Thursday, February 19, 2015

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர் பணி



சவுதி அரேபியாவில் அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.சத்தியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பி.எஸ்சி., எம்.எஸ்சி. தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உடைய, 32 வயதுக்குட்பட்ட பெண் செவிலியர் பணிக்கான நேர்முகத் தேர்வு டெல்லி, ஹைதராபாத், பெங்களுரூ மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் பிப்.17-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த தேர்வு மார்ச் 4-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

10-ம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், முன்னணி மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

இப்பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரமறிய, 044 22502267, 22505886, 08220634389 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டும், www.omcmanpower.com என்ற இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024