Sunday, January 25, 2015

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!


தினமும், தங்களை மட்டுமே நம்பி பயணிக்க வரும் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் கொண்டு செல்வது தான் ஓட்டுநர்களின் ஒரே எண்ணம். ஒரு நாள் கோயம்பேட்டில் இருந்து பெங்களுரு செல்லும் பேருந்தில் ஏறினேன் ,பஸ் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனர் தீவிரமாக தனக்கு முன்பு இருந்த சாமி படங்களை வேண்டி கொண்டிருந்தார். பெங்களுருவில் இறங்குவதற்கு முன் அவரிடம், 'வண்டி எடுப்பதற்கு முன்னாடி அவ்வளவு நேரம் ஏன் சாமி கும்பிட்டுகிட்டு இருந்தீங்க?' என்று கேட்டேன் .அவர் சிரித்தபடி "நமக்கு எந்நாளும் சரி, 'நம்மள நம்பி வர இத்தனை உயிரையும் ஒரு கீறல் கூட விழாம கொண்டுபோய்விடணும் முருகா'ன்னுதான் எப்பவும் வேண்டிப்பேன்" என்றார். அது அவ்வளவும் உண்மை.

கடந்த 22-ம் தேதி (22-01-2014) , மறைமலை நகரில் இருந்து பொறியாளர்களை ஏற்றிக் கொண்டு தரமணியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் நோக்கி சென்று பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார் ஆனந்தன்(31). அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட, வலி சிறிது அதிகம் ஆனதுமே பேருந்தை இரும்புலியூரில் சாலை ஓரம் நிறுத்தி விட்டார். அது குளிர்சாதன பேருந்து என்பதால் பின்னால் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு எதுவும் தெரியவில்லை .சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஒரு நபர் ஆனந்தன் உயிருக்கு போராடுவதை அந்த பஸ்சில் அமர்ந்திருந்த ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அங்கு இருந்த போக்குவரத்து காவல்துறையினர் வேறு ஓட்டுனர் முலம் பேருந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆனந்தன் மருத்துவமனைக்கு செலும் வழியில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த ஆனந்தனுக்கு, மனைவியும், 9 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.





இந்த சம்பவத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆனந்தன் பேருந்தை நிறுத்திய இடத்தில் இருந்து வெறும் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில்தான் மருத்துவமனை அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி ஆனந்தன் பேருந்தை மிக கவனமாக சாலை ஓரம் நிறுத்தியதால் தான் அதில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இல்லாமல் உயிர் தப்பி இருகின்றனர் .

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில் "சம்பவம் நடந்த இடமான இரும்புலியூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் .ஒரு வேளை ஆனந்தன் அந்த பேருந்தை நடுவழியில் நிறுத்தி இருந்தாலும் சரி, இல்லை வலியைப் பொறுத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டி இருந்தாலும் சரி கண்டிப்பாக அங்கு ஒரு மிகப்பெரிய விபத்து நடந்து இருக்கும். அவர் அந்த பேருந்தை சாலை ஓரம் கொண்டு வந்து நிறுத்தியதன் மூலம் ஒரு மிக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது " என்று கூறினர் .

இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் இதை விபத்தாக பதிவு செய்யமுடியாது. அதனால் ஆனந்தனின் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வாய்ப்பில்லை

"ஆனந்தனை எனக்கு ஐந்து வருடங்களாக தெரியும். நான் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் பஸ் ஓட்டி கொண்டிருக்கிறார். இது வரை அவர் மீது எந்த புகாரும் வந்ததில்லை, வயதில் மிக சிறியவராகஇருந்தாலும், வேலையில் பொறுப்பானவர். இந்த சம்பவம் நடந்த பிறகு அலுவலகம் முழுவதும் ஆனந்தனின் பெயர் தான் ஒலித்து கொண்டிருகிறது. அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு சென்ற பொழுது, தன்னுடைய அப்பா இறந்து விட்டார் என்று என்று புரியாமல் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் முகம் தான் நெஞ்சில் இன்னும் நிற்கிறது. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து அவரின் குடும்பத்திற்கு உதவி செய்ய தீவிரமாக முயன்று வருகிறோம்" என்று அவரின் பேருந்தில் தினமும் பயணம் செய்யும் ஊழியரான அஷ்வின் கூறினர்.

ஆனந்தன் சிறிது முயற்சி செய்திருந்தால் கூட அருகில் இருந்த மருத்துவமனைக்கு பஸ்சை ஓட்டி சென்று இருந்திருக்கலாம். ஆனால் தன்னை நம்பி அமர்ந்திருக்கும் நபர்களை எண்ணியதால்தான் பேருந்தை சாலை ஓரம் பத்திரமாக நிறுத்தி உள்ளார்.

அனந்தன் மட்டுமல்ல, இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர் மனோகர் (48), தனக்கு மார்பில் வலி ஏற்படுகிறது என்று தெரிந்ததும் ரயிலை மெயின் லைனில் இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட்டு, அவர் இருக்கையிலே இறந்து போனார். தங்களுக்கு என்று ஒரு குழந்தை, மனைவி, அப்பா, அம்மா என்று ஒரு உலகம் இருந்தாலும். அந்த ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பிறகு, அவர்களை நம்பி வந்திருக்கும் பயணிகள் தான் உலகம் என்ற கடமை உணர்வினால் தான் பல இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களைப் பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர் .

அந்த நிறுவன ஊழியர் சொன்னது போல ஆனந்தன் ஒரு ஹீரோ இல்லை. அவர் அப்போது அந்த வழியாய் சென்று கொண்டிருந்த அனைவரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தேவதூதர்!

உயிர்போகும் நிலையிலும் பயணிகளைக் காக்க வேண்டும் என்று நினைத்த, டிரைவர் ஆனந்தனுக்கு சல்யூட்!
 - கு.நெல்சன் மேத்தியூஸ் மதுரம் (விகடன் மாணவப் பத்திரிகையாளர்)

கசகசா... உஷார், உஷார்!



கசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.



காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆறுச்சாமி

Dalit Attacked for Filing RTI on Pvt College

The New Indian Express
MADURAI: A Dalit, who sought details, through an RTI, of the land tax and property tax paid by a private college that came under the jurisdiction of the local panchayat, was attacked by an unidentified gang on Friday. His family members too were not spared.

‘Evidence’, a Madurai-based NGO that advocates the rights of the Dalits claimed that the information sought could reveal alleged tax evasion by the concerned college and alleged that the attack was perpetrated by the family that owned the institution.

The NGO, which deputed a fact-finding team to investigate the attack on the Dalit and his family, said that police are yet to an FIR in the case.

According to the NGO, M Meganathan is a resident of Veerapatti village in the Iluppur taluk of Pudukkottai district. Last month, he filed an RTI application demanding details of the land taxes and property taxes paid by a private college in the locality following which he began receiving threats. Despite repeated ultimatums and warnings, the 30-year-old man stood his ground.

On Friday morning, a weapon-wielding gang reached his house and assaulted him and his family members. The attack led to injuries being sustained by himself, his father Mayazhagu (56), and other relatives including Sureshkumar (31) and Rangasamy. They are currently getting treatment at Pudukkottai government hospital, where they managed to file a Medical Lego Case (MLC) after a long struggle, said the NGO report.

Moreover, Annavasal police who controls Veerapatti village were yet to file FIR, and it is alleged that the police are hand-in-glove with the attackers.

Why NTRUHS plans to conduct online PGMET 2015 ?

Latest News
You may be aware about the online entrance test for PG Medical Course (PGMET 2015) by Dr. NTR University of Health Sciences (NTRUHS). The authorities of Dr. NTR University of Health Sciences in Andhra Pradesh are planning to provide admission to post graduate courses in medicine (Medical PG) through online entrance test in the states of Andhra Pradesh and Telangana from 2015.

 The aim to introduce this new reform is to get away with the loopholes of pen and paper exam pattern which provides the scope for exam paper leakage and mass copying, causing troubles in the PG Medical admissions. The permission has been given to the university’s proposal to conduct online entrance test for PG Medical admissions in Andhra Pradesh and Telangana by the Andhra Pradesh Medical and Health department. “Learning from our experiences last year, we don’t take any chances this year. The government has given permission to conduct online test. With this we can put a check on the loopholes and bring in more transparency and accountability in the conduct of admission test,” said an official to Pharmabiz at the NTR Health University. 

 The demand for Post graduate Medical course is increasing rapidly in Andhra Pradesh and Telangana and the seats available are limited in both the states. There are about 2200 PG medical seats for which 18000 MBBS students from both the states are competing. Considering this as an advantage gangs and fraudsters mislead the students and indulge in various illegal methods.

 Last year, the PG Medical entrance exam in the state was cancelled by the AP government and re-exam was conducted as it witnessed a big controversy due to leakage of exam paper. The issue came to light when a few failed MBBS students got top ranks in the Medical PG test. With this trouble the admission to PG course was delayed in both the states.

1983 உலகக் கோப்பை: "நடக்கக் கூடாதது" நடந்துவிட்டது

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த கபில் தேவை பாராட்டும் ரசிகர்கள்

இனி இதுபோல நடக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார் கிளைவ் லாயிட்ஸ். ஆனால் அது மீண்டும் நடந்தது. ஒரு முறை அல்ல. இரு முறை. அதிலும் அந்த இரண்டாவது முறை நடந்ததை லாயிட்ஸால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கி மூன்றாவது தொடரிலேயே இந்தியா இந்தச் சாதனையைப் புரிந்தது. அந்தச் சாதனைதான் உலகின் மிகச் சிறந்த அணியாக அன்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேதனையாக மாறியது.

இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்தியாவை மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலும் யாருக்கும் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சொல்லப்போனால் அணியினருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. தன்னம்பிக்கையோடு முன்னணியில் நின்று தலைமை ஏற்ற கபில்தேவும்கூட இதைக் கற்பனை செய்திருப்பார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த அதிசயம் நடந்தது. உலகமே இந்தியாவை வியப்புடன் பார்த்தது. இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் நிரந்தரமாக மாற்றிய திருப்பமாக அது அமைந்துவிட்டது.

அரங்கேறிய அதிசயங்கள்

லாயிட்ஸின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு வருவோம். உலகக் கோப்பை தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, மே.இ. தீவுகளை எதிர்த்து ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் ஆடியது. 1983-ம் ஆண்டின் தொடக்கத்தில் மே.இ. தீவுகளில் நடந்த அந்தத் தொடரில் ஒரு போட்டியின் முடிவில்தான் லாயிட்ஸ் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் (மார்ச் 29) இந்தியா வெற்றிபெற்றது. மே.இ. தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றி அது. அந்தத் தோல்வி மே.இ. தீவுகள் அணிக்குக் கடும் அதிர்ச்சியையும் ரோஷத்தையும் ஏற்படுத்தியது. அதனால்தான் அணித் தலைவர் லாயிட்ஸ் “இனி ஒருபோதும் இப்படி நடக்கக் கூடாது” என்று தன் அணியினரை எச்சரித்தார்.

அப்படி ரோஷம் வருமளவுக்கு அது வலுவான அணியாக இருந்தது. கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், லாயிட்ஸ் போன்ற அபாரமான மட்டையாளர்கள்; மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள், லாரி கோம்ஸ் என்னும் ஆல் ரவுண்டர், மட்டையாட்டத்திலும் சிறந்து விளங்கிய ஜெஃப் துஜோன் என்னும் விக்கெட் காப்பாளர் ஆகியோரைக் கொண்ட அந்த அணி உலகின் எந்த அணிக்கும் சவாலாக விளங்கிய காலம் அது. அந்த அணியை இந்தியா அதன் மண்ணிலேயே வீழ்த்தினால் ரோஷம் வராதா?

ஆனால் தோற்கக் கூடாது என்னும் எச்சரிக்கை பலிக்கவில்லை. அதே ஆண்டில் மேலும் இரண்டு முறை அதே இந்திய அணியிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. அதில் ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக அமைந்துவிட்டது.

இது வேறு அணி

கடந்த இரு போட்டிகளைப் போல அல்லாமல் இந்த முறை இந்தியா ஒப்பீட்டளவில் வலிமையான அணியாக இருந்தது. கபில் தேவின் தலைமையில் புதிய வேகம் பெற்றிருந்தது.

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிய சுனில் கவாஸ்கர் சுதாரித்துக்கொண்டு ஒரு நாள் போட்டிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருந்தார். கவாஸ்கருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் போட்டியையே ஒரு நாள் போட்டிபோல ஆடுபவர்.

இடை நிலையில் மொஹீந்தர் அமர்நாத், யாஷ்பால் ஷர்மா ஆகிய அருமையான மட்டையாளர்களுடன் சந்தீப் பாட்டீல் என்னும் அதிரடி இளம் ஆட்டக்காரரும் இருந்தார். இவர்களை அடுத்து அதிரடிக்குப் பேர்போன கபிலும் நேர்த்தியாக மட்டையைச் சுழற்றக்கூடிய விக்கெட் காப்பாளர் சையது கிர்மானியும் இருந்தார்கள்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை கபில் தேவ் உலகத் தரமான வீச்சாளர். பல்வீந்தர் சிங் சந்து, ரோஜர் பின்னி, மதன்லால் போன்றவர்கள் வேகத்தில் பின்தங்கினாலும் ஸ்விங் பௌலிங்கில் தேர்ந்தவர்கள். பந்தை வீசும் அளவிலும் வரிசையிலும் கட்டுக்கோப்புக் கொண்டவர்கள். இங்கிலாந்து ஆடுகளங்கள் இவர்களது பந்து வீச்சுக்கு உறுதுணையாக இருந்தன.

போதாக்குறைக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் பந்து வீசும் அமர்நாத்தும் திறமையான சுழல் பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்கள். மேற்கிந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு இணையான பந்து வீச்சாக இல்லை என்றாலும் அலட்சியப்படுத்த முடியாத வலிமை கொண்டதாகவே இந்தியப் பந்து வீச்சு இருந்தது.

என்றாலும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று யாரும் இதைச் சொல்லவில்லை. காரணம், மே.இ. தீவுகள் தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்தன. இந்த அணிகளைத் தாண்டி அரை இறுதியை எட்டுவதே கஷ்டம் என்னும் நிலை இருந்தது. இந்த எண்ணத்தைத் தகர்த்து கோப்பையைக் கைப்பற்றி உலகை வாயடைக்கவைத்தது இந்தியா.

இந்தச் சாதனைக்கு மொத்த அணியினரும் காரணம் என்றாலும் கபில் தேவுக்கு அந்தப் பெருமையைக் கூடுதலாக வழங்க வேண்டும். முன்னுதாரணமாக விளங்கும்தலைமைப் பண்பு, எத்தகைய நிலையிலும் மனம் தளராத உறுதி, பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம், தடுப்பு வியூகத்தில் காட்டிய மதிநுட்பம், சிறப்பான பந்துவீச்சாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டையாலும் பங்களித்த விதம் ஆகியவற்றால் அந்த வெற்றியின் ஆணி வேர் என்று கபில் தேவைச் சொல்லலாம்.

கடந்து வந்த பாதை

ஒரு பிரிவில் இருந்த நான்கு அணிகளும் ஒவ்வொன்றையும் எதிர்த்து இரு முறை விளையாடும். இதில் எடுத்த எடுப்பில் இந்தியா உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இரண்டு அணிகளுக்கும் அதுதான் முதல் போட்டி. முதலில் ஆடிய இந்தியா யாஷ்பால் (89), பாட்டீல் (36), பின்னி (27) ஆகியோரின் மட்டையாட்டத்தால் 262 ரன்களைக் குவித்தது. ஆகச் சிறந்த வேகப் பந்து வீச்சை எதிர்த்து முதல் போட்டியிலேயே இந்தியா இத்தனை ரன்கள் அடித்தது.

ஆனால் மேற்கிந்திய அணியின் மட்டை வலுவுக்கு இது பிரமாதமான இலக்கு அல்ல. எனினும் இந்தியாவின் சிக்கனமான பந்து வீச்சும் பின்னி, சாஸ்திரியின் திறமையான வீச்சும் (இருவருக்கும் தலா 3 விக்கெட்) சேர்ந்து எதிரணியை 54.1 ஓவர்களில் 228 ரன்களுக்குச் சுருட்டின. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் சொன்னாரோ அது நடந்துவிட்டது.

இதைக் கெட்ட கனவாக நினைத்து மறக்கவே மேற்கிந்திய அணி நினைத்திருக்கும். அதற்கேற்ப அடுத்த ஐந்து போட்டிகளிலும் அது வென்றது. அடுத்து வந்த அரை இறுதியையும் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவிடம் தோற்றது. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் எச்சரித்தாரோ அது மீண்டும் ஒரு முறை நடந்தது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

5 ரூபாய்க்கு சென்னை சிறுவன் விற்பனை? விசாரணையை துவங்கியது மத்திய அரசு

Dinamalar 25.01.2015

சென்னை: 'க்விக்கர்.காம்' இணைய தளத்தில், 'சென்னை சிறுவன் விற்பனைக்கு...' என, விளம்பரம் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விளம்பரத்தை வெளியிட அனுமதித்த, இணையதள நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

விளம்பரம்:

'சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, ராகுல் என்ற சிறுவன், 5 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளான். தொடர்புக்கு - ஹமீதியா காம்பளக்ஸ், திருவல்லிக்கேணி' என்ற வாசகங்கள் இடம் பெற்ற விளம்பரம், கடந்த டிசம்பரில், 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு கண்காணிப்பகம், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்தது. 'இப்புகார் மீது, விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை அறிக்கையை, 10 நாட்களுக்குள் தர வேண்டும்' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையை, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், ஜன., 14ம் தேதி கேட்டுக் கொண்டது. உடனே மத்திய அரசு, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளதோடு, விளம்பரம் கொடுத்தவரை பிடிக்கும்படி, தமிழக போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, 'க்விக்கர்.காம்' இணையதள நிர்வாகத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாதவர் கூறுகையில், 'தினமும் பல ஆயிரம் பேர், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து, 'க்விக்கர்.காம்' இணையதளத்தில் விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்களை, சரிபார்க்க போதிய ஆட்கள் இல்லை. விளம்பரம் செய்தவரின் விவரமும் இல்லை' என்றார்.

இணையதளத்தின் இந்த பதிலை, குழந்தை உரிமை ஆர்வலர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

முகவரி:

ஊடகங்களில் விளம்பரம் செய்வோர், தங்கள் முகவரியை அளிக்க வேண்டும். எப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிடலாம் என்ற, கட்டுப்பாடும், ஊடகங்களுக்கு உண்டு. இணையத்தில், ஒரு தகவலை வெளியிடுகிறோம் என்றால், அதை யார், எங்கிருந்து, எந்த உபகரணம் மூலம் வெளியிட்டார் என்பதை கண்டறிய முடியும். 'க்விக்கர்.காம்' இணையதளத்தில், சிறுவன் விற்பனைக்கு என்ற, விளம்பரத்தை வெளியிட்டவர் பற்றிய, விவரத்தை சேகரிப்பது கடினமான ஒன்று அல்ல. எனவே சம்பந்தப்பட்டவரை, பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'க்விக்கர்.காம்' செய்வது என்ன?

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் தளமாக, 'க்விக்கர்.காம்' இணையம் உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்த பின், தாங்கள் விரும்பும் பொருட்களை, விற்பனை செய்ய, விளம்பரங்கள் செய்யலாம். விளம்பரம் செய்யும் பொருளின் புகைப்படம், அதன் பயன்பாடு, விலை ஆகியவற்றை பொருளின் சொந்தக்காரரே முடிவு செய்யலாம். இதன் மூலம், பயன்படுத்திய பொருட்களை, விற்பனை செய்வது எளிது என, 'க்விக்கர்.காம்' இணையதளமும், விளம்பரம் செய்து வருகிறது.

NEWS TODAY 2.5.2024