Friday, May 29, 2015

சவீதா மருத்துவக் கல்லூரியில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பயிலரங்கம்

இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிலரங்கம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் மருத்துவர் சூர்யபிரகாஷ் ராவ், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் கண்ணன், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் பிரதீப் நாயர், குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நாகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 9 முதுநிலை மாணவர்களும் இதில் பங்கேற்ற னர். இதய நோய்கள் குறித்த பல்வேறு தகவல் கள் இந்த பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப் பட்டன. சவீதா மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் ஆஷா மூர்த்தி, டாக்டர் நாராயணஸ்வாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சவீதா பல்கலை. வேந்தர் என்.எம்.வீரய்யன் தலைமை தாங்கினார்.

டாக்டர் சூர்யபிரகாஷ் ராவ் பயிலரங்கை நடத்தினார். இதய ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த 3 பேருக்கு பயிலரங்கின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதே கல்லூரி மற்றும் வெளி கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் இந்த பயிலரங்கில் பயனடைந்தனர்.

MBBS exam delayed by 3 hrs

Students of Government Medical College, Patiala, and Gian Sagar Medical College kept on waiting for almost three hours for their MBBS final year exam of ENT to begin at Patiala Medical College today as invigilators failed to reach the examination centre on time. The paper which was supposed to begin at 8.30 am started at 11.30 am causing great inconvenience to the students.

As per rules, the students were supposed to reach the centre half an hour before the beginning of the exam. Even though all students reached the centre in time at 8 am, the two invigilators- Dr LM Garg of Maulana Medical College, Ambala, and Dr Rathore of Agroha Medical College reached the examination hall after three hours. They said though they had reached Patiala on time, they could not find the exam centre since they did not have the contact number of the college authorities. Similarly, the college authorities also did not have the contact numbers of the teachers following which they could not coordinate.

The Baba Farid University of Health Sciences in order to check the practice of cheating and assure that no one could approach the examiners seeking any favours has made a new rule according to which an invigilator is informed about the centre only a day before the exam.

Vice-chancellor of Baba Farid University of Health Sciences Dr Raj Bahadur said the university would look into the matter. “We are dealing with a large number of examiners and sometimes small hiccups arise. However, we will find out what caused the delay," he added.

HC upholds MCI action on medical admissions

Hyderabad: A two judge bench of the High Court at Hyderabad comprising Justice Ramesh Ranganathan and Justice M Satyanarayana Murthy on Wednesday refused to interdict the decision of the Medical council of India (MCI) in deleting MD (Biochemistry) from eligibility into admission in the super-specialty course of Doctor of Medicine (DM) in Endocrinology as arbitrary and illegal. 
The bench dismissed a writ plea filed by Dr P Harsha Vardhan and others seeking such declaration. A postgraduate degree in Paediatrics, General Medicine or Biochemistry was prescribed as qualifying subjects prior to the impugned amendment. The petitioners contended that they chose Biochemistry in the hope of taking up a post doctoral course and the exclusion derailed their professional plans. 
The MCI justified its action contending that it had constituted a Speciality Board to re-examine the eligibility criteria for admission into various super specialty courses and based on the recommendations the said decision was arrived at. Dismissing the writ petition Justice Ramesh Ranganathan said: Discrimination was the essence of classification and would do violence to the constitutional guarantee of equality only if it rested on an unreasonable basis. 
It was, therefore, incumbent on the petitioners to show that the classification of students into those who held a postgraduate medical degree either in Medicine or Paediatrics, and those who held a postgraduate medical degree in Biochemistry, was unreasonable and bore no rational nexus with its purported object,” the bench then went on to detail the various parameters. 
“As long as the broad features of the categorisation are identifiable and distinguishable, and the categorisation is reasonably connected with the object targeted, Article 14 does not forbid such a course of action.” 
On the question of whether the said students satisfied the eligibility and as to whether the expert body had erred in the exclusion, Justice Ramesh Ranganathan said, “The Court lacks the expertise to examine academic policies and would, ordinarily, abide by the opinion of experts. Courts should be slow to interfere with the opinions expressed by experts, and must leave such decisions to those who are more familiar with such problems, than the Courts generally can be”.

"விதி, சதி செஞ்சாலும்... வாழ்க்கைய விட்டுறாதீக!" கிராமத்து மனுஷியின் நம்பிக்கைப் பாடம்

சதியான வாழ்க்கை, வளமான தொழில், நிறைவான சொத்து என இருந்துவிட்டு, திடீரென ஒரு நாளில் உயிர் ஒன்றைத் தவிர, உடைமை என்று எதுவும் இல்லாத வறுமை சொந்தமானால்? அப்படி ஒரு நிலைதான் சாந்திக்கும் ஏற்பட்டது. ஆனால், இன்று, பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்து, தன் மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்து கம்பீர நடை போட்டு வருகிறார் சாந்தி! ஊர்க்காரர்களுக்கு வாஞ்சையுடன் ‘சாந்தியம்மா!’
‘‘யேத்தா முத்துலட்சுமி... அந்த முறுக்கு மாவ எடுத்து விரசா பிசஞ்சாதேன் நாளைக்குள்ள அம்புட்டையும் சுட்டு எடுத்து கடைகளுக்கு சப்ளை கொடுக்க முடியும். யேய்யா ராசா... செத்த நேரம் இருங்க அதிரசத்த பெட்டியில, அடுக்கிட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன்!’’
- 50 வயதிலும் தேனீ போல் பறந்து கொண்டிருக்கும் சாந்தியம்மா, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி பகுதியில் விதவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயாரித்து கடைகளுக்கும், விசேஷங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் நம்பர் - 1 சுயம் சார்ந்த விற்பனையாளர்.
‘‘நானு கலியாணம் பண்ணிப்போன வீடு, வசதியான குடும்பம். மாமனாரும் வீட்டுக் காரரும் வாழை வெள்ளாமையும், வாழைக்கா யாவாரமும் பாத்துட்டு இருந்தாக. ரெண்டு லாரி வெச்சிருந்தோம். வாரத்துக்கு ரெண்டு நாளு பெங்களூருல இருக்குற பெரிய கடைகளுக்கு எல்லாம் எங்க தோட்டத்துக்காயோட, மத்த சம்சாரிககிட்டயிருந்தும் வாழைக்கா வாங்கி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தோம்.
தொழில்ல திடீர்னு 10 லட்சம் நஷ்டம் ஆயிருச்சு. குடும்பம் நொடிச்சுப் போச்சு. வாழ்வாங்கு வாழ்ந்துட்டு வறுமையைப் பொறுக்க முடியாத மாமனாரு, விஷம் குடிச்சு இறந்துட்டாரு. ‘சொந்தக்காரவுக முன்னால வாழ்ந்துகெட்ட குடும்பமா இருக்க வேணாம், வா வெளியூருக்குப் போகலாம்’னு சொன்ன என் வீட்டுக்காரரு, பொள்ளாச்சிக்கு என்னையும் எம் மூணு புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. அங்க காய்கறிக்கடை போட்ட எடத்துலயும், தொழில் கைகூடாம பசிதேன் மிஞ்சிச்சு!’’
- வியர்வையை முந்தானையில் துடைத்து, அடுப்பில் தீயைத் தூண்டிவிட்டபடி தொடர்ந் தார் சாந்தியம்மா.
‘‘வெள்ளம் தலைக்கு மேல போனதுக் கப்புறம் சாண் போனாயென்ன, மொழம் போனாயென்ன? நாம நம்ம சொந்த ஊருக்கே போயிருவோம். எல்லாரும் என்ன நெனப்பாகன்னு கலங்காம, பொழப்புக்கு வழி தேடுவோம்னு சொல்லி, அனுமந்தப்பட்டிக்கே வீட்டுக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். எத்தனையோ பேருக்கு மொதலாளியா இருந்தவர, இன்னொருத்தர்கிட்ட சம்பளத்துக்கு வேலைக்குப் போகச் சொல்ல எனக்கு மனசு வரல. ஆனாலும் அவரா சில எடங்கள்ல வேலைக்குப் போனாரு.
எனக்கு சமையல் நல்லா வரும். எட்டு வருசத்துக்கு முன்ன ஒரு படி அரிசி போட்டு, அதிரசம் சுட்டு, வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் வெச்சு வித்தேன். அன்னிக்கு எனக்குக் கெடச்ச லாபம் 50 ரூவா. நெதமும் இப்படியே நான் அதிரசம் சுட்டு விக்க, கெடைக்குற 50, 100 ரூவாயில அடுத்த நாளுக்கான சாமான் வாங்கனு ஓடிச்சு. இந்தத் தொழில் நம்மளக் காப்பாத்தும்னு மனசுல தெம்பு வரவும், 5,000 ரூவா கடன் வாங்கி, கணிசமா மளிகை சாமான், வீட்டுக்கு முன்னாடி பெரிய அடுப்புனு போட்டு அதிரசத்தோட சேர்த்து இன்னும் ரெண்டு, மூணு பலகாரங்கள் சுட்டேன். தரத்தையும், சுவையையும் பாத்துட்டு, வீடு தேடி ஆர்டர் வர ஆரம்பிச்சது!''
- சாந்தியம்மா நெருப்பில் வெந்து, குடும்பத் தின் வயிற்றைக் குளிர வைத்திருக்கிறார்.
‘‘என் மக, மருமகனோட துபாயில இருக்குறா. பெரியவன் பேக்கரி கடையிலயும், சின்னவன் செல்போன் கடையிலயும் வேலை பாக்குறானுங்க. ‘போதும்மா நெதமும் 10 மணி நேரம் அடுப்புச் சூட்டுல நீ கஷ்டப்பட்டது’னு அவனுங்க சொல்லும்போது பெத்த மனசு குளிர்ந்து போகுது. ஆனாலும் ஒடம்புல வலுவுள்ள வரை ஒழைப்போமே? முன்னயெல்லாம் நான் ஒரே ஆளாதேன் அதிரசம், எள்ளுச்சீடை, சமோசா, மைசூர் பாகுனு எல்லாம் செஞ்சேன். தொடர்ச்சியா விசேஷம், கடைகள், வெளியூர், வெளிநாட்டுக்குச் சீர்னு ஆர்டர்கள் குவிஞ்சுட்டே இருக்க, ஒரு மாஸ்டரையும், இந்தப் பொண்ணு முத்துலட்சுமியையும் வேலைக்கு வெச்சிருக்கேன். மாசம் பதினஞ்சாயிரத்துல இருந்து இருவதாயிரம் வரைக்கும் வருமானம் கெடைக்குது!’’ என்று பெருமிதத்தோடு சொன்னவர்,
‘‘வாழ்க்கை கொடுத்த வசதிய, விதி பறிச்சா, தொவண்டு போகாதீக. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவுகளும் மறுபடியும் வாழ்ந்து காட்டலாம்!’’
- பெரிய நம்பிக்கைப் பாடத்தை எளிமயாகச் சொல்லிவிட்டார் அந்த கிராமத்து மனுஷி!
ம.மாரிமுத்து, படங்கள்: சே.சின்னத்துரை

ஸ்பீடு போஸ்ட்டா அல்லது ஸ்லோ போஸ்ட்டா?


க்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற மத்திய அரசு துறை அஞ்சல்துறைக்கு, கிராமம் முதல் நகரம் வரை அதிக வரவேற்பு இருந்தது ஒருகாலம். ஆனால், இன்றோ கூரியர் சேவையாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் அஞ்சல் துறை ஆரவாரமில்லாமல் அமைதியாக செயல்படுகிறது. அஞ்சல் துறை கொஞ்சம் கொஞ்சமாக பின்னடவை சந்திக்க நேர்ந்தது. 

இதன்விளைவு, அஞ்சல் துறையின் முக்கியமான சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அஞ்சல் துறையின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அக்கறை செலுத்தத் தொடங்கியது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நன்மதிப்பு பெற்ற அஞ்சல் துறை 'போஸ்டல் லைப் இன்ஸ்சூரன்ஸ்', 'தங்க நாணயங்கள் விற்பனை' ஆகியவற்றில் கால்பதித்தது. தனியார் பங்களிப்புடன் செயல்படும் தங்க நாணய விற்பனை சில தலைமை தபால் நிலையங்களில் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வங்கிகளைப் போல சேமிப்பு கணக்கு சேவையையும் விரிவுப்படுத்திய அஞ்சல் துறை இப்போது ஏ.டி.எம் மையம் வரை தொடங்கி இருக்கிறது. 

அடுத்தக்கட்டமாக, ஷாப் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அஞ்சல் துறையில் கடமைக்குப் பணியாற்றுபவர்களின் சிலரால் அதன் அணுகுமுறை மக்கள் மத்தியில் பெரியளவில் சென்றடையவில்லை. சமீபத்தில் 'செல்வமகள்' என்ற சேமிப்புத் திட்டம் அஞ்சல் துறை மீண்டும் மக்களை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அஞ்சல் துறையில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) என்ற சேவை உள்ளது. இதற்கு சாதாரண தபால் சேவையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சாதாரண தபாலை விட விரைவாக இது செயல்படும். இதன் காரணமாக இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால், சில ஊழியர்களின் மெத்தனப் போக்கு சில நேரங்களில் ஸ்பீடு போஸ்ட், ஸ்லோ போஸ்ட்டாக மாறி விடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட்டில் அனுபப்படும் தபால்கள் அல்லது பார்சல்கள் மூன்று நாட்களுக்குள் சென்னைக்கு வந்து, சென்னை முகவரி இருந்தால் அது உடனடியாக டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட் மூலம் ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் பந்தாடிய சம்பவம் இது.


கடந்த 7-ம் தேதி மும்பையிலிருந்து சென்னை திருநின்றவூருக்கு ஒரு பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. 9-ம் தேதி சென்னை அண்ணா சாலைக்கு அந்த பார்சல் வந்து சேருகிறது. பிறகு அங்கிருந்து 12-ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறது. (விழுப்புரத்துக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை). பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை அண்ணா சாலைக்கு அனுப்பப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து 13-ம் தேதி திருநின்றவூருக்கு அனுப்பப்படுகிறது. 

திருநின்றவூரில் பார்சலின் முகவரி தவறு என்று குறிப்பிட்டு 14-ம் தேதி அண்ணா சாலைக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. 15-ம் தேதி அண்ணா சாலையிலிருந்து மும்பைக்கு முன்பதிவு செய்த இடத்துக்கே திரும்ப அனுப்பப்படுகிறது. 16-ம் தேதி மும்பைக்கு சென்றடைந்த அந்த பார்சல் 17-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு 7-ம் தேதி மும்பையில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த பார்சல், அங்கிருந்து வரும் போது தாமதமாகினாலும் மீண்டும் அனுப்பும் போது விரைவாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக அந்த பார்சல் திரும்ப அனுப்பப்பட்டது என்று விசாரித்தபோது முகவரியில் வீட்டின் எண் மாறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறையினர் தெரிவித்தனர். சரியான முகவரி இல்லை என்று சொல்லும் அஞ்சல் துறையினரின் வாதம் சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஸ்பீடு போஸ்ட் என்பது விரைவான சேவையாகும். அந்த சேவையில் குறிப்பிட்ட தினத்துக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், அஞ்சல்துறையில் சிலரின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதால் பொது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு பொருளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு டெலிவரி செய்து விடப்படும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் எதற்காக கூடுதல் நாட்கள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர் புகார் கொடுத்தால் அதற்கு காரணமாக ஊழியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "இந்திய அரசின் அஞ்சல் துறையில் சிலர் செய்யும் தவறுகளாலும், நுகர்வோருக்கு அங்கு போதிய வரவேற்பு இல்லாததாலும் தனியார் கூரியர் நிறுவனங்களைத் தேடி மக்கள் செல்கிறார்கள். அஞ்சல் துறையை விட கூடுதல் கட்டணம் என்றாலும் கூரியர் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் தவறுதலாக விழுப்புரத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். 

இதனால், காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர்ந்தால் சேவையில் குறைபாடு என்ற காரணத்துக்காக அஞ்சல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு (நிவாரணத் தொகை) பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. அடுத்து பார்சல் அனுப்பிய நிறுவனம் தவறுலாக வீட்டின் முகவரியில் எண்ணை மாற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே பார்சல் திரும்ப அனுப்பபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் சரியான முகவரியை கொடுத்து இருக்கிறார். இதனால் கவனக்குறைவு என்பதற்காக அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்ற கதவை தைரியமாக தட்டலாம்" என்றார்.

- செல்வ மகேஷ் ( திருநின்றவூர்)

ஜூலை 1 முதல் அறிமுகமாகிறது சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் திட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது சுவிதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் டிக்கெட் திட்டம்.

டைனமிக் டிக்கெட் முன்பதிவு முறையில், தேவைக்கு ஏற்ப ரயில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்கும் வகையில் சுவிதா ரயில் டிக்கெட் முறை அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ரயில் டிக்கெட், தேவைக்கு ஏற்ப உயரும். ஆனால், இரண்டு மடங்கை விட அதிகமாக இருக்காது என்பதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது.

எனவே, ப்ரீமியம் ரயிலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டமே இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மட்டும் அல்லாமல், ரிசர்வேஷன் கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு ஜாதிச் சான்று மறுப்பு மருத்துவ விண்ணப்பம் ஏற்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை:'மாணவிக்கு ஜாதிச் சான்று மறுக்கப்பட்டதை காரணமாகக்கூறி மருத்துவப் படிப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.அழகர் என்பவர் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி விமான நிலையத்தில் பியூனாக வேலை செய்கிறேன். நான் பழங்குடியினர் (இந்து- மலைக்குறவன்) வகுப்பை சேர்ந்தவன் என தாசில்தார், உதவி -கலெக்டர் சான்று அளித்துள்ளனர். எனது மனைவிக்கும் அதே ஜாதிச் சான்று உள்ளது. பள்ளியில் எனது மகன், இரு மகள்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜாதிச் சான்று கோரி திருநெல்வேலி ஆர்.டி.ஓ.,விடம் 2013ல் விண்ணப்பித்தோம். துாத்துக்குடி உதவி கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினார். அவரிடம் 2015 பிப்.,25 ல் மனு அளித்தோம்.உதவி கலெக்டர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். வல்லநாடு வி.ஏ.ஓ., மூலம் விசாரணை நடந்தது. ஜாதிச்சான்று வழங்க உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஜாதிச்சான்று வழங்கவில்லை.

துாத்துக்குடி கலெக்டரிடம் புகார் செய்தேன். கோபம் அடைந்த உதவி கலெக்டர், மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.எனது பெற்றோர் பழங்குடியினர் ஜாதிச்சான்று வைத்துள்ளனர். எனது மகள் புவனேஸ்வரி பிளஸ் 2 தேர்வில் 1123 மதிப்பெண் பெற்றார்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 29. ஜாதிச்சான்று வழங்காவிடில் புவனேஸ்வரியின் எதிர்காலம் பாதிக்கப்படும்.பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் புவனேஸ்வரிக்கு ஜாதிச்சான்று சமர்ப்பிப்பதில் தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்க மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வாரிசுகளுக்கு ஜாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மனுதாரர் வழக்கறிஞர் ஆதித்ய விஜயாலயன் ஆஜராகினர்.நீதிபதிகள் ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு உத்தரவு:

ஜாதிச்சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாகக்கூறி புவனேஸ்வரியின் விண்ணப்பத்தை பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்கள்

நிராகரிக்கக் கூடாது. தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து ஜூன் 12 க்குள் ஜாதிச் சான்று வழங்குவதாக அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வழங்காத பட்சத்தில் மாணவர் சேர்க்கை செயலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

NEWS TODAY 2.5.2024