Friday, March 27, 2015

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் கள், மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி, தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெட்டி ஒட்டும் கம்ப்யூட்டர்!



அபிமானத்துக்குரிய தங்கள் கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடித்தால் அதைக் கொண்டாடத் தவறியதில்லை ரசிகர்கள். அன்று எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரட்டை வேடங்களில் நடித்தபோது இன்றைய அதிநவீனக் கம்போசிட்டிங் (compositing) தொழில்நுட்பம் இல்லை.

அன்று இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதைப் படம்பிடிக்க நடிகரோடு தொழில்நுட்பக் குழுவும் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்து. உதாரணத்துக்கு ‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆர் ராஜா மார்த்தாண்டனாக ஒரு வேடத்திலும், அவரது ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் எனப் போராடும் புரட்சியாளன் வீராங்கன் என்ற மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார்.

இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளாதவரை பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியே ஆக வேண்டும் அல்லவா? இந்தப் படத்தை இயக்கி நடித்த எம். ஜி.ஆர். முதலில் மார்த்தாண்டன் தொடர்புடைய காட்சிகளையெல்லாம் படம்பிடித்துக் கொண்டார். பிறகு வீராங்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்தார். இருவரும் தோன்றிய காட்சிகளை எப்படிப் படம்பிடித்திருப்பார்? அதற்கு அப்போது பயன்படுத்திய தந்திரம்தான் ‘ பிளாக் மாஸ்க்’.

நாடோடி மன்னனில் மார்த்தாண்டன், வீரங்கனுடன் கைகுலுக்கும் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். செட்டில் எந்த இடத்தில் இரண்டு வேடக் கதாபாத்திரங்களும் நிற்கவேண்டும், அந்த ஷாட்டின் வடிவமைப்பு(shot composition) என்ன, அப்போது செட்டின் ஒளியமைப்பு என்ன என்பதையெல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு செய்துவிடுவார்.

முதலில் மார்த்தாண்டன் வலப்புறம் நின்று கைகளை நீட்டி, எம்.ஜி.ஆருக்கான ஒரு டூப் வேஷ நடிகரின் கைகளைக் குலுக்குவார். இப்போது கேமராவின் கண்கள் என்று வருணிக்கப்படும் அதன் லென்ஸ் வழியே இந்தக் காட்சி பதிவாக வேண்டும். வீராங்கன் நிற்கப்போகும் இடப்பக்கம் கேமராவில் பதிவாகாமல் இருக்க வேண்டும். இதனால் கேமராவின் பார்வையை அதன் இடப்பக்கம் முழுவதையும் கருப்பு வண்ணக் காகிதத்தால் பாதி மறைத்துவிடுவார்கள்.

இப்போது மார்த்தாண்டன் நடிக்கும் ஷாட்டைப் படம்பிடித்துவிடுவார்கள். ஷாட் பதிவாகி முடிந்ததும் கேமராவில் மறைக்கப்பட்ட பகுதியானது பிலிமில் எதுவும் பதிவாகாமல் அப்படியே நெகட்டிவாக இருக்கும். இப்படி எடுக்கப்பட்ட முதல் ஷாட்டில் எத்தனை பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை பிரேம்களை பிலிம்ரோலில் ரிவர்ஸ் செய்து சரியான முதல் பிரேமில் ‘க்யூ’ செய்து வைப்பார்கள். இம்முறை மார்த்தாண்டன் நின்றிருந்த இடத்தை கேமரா பதிவு செய்யாமல் இருக்க கேமராவின் மற்றொரு பாதி கருப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டுவிடும்.

வீராங்கன் நிற்க வேண்டிய இடப்புறத்தில் மேக் அப்பை மாற்றிக்கொண்டு எம்.ஜி. ஆர். வீராங்கன் தோற்றத்தில் நிற்பார். டூப் நடிகர் கைகுலுக்கியபோது ஒளிப்பதிவாளர் குறித்துக் கொண்ட அதே இடத்தில் நின்று வீராங்கனாக நடிப்பார். இப்போது ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரண்டு வேடக் காட்சி தயார்.

இந்தக் கடின முறையை நவீன கம்போசிட்டிங் முறை சுலபமாக்கிவிட்டது. உடலோடு ஒட்டிப்பிறந்த இரட்டைக் கதாபாத்திரங்களில் மாற்றன் படத்தில் சூர்யா நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் ஏற்றிருந்த அகிலன், விமலன் ஆகிய கதாபாத்திரங்களின் குணாதிசயம் வெளிப்படும்படி, உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டிலும் வேறுபாடு காட்டி இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடித்திருந்தார் என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். உண்மையில் நவீன கம்போசிட்டிங் முறை தரும் வசதியால் சூர்யா இதைச் சுலபமாகச் செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.

முதலில் ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அத்தனை காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. பிறகு மற்றொரு வேடத்திற்கு சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் இந்த இரட்டையர் வேடங்கள் இடம்பெறும் எல்லா காட்சிகளும் ‘கிரீன் மேட்’ பின்னணியில் பச்சை வண்ணத் துணியை செட்டின் பின்புலத்தில் கட்டி படம் பிடிக்கப்பட்டன.

எதற்காக இந்தப் பச்சை வண்ணத் திரையின் பின்னணியில் இவர்கள் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன? வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை, அல்லது காட்சிகளை வெட்டி ஒட்டவே இந்த பச்சை வண்ணப் பின்னணி பயன்படுகிறது.

அது எப்படி என்பதை எப்படி அடுத்த பகுதியில் எளிமையாகப் புரிந்துகொள்வோம். அப்போது தசாவதாரம் கமலும் ஸ்பைடர்மேனும் நமக்குத் துணையாக வருவார்கள்.

படங்கள் உதவி: ஞானம்

இனி புகைப்படங்களில் மட்டும்!- சாந்தி திரையரங்கம்

உலகத் திரையரங்குகள் தினம்: மார்ச் 27
அடையாளம்


சென்னை, அண்ணா சாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவாக்கிய சாந்தி திரையரங்கம். ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களுக்கு இளைப்பாறுதல் அளித்து வந்தது. இத்திரையரங்கை இனி ரசிகர்கள் காண முடியாது. தற்போதிருக்கும் திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பிரம்மாண்ட வணிக வளாகத்துடன் கூடிய மல்டி பிளக்ஸ் திரையரங்காக மாற இருக்கிறது.

தொடக்க விழாவில்

1961-ல் அன்றைய முதல்வர் காமராஜரால் பொங்கல் திருநாளில் திறந்து வைக்கப்பட்ட இத்திரையரங்கம் சென்னையின் முதல் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டது என்ற பெருமைக்குரியது.


பொக்கிஷ கவுண்டர்

மற்ற திரையரங்குகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று சாந்தி திரையரங்கிற்கு உண்டு. ஒரு சிறு அருங்காட்சியகம் போலச் சிவாஜி நடித்த படங்களின் பட்டியல் அங்கே ஒரு கல்வெட்டாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாழ்வில் முக்கியப் பிரமுகர்களுடன் சிவாஜி இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்கள் அவருக்கு வழங்கிய ஓவியங்கள் எனப் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குப் போனஸ் விருந்தாக இருந்து வருகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது மரத்தினால் செய்யப்பட்ட பழைய டிக்கெட் கவுண்டர். தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.


பாவ மன்னிப்பு

சிவாஜியின் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் அவர் நடித்தது அல்ல என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த ‘தூய உள்ளம்’ என்ற படமே திரையிடப்பட்டது. பிறகு சிவாஜி நடித்த ‘பாவமன்னிப்பு’ உட்பட அவரது பல படங்கள் இங்கே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. சிவாஜியின் மகன் பிரபு நடித்த ‘சின்னத் தம்பி’ 205 நாட்கள் இங்கே ஓடியிருக்கிறது.

தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் படங்கள் இந்தத் திரையரங்கை ஆக்கிரமித்து விடுகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது புரொஜெக்டர் அறை. அங்குள்ள சதுரத் துளை வழியே தெரியும் திரையிடல்.


ரசிகர்களின் அன்பு

சிவாஜியின் ரசிகர்கள் அவருக்கு அன்புடன் வழங்கிய பல ஓவியங்களில் ஒன்று இது. சிவாஜி, கணேசன் ஆகிய இரண்டு பெயர்களின் அர்த்தமும் விளங்கும் விதமாக வரையப்பட்ட ஓவியம்.


அலுவலகம்

திரையரங்கில் இருக்கும் சிவாஜியின் அலுவலக அறையில் அவருக்குப் பிறகு அவரது வாரிசுகள் எந்த மாற்றத்தைச் செய்யவில்லை. இன்றும் இதை விரும்பிப் பார்க்கத் திரையுலக ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள்.
படங்கள்: ம.பிரபு

INDIAN NURSING COUNCIL CIRCULAR DATED 23.3.2015


Medical PG Classes to Begin by May 30 as per MCI Schedule

The New Indian Express
26th March 2015

COIMBATORE: The Medical Council of India (MCI) has drawn up a common admission schedule for postgraduate medical and dental courses based on a Supreme Court order, according to which classes should begin on May 30. The court has accepted the schedule.

The Supreme Court had given directions in this regard to the MCI and and the Director General of Health Services (DGHS) while hearing a petition seeking a schedule for all-India and state counselling for admissions to postgraduate medical and dental courses for the 2015-16 academic year.

According to the MCI schedule, the first round of counselling for the all-India quota should be held between March 1 and 4 and state quota counselling completed by April 5.

The second round for the all-India quota should be between April 10 and 16 and for state quota between April 29 and May 3.

The third round for the all-India quota should be between May 9 and 19 and for state quota between May 31 and June 4.

The classes should commence from May 30.

The Supreme Court directed all states to implement the schedule in letter and spirit. It also said that it was time for the MCI and DGHS to frame the 2016-17 schedule. A specific schedule should be followed so that such controversies do not reach the court every year. “All the states are bound to cooperate with the aforesaid authorities, failing which serious view shall be taken,” the court said.

In view of the Supreme Court order, MCI Secretary Reena Nayyar has asked state health secretaries and directors of medical education and deans of medical colleges to strictly follow the schedule.

TN GOVERNMENT SERVANTS SALARY FOR THIS MONTH ON APRIL 6TH...DINAMANI


ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

நேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்,வங்கி வரவு புத்தகம்,வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்: வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்கூறிய 5 ஆவணங்களின் நகல்களுடன், சான்றொப்பம், மறுமணம் புரியா சான்று உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட்,நோட்டரி, வங்கி மேலாளர், இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதர விவரங்கள்: ஓய்வூதியர்கள் இருப்பிட முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் ஜூன் மாதத்துக்குள் வர தவறிய ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் மாதிரிப் படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுத் துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழக மின்வாரியம், ரயில்வே துறை,அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...