Thursday, December 12, 2024

தொடர் மழை; 19 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


தொடர் மழை; 19 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


UPDATED : டிச 12, 2024 07:26 AM

சென்னை: தொடர் மழை காரணமாக, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 19 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச., 12) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.

இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விபரம் பின்வருமாறு;

1. சென்னை,

2. விழுப்புரம்,

3. மயிலாடுதுறை,

4. தஞ்சாவூர்,

5. புதுக்கோட்டை,

6. கடலூர்,

7. திண்டுக்கல்,

8. ராமநாதபுரம்,

9. காஞ்சிபுரம்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...