Sunday, February 1, 2015

இலவச மற்றும் திவ்ய தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 விலையில் 2லட்டும் ரூ.25 விலையில் 2 லட்டும் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.




திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதமாக தேவஸ்தானம் சார்பில் 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்துவந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.10 விலையில் 2 லட்டுகள் பெறுவதற்கான டிக்கெட் வழங்கப்படுகிறது.

மேலும் கோயிலுக்கு வெளியே கூடுதல் லட்டுகள் பெற விரும்பும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் தலா ரூ.50 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பக்தர்கள் கூடுதல் லட்டு பெற கோயிலுக்கு வெளியே இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டுகள் வாங்குவதோடு ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதனை தடுக்க தேவஸ்தானம் நாளை முதல் இலவச மற்றும் திவ்ய தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 விலையில் 2லட்டும் ரூ.25 விலையில் 2 லட்டும் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் லட்டு தேவைப்பட்டால் கோயில் வெளியே லட்டு வழங்கும் இடத்தில் ரூ.50க்கு 2 லட்டுகள் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...