Wednesday, February 25, 2015

பேஸ்புக்கில் பொங்கி எழுந்த அருந்த(தி)தீ...


Return to frontpage

அருந்ததி

சமூக வலைத்தளங்கள் வரமா...சாபமா என்ற விவாதம் என்றைக்குமே நீண்டு கொண்டுதான் இருக்கப்போகிறது.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை நட்புக்காகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் அதை முழுக்க முழுக்க வக்கிர புத்தியின் வடிகாலாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு 'பெருமித ஜொள்ளரின்' விஷமங்கள் அவர் பயன்படுத்திய அதே பேஸ்புக்கில் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த நபரால் துரத்தப்பட்ட ஒரு பெண்ணாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தது போதும் பொங்கி எழு... என்ற அடக்க முடியாத கோப உணர்வின் வெளிப்பாடுதான் அந்த பேஸ்புக் பதிவு.

அருந்ததி பி. நலுகெட்டில், இவர் ஹைதராபாத்தில் சமூக ஆர்வலராக இருக்கிறார். அழகான தோற்றம் கொண்டிருப்பது அவர் தவறல்லவே. ஆனால், அந்த தோற்றத்துக்காகவே வெகு நாட்களாக பேஸ்புக் போன்ற வலைதளங்களில் ஒரு நபரால் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். ஜொள்ளரின் தொந்தரவு எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. உதாரணத்திற்கு அவர் அனுப்பிய ஒரு மெசேஜ் "அருந்ததி என்னை தயவுசெய்து பேஸ்புக்கில் சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் மிகவும் செக்ஸியாக இருக்கிறீர்கள். உங்கள் போன் நம்பரைக் கொடுங்கள். என்னுடன் உறவு கொள்ள தயரா? (மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)".

நாளுக்குநாள் வக்கிர மெசேஜ்களின் எண்ணிக்கை அதகரித்தது. அப்போதுதான், அருந்ததி அந்த முடிவை எடுத்தார்.



அருந்ததி அந்த நபர் குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கலாம், இல்லையேல், அந்த நபரை போனில் தொடர்பு கொண்டு வசை பாடியிருக்கலாம். ஆனால், அவர் செய்தது எல்லாம் இது மட்டுமே. குறிப்பிட்ட அந்த நபரிடம் இருந்து வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள், பேஸ்புக் சேட் பாக்ஸில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை அப்படியே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்தார்.
இதோ அவர் பதிவு செய்த நிலைத்தகவல்:
தொழில்நுட்பம் வளரும் அதே வேகத்திற்கு அதைப் பயன்படுத்தி பாலியல் வக்கிரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதற்கு அருந்ததியின் அணுகுமுறையும் ஒரு படிப்பினையே. அத்துமீறல்களை பொறுத்துக் கொண்டிருப்பது கோழைத்தனம். கோழைகளாக இல்லாமல்... அருந்ததிகளாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024