.21 அன்று செப்புதேரோட்டமும், செப்.26 பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


பாலியல் சலுகை கேட்பதும் லஞ்சம் தான்ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

dinamalar 10.09.2018

புதுடில்லி: பணியை முடிப்பதற்காக, பாலியல் சலுகை கேட்பதையும் லஞ்சமாகவே கருதும் வகையில், புதிய சட்டம்நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.





அரசு ஊழியர்கள், லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்சத் தடுப்புச் சட்டம், 1988ல் அமலுக்கு வந்தது. தனியார் நிறுவனங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், 2013ல், திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பணம் மற்றும் பிற சலுகைகள் பெறுவதே, லஞ்சம் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணம் மற்றும் பிற சலுகைகள் என்ற வார்த்தைக்கு மாற்றாக, மட்டு மிஞ்சிய சலுகை என்று மாற்ற லாம் என, சட்டக் கமிஷன், 2015ல் பரிந்துரை செய்தது. அதாவது, சட்டப்பூர்வமான சம்பளத்தைத் தவிர, பிற வழிகளில் கிடைக்கும்

பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் லஞ்சம் என்ற பொருளின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, பணம் மற்றும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களுடன், பிற வகைகளில் கிடைக்கும் சலுகை உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது. பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது. சட்டக் கமிஷன் பரிந்துரை குறித்து, பார்லிமென்ட் குழு பரிசீலனை செய்தது. சில கூடுதல் விதிகளுடன், லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில், இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, பாலியல் சலுகை கேட்பது, கிளப்களில் உறுப்பினராக சேர்ப்பது, தன் குடும்பத்தார் அல்லது நண்பர்களுக்கு வேலை கேட்பது, கடன்களை அடைக்கச் சொல்வது உள்ளிட்டவையும் குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, இந்தச் சலுகைகளை லஞ்சமாக அளிப்பவர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு முன் இருந்த சட்டத்தில், லஞ்சம் கொடுப்பவருக்கு சிறை தண்டனை விதிப்பது சேர்க்கப்படவில்லை.

கொடுத்தாலும் குற்றம்! :

இந்த சட்டத் திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: பணமாக பெறுவதை தவிர்த்து, அதிகாரிகள், பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில், 'மட்டுமிஞ்சிய சலுகை' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகள், இலவசங்கள் பெறுவது, வெளிநாட்டு சுற்றுலா பயணம், விமான டிக்கெட் பெறுவது, ஓட்டலில் தங்குவது என, எந்தச் சலுகை பெற்றாலும் அதுவும் லஞ்சமாகவே கருதப்படும். கடனை அடைக்கச் சொல்வது, நிலம் அல்லது வீடு என, எதுவாக இருந்தாலும், அது லஞ்சமாகும். மிகக் குறிப்பாக, பாலியல் சலுகை கேட்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதனால், பாலியல் சலுகை கேட்பது என்ற வார்த்தை, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும்



எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சென்னையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், ஆட்டோ, வேன்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: செப்டம்பர் 10, 2018 05:46 AM
சென்னை,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வணிகர் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது.

தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படாது.

லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பணிக்கு வரும் தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழங்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கின்றனர்.

மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.

பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படாமல் இருந்தால் பள்ளிகளுக்கு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை அழைத்துவர தனியார் வாகனங்களை தான் ஏற்பாடு செய்துள்ளன. எனவே தனியார் வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர முடியாத நிலை ஏற்படும்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தேர்வு காலம் இல்லாமல் மற்ற நாட்களில் முழு அடைப்பு போராட்டம் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விடுமுறை எடுக்க சொல்லி விடுவோம். ஆனால் காலாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி எங்களை அரசியல் கட்சிகள் தவிக்கவிட்டு இருக்கிறது’ என்றனர்.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம்: ‘கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம்’



ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் நினைத்தால் 1½ மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 10, 2018 05:40 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை நேற்று கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இதுகுறித்து, தமிழக முன்னாள் தலைமை குற்றவியல் வக்கீல் பி.குமரேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்ப உள்ளனர்.

முன்பெல்லாம் இதுபோன்ற தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்போது, அந்த தீர்மான நகலை கவர்னர் மாளிகைக்கு தலைமைச் செயலாளர் நேரடியாக எடுத்துச் சென்று வழங்குவார். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், ஒரு நொடியில் இ-மெயில் மூலம் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க முடியும்.

தமிழக அமைச்சரவையில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதே நேரம், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை அப்படியே கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம்.

தமிழக அரசு விளக்கம் அளித்த பிறகு, அதை ஏற்றுக்கொள்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம். இவர்கள் அனைவரும் நீண்ட காலம் சிறையில் இருப்பதனால், இவர்களை உண்மையிலேயே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், இந்த விடுதலை நடவடிக்கை அனைத்தையும் 1½ மணி நேரத்தில் முடித்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.

இழுத்தடிக்க விரும்பினால், அவரது (கவர்னர்) விருப்பப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை



சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 10, 2018 06:00 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதி களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் பாண்டியராஜன் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருப்பதால், அவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மாலை 4 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஸ்ரீதரன் என்கிற முருகன், சுதந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் பேரறிவாளனின் மனுவை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 பேரும் முன் விடுதலை மனுக்களை கவர்னர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களையும் சேர்த்து 7 பேரையும் முன் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்படி சட்டப்பிரிவின் படி கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 7 பேரை விடுவிக்கும் முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளதா?

பதில்:- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

கேள்வி:- சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க 161-வது சட்டப்பிரிவு உதவும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- சி.பி.ஐ. விசாரணை, கைது என்பதெல்லாம் முடிந்த கதை. நமக்கு தற்போதைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே முக்கியம். நீதியின் உயரிய கோட்பாடு சுப்ரீம் கோர்ட்டுதான். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறது. தீர்ப்பும் இதை தெளிவாக கூறுகிறது. உச்சபட்ச தீர்ப்பே கிடைத்திருக்கும்போது வேறு என்ன வேண்டும்?

கேள்வி:- இந்த பரிந்துரை எப்போது கவர்னருக்கு வழங்கப்பட இருக்கிறது?

பதில்:- அமைச்சரவை கூட்டம் விடுமுறை தினத்தில் கூட்டப்பட்டு உள்ளது என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த பரிந்துரை உடனடியாக கவர்னரிடம் வழங்கப்படும்.

கேள்வி:- மத்திய அரசின் ஆலோசனையை கேட்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா?

பதில்:- இதில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி உள்ளது. அமைச்சரவையின் முடிவை கவர்னர் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். எனவே இந்த முடிவை அவர் ஒத்துக்கொள்வார்.

மாநில அரசின் அதிகாரம் தெளிவாக உள்ள நிலையில் கவர்னர் இந்த பரிந்துரையை நிச்சயம் ஏற்பார். இதை அவர் மறுக்க முடியாது. மாநில அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய பொறுப்பாளர் கவர்னர்தான். எனவே அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அவரது முக்கிய கடமை ஆகும்.

கேள்வி:- தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்வாரா?

பதில்:- அப்படி வாய்ப்பு இல்லை. அவர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 2016-ம் ஆண்டு இதேபோல் மீண்டும் ஒரு முயற்சி மேற்கொண்டார். எனவே மக்கள் கோரிக்கையான இந்த பரிந்துரையை அன்றைக்கே மத்திய அரசு ஏற்று இருக்கவேண்டும். எனவே மக்கள் விரும்பும்படியும், ஜெயலலிதாவின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Sunday, September 9, 2018

Education

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் டாக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரை அடுத்துள்ளது உத்தனப்பள்ளி என்னும் குக்கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சமீபகாலமாக பெரும் மரியாதையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் ‘டாக்டர் சாரு’. யார் அந்த டாக்டர் சாரு? அவருக்கும் இந்த கிராமத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அங்கு வியப்பே மேலிடுகிறது.

மரியாதைக்குரிய அந்த டாக்டர் சாரின் பெயர் 24வயது நிரம்பிய கலையரசன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி அடுத்துள்ளகோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டி லட்சுமியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தவர். உத்தனப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்ற கலையரசனுக்கு, தினமும் அங்கு கிடைத்த மதிய உணவுமட்டுமே பசியை போக்கியது. ஆனால் கல்வியின் மீதான பசியே அவருக்கு அதிகமாக இருந்தது. தொடக்க கல்வியை முடித்து, அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தவர், பொதுத்தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் எடுத்தார். அவரது மேல்படிப்பை தொடர அரசுப்பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் உதவிக்கரம் நீட்டினர்.

இதனால் ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில் மேல்நிலைக்கல்வியை தொடர்ந்த கலையரசன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1166 மதிப்பெண்கள் பெற்றார். கட்ஆப் 198.25 மதிப்பெண்கள் கிடைத்ததால் அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம்கிடைத்தது. திறம்பட படித்து டாக்டரான கலையரசன்,கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு திரும்பினார். லட்சம் சம்பளத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் வேலை கிடைத்தும், கலையரசன் எதையும் ஏற்கவில்லை. குக்கிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு அருகிலேயே, கிளினிக் ஒன்றை தொடங்கியவர் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறார்.

ஓய்வு கிடைக்கும் நேரத்தில், உத்தனப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். சமூக பணிக்கு அவர் துவக்கியுள்ள புதிய அத்தியாயமே அவரை, ஒட்டு மொத்த கிராமத்தையும் ‘‘டாக்டர் சாரு’’ என்று கொண்டாட வைத்திருக்கிறது.

‘‘ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு, எப்படியாவது ஆசிரியராக வேண்டும் என்பதே அதிகபட்ச லட்சியமாக இருந்தது. ஆசிரியர்கள் தான் கல்வி மட்டுமல்ல, மருத்துவமும் இந்த சமூகத்திற்கான அரிய தேவை என்று உணர வைத்தனர். ஓய்வு நேரங்களில், மனதில் கல்வெட்டாய் பதிந்து விட்ட ஆசிரியர் பணியையும் ஆத்மார்த்தமாய் செய்து வருகிறேன்’’ என்று நெகிழ்கிறார் டாக்டர் சார் கலையரசன்.

Med 2018

''தேர்வுவைக்க புத்திசாலித்தனம் தேவையா?''

''ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள். 'மனநோய் சரியாகிவிட் டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், 'மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம். பின்பு குழாயைத் திறந்துவிடுவோம். நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து, அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம்' என்றார். குழம்பிய பத்திரிகையாளர்கள், 'இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். 'மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள்' என்றார்!''

கட்டுரைகள்

கொடூர ‘அபிராமி’கள் உருவாவதற்கான காரணங்களைக் களைய வேண்டாமா?

By கார்த்திகா வாசுதேவன்  

|   Published on : 07th September 2018 02:56 PM  

தான் பெற்ற குழந்தைகளையே கொல்லக் கூடிய மனநிலை ஒரு தாய்க்கோ, தந்தைக்கோ வந்தால் அம்மாதிரியான மனநிலையை மருத்துவ மொழியில் Filicide என்கிறார்கள். 

இந்த மனநிலை உருவாக 2 விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி; அவை

1. Emotional Disconnectedness(கணவரிடத்திலும், குடும்பத்திற்குள்ளும், பெற்ற குழந்தைகளிடத்திலும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இல்லாமை),
2. சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாதிக்கப்பட்டவராகவோ (victim)அல்லது சாட்சியாகவோ(Witness) இருந்திருந்து அதனால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால் கூட மனநலப் பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம்.

அபிராமி விஷயத்தில் அந்தப் பெண் தன் கணவரை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவர் என்ற போதும் கூட கணவரை விடுத்து இன்னொரு ஆணை நாடக் காரணமாக அமைந்தது கூட உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரியாமலும், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவரிடத்தில் சரியான பதில் கிடைக்காமல் போனதாலுமாக இருக்கலாம். ஏனெனில் கணவர்களில் பெரும்பாலானோர், காதலிக்கும் போது காதலியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல்வது போல கல்யாணத்திற்குப் பிறகு முயல்வதே இல்லை. இது கணவன், மனைவி உறவுக்குள் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அத்தகைய புரிதல் வெளியில் கிடைக்கும்படியாகத் தெரிந்தால் அதை நம்பி அவர்கள் மோசம் போகும் படியாகிறது. குடும்ப அமைப்புக்குள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே க்வாலிட்டி டைம் செலவழித்தல், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு புரிதல் கணவன், மனைவி இருபாலருக்கும் அவசியம். அது இல்லாத பட்சத்தில் தான் மேற்கண்ட அவலங்கள் நேர்ந்து விடுகின்றன.

இப்படியானவர்கள் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சைக்கியாட்ரிஸ்டுகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்குமா? என்றால் அப்படி இல்லை என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி. இவரது யூ டியூப் நேர்காணலைக் காணும் போது இந்த உண்மை தெரிய வந்தது.

சைக்கியாட்ரிஸ்டுகள் பொதுவாக தங்களிடம் வரும் மனநல நோயாளிகளிடம் பிரச்னைகளைக் கேட்டு விட்டு உடனே அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுகிறார்கள். நிஜத்தில் பிரச்னைகள் மருந்துகளால் தீர்வதைக் காட்டிலும் பேசிப் பேசி மனதைக் கரைத்துத்தான் பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும். அது சைக்காலஜிஸ்டுகளின் வேலை. 1 மணி நேரமானாலும் சரி 2 மணி நேரமானாலும் சரி உளவியல் பிரச்னைகளுடன் எங்களை நாடுபவர்களை அமர வைத்து அவர்களது பிரச்னைகளுக்கான ஆணி வேரைக் கண்டடைந்து அதைக் களைய முயல வேண்டும். அப்போது தான் அவர்களை அந்தப் பிரச்னையில் இருந்து மீட்க முடியும்.

வாழ்க்கைப் பிரச்னை எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றி. இன்றைய இளைஞர், இளம்பெண்களில் 60% க்கும் அதிகமானோர் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வாழ்க்கையை ஆனந்த மயமாகவே வாழ ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த ஆனந்தம் என்பது உடனடி நிகழ்வாக நிகழ்ந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் தான் அவர்களுக்கிடையிலான பிரச்னையின் ஆழத்தை மேலும் அதிகரிக்கச் செய்து அபிராமி விவகாரம் போன்று சிலரது வாழ்வைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. உளவியல் கவுன்சிலிங் என்பது மிக நிதானமானதொரு நடைமுறை. அதற்கு பொறுமையும், புரிதலும் மிக மிக அவசியமாகிறது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல அதை அணுகினால் பலன் கிடைக்காது.

உலக அளவில் ஒரு பழமொழி உண்டு. கணவன், மனைவி பந்தத்தில் 7 ஆண்டுகள் ஒரு தம்பதியால் சேர்ந்து வாழ்ந்து விட முடிகிறதென்றால் அதன் பின் அவர்களுக்குள் பிரிவென்பதே நேராது என்பதே அது. ஆனால், இதில் விதிவிலக்குகள் உண்டு. இன்றைய இந்தியாவில் இது பெரும்பாலும் தற்போது சாத்தியப்படுவது இல்லை. சிலர் வயோதிக காலத்தில் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிவதும் இந்தியாவில் நிகழத்தான் செய்கிறது. காரணம் கணவன், மனைவிக்கிடையே எந்த வயதில் வேண்டுமானாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றங்களினால் பிரிவுகள் நேர்ந்து விடுவதுண்டு. உறவுகளின் எதிர்பார்ப்பை குறிப்பாக கணவனின் எதிர்பார்ப்புகளை மனைவியும், மனைவியின் எதிர்பார்ப்பைக் கணவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை சிக்கல் தான். அதை சிடுக்கு எடுக்காமல் நெடுங்காலம் அப்படியே விடும் போது ஏமாற்றத்துடன் இருப்பவர்களுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போலாகி விடுகிறது.

சதா ஏமாற்றத்தில் உழல்பவர்கள் தாங்கள் பிறரால் தனிமைப் படுத்தப் பட்டதாக உணரத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு சுயநலமும், சுயபட்சாதாபமும், தன்னை மட்டுமே பிரதானமென்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை வந்துவிடுகிறது. அதனால் தான் அபிராமி போன்றோர் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையின்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது மாதிரியான விபரீதங்களில் ஈடுபட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள். இவர்களுக்கு விமோஷனமே இல்லை.

தங்களுடைய சுயநலங்களுக்காகத்  திட்டமிட்டு கொஞ்சமும் ஈவு, இரக்கம் இன்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது, கணவரைக் கொல்வது, காதலனைக் கொல்வது, காதலியின் மீது ஆசிட் வீசுவது, முறைகேடான காதலை நிலைக்கச் செய்வதற்காக முன்னரே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நபரின் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவனது குழந்தையைக் கடத்தி கொலை செய்வது என்று விதம் விதமான சைக்கோத்தனங்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வை தாங்களே மேலும் நரகமாக்கிக் கொள்ள இப்படியானவர்கள் தயங்குவதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம்பெண், தனது அலுவலக சக பணியாளர் ஒருவருடன் முறையற்ற உறவைத் தொடர்ந்து வந்தார். அந்த நபர் முன்பே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். அவரைத் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்திலும், தன்னையும் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளச் சொல்லி மிரட்டுவதற்காகவும் இந்தப் பெண் அவனுடைய மகனைக் கடத்தி விடுகிறாள். கடத்தியவள் தனது மிரட்டல் பலிக்காது போனதும் அச்சிறுவனை நன்கு அறிந்தவளாக அவன் மீது பாசம் காட்டியவளாக முந்தைய காலங்களில் இருந்த போதும் கூட தனது எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரம் புத்தியை மறைக்க  நெஞ்சில் ஈரமின்றி அச்சிறுவனைக் கொன்று சடலத்தை ஒரு பெரிய டிராவல் சூட்கேஸில் வைத்து மூடி பேருந்து நிலையத்தில் அநாதரவாக விட்டுச் சென்று விட்டாள். சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்  தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கொலைக்கான காரணம் முறைகேடான உறவால் கிட்டிய ஏமாற்றம் என்று தெரிய வருகிறது.

அந்தப் பெண் பூங்கொடி புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கிருந்த பெண் கைதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளானதாக அப்போதைய நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இன்று இந்த அபிராமிக்கும் கூட இந்தக் கதி நேரலாம்.

அபிராமிக்குத் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பு வளர்த்துக் கொண்டு ஏமாந்திருக்கலாம். அது அவளுக்கும், அவளது கணவருக்குமிடையிலான பிரச்னை. ஆனால், இங்கு பழி, பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் இரண்டு பெற்ற தாயாலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தான் வேதனையிலும் வேதனை. அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்பது தான் புரியாத புதிர்?! அபிராமி தன் கடமைகளில் இருந்து விடுபட நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு கொலை தான் தீர்வு என்று முடிவு செய்தது அவளது வக்கிர மனதைக் காட்டுவதோடு அவளை சமூகத்தின் முன் இரக்கமற்ற அரக்கியாகவும் ஆக்கியிருக்கிறது.

இப்போது அரசும், சட்டங்களும் என்ன செய்ய வேண்டும்? அபிராமிகள் உருவாகாமல் இருக்க காரணங்களைத் தேடிக் களைய வேண்டுமா? அல்லது அபிராமிகள் மாதிரியான அம்மாக்களைத் தேடிக் கண்டடைந்து  அவர்களது குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமா?  நாட்டின் தீர்க்க முடியாத பல பிரச்னைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...