Wednesday, July 22, 2015

திருமண பதிவு கட்டாயமல்ல: ஐகோர்ட் அதிரடி

மதுரை:'இந்து திருமண பதிவுச் சட்டப்படி திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல; திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக, உரிமையை மறுக்க முடியாது. மனுதாரருக்கு, குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீவில்லிபுத்துார் தவமணி தாக்கல் செய்த மனு:

என் கணவர் ராஜு, மதுரை சமயநல்லுார் மின்வாரியத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, 2000ல் ஓய்வு பெற்றார்; 2014ல் இறந்தார். அவரது முதல் மனைவி துர்க்கையம்மாள், ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர், 1997ல் இறந்தார்.

எனக்கும், ராஜுவிற்கும், 1977ல் திருமணம் நடந்தது. எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். துர்க்கையம்மாள் மகன் எங்களுடன் வசிக்கிறார்.

நிராகரித்தார் :குடும்ப ஓய்வூதியம் கோரி, மதுரை மின்வாரிய (டான்செட்கோ) கண்காணிப்பு பொறியாளரிடம், 2014ல் விண்ணப்பித்தேன். அவர், உள் தணிக்கை அலுவலருக்கு (ஓய்வூதியம்) அனுப்பினார். அவர் திருமண பதிவுச் சான்று இல்லை எனக்கூறி நிராகரித்தார்.

அதை ரத்து செய்து, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தவமணி குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009ல் அமலானது. அதற்கு முன் இதுபோன்ற நிபந்தனை இல்லை. மனுதாரருக்கு போட்டியாக, வேறு யாரும் குடும்ப ஓய்வூதியம் கோரவில்லை.இந்து திருமண பதிவுச் சட்டப்படி, திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல. பதிவு செய்யவில்லை என்பதற்காக, திருமணம் செல்லாது எனக்கூற முடியாது.

திருமணத்தை பதிவு செய்யவில்லை, பதிவுச் சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக நியாயமான உரிமைகளை மறுக்க முடியாது.பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கருதினால், ஒட்டுமொத்த திருமண முறையில் குழப்பம் ஏற்படும். பதிவு செய்யாத திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.

ஓட்டைகள் :திருமண பதிவுச் சட்டம் கொண்டு வந்த, சட்டசபையின் நோக்கம் பாராட்டும் வகையில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்வதை தவிர்க்க பல்வேறு ஓட்டைகள்

உள்ளன.மனுதாரருக்கு, 1977ல் திருமணம் நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் உட்பட, 12 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மின்வாரியத்தின் கருத்து ஏற்புடையதல்ல. குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சென்னை உள் தணிக்கை அலுவலர் (ஓய்வூதியம்) ஆவணங்களை பரிசீலித்து, குடும்ப ஓய்வூதியத்தை, இரு மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!

பண்டைய காலத்தில் இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி என்பது உச்சத்தில் இருந்திருக்கிறது. இதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்றே சான்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வெளிநாட்டில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து கல்வி கற்று சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஆண்டுதோறும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேடி 2 லட்சம் மாணவர்கள் செல்வது அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் இந்தியாவில் பல இடங்களில் கல்வி கண்காட்சிகளை நடத்தி, தங்கள் நாடுகளில் உள்ள எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன?, என்னென்ன வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன? என்றெல்லாம் விளக்கி காந்தம்போல மாணவர்களை இழுத்து செல்கின்றன.

இந்தியாவில் அதே படிப்புகள் இருந்தாலும், வெளிநாடுகளில் படிக்கச்சென்றால், அங்கு படித்து முடித்துவிட்டு, அந்த பட்டத்தோடு ஒன்று வெளிநாட்டிலேயே அதிகச்சம்பளத்தில் வேலைபார்க்கலாம். இல்லையென்றால், இந்தியாவில் அந்தப்பட்டங்களுக்கு அதிக மதிப்பு இருப்பதால் நிறைய சம்பளம் பெறலாம் என்ற ஆசையோடு செல்கிறார்கள். ‘வாழ்க்கையில் நீங்கள் நாளை அடையப்போகும் வெற்றியின் அளவு, இன்று நீங்கள் வாங்கும் பட்டங்களை பொருத்துத்தான் இருக்கிறது’ என்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூறுவது, அவர்களை பெரும்பாலும் அங்கு செல்ல ஈர்த்துவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. உயர்படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘‘எங்களுக்கு அங்கேயே உதவித்தொகைகள் கிடைக்கிறது. இல்லையென்றால், வேலைபார்த்துக்கொண்டே படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசதரத்தில் கல்வி இருக்கிறது என்றும் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்வதால் அன்னியச் செலாவணி அதிகமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவை இப்போது எடுத்துள்ளது.

எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு நம் மாணவர்கள் செல்கிறார்களோ, அந்த வெளிநாட்டு பல்கலைக் கழகங்களே இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசாங்கமும் முடிவுசெய்துள்ளது. இவ்வளவு நாளும் இது நடைமுறைக்கு வராமல் இருந்ததற்கு காரணம், இங்கு பல்கலைக்கழகங்களை அமைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்காத காரணம்தான். இப்போது மத்திய அரசாங்கம் வகுத்துக்கொண்டிருக்கும் திட்டத்தின்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் பல்கலைக் கழகங்களை தொடங்கலாம். தங்களின் பாடத்திட்டத்தையே அறிமுகப்படுத்தலாம். அங்கிருந்தே ஆசிரியர்களை கொண்டுவரலாம். இந்ததிட்டம் குறித்து ஆராய செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு எடுக்கும் முடிவுகள், அமைச்சர்கள் குழுவில் பரிசீலிக்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, தேவையான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைக்கப்படுவதால், இந்தியாவில் இருந்து மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத்தேடி செல்லாத நிலையையும் உருவாக்க முடியும். அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இருந்து மாணவர்கள் இந்தியாவில் உள்ள அந்த பல்கலைக்கழகங்களுக்கு வந்து படிக்க வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி, அன்னியச் செலாவணியை பெருக்கவும் வழிவகுக்கலாம். ‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’ என்ற பாரதியாரின் வாக்குப்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு வரட்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளும், இந்த பல்கலைக்கழகங்களோடு இணைப்புகள் ஏற்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Tuesday, July 21, 2015

University initiates enquiries into sexual harassment case

COIMBATORE: Bharathiar University has initiated enquiries into the complaints filed by two women PhD candidates. In the first case, a PhD candidate registered a case of sexual harassment against the university's English department head while a case of holding fraudulent viva-voce was registered by another English department PhD candidate. The university has asked the ethics committee and the women harassment cell to look into both the issues.

University vice-chancellor James Pitchai said, "We have given the committee 20-30 days to submit its report on both complaints."

According to her complaint, Anitha Rajan, a candidate who had registered for PhD under the English department back in 2010, had discontinued her studies in 2012 due to personal circumstances. Following this, in June 2014, she approached the university seeking permission to complete her PhD. She formally began her studies on March 2015.

She filed her complaint with the police alleging sexual harassment by the department's head D Saravana Selvan on July 9.

Following this, another English department candidate, Elsamma Sebastian, 52, levelled allegations that the PhD viva-voce held for her, this February, was fraudulent. According to her complaint, a linguistics department professor was appointed as the observer for her examination after she refused to pay an assistant professor of her own department who demanded a bribe to hold her viva-voce.

In Anitha Rajan's case, Sarvana Selvan denied the allegations stating that he had met Anitha only four times since June 2014.

Interestingly though, he had submitted a written complaint to the university on June 22 claiming an internal conspiracy hatched to taint his image. "I requested the university to register a police complaint as it involved charges of sexual harassment against me," said Selvan.

When TOI questioned, James Pitchai, about the Selvan's petition that was submitted almost a month ago — which was ideally ample time for the committee to have found the culprit -- he rebutted saying, "while the committee was enquiring Saravana Selvan's complaint, Anitha filed a complaint with the police on July 9. So, the ethic committee had to look into both matters simultaneously."

On the other hand, in Elsamma Sebstian's case, the university had asked the Dean of Arts to sit in as the observer for her viva-voce when ideally only an English department professor can. According to Elsamma, the assistant professor of her department demanded a bribe to be an observer for the viva voce, a share which he would give to the university officials. When Elsamma refused to pay him, the Dean of Arts who knew nothing about her subject was made the observer.

Search panels have failed to pick right candidates to VC posts, says expert

It’s our job to search for the diamonds: Hari Gautham

Former UGC chairman Hari Gautham on Monday said the search committees constituted to select Vice-Chancellors to universities in the country have not been able to choose the right persons to the key posts.

Speaking at the inauguration of a seminar on ‘The Structure and governance of universities’ at the University of Mysore here, Prof. Gautham said in the last 10 years, the committees, comprising academics and experts, have not picked competent candidates to the posts. He said being an eminent academic or a distinguished scientist should not be the criteria for the selection of the VC as there are several other parameters to mull over before selecting the candidate.

Unfortunately, this is not happening and VCs are selected based on their curriculum vitae, ignoring other factors necessary for examination, he said. The former UGC chairman heads the committee set up by the Ministry of Human Resource and Development to examine the functioning of the University Grants Commission (UGC). “The VC is the leader of the university. If the VC is not a leader, he or she is not fit to hold the post. The governance of a university will be good under an able vice-chancellor,” Prof. Gautham said. He suggested that the search panels must be given time to pick the best candidate. “It’s our job to search for the diamonds; the diamonds will not come to us.” Merit should be the sole criteria for zeroing on the candidate for the VC’s post, and the 10-year professorship criterion for becoming eligible for the VC’s post should go, he said.

Varsity teachers

Prof. Gautham proposed setting up of a committee to review the performance of university teachers once in five years. The panel should consist of at least three members from outside the State. “If the performance of the teacher is not satisfactory, he or she should be given a grace period of two years to improve. If they fail, they should be terminated without an inquiry,” he recommended.

The Vice-Chancellor is the leader of the university. If the VC is not a leader, he or she is not fit to hold the post

Hari Gautham

Former UGC chairman

Monday, July 20, 2015

தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால் கேஸ் மானியம் பறிபோகுமா?


செல்பேசி வாயிலாக சிலிண்டரை பதிவு செய்யும் போது, தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால், வாடிக்கையாளரின் கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று புரளி கிளம்பியது.

சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ஐவிஆர்எஸ் முறையில் ஒலிக்கும் குரல், உங்களால் முடிந்தால், கேஸ் மானியத்தை திரும்ப அளித்துவிடுங்கள். அதற்கு '0'-ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சிலிண்டர் பதிவு செய்ய எண் 1 ஐ அழுத்துங்கள் என்று கூறுகிறது.

வாடிக்கையாளர்கள் தவறுதலாக '0'-ஐ அழுத்திவிட்டால் உடனடியாக அவர்களது கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஐஓசி அதிகாரிகள் கூறியதாவது, தெரியாமல் பூஜ்யத்தை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகாது. '0'-ஐ அழுத்திய பிறகு அடுத்த கேள்விகள் வரும். அதில் எண் 7 ஐ அழுத்தினால் மட்டுமே கேஸ் மானியம் ரத்தாகும்.

அப்படியே தவறி 7ஐயும் அழுத்திவிட்டாலும் கூட, உடனடியாக சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் கேஸ் மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றனர்.

சாலை விபத்துகளும், தற்கொலைகளும்!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2012–ம் ஆண்டிலேயே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு முதல்இடத்திற்கு வந்துவிட்டது. அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழந்தனர். தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சாலை விபத்து உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் கணக்கீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 2014–ம் ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 107 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில், தமிழ்நாட்டில் மட்டும் 17 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை தந்துள்ளது. சென்னையில் நடந்த விபத்துகளில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளின் எண்ணிக்கையை பொருத்தமட்டில், நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டில், அதாவது 69,095 விபத்துகள் நடந்து இருக்கின்றன. இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புகளில் தமிழ்நாடுதான் முதல் இடம்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட வேதனையான தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்றும், இதில் மராட்டியத்தில் 16,307 பேர்களும், தமிழ்நாட்டில் 16,122 பேர்களும் தற்கொலை செய்து முதல் இரு இடங்களில் இருக்கிறார்கள். ஆக, சாலை விபத்துகளை தடுப்பதிலும், தற்கொலைகளை தடுப்பதிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

சாலை விபத்துகளை தடுக்கவேண்டும் என்றால், நிச்சயமாக போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. சாலைகளை இன்னும் சீராக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் செலவை பொருட்படுத்தாமல், ஆங்காங்கு சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். ஒரு வாகனம் விதியை மீறினாலோ, அல்லது அதிவேகத்தில் சென்றாலோ, அந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவான தகவல்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், கண்காணிக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவேண்டும். அனைத்து சாலைகளிலும் எது ஒருவழிப்பாதை?, எந்தெந்த வழி எந்தெந்த வாகனங்களுக்கானது?, எந்தெந்த இடங்களில் குறுக்கு சாலை சந்திக்கிறது?, எந்தெந்த இடங்களில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம்? என்பதை விளக்கும் போர்டுகள் வைக்கப்படவேண்டும். ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால், அந்த இடத்திலிருந்து சில நிமிடங்களில் அவர்களுக்கு முதல் உதவியோ, தொடர் மருத்துவ சிகிச்சையோ அளிக்கும் வகையிலான சிகிச்சை நிலையங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

ஏற்கனவே, வருகிற அக்டோபர் 1–ந்தேதி முதல் அனைத்து புதுவாகனங்களிலும் ‘ஸ்பீடு கவர்னர்கள்’ என்று அழைக்கப்படும், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவேண்டும் என்ற அறிவிப்பை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், படிப்படியாக அனைத்து வாகனங்களிலும் பொருத்தவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். இந்த அறிக்கை வெளியான அதேநாளில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விபத்து சிகிச்சை தொடர்பான முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கை மணியை அடித்துவிட்டது. உடனடியாக, சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிப்பதை உறுதிசெய்து, விபத்தில்லா தமிழ்நாடாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து, அவைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

Sunday, July 19, 2015

Day 2:BSC nursing students protest against hefty fee - Srinagar , 07 Jul 2015

Various students of BSc nursing enrolled at Government Medical College here Tuesday staged protest demonstrations at Pratap Park against the hefty fee structure for the second consecutive day.“Our fee structure has not yet been declared by the government and as per the new notification, we have been asked to submit a fee of Rs 23,400 which is very large amount,” said protesting students.The students said that fee structure at SKIMS for the same course is only Rs 2500 and besides this, they get a monthly stipend of Rs 500.“Most students in our class come from poor families. How can we furnish such a large amount?” they asked.

Adding to their misery, most of these students have cancelled their admission at other nursing colleges like Bibi Halima College, to get enrolled at GMC hoping that the college would charge less.“I thought the admission to this college would come as a reprieve but it only worsened my problems. We are not that financially sound that we can shell out a fee of this amount,” said one of the students.The students said that fee for candidates pursuing MBBS in their collage is just Rs 10, 000. (CNS)

- See more at: http://www.5dariyanews.com/news/90957-Day-2-BSC-nursing-students-protest-against-hefty-fee#sthash.WHJEQizZ.dpuf

NEWS TODAY 2.5.2024