Monday, February 2, 2015

சீருடையுடன் 'மது போதை': பள்ளி மாணவர் நீக்கமும் நிஜத்தில் 'மயங்கி'யவர்களும்!

Return to frontpage

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன.27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது வெறும் 'சிங்கிள் காலம்' செய்தி அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டதைச் சொல்லும் செய்தி.

அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட, போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால், அவரால் எழ முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் நேற்று நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியபோது, "மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்" என்றார்.

இந்த நடவடிக்கை சரிதானா?

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சரியானதுதானா? மாணவனுக்கு தண்டனை அளிப்பது நியாயமா? என்பது இங்கே விவாதத்துக்குரியது.

மாணவர்கள் இனி இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், ஒட்டுமொத்த மாணவ சமூகமும் திருந்த வேண்டும், கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே மாணவனுக்கு இந்தத் தண்டனையை அளித்திருப்பது பொருத்தமற்றது.

16 வயது மாணவர் ஒருவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுத் தந்தவர் யார்? எங்கிருந்து அந்த மது கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? அந்த மதுவை மாணவனுக்கு வழங்கியது யார்? மது வாங்கிய இடம் எதற்கு அருகில் இருந்தது? மது விற்பனைக்கான அங்கீகாரத்தை வழங்கியது யார்? மது வாங்குவதற்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில், அதில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த மாணவனை மது அருந்தத் தூண்டிய குற்றவாளிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த மாணவர் திமிரெடுத்து தவறு செய்ததற்கு அரசாங்கத்தையும், டாஸ்மாக்கையும், சூழலையும் எப்படி குறை சொல்ல முடியும்? மாணவர்கள்தான் இந்தச் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள் என்று ஆவேசத்துடன் கவுன்டர் கொடுக்கத் துடிக்கும் கருத்து கந்தசாமியா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்!

பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது. அப்படி என்றால், அந்த மாணவர் வழி தவறிய பாதையில் நடப்பதற்குக் காரணமாக இருந்தது யார்?

மாணவர் ''நான் தப்பான வழியில்தான் நடப்பேன். அப்போதுதான் இந்த உலகம் என்னை உற்றுக் கவனிக்கும்'' என்று நினைத்தா செயல்பட்டிருப்பார்? இல்லை ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போதையில் மயங்கி விழுந்திருப்பாரா? கொஞ்சம் நிதானமாக ரிலாக்ஸாக முடிந்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஆசுவாசமான மனநிலையில் யோசித்துப் பாருங்கள்.

பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் எங்கே இருந்து தொடங்குகிறது?

பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும் உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது பெற்றோர்களும், உறவினர்களும்தான். பலர் தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதைப் பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சில தருணங்களில் அதை சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்ட குறை, விட்ட குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது.

முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல், சமூக விரோதி, ஒழுக்கம் கெட்டவன் என்று பல்வேறு பட்டங்கள்.

இப்படிக் கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள்.

வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி சீர்குலைந்து போய்விடுகிறார்கள்.

புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை:

தமிழகத்தின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் (15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்) என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பருவம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான காலகட்டம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் நலனில் யாரும் அக்கறை காட்டுவதில்லை.

மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் அதை செய்யத் தவறிவிடுகின்றனர்.

உலக அளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் மது உள்ளிட்ட போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சம். மொத்தமாக 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா. சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருளால் சமூகம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 12 - 25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இப்படி தவறான பாதையில் மாணவர்கள் செல்லக் காரணமானவர்கள் யார்?

பெற்றோர்கள், பள்ளியின் சூழல், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்தவர், மது விற்பனைக்கு அனுமதி தந்த அரசு என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இதில் சிலரோ அல்லது பலரோ முக்கியக் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மாணவனை தண்டிப்பது ஏன்? இது குறித்து நம் வாசகர்களே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

என்ன சொல்கிறார்கள் நம் 'தி இந்து' ஆன்லைன் வாசகர்கள்?

* ''எல்லாம் சரியா போச்சா? கவுன்சலிங் கொடுத்து நல்ல பையனா மாற்ற முயற்சி செய்து இருக்க வேண்டும். முட்டாள்தனமான முடிவு'' என்கிறார் ஹெரிடேஜ் ஹெல்த் நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜேம்ஸ் ராபின்சன்.

* ''கொஞ்சம் ஓவரா போயிருச்சு... இதுக்கெல்லாம் தண்டனையா? மதுவை ஒழிக்க வழி உள்ளதா பாருங்கள். இல்லாவிட்டால் எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். பாவம் மாணவனின் கல்வி பாதிக்கக் கூடாது. சிறிய அபராதம் விதித்து மாணவனை மீண்டும் கல்வி பயில அனுமதியுங்கள்'' என்கிறார் கந்தசாமி எனும் வாசகர்.

* ''நமது குற்றவியல் நடைமுறைச்சட்டம் சொல்வது என்ன? குற்றம் செய்தவர்களை விட குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கே தண்டனை என்றுதானே சொல்கிறது. இதில் மட்டும் ஏன் எய்தவன் இருக்க அம்புக்கு ஏன் தண்டனை?'' என்று கேள்வி எழுப்புகிறார் தங்கவேல் சாமி.

* ''பள்ளி மாணவனுக்கு சாராயம் விற்ற சாராயக்கடை விற்பனையாளரான அந்த தெய்வத்திற்கு பணி உயர்வு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தவறு நடந்த இடத்தை நய்யாண்டியுடன் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறார் மகேந்திரன் ராமசாமி.

* ''பள்ளியை விட்டு நீக்குவதால், அந்தப் பையனை இன்னும் சமூகத்தில் இருந்து ஒதுக்கத்தான் செய்கிறோம், அவனுடைய வெட்கவுணர்வையும் பயத்தையும் ஒட்டுமொத்தமாக உடைப்பதன் மூலம் ஒன்று அவன் மிகப் புரிதல் உள்ளவனாக ஆகலாம், அல்லது ஒட்டுமொத்தமாக சமூகத்தால் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டாவதற்கான வாய்ப்புகளைத் தான் சமூகம் தயாராகக் கையில் திணிக்கின்றது! முதலில் நான் cool-ஆனப் பையன் அல்லது பெண் எனும் முட்டாள்தனமான விடயங்களிலிருந்து சிறுவர்களை வெளியில் கொண்டுவருவது மாதிரியான மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டியது முக்கியம்'' என்கிறார் ஈஸ்வர்.

* ''இந்த சம்பவத்தை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தால்தான் தமிழக பள்ளி மாணவர்களையும் ஏழை எளிய பெண்களின் மாங்கல்யத்தையும் காக்க முடியும். உயர் நீதிமன்றம் முன்வருமா?'' என்கிறார்கார்மேக பாண்டி.

* ''முட்டாள் நிர்வாகம். மாணவர் மது அருந்தியது அவனுடைய தவறு மட்டுமல்ல. அதற்கு காரணமான அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அதிக பணம் தரும் பெற்றோருக்கும் தண்டனை வேண்டும். அரசாங்கமும் திருந்தவேண்டும். மேலும் மாணவனின் நலன் இங்கு முக்கியம். அவனுக்கு மேலும் ஒரு வைப்பு தர வேண்டும். நம் நாட்டில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் மாணவர் கூட சீக்கிரம் வெளியில் வரும்போது குடித்ததற்காக பள்ளியில் இருந்து அணிப்பியது தவறு'' என்கிறார் ராமன்.

* 'அதிமுக மற்றும் திமுகவின் சாதனை' என்று ஜே.எம்.எஸ். என்ற வாசகர் குத்திக் காட்டியிருக்கிறார்.

ஆண்... இனிய இல்லத்தின் தூண். குடும்பத்தை வழிநடத்தும் ஆணிவேர். ஆணிவேர் நன்றாக இருக்கும் வரை, குடும்பமும் நன்றாக இருக்கும். ஆனால், ஆணாக தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, அவனை சிதைத்து ஒழுக்கம் கெட்டவன் என்ற முத்திரை குத்திவிட்டால் அவன் வருங்காலம் என்ன ஆகும்?

ஆசிரியர், ஐஏஎஸ், இன்ஜினீயர் என்று அவன் காணும் கனவுக்கு நாம் கொள்ளி வைத்துவிடுவது எந்த விதத்தில் ஏற்புடையது?

இப்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பண்பாட்டுக் கல்வி முறை மிகவும் அவசியம். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கோபதாபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் சிறு வயதில் இருந்தே நாம் போதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பருவத்தை அடைந்தவுடன், வாழ்க்கை முறையை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இனியாவது குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஆளுமைமிக்க மாணவர்களை வளர்த்தெடுப்போம்.

Indian Doctors Still in Demand in UK



LONDON: Visa rule changes may have seen a drop in the number of Indian doctors coming to work in the UK but the country's National Health Service (NHS) is still in need of their services.

Official statistics show a fall of nearly a third in Indian doctors working in the NHS in the past five years.

However, a large number of the 3,000 foreign doctors hired last year came from India. Other countries included Pakistan, Poland, Australia, Greece, Iraq, Syria and Sudan.

"The NHS doesn't have the number of doctors it needs. The shortage is real. We aren't training enough doctors in this country, and so we are dependent on foreign-trained doctors," Dr David Rosser, medical director of University hospitals Birmingham, told 'The Guardian'.

The NHS had turned to the Indian subcontinent during labour shortages in the 1960s and early 2000s to increase the headcount of doctors.

A permit-free system as well as some short-term two-year training visas allowed Indian doctors to apply for and successfully complete specialist or general practice training in the UK as long as they were able to secure a place based on merit.

The British Association of Physicians of Indian Origin (BAPIO) explains, "After the visa change, such training is only available to EU citizens - hence Indian doctors are unable to even apply for such posts. The attractiveness of coming to the UK for postgraduate medical training is therefore no longer there". Young doctors who are keen on training away from India are applying to work in the United States or Australia where they can apply on merit for postgraduate training".

Visa rules require employers to show they have failed to attract a recruit from the EU before an Indian medic can be brought in.

The UK's General Medical Council (GMC) found new Indian doctors registering in Britain falling from 3,640 in 2004 to 340 in 2013.

NHS figures obtained by 'The Times' show that there has been a fall from 10,265 Indian doctors in 2009 to 6,880 today.

Recruitment of doctors and nurses in the NHS is set to dominate the UK's election campaign in the lead up to the polls in May this year.

Some fresh measures will be required for Indian doctors, described as the backbone of the NHS in the past, to continue to support the service in future.

NHS England works with Health Education England (HEE) to relieve current shortages.
It is boosting the number of trainee nurses and, with the College of Emergency Medicine, has organised the arrival of the 50 foreign A&E doctors.

The proportion of British staff working in the NHS has risen slightly from 88.9 per cent to 89.1 per cent over the last five years as 9,500 more doctors and 7,800 extra nurses have joined the NHS, the Department of Health said.

"Foreign health workers make a valuable contribution to the NHS, but we have introduced language checks to ensure they can properly communicate with their patients," a spokesperson said.

ஒரே மாதிரி பாவாடை - தாவணியில் ‘கிராமத்து பெண்ணாக நடித்து அலுத்து போய்விட்டது’; நடிகை லட்சுமி மேனன் பேட்டி



ஒரே மாதிரி கிராமத்து பெண்ணாக பாவாடை- தாவணி அணிந்து நடித்து, அலுத்து போய்விட்டது ’என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்.

கிராமத்து பெண் வேடம்

‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். கொச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். படித்துக் கொண்டே சினிமாவில் நடித்து வரும் லட்சுமி மேனன், வருகிற மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்.

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சை பை, ஜிகிர்தண்டா ஆகிய தமிழ் படங்களில் லட்சுமி மேனன் நடித்து இருக்கிறார். பெரும்பாலான படங்களில், கிராமத்து பெண் வேடங்களில் அவர் நடித்து இருக்கிறார். இது பற்றி அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

அலுத்து போய் விட்டது

“எனக்கு ஒரே மாதிரியான கிராமத்து பெண்ணாக பாவாடை-தாவணி வேடம் அணிந்து நடித்து அலுத்து போய்விட்டது. இனிமேல், அது போன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன். ஒரேயடியாக சினிமாவை விட்டு நான் விலகப்போவதில்லை. கதாபாத்திரங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். மீண்டும், மீண்டும் கிராமத்து பெண் வேடங்களே என்னை தேடி வருகின்றன. பாவாடை-தாவணி அழகான உடைதான். ஆனால் எனக்கு கொடுக்கப்படுகிற உடைகள் மிகவும் மலிவாக அமைகின்றன.

எனக்கு ஜீன்ஸ்-டாப்ஸ் மற்றும் சல்வார்-கமீஸ் அணிவதற்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், சினிமாவில் எனக்கு அது போன்ற உடைகளை கொடுப்பது இல்லை. எனவே தான், இனிமேல், குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய பின் ‘பி.காம்’ படிக்க விரும்புகிறேன்.

மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசை

சினிமாவில் நடிப்பது அபூர்வமான வாய்ப்புதான். ஆனால், சினிமாவை நேசித்து நான் படங்களில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. எனக்கு வாய்ப்புகள் அதுவாகவே வந்தன. ‘கும்கி’ படத்தில் நடித்தபோது, சினிமாவில் நடிப்பது மிகவும் அபூர்வமான வாய்ப்பு என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன். ஆனால், அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது.

‘கும்கி’ படத்தைப்போலவே தொடர்ந்து கிராமிய பெண் வேடங்களே என்னை தேடி வந்தன. நான் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். இப்போதும் ஆசைப்படுகிறேன். அதற்காக தேசிய விருது பெறக்கூடிய வேடங்களில் தான் நடிப்பேன் என்று நான் சொல்லவில்லை. எனக்கு அதெல்லாம் தேவையில்லை. ‘கஜினி’ படத்தில் அசின் நடித்த மாதிரி மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பிடித்த கதாநாயகன்

எனக்கு ‘ஜிகிர்தண்டா’, வித்தியாசமான படமாக அமைந்தது. சித்தார்த் எனக்கு பிடித்த கதாநாயகன். அவர் எனக்கு பிடித்த நடிகர் என்று சொல்வதில் எந்த பயமும் இல்லை. இப்படி சொல்வதால், மற்ற கதாநாயகர்கள் கோபப்படுவார்களே என்று நான் பயப்படவில்லை. தமிழில் எனக்கு பிடித்த கதாநாயகன் சித்தார்த் தான். ஆனால், இந்திய அளவில் அமீர்கான், ரன்பீர் கபூர் ஆகிய இருவரையும் பிடிக்கும்”

இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.

Sunday, February 1, 2015

காற்றுக்கே மூச்சடைக்குதே..


Leaving the office in the morning and in the evening go home cakacampoltan almost James Bond. Parapar vehicles, throngs of men running, do not fall for the moment

காலையில் ஆபீஸ் கிளம்புவதும், மாலை வீட்டுக்குத் திரும்புவதும் கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் சாகசம்போல்தான். பரபரக்கும் வாகனங்கள், கூட்டம் கூட்டமாக ஓடும் மனிதர்கள், நேரத்துக்கு வராத பேருந்துகள் என்று ஒவ்வொரு நிமிடமும் ஆக்ஷன் ஜாக்சனாக இருக்க வேண்டிய நேரம் பீக் அவர். இதய நோயாளிகள் இதுபோன்ற பரபரப்புகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது ‘European Heart Journal’ என்ற மருத்துவ இதழ்.

‘‘குறிப்பாக, இந்த பீக் அவரின் புகை மண்டலம் இதய நோய்களை உருவாக்குவதிலும் இதய நோயால் உயிரிழப்பு ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது’’ என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான ராபர்ட் ஸ்டோரி. இதயநோயாளிகளிடம் நடைபெற்ற ஓர் ஆய்வின் முடிவாகவே இந்த செய்தியை அறிவித்திருக்கிறார். ‘நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளைக்கூட டிராபிக் அதிகமிருக்கும் நேரத்தில் தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக பீக் அவரில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல’ என்று ஐரோப்பாவின் இதயநலத்துறை அமைப்பு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளதையும், ‘இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசுத்தமான காற்று, சீரான சுவாசம் பற்றிச்சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்’என்றும் தன்னுடைய ஆய்வில் சுட்டிக்காட்டுகிறார் ராபர்ட்.

பருமன் இருந்து நீரிழிவும் இருந்தால், காற்றின் மாசு காரணமாக இதயக்கோளாறு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். உயர் ரத்த அழுத்தத்தையும் இன்சுலின் சுரப்பில் ஒழுங்கற்ற தன்மையையும் புகை உருவாக்குகிறது என்றும் பட்டியலிடுகிறார். அதனால் குழந்தைகள், வயதானவர்கள், இதயக்கோளாறு, சுவாசக்கோளாறு உள்ளவர்கள் காற்று மாசடைந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது பள்ளிக்கூடமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாக இருந்தாலும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் அறிவுறுத்தியிருக்கிறது ‘யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’!

இலவச மற்றும் திவ்ய தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 விலையில் 2லட்டும் ரூ.25 விலையில் 2 லட்டும் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.




திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதமாக தேவஸ்தானம் சார்பில் 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்துவந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.10 விலையில் 2 லட்டுகள் பெறுவதற்கான டிக்கெட் வழங்கப்படுகிறது.

மேலும் கோயிலுக்கு வெளியே கூடுதல் லட்டுகள் பெற விரும்பும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் தலா ரூ.50 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பக்தர்கள் கூடுதல் லட்டு பெற கோயிலுக்கு வெளியே இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டுகள் வாங்குவதோடு ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதனை தடுக்க தேவஸ்தானம் நாளை முதல் இலவச மற்றும் திவ்ய தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 விலையில் 2லட்டும் ரூ.25 விலையில் 2 லட்டும் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் லட்டு தேவைப்பட்டால் கோயில் வெளியே லட்டு வழங்கும் இடத்தில் ரூ.50க்கு 2 லட்டுகள் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.

இவன் மாற மாட்டான்: குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோம்?


Return to frontpage

கோப்புப் படம்: எம் பெரியசாமி

பசு மரத்து ஆணி போல் என்று நாம் சொல்வது உண்டு. அப்படிச் சொல்லக் காரணம் பசு மரத்தில் அரையப்படும் ஆணி பலமானதாக இருக்கும். எளிதில் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது. அதுபோல்தான் குழந்தைகள் மனமும். சிறிய வயதில் அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் நிச்சயமாக அவர்கள் சிந்தனைகளில், செயல்களில் பிரதிபலிக்கும்.

விதை விதைத்தால் விதை, வினை விதைத்தால் வினை. ஏற்கெனவே கார்ட்டூன் படங்களை குழந்தைகள் பார்ப்பது சரியா, தவறா என்ற சர்ச்சை நிலவி வருகிறது. பொதுவெளியில் ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். மற்றொரு புறம் கார்ட்டூன் இடைவெளியில் ஒளிபரப்பபடும் விளம்பரங்கள்.

குழந்தைகளின் நுகர்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நன்றாகத் தெரியும் கார்ட்டூன் சேனல்களே தங்கள் டார்கெட் ஆடியன்ஸ் அதிகம் பார்ப்பது என்று. எனவே தான் அத்தகைய சேனல்களில் ஒளிபரப்ப சாக்லேட், நூடுல்ஸ், ஹெல்த் டிரிங், சூயிங் கம், பென்சில், பேனா, பொம்மை என விளம்பரங்களை தயாரித்து வெளியிடுகின்றன.

அண்மையில், யதேச்சையாக சிறுவர் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அந்த விளம்பரம் சிரிக்க வைக்கவில்லை மாறாக அதிர்ச்சியடைய வைத்தது.

இதுதான் அந்த விளம்பரத்தின் கருத்துச் சுருக்கம்...

டோலு என்ற இளைஞன், தன் வயிற்றுப் பிழைப்புக்காக பகல் முழுவதும் தெருத்தெருவாக “கத்தரிக்காய்.. வெண்டைக்காய்... உருளைக்கிழங்கு எல்லா காயும் இருக்கு.... " என ராகம் போட்டுக் கூவி கூவி காய்கறி விற்கிறான். இரவு நேரத்தில் தன் அறிவுத் தேடலுக்காக தெரு விளக்கில் அமர்ந்து படிக்கிறான். ஒரு நாள் அவனது கனவு நனவாகிறது. அவன் வழக்கறிஞராகிறான்.

அடுத்து விரிகிறது அந்த அபத்த காட்சி. டோலு வழக்கறிஞர் சூட் அணிந்து மிடுக்காக நீதிமன்றத்துக்குள் நுழைகிறான். நீதிபதி உட்பட சுற்றியிருக்கும் அனைவருக்கும் ஒரு ரியாக்‌ஷன் ஷாட். அந்த நேனோ நொடிகளில் அனைத்து கேரக்டர்களும் ஆச்சரியம், கேலி, எரிச்சல், நகைப்பு என பல்வேறு பாவனைகளை காட்டுகின்றன. கோப்புகளை மேஜையில் வைக்கும் டோலு வாதாட ஆரம்பிக்கிறான்... தன் வாதத்தை ஆரம்பிக்கிறான். (காய்கறிக்காரர் காய் விற்கும் தொணியில்) "ஐயா..சாட்சி இருக்கு.. ஆதாரம் இருக்கு.. எல்லாம் இருக்கு... இது கொலைதாங்க...".

அவன் ராகம் போட்டு வாதம் செய்வதைக் கேட்டு, நீதிமன்ற அரங்கமே சிரிப்பில் மூழ்குகிறது. டோலு திகைத்துப் போக ஒரு வாய்ஸ் ஓவர் "எது மாறினாலும், இவன் மாற மாட்டான், ஆனால் இது (டோரிமான் Flip card) மாறும்". அதாவது என்னதான் கல்வி கற்றாலும் காய்கறிக்காரன் காய்கறிக்காரன் என்பது இதன் சாரம்.

இதில் வருத்தம் என்னவென்றால், இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் என் மகள் (வயது 9) டோலுவைப் பார்த்துச் சிரிப்பதும், டோலுவைப்போல் ”சாட்சி இருக்கு...ஆதாரம் இருக்கு” என சொல்லிப் பார்ப்பதுமாக இருந்தாள். அது தவறு என எடுத்துக்கூறிய பின்னர் அவள் நிறுத்திக் கொண்டாள். ஏன் அப்படி சொல்லக்கூடாது என்று புரிந்ததா என்று தெரியவில்லை.

அனைவரும் கல்வி கற்க வேண்டும், கல்வி கற்ற சமுதாயம்தான் மேம்படும் என அறிஞர்கள் வலியுறுத்துவதும். அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் என அரசாங்கம் பல்வேறு திட்டங்களை உருவாக்குவதும் சமூக மேம்பாட்டிற்காகத்தான். கல்வி வாய்ப்பில்லாத குடும்பத்தில் இருந்து வரும் எவராயினும் கல்வி கற்றால் நிச்சயமாக அவர்கள் வாழ்வு மட்டுமல்லாமல் அவர்களது அடுத்த தலைமுறைகளும் முன்னேறும் என்பதே உண்மை.

ஆனால், அந்த உண்மையின் தன்மையையல்லவா கேலிப் பொருளாக்கியுள்ளது இந்த விளம்பரம். காட்சிகளுக்கு வலிமை அதிகம். எனவே இப்படிப்பட்ட காட்சிகள் நிச்சயம் ஊக்குவிக்கப்படக் கூடாது. காய்கறிக்காரன் கல்வி கற்றாலும் அவன் நிச்சயமாக தன் தொழில் புத்தியுடனே எல்லாவற்றையும் அணுகுவான் என்பது கண்டனத்துக்குரியது.

இந்த விளம்பரத்தை கோடிக்கணக்கான குழந்தைகள் பார்த்திருப்பார்கள். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்.? குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோம் நாம்?

முன்பதிவு டிக்கெட் மூலம் உறவினர்கள் பயணம் செய்வது எப்படி? - தெற்கு ரயில்வே அதிகாரிகள் விளக்கம்



முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தாவிட்டாலும், அவர்களின் உறவினர்கள் அதை வைத்து பயணம் செய்யலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்து வாகனமாக ரயில்கள் உள்ளன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்கும் போது, அதன் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க 2 மாதங்களுக்கு முன்பே பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்கின்றனர்.

அப்படி முன்பதிவு செய்துகொண்டவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் போனால் அவர்களின் உறவினர்கள் அந்த டிக்கெட்டை வைத்து பயணம் செய்துகொள்ளலாம் என்ற வசதி உள்ளது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “‘விரைவு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாவிட்டால் அந்த டிக்கெட்டில் அவர்களின் உறவினர்கள், அதாவது அவரின் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பயணம் செய்யலாம். அதற்கு சம்பந்தப்பட்ட ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவணம் காண்பித்து ஒருநாள் முன்பாக கையொப்பத்தை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.

NEWS TODAY 2.5.2024