Friday, February 20, 2015

சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் இடையே ப்ரீமியம் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் இடையே ப்ரீமியம் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

ரயில் எண் 22353: பிப்.26,5, மார்ச் 5,12,19,26 ஆம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாட்னாவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்து, இங்கிருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு பெங்களூர் கன்டோன்மன்ட் சென்றடையும்.

ரயில் எண் 22354: பிப்.22, மார்ச் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் கன்டோமன்ட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.10 மணிக்கு வந்தடையும். பின்பு, இங்கிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.

இந்த ரயில் சியோக்கி, ஜபல்பூர், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...