Friday, February 27, 2015

ரெயில் நிலையங்களில் ‘வைபை’ சேவை எல்லா பெட்டிகளிலும் செல்போன் ‘சார்ஜ்’ வசதி



புதுடெல்லி,

தகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குவதில் ரெயில்வேயும் தன்னை இணைத்துக்கொண்டு, பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் புதிதாக ரெயில் நிலையங்களில் ‘வைபை’ என்னும் கம்பியில்லா இணையதள வசதியை ரெயில்வே வழங்க உள்ளது.

400 ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் இந்த வசதியை பயணிகள் பெற்று பலன் அடையலாம்.

இதேபோன்று தற்போது ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் செல்போன்களை ‘சார்ஜ்’ செய்துகொள்ளும் வசதி உள்ளது. இந்த வசதி இனி சாதாரண பெட்டிகளில் (முன் பதிவு இல்லாதவை) பயணம் செய்யும் பயணிகளுக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024