Friday, February 27, 2015

அண்ணாமலைப் பல்கலை. பதிவாளராக ஜே.வசந்தகுமார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக (கூடுதல் பொறுப்பு) ஜே.வசந்தகுமார்நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகத்தைதமிழகஅரசு ஏற்றது. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த

2013 ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாகபொறுப்பேற்றார்.

இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்தஆர்.மீனாட்சிசுந்தரத்திற்கு வயது 58 முடிவுற்றதால் அவரை ஏப்.15-ம் தேதி பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து, வணிகவியல் துறை பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பதிவாளர் பதவிக்கு பல்கலைக்கழக

மேலாண்மைத்துறை தலைவராக இருந்த பேராசிரியர் என்.பஞ்சநதம் நியமிக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜிநாமா செய்வதாக, கடிதத்தை நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிடம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் வழங்கினார். அப்போது சிண்டிகேட் கூட்டத்தில் அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பதிவாளரை நியமிக்க நிர்வாகி

ஷிவ்தாஸ்மீனாவிற்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பித்தது. அதனடிப்படையில் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வரும், சிண்டிகேட் உறுப்பினருமான முனைவர் பேராசிரியர் ஜே.வசந்தகுமாரை பதிவாளராக முழுக்கூடுதல் பொறுப்பு வழங்கி பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து பதிவாளராக ஜே.வசந்தகுமார் வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024