Wednesday, February 25, 2015

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பல மருத்துவ மேற்படிப்பு கள் உள்ளன. இதில், 1,100 இடங்களும், எம்.டி.எஸ்., படிப்புக்கு, 40 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக, மீதமுள்ள 595 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு, 8,600 பேர்; எம்.டி.எஸ்., படிப்புக்கு, 1,157 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி, சென்னையில் ஐந்து மையங்களில் நடக்கிறது. ''மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங் களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...