Thursday, February 26, 2015

கிணறு தோண்ட அனுமதி பெற ரூ.5,000 கட்டணம்: மாநிலத்தில் புதிய சட்டம் அமல்

சென்னை: 'ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய கிணறு கள் தோண்டவோ, பழைய கிணற்றை ஆழப்படுத்தவோ, ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்' என, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம், இந்த மாதம், 18ம் தேதியில் இருந்து, அமலுக்கு வருகிறது.

30 நாட்களுக்குள்...:

கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார். இச்சட்டம், 'தமிழ்நாடு ஊராட்சிகள் (கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்கு படுத்துதல்) விதிகள் - 2015' என, அழைக்கப்படும். இச்சட்டப்படி, செயல் அலுவலர் என்பவர், கிராம ஊராட்சி தலைவர் ஆவார்.

* இச்சட்டத்தின்படி, புதிய கிணறு தோண்ட விரும்புவோர், ஆழப்படுத்த விரும்புவோர், 5,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள், செயல் அலுவலர் விண்ணப்பத்தை, பரிசீலனை செய்து, அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், உரிய காரணங்களை, எழுத்து மூலமாக, விண்ணப்பதாரருக்கு, விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

* கிணற்றை ஆழப்படுத்தவும், புனரமைக்கவும் மேற்கொள்ளப்படும் பணியை, வணிக ரீதியாக மேற்கொள்வோருக்கு, பதிவுச் சான்று வழங்கப்படும்.


* இதை பெற, 15 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், பதிவு சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை, கலெக்டரிடம் வழங்க வேண்டும்.


* விண்ணப்பத்தை, 45 நாட்களுக்குள், கலெக்டர் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், அதற்கான காரணங்களை, விண்ணப்பதாரருக்கு, எழுத்து மூலமாக தெரியப் படுத்த வேண்டும்.

ஆழப்படுத்த...

* கிணறு தோண்ட, ஆழப்படுத்த, அனுமதி பெற்றவர்கள், முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024