Thursday, May 28, 2015

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். முன்னதாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 25) வெளியிடப்பட்டன.

ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதழுடன், மறுபணி நியமனம், மறு திருமணம் ஆகியன செய்யவில்லை என்பதற்கான சான்றையும் அளிக்க வேண்டும்.
இதற்கென தனியான வரையறுக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. இந்தச் சான்றிதழில் சான்றொப்பம் அளிக்க, அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அந்த நடைமுறைக்குப் பதிலாக இப்போது புதிய நடைமுறையைப் பின்பற்றலாம் என கருவூலம்- கணக்குத் துறை, தமிழக அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி, சான்றொப்பம் அளிக்க அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்களே சுய சான்றொப்பமிட்டு சான்றிதழை அளிக்கலாம் என கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும், தாங்கள் மறுபணி நியமனமோ அல்லது மறுதிருமணமோ செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை அவர்களே சுய சான்றொப்பமிட்டு அளிக்கலாம். இந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையும், அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களைச் சார்ந்தது என்று நிதித் துறை செயலாளர் சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதமானது சட்டப் பேரவைச் செயலகம், ஆளுநர் மாளிகை, துறை அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

'CBSE students to get certificates in digital format as well'

NEW DELHI: The Central Board of Secondary Education is likely to start issuing mark sheets and certificates in digital format as well along with hard copies which can be stored by students in their digital lockers, according to a top official in the IT Ministry.

"We are working with CBSE on digital certificates. The proposal is to enable students to store their CBSE certificates in their digital locker. I expect CBSE will issue these certificates within couple of months," IT Secretary R S Sharma told PTI.

The government launched digital lockers on February 10 and within three months over 1 lakh people have started using it. Madhya Pradesh (over 24,000), Uttar Pradesh (over 17,000) and Gujarat (over 13,000) are top three states where people have registered for this facility.

The concept of digital locker is to make people free from carrying files or getting copies attested.

Any person having Aadhaar number can open digital locker account for free.

"When a government department is issuing a certificate then other government department should not make people run for verifying same document again and again. Our priority is to bring all educational institutes on board for issuing certificates that can be stored in digital locker," Sharma said.

He added, the Department of Electronics and IT is also working with various other entities to issue digital certificates.

"Along with academic certificates we are approaching other government departments that are involved in issuing any kind of certificates. PAN Card, Voter ID are also in pipeline," he said.

IT Ministry will soon start working with Oil PSUs to issue digital LPG books and with state governments for ration cards and state education board certificates.

"This all will be linked to Aadhaar number of people. People can choose documents which they want to share with someone. It can be shared by e-mail by just clicking on the share option button. Department are also making changes in their system to start accepting documents online," Sharma said.

Thanjavur college gets its first medical super speciality course

The Thanjavur Medical College has been granted its first Medical Super Speciality Course – DM Neurology.

The Medical Council of India (MCI) has permitted one seat of three-year DM Neurology course from the 2015-16 academic year. Already the college has three surgical super speciality courses .

Disclosing this to The Hindu , TMC Dean P.G.Sankaranarayanan said the MCI gave its nod after approving faculty, special equipment and infrastructure for the department. Candidates who have completed MD General Medicine and MD Paediatrics are eligible for selection through entrance examination for the course.

Apart from addressing the neurological care needs of poor patients, particularly from rural and semi-urban areas, the course would usher in a definite improvement in the teaching component in the medical colleges in the zone, Dr.Sankaranarayanan said. Treatment for brain and spinal chord conditions such as stroke, myelitis and demyelinating disorders would see significant improvement.

The Thanjavur Medical College was started in 1959 and at present offers postgraduate courses in psychiatry, orthopaedics, general surgery, general medicine, anaesthesia, dermatology, chest medicine, anatomy, physiology, biochemistry, microbiology, paediatrics, ophthalmology, and surgical super specialty courses such as neurosurgery, plastic surgery and paediatric surgery apart from the staple 150 MBBS seats every year.

The college has also petitioned for increasing the intake of MBBS seats though that might take a little more time before the proposal fructifies.

Candidates who have completed MD General Medicine and MD Paediatrics are eligible for the course

இதற்குத்தான் சி.பி.ஐ. கேட்கிறார்கள்

காவல்துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன. முக்கியமான கொலையோ, திருட்டோ நடந்தால், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக, இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. அதாவது, குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் விசாரணைக்கு அனுப்புகிறோம் என்று அரசு சொல்வது வழக்கம். ஆனாலும், சில வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுக்கிறது. சி.பி.ஐ. அதாவது, மத்திய புலனாய்வு பிரிவு என்பது மத்திய அரசாங்க உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். இவ்வளவுக்கும் இருஅமைப்புகளுமே முசோரியில் உள்ள ஒரே அகாடமியில் பயிற்சிபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் இயங்குகிறது. மாநில காவல்துறையில் பணியாற்றிய போலீசார், இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்கள்தான் அயல் பணியாக சி.பி.ஐ.க்கு பணியாற்ற செல்கிறார்கள். அப்படியிருக்க மாநில போலீசார் மீது நம்பிக்கை வைக்காமல், சி.பி.ஐ. விசாரணை கோருவது தார்மீக அடிப்படையில் நல்லதல்ல என்று கருத்து நிலவுகிறது.

ஆனாலும், சி.பி.ஐ. விசாரணை கேட்பது சரியான முடிவுதான் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் துடிப்பான இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்து, மக்களிடம் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தவர் டி.கே.ரவி. மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த ரவி, 2009–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, முதலில் குல்பர்காவில் உதவி ஆணையராகவும், பின்பு கோலார் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பணியாற்றினார். மக்கள் சேவையிலேயே தன் முழுநேரத்தையும் செலவிட்ட ரவி, கோலாரில் பணியாற்றியபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், மணல் கொள்ளைக்காரர்கள் அவர்கள் அரசியலில், சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்றாலும், இவரது அதிரடி நடவடிக்கைக்கு முன்பு நிற்கமுடியவில்லை. அதேநேரத்தில், ஏழை–எளிய பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக எந்த நேரத்திலும் அவரை அணுக முடிந்தது, குறைகளும் நிவிர்த்தியானது. இதனால் அவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து வணிகத்துறைக்கு மாற்றிய நேரத்தில், கோலார் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். வணிக வரித்துறையிலும் மிகுந்த செல்வாக்குள்ள நிறுவனங்களில் சோதனைகளை நடத்தி, வரி ஏய்ப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இப்படி ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளை சம்பாதித்து, அவர்களின் நிர்ப்பந்தங்களையும் சமாளிக்கமுடியாத ரவி, ஒருநாள் தூக்கில் தொங்கினார். அவரது பிரேத பரிசோதனை முடியாத நேரத்திலேயே, தற்கொலை என்று அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, அதற்கு மாநில போலீசாரால் புதுப்புது காரணங்களும் கற்பிக்கப்பட்டன. அவருடன் ஐ.ஏ.எஸ். பயிற்சிபெற்று அதே கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு அதேநாளில் 44 முறை செல்போனில் பேசினார், ஒருதலை காதல் என்றெல்லாம் கரடிவிட்டார்கள்.

பொதுமக்கள் இதையெல்லாம் நம்பவில்லை. சி.பி.ஐ. விசாரணை கேட்டார்கள். கடைசியில் சோனியா காந்தியும் வலியுறுத்தியவுடன் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இப்போது சி.பி.ஐ.யின் பூர்வாங்க அறிக்கையில், பெண் அதிகாரியுடன் ரவி 44 முறையெல்லாம் பேசவில்லை, ஒரே ஒரு முறைதான் பேசியிருக்கிறார் என்று ஆதாரத்தோடு கூறி மாநில போலீசாரின் கூற்றை தவிடுபொடியாக்கிவிட்டனர். வீணாக மறைந்த அதிகாரிக்கும் அவப்பெயர், ஒரு பெண்ணுக்கும் தேவையில்லாத அவப்பெயரை சி.பி.ஐ. விசாரணை காப்பாற்றிவிட்டது. சி.பி.ஐ.யின் முழுவிசாரணையில் இன்னும் என்னென்ன வெளிவரப்போகிறதோ?, மாநில போலீசார் இனியாவது அரசியல் அல்லது செல்வாக்குள்ளவர்கள் நிர்ப்பந்தத்தால் உண்மையை விட்டு விலகாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கும் நல்லது. இதற்கு அரசுகளும், அரசியல்வாதிகளும் துணை நின்று சி.பி.ஐ.க்கு இணையாக, மாநில போலீசை செயல்பட உறுதுணையாக இருக்கவேண்டும்.

Wednesday, May 27, 2015

குறள் இனிது: அது இது எது?..by சோம.வீரப்பன்



டிஸ்கவரி சேனலில் ஒரு காட்சி. ஒரு பெரிய மான் கூட்டம். அதை தூரத்திலிருந்து படம் பிடிக்கும் கேமிரா, பின்னர் ஒரு பாறையின் மேல் இரு கால்களை ஊன்றி அந்த மான்களைக் கவனமாகப் பார்க்கும் ஒரு சிறுத்தையைக் காண்பிக்கிறது. மெதுவாகக் கீழிறங்கும் சிறுத்தை, மான் கூட்டத்தை நோக்கி மிக வேகமாகப் பாய்கிறது.

சுமார் 30 மான்கள் அங்குமிங்குமாக பயத்தில் ஓடுகின்றன. ஆனால் சிறுத்தையோ அதில் ஒன்றை மட்டும் குறிவைத்து அதன் பின்னால் விடாமல் துரத்தி ஓடி, கவ்விப் பிடித்து விடுகிறது. அடுத்த காட்சியைப் பார்க்கும் மனநிலை இல்லாததால் டிவியை அணைத்து விடுவோம்.



ஆனால் இந்நிகழ்ச்சி கற்பிக்கும் ஒரு நல்ல பாடம் நம் மனதில் தொடர்ந்து நிழலாடும். அச்சிறுத்தை மான் கூட்டத்தைப் பார்க்கும் பொழுதே எந்த ஒரு மானைப் பிடிப்பது என்று முடிவு செய்து, அந்த ஒரு குறிப்பிட்ட மானை மட்டும்தான் பின் தொடர்ந்தது.

அவ்வேட்டையின் சில தருணங்களில் வேறு சில மான்கள் சிறுத்தையின் அருகில் வந்துவிட்டாலும் அது தன் கவனத்தைத் திசை திருப்பவில்லை. சிறுத்தையின் வெற்றிக்குக் காரணம் அதன் கவனம் மாறாமல் ஒரே குறியாக இருந்ததுதானே. வெவ்வேறு மான்களைத் துரத்தியிருந்தால் பல திசைகளில் ஓடி இரை சிக்காதிருந்திருக்கும்.

ஒரு செயலைச் செய்யுமுன் அது குறித்த தெளிவான சிந்தனை அவசியமாயிற்றே. எதைச் செய்கிறோம் என்பதில் சலனமோ ஏன் செய்கிறோம் என்பதில் சஞ்சலமோ இருப்பது எந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்பதே தெரியாமல் ரயில் வண்டி ஏறுவதற்கு ஒப்பானதாயிற்றே? முடிவு பெறாத செயல்களைச் செய்பவர்கள் ஏளனமாகப் பேசப்படுவர்; அந்த அவப்பெயருக்கு அஞ்சுபவர்கள் தெளிவு இல்லாத செயலைத் தொடங்கவே மாட்டார்கள் என்கிறது குறள்.

ஒரு செயலை மேற்கொள்ளும் முன் நம்பிக்கைக்குரிய வல்லுநர்களுடன் அதை எப்படிச் செய்தால் சாத்தியமாகும், எப்பொழுது எவ்வாறு செய்ய முடியும் என்று ஆராய வேண்டும். அச்செயல் குறித்த குழப்பமில்லாத வரையறை இருந்தால்தானே நன்று. இக்காலத்தில் நிறுவனங்களின் Vision Statement & Mission Statement சொல்வது இவைகளைத் தானே?

நன்றாகக் கட்டப்பட்டிருக்கும் எந்த ஒரு வீடும் தெளிவான திட்டத்துடனும் வரைபடத்துடனுமே தொடங்கப்பட்டிருக்கும் என்பார் நெப்போலியன் ஹில். அலுவலகங்களிலும், வணிகத்திலும் அப்படித்தான். எடுத்த செயல் வெற்றிபெறத் தெளிவான குறிக் கோளும் அதைச் சென்றடைவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியும் வேண்டும். Management by Objectives இதற்குப் பெரிதும் உதவும்.

குறிக்கோள்களை எண்களாகச் சொல்வதுதான் பலன்தரும். புரிந்து கொள்வதும் எளிது. “விற்பனையைக் கூட்டுவோம், இயன்றவரை கூட்டுவோம், அதிகமாகக் கூட்டுவோம்” என்றால் என்ன புரியும்? “வரும் நிதியாண்டில் சென்ற ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்து ரூ.122 கோடியை எட்டுவோம்” என்றால் குழப்பமிருக்காதே. வெறும் எண்கள் போதாது. எந்தத் தேதியில் செய்ய வேண்டும் என்று சொல்வது முக்கியம். வள்ளுவரின் தெள்ளத் தெளிவான குறள் இதோ

தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

நம்ப முடிகிறதா?- பிரம்மாண்ட நட்சத்திரம்



மே மாதம் வந்தாலே வெயிலைக் கரித்துக்கொட்டுகிறோம். வெயில் தாங்க முடியவில்லை, வியர்த்துக்கொட்டுகிறது என்று புலம்புகிறோம். ஆனால், சூரியன் இல்லாமல் உலகில் எந்தக் காரியமும் நடக்காது. சூரியன் பற்றி கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?

பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது.

சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்துகொண்டிருக்கும்.

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.

பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவது சூரியக் கிரகணம். ஒரு முழு சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்களுக்கு நீடிக்கும்.

சூரியனின் சில பகுதிகள் கறுப்பாகத் தோற்றமளிக்கும். அவை சூரியப் புள்ளிகள். அப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் அப்படி இருக்கிறது.

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது.

பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண் டுக்கும் இடையிலான தொலைவு 14.7 கோடி கி.மீ. முதல் 15.2 கோடி கி.மீ. என மாறிமாறி இருக்கும்.

பூமியைப் போல 28 மடங்கு அதிகமான புவியீர்ப்பு விசையைக் கொண்டது சூரியன். அதன் காரணமாகத்தான் ஹைட்ரஜன் பிணைவின்போது அது வெடிக்காமல் இருக்கிறது. இல்லையென்றால், ஒட்டுமொத்த சூரியக் குடும்பமே வெடித்துச் சிதறிவிடும்.

வரலாற்றில் இதுவரை மனிதன் பயன்படுத்தியுள்ள மொத்த எரிசக்தியின் அளவு, சூரியன் வெறும் 30 நாள் பயன்படுத்திய அளவுதான்.

பெருவெடிப்பின் ஒரு கட்டத்தில் சுழலும் பெரும் வாயு மேகம் மூலம் சூரியனும், அதன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றக் கோள்கள், நிலவுகள், நூற்றுக்கணக்கான சிறுகோள்கள், எரிநட்சத்திரங்கள், விண்கற்கள் உருவாகின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெரும் வாயு மேகத்தில் 99.8 சதவீதத்தைச் சூரியன் மட்டுமே உருவாக எடுத்துக்கொண்டது. எஞ்சிய 0.2 சதவீதத்தில்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கின்றன.

பண்டைய நாகரிகங்களில் பலவும் சூரியனை மையமாகக் கொண்டு இயங்கின. எகிப்தியர்கள் ரா என்றும், மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்றும், இன்கா நாகரிகத்தினர் இன்ட்டி என்றும் சூரியனை அழைத்தனர். ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற வட்டமாக அமைக்கப்பட்ட கற்கள், சூரியனை வழிபடும் வகையில் அமைக்கப்பட்டவையே.

இயற்கையில் உள்ள கச்சிதமான வட்ட வடிவத்துக்குச் சிறந்த உதாரணம் சூரியன். சூரியன் தன் அச்சில் 25.38 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது.

பூமியைவிட, சூரியன் 10 லட்சம் மடங்கு பெரியது. பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறது சூரியன்.

சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். சூரியனின் மையப் பகுதி மிக மிக வெப்பமானது. அதன் வெப்பநிலை 27 லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட்.

சூரியனை பூமி சுற்றி வருவதாக 16-ம் நூற்றாண்டில் நிகோலஸ் கோபர்நிகஸ் கூறினார். புவியீர்ப்பு விசைக் கொள்கையையும், அதன் காரணமாகச் சூரியனை மற்றக் கோள்கள் சுற்றி வருவதையும் ஐசக் நியூட்டன் நிரூபித்த பிறகே சூரியக் குடும்பம் என்ற கருதுகோள் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிரேக்க சூரிய கடவுள் முழு சூரிய கிரகணம் சூரிய தீக்கொளுந்து

NEWS TODAY 2.5.2024