Sunday, February 15, 2015

திருமண செலவில் குரங்கு வாடகை ரூ.10,000: ஆக்ராவில் வினோதம்

திருமண செலவில் குரங்குகளை வாடகைக்கு அமர்த்துவதும் கட்டாய மாகி விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்தான் இந்த வினோதம் நடந்து வருகிறது.

ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம். திருமண விசேஷங்கள் நடைபெறும் இடங்களுக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. அவற்றை விரட்ட சாம்பல் நிற லங்கூர் வகை குரங்குகளை திருமண வீட்டார் வாடகைக்கு அமர்த்தி வருகின்றனர்.

சாம்பல் நிற லங்கூர் குரங்கு களுக்கு மற்ற குரங்குகளைக் கண்டால் பிடிக்காது. அவற்றை துரத்தி விட்டுவிடும். எனவே, லங்கூர் குரங்களை வைத்திருக்கும் குரங்காட்டிகளுக்கு நல்ல தேவை உள்ளது. குறிப்பாக திருமண சமயங்களில் இவர்களுக்கான தேவை அதிகரித்து விடுகிறது. திருமண வீட்டார் இவர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு ரூ.3,000 கொடுத்தால் போதுமானது. இல்லாவிட்டால், விசேஷத்தில் குரங்குகள் புகுந்து விட்டால் அவற்றை விரட்ட ரூ.10 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

குறிப்பாக குளிர்காலங்களில் நடைபெறும் திருமணங்களில் இவர்களுக்கான தேவை அதிக மாகவே உள்ளது. இதனால், திருமணத்தில் மற்ற செலவுகளுடன் லங்கூர் குரங்குகளுக்கான வாடகைச் செலவும் கட்டாயம் இடம்பெறுகிறது.

ஆக்ராவில் கடந்த சில ஆண்டுகளில் குரங்குகளின் எண் ணிக்கை பல மடங்கு அதி கரித்து விட்டது. வட இந்தி யாவின் பெரும்பாலான நகரங் களில் குரங்குகளின் தொல்லை அதிகரித்திருக்கிறது. தோட்டங் களைச் சிதைத்தல், வீடு, அலுவலகங் களின் மேற்கூரையில் அமர்தல், உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்துதல், உணவுக்காக மனிதர்களைத் தாக்குதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...