Thursday, April 2, 2015

காவிரி மேலாண்மை வாரியம்

நடந்தாய் வாழி காவிரி என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளெல்லாம் தங்கள் வாழ்க்கையின் வசந்தமாக போற்றிப்பாடுவதுதான் காவிரித்தாய். ஒரு பெண்ணின் பிறந்த வீடு ஒன்று என்றாலும், புகுந்த வீடுதான் அவள் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும். புகுந்த வீட்டுக்குத்தான் அவள் பங்களிப்பு அதிகமாக இருக்கும், இருக்கவேண்டும், இருப்பதுதான் காலத்தின் நியதி என்பதுபோல, காவிரி கர்நாடகத்தில் உள்ள தலைக்காவிரியில் பிறந்தாலும், அவளுக்கு புகுந்த வீடு தமிழ்நாடுதான் என்ற வகையில்தான் எப்போதும் ஆண்டாண்டுகாலமாக கருதப்பட்டுவருகிறது. அந்த வகையில், எப்படி புகுந்தவீட்டுக்கு வந்த ஒரு பெண், அந்த வீட்டின் குடும்பத்தலைவியாக சகல உரிமைகளும் பெற்று வலம் வருவாளோ அதுபோலத்தான், காவிரியையும் விவசாயிகள் கருதுகிறார்கள். அந்த நிலையில், புகுந்த வீட்டுக்கு போகக்கூடாது என்று ஒரு பெண்ணை பிறந்தவீடு தடுப்பது எந்த வகையிலும் அவளுக்கு சிறப்பு சேர்க்காது. அதுபோல, ஒரு நிலையைத்தான் இப்போது காவிரி ஆற்றுக்கு மேகதாது அணை மூலமாக எற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் காவிரியை தடுக்கும் வகையில் தமிழக எல்லையில் மேகதாது அணையைக் கட்டினால், காவிரி ஆற்றுத்தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் ஓடி வருவது பெரிதும் தடைபட்டுப்போய்விடும். வாழி காவிரி என்று பாடவேண்டியதற்கு பதிலாக வறண்ட காவிரி என்ற நிலை உருவாக வழிவகுத்துவிடும்.

கர்நாடகத்தில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி ஓடிவரும் காவிரி கனகபுரா தாலுகாவில் சில இடங்களில் பாறை இடுக்குகளுக்கு இடையில் ஓடிவருகிறது. மிகவும் குறுகலான அந்த இடம் ஒரு ஆடு தாண்டிவிடும் அளவிலேயே இருப்பதால், அந்த இடத்தில் ஓடிவரும் காவிரியை ஆடு தாண்டும் காவிரி என்பார்கள். ஆடு தாண்டி என்பதற்கு கன்னட மொழியில் மேகதாது என்பார்கள். அந்த மேகதாதுவில்தான் கர்நாடக அரசு அணைகட்டி காவிரியின் ஓட்டத்தை தடுக்க முயல்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி கர்நாடக அரசாங்கத்தால் இப்போது மட்டுமல்ல, 1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியே தொடங்கிவிட்டது. அப்போது கர்நாடகத்தில் குண்டுராவும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும் முதல்–அமைச்சர்களாக இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடுத்த ஒரு மாதத்துக்குள் அப்போது ஜனாதிபதியாக இருந்த சஞ்சீவ ரெட்டியை வைத்து அடிக்கல் நாட்டவும் ஏற்பாடு நடந்தது. இந்த தகவலை அப்போது எம்.எல்.ஏ.யாக இருந்த பழ.நெடுமாறன், எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு கொண்டுவந்த நேரத்தில், உடனடியாக எம்.ஜி.ஆர் மிகவும் ராஜதந்திரத்தோடு எடுத்த நடவடிக்கைகள் அப்படியே இந்த திட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது.

மீண்டும் இப்போது இது தலையெடுத்துள்ளது. இதற்கு ஒரேவழி காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் ஆணையத்தையும் அமைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதையும் அது கர்நாடகம் என்றாலும் சரி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என்றாலும் சரி, அந்த வாரியத்தின் அனுமதியில்லாமல் தொடங்கவே முடியாது. எனவே, இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். நாளையும், நாளை மறுநாளும் பெங்களூருவில் நடக்கும் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசி தீர்மானம் நிறைவேற்றச் செய்யவேண்டும். 2012–ம் ஆண்டு நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் இவ்வாறு தாமதம் செய்வதில் நியாயமே இல்லை.

Wednesday, April 1, 2015

Assistant surgeons in health department: Only 54 join service

THIRUVANANTHAPURAM: The state health service has become a non-attractive career option for the MBBS graduates it seems, as only 54 out of 239 candidates in the PSC assistant sugeon ranklist joining service.

The candidates were asked to report at the directorate of health service on Monday for their placements across the state in different hospitals. Even though 160 reported at the directorate only 54 candidates showed the willingness to join service. The remaining 106 candidates sought extension of time for joining citing various reasons including time to complete the post graduate courses they are undergoing at present. However, the authorities have claimed that these 106 candidates would join the service and a written undertaking had been taken from them on this.

For those who are undergoing post graduate courses at present the directorate of health service has executed a bond worth Rs 5 lakh from the candidate with an assurance that they would report for duty soon after the completion of the course. "In case they fail to join, they will be debarred from any other employment in the government service and they will have to pay Rs 5 lakh to the government," said a senior health department official.

At present there are vacancies of 219 assistant surgeons, 51 civil surgeons, 156 junior consultants, 107 consultants, 26 senior consultants, two chief consultants and 17 posts in the administrative cadre.

UGC a failure, must be scrapped: HRD panel

NEW DELHI: One of the first committee set up by HRD minister Smriti Z Irani to review the working of the University Grants Commission has said that the regulator not only has "failed to fulfill its mandate but also has not been able to deal with emerging diverse complexities."

Headed by former UGC chairperson Hari Gautam, the committee has said any "reshaping or restructuring" of UGC "will be a futile" exercise and so will be amending the UGC Act. Therefore, it has recommended setting up of National Higher Education Authority through an act of Parliament. It has also prepared a draft of the bill but said that till the time such a body is set up, HRD ministry can bring about many changes through executive order.

For instance, it has suggested a national research aptitude test for admission to Ph.D and doing away with 10 years as professor criteria to become vice-chancellors. It has also emphasized teaching of yoga and transcendental meditation. Ministry sources said, "Recommendations are far-reaching and will be looked into seriously."

The two-volume report submitted to the ministry says UGC is "plagued in the main by reductionism in its functioning." The report also states, "It (UGC) has side-stepped its function of being a sentinel of excellence in education and embraced the relatively easier function of funding education." It has specifically pointed out that the UGC staff is unhappy as only "few find favour and are delegated with powers to perform in important areas while many of them are left out with hardly much to contribute." "It is said that they are pushed around through an element of fear and threat. The overall impression is that there is a man-made crisis which seems to be cause of unhealthy ambience and poor performance of UGC," the report said, adding there should be pay parity with central government employees.

Advising reform from the top, the committee has said that UGC chairperson "should be advised to strictly keep a vigilant track of the various performance areas of the UGC and assess the contribution at all levels." It has recommended that chairperson should spend more time in his "seat" than go around the "country and the world on occasions that have not much relevance for the system he governs." In this regard, the committee has recommended that chairperson be held accountable and "his performance be assessed once after three years and then at the end of his tenure of five years by a committee constituted by HRD."

As for members of the UGC, the committee said "all kinds of people have been appointed" "Eminent educationists or men of eminence in any field should have been the natural choice but at times it is observed that businessmen, hotel owners and even readers in colleges" have been made members. The report has recommended that members be given more active role and asked to attend review meetings.

Pointing out various ills of functioning of UGC, the report said "working structure of UGC is so ad-hoc that many do not know how many bureaus represent various disciplines and activities are currently existing." The report has said regional offices of UGC and even Consortium of Educational Communication (CEC) have failed to deliver and are a waste of "good money and manpower."

PAHAL OR DBTL ENROLLMENT CAN BE DONE TILL JUNE NOW

உயிரியல் தேர்வு மிகக் கடினம்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்



பிளஸ் 2 தேர்வில் கடைசிப் பாடமான உயிரியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் பெரும்பாலான கேள்விகள் எதிர்பாராதவையாக இருந்தன. விலங்கியல் பிரிவில் 10 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு நிகராகக் கடினமானவையாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. 2,377 தேர்வு மையங்களில் 8.82 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

உயிரியல் பாடத்தில் தாவரவியல் பகுதி வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. ஆனால், விலங்கியல் பகுதியில் இருந்த வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன. 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு வினாத்தாள்தான் கடினமானதாக இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், இதில் எந்தக் கேள்வியும் புத்தகத்துக்கு வெளியிலிருந்து வந்ததாகவோ, தவறானதாகவோ இல்லை. பாடங்களுக்கு இடையே அதிகம் எதிர்பார்க்காத பகுதிகளில் இருந்து வினாக்கள் வந்திருந்தன. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கும், சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் கடினமான வினாத்தாளாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட 150 மதிப்பெண்ணுக்கான உயிரியல் தேர்வில் 130 மதிப்பெண்ணைத் தாண்டுவது சிரமம் என அவர்கள் தெரிவித்தனர்.

விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்.6-இல் தொடக்கம்: முக்கியப் பாடங்களுக்கான விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மே முதல் வாரத்துக்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உயிரியல் பாட விடைத் தாள்கள் சேகரிப்பு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு 2 நாள்களில் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

பிடிபட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்தபோது மொத்தம் 394 மாணவர்கள் சிக்கினர். கடந்த ஆண்டு 194 மாணவர்கள் பிடிபட்டனர். துண்டுச் சீட்டு வைத்திருத்தல், பக்கத்தில் உள்ள மாணவர்களைப் பார்த்து எழுதுதல் போன்ற தேர்வறை ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்காமல் இருந்தால், அந்த தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாகவே, இந்த ஆண்டு காப்பியடித்தபோது பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

33 பேர் சிக்கினர்: உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் காப்பியடித்ததாக செவ்வாய்க்கிழமை 33 பேர் சிக்கினர். உயிரியல் பாடத்தில் காப்பியடித்ததாக 10 பேரும், தாவரவியல் பாடத்தில் 8 பேரும், வரலாறு பாடத்தில் 15 பேரும் பிடிபட்டனர்.

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு



தமிழகத்திலுள்ள சில சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து, நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைப்புதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, சிட்டம்பட்டி பூதக்குடி, லெம்பலாக்குடி, லஷ்மணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் ஆகிய 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார் கட்டணம் ரூ. 38 லிருந்து ரூ. 44 ஆகவும், லாரி ரூ. 139லிருந்து ரூ. 155 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

வாழ்க ஜனநாயகம்!

Dinamani

ஒர் அரசு ஊழியர் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இப்படி இருக்கும்போது, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டாலே போதுமானது அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு என்றால், அது எந்த வகையில் நியாயம்?

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியுள்ள கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஊதியம், படிகள், ஓய்வூதிய மசோதாவின் மூலம் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு ஊதியம், படிகள், தொகுதிப் பயணப்படி எல்லாமும் சேர்த்து மாதம் ரூ.1.40 லட்சம் கிடைக்க வகை செய்கிறது. மேலும், அவர்களது ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதியையும் நீக்கியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜய் சிங் (முன்னாள் முதல்வர் தரம்சிங்கின் புதல்வர்) இந்த ஊதியம், படிகள் உயர்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், என்னைப் பார்க்க என் அலுவலகத்துக்கு

தினமும் 200 பேர் வருகிறார்கள். இவர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கவே எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,500 செலவாகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அவர் அப்பதவியை வகிக்கும் காலத்தில் இந்தப் படிகளைப் பெறுவதை ஒரு வகையில் நியாயப்படுத்தினாலும், இவர்களுக்கான ஓய்வூதியத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஓய்வூதியம் 58 வயதுக்குப் பிறகு தொடங்குவதில்லை. அவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனவுடனே தொடங்கிவிடும். அதுமட்டுமல்ல, அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1,000 ஓய்வூதியத்தில் கூடுதலாகும் என்கிறது சட்டம்.

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம், அது நீங்கலாக ஆண்டுக்கு ரூ.40,000 மருத்துவப்படி என்பதுடன் அரசு மருத்துவமனைகளில் "அ' அல்லது "ஆ' பிரிவுகளில் இலவச மருத்துவமும் பெறலாம். அரசுப் பேருந்துகள் அனைத்திலும் அவர் ஒரு துணையுடன் இலவசமாகப் பயணம் செய்யலாம். கர்நாடகத்தைப் போலவே தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவியேற்றிருந்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆகிவிடுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கான மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலும் எழும் அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்குக் காரணம், இத்திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகை கிடையாது என்பதுதான்.

அதாவது, ஊழியரின் பணத்தைப் பிடித்தம் செய்து அதையே அவர்களுக்கு ஓய்வூதியமாகத் தருகிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் ஆட்சேபணையாக அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதியத்தில், படியில் எந்தப் பிடித்தமும் இல்லை. ஓய்வூதியம் உண்டு. உறுப்பினராக உறுதிமொழி ஏற்றிருந்தாலே போதும், மக்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம் உண்டு.

இதே நிலைமைதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்! இவர்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் போது அனுபவிக்கும் பயன்கள் ஒருபுறம் இருக்க, இவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு. அவர்களும் பதவி வகித்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.

இன்றைய நிலையில் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியமோ படியோ கிடையாது.

கூட்டப் படி ரூ.800 மட்டும்தான். அதுவும் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே. அதற்கும் கூடுதலாக கூட்டம் நடத்தப்பட்டால் அந்தக் கூட்டங்களுக்குப் படி கிடையாது. நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் யாருக்குமே

ஊதியம், ஓய்வூதியம் கிடையாது. இவர்களில் ஒன்றியக் குழுத் தலைவருக்கு ரூ.750-ம், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.400-ம் கெüரவ ஊதியமாக அளிக்கப்படுகிறது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கெளரவ ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

ஆனால், அவர்களால் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ளவோ, உயர்த்திக் கொள்ளவோ, ஓய்வூதியம் அறிவித்துக் கொள்ளவோ முடியாது. சட்டப்பேரவைதான் அவர்களது சலுகைகளை நிர்ணயிக்கும்.

விடுதலை கிடைத்த காலகட்டத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பொது வாழ்க்கைக்கு தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பதவி வகித்த காலத்தில் பணம் சம்பாதிக்கத் தெரியாத நேர்மையான அரசியல்வாதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட சொற்பமான ஓய்வூதியம், சலுகைகள் பேருதவியாக அமைந்தன.

இன்றைய உறுப்பினர்கள் அப்படியா? வசதி படைத்தவர்கள் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுக்கும் நிலையில், பல கோடி ரூபாயை சொத்துகளாக காட்டியிருக்கும் இவர்கள், தங்களுடைய ஊதியம், படியை விட்டுக்கொடுக்க முன்வராவிட்டாலும், ஓய்வூதியத்தையாவது விட்டுக்கொடுக்கலாமே!

சட்டம் இயற்றுபவர்களின் இந்தச் சட்டாம்பிள்ளைத்தனத்தைச் செம்மறியாட்டுக் கூட்டம் போல நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வரை அவர்கள் இதுவும் செய்வார்கள், இனியும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்! "நமக்கு நாமே' என்கிற திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்துச் செய்பவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் போலும்!

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...