Tuesday, February 23, 2016

Will take action if univs don't follow norms, says UGC

TIMES OF INDIA

Chennai: Tamil Nadu's State universities that have not yet adopted the University Grants Commission (UGC) Regulations for appointment of vice-chancellors and other factors could face action, as the UGC told the Madras high court on Monday it had decided to write to the Centre on the issue.

Additional solicitor general of India G Rajagopalan, representing UGC, told the first bench of Chief Justice Sanjay Kishan Kaul and Justice Pushpa Sathyanarayana that UGC will 'very soon' take action in the case once the Centre replies to its communique.

A submission to this effect was made when a PIL filed by ChangeIndia director A Narayanan to quash a May 2015 advertisement calling for applications for appointment of vice-chancellors for the state universities. Pointing out that the state universities had not adopted UGC Regulations, it would be impermissible to allow them to go ahead and adopt a different procedure for selection of vice-chancellors in violation of UGC regulations.

The first bench reserved its orders on Monday, but not without mildly rapping the UGC for its inaction. Pointing out that advocate general of Tamil Nadu A L Somayaji had repeatedly said adopting UGC Regulations by state universities was 'under consideration,' the judge said it is obvious now that no decision would be taken any time soon. But what action has UGC taken, it asked the additional solicitor general who was assisted by UGC's standing counsel Gopinathan.

Somayaji, however, said the Supreme Court had categorically addressed all the issues raised by the PIL by in the Kalyani Mathivanan case, and that unless the universities adopt the UGC Regulations they would not be bound by the latter while selecting vice-chancellors. "Merely because the Regulations are not adopted, there would not be any vacuum. The Act of the university concerned would operate during the period," he said.

Counsel for PIL-petitioner, however, said that in the case of Madurai Kamaraj University the UGC Regulations had been adopted only for the purpose of payscale, including that of vice-chancellor. Such partial adopting of regulations is impermissible, he said.

100 மடங்கு வேகத்தில் நவீன தொழில்நுட்பம்: 5 வினாடிகளில் செல்போனில் சினிமாவை பதிவு செய்யும் வசதி

Logo

லண்டன், பிப். 23–

செல்போன்களில் சினிமா படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன்களில் ஒரு சினிமா படத்தை ‘டவுண்லோடு’ அதாவது பதிவிறக்கம் செய்ய 8 நிமிடங்கள் ஆகின்றன.

ஆனால் ஒரு முழு சினிமா படத்தையும் 5 வினாடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘சாம்சங்’ மற்றும் ‘பியூஜித்சூ’ ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அதிவேக தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல் இண்டர்நெட்டை உருவாக்கியுள்ளனர்.

அது தற்போதுள்ள இன்டர்நெட் வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது. இதை ‘5ஜி’ என்று அழைக்கிறார்கள். இதனுடன் ஆன வயர்லஸ் தொழில்நுட்பம் 2018–ம் ஆண்டுதான் முற்றிலும் முடிவடையும்.

இதன் மூலம் செல்போன்கள் மற்றும் டேபிளட்டுகளில் மாணவர்கள் சினிமா படங்களை 8 வினாடிகளில் பதிவு செய்ய முடியும். கம்பெனிகளும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பணி ஓய்வுக்குப் பிறகு?

Return to frontpage
வாசு கார்த்தி




தற்போது 30 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் சென்று ஓய்வுகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டீர்களா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது சேமிக்க முடியாவிட்டால் எப்போதும் சேமிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இப்போது ஏன்?
ஓய்வு காலத்துக்கு இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதற்கு பல காரணங்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அதனால் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் இப்போது தனிக்குடும்ப சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு காலத்துக்கு பிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவு. பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் இப்போது சேமிக்கும் தொகைதான் வருங்காலத்தில் பயன்படும்.
வாழ்க்கை முறை
பொதுவாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணி ஓய்வுக்கு பிறகு 20 ஆண்டுகள் வாழ்வது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் 60 வயதுக்கு பிறகு நமக்கு என்ன செலவு இருக்கப்போகிறது என்று யோசிப்பதை விட்டுவிடுங்கள். அதுபோல இப்போது ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு தொகை அப்போது பல மடங்கு அதிகரிக்கும். இந்த பணவீக்கத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வாடகை வீட்டில் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வாடகை எந்த அளவுக்கு உயரும், விலைவாசி எவ்வளவு உயரும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். இத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் என்றால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதே முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
எதில், ஏன்?
ஓய்வு காலத்துக்கு பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆயூள் காப்பீடு, புதிய பென்ஷன் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட பல வகையான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இருந்தன. இப்போது மியூச்சுவல் பண்ட்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பிராங்க்ளின் இந்தியா மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட்களில் இந்த வகையிலான பண்ட்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இதுபோன்ற ஓய்வு கால பண்டை அறிமுகப்படுத்தியது. கடந்த வாரத்தில் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ஓய்வு கால பண்டுக்கான என்.எப்.ஓ (புதிய பண்ட் வெளியீடு) முடிந்துள்ளது. மேலும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, கனரா ராபிகோ, ஐடிபிஐ, டிஎஸ்பி பிளாக்ராக், பிர்லா சன்லைப் மற்றும் எல்ஐசி நொமுரா ஆகிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதுபோல ஓய்வு கால பண்ட் வெளியிட செபியிடம் அனுமதி கோரியிருக்கின்றன. பட்ஜெட்டுக்கு பிறகு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
சலுகைகள் என்ன?
வரிவிலக்கு மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த இஎல்எஸ்எஸ் வகை பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை மூன்று வருடத்துக்கு வெளியே எடுக்க முடியாது. அதுபோல ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது. ஐந்து வருடம் முடிந்தாலும், 60 வயதுக்கு முன்பாக முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டிய தேவை இருந்தால் வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த பண்டில் மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள். 60-80 சதவீதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்வது, 5-30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வயது குறைவாக இருப்பவர்கள் முழுவதும் ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்குச்சந்தை சார்ந்த பேலன்ஸ்டு பண்டையும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் பண்டையும் தேர்வு செய்யலாம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் 100 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிர என்பிஎஸ் அல்லது இன்ஷூரன்ஸில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்த மொத்த தொகையையும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகையை ஆனுட்டி திட்டங்களில் முதலீடு செய்தே மாதந்தோறும் தொகையை வாங்க முடியும். ஆனால் இங்கு எஸ்டிபி முறையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ள முடியும்.
முதலீடு செய்யலாமா?
புதிதாக வந்திருக்கும் ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். பொதுவாக புதிய பண்ட் வெளியீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு பண்டின் செயல்பாடு, பண்ட் நிர்வாகி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே பரிந்துரை செய்வேன்.
ஆனால் பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். சிலர் அவசியமாகவும், சிலர் அநாவசியமாகவும் முதலீட்டை பாதியில் திரும்ப பெருகின்றனர். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை.
இது போன்ற சமயங்களில்தான் இலக்குகளுடன் கூடிய முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு இலக்குடன் முதலீடு செய்யும் போது அந்த தொகையை வெளியே எடுக்க முடியாது. எடுக்கும் பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதனால் முதலீட்டை திரும்ப பெறாமல் தொடரவே வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுப்பாடு அவசியம் என்றே தோன்றுகிறது.
சாதாரண ஈக்விட்டி பண்ட்கள் அல்லது சந்தையில் சிறப்பாக செயல்படும் இஎல்எஸ்எஸ் பண்ட்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இதுபோன்ற புதிய ஓய்வுகால பண்ட்களின் வருமானம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது கணிசமான வருமானம் கிடைக்கலாம். ஓய்வு பெற்ற கவலை வேண்டுமானாலும் பட முடியுமே தவிர, திட்டமிட முடியாது. திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும் என்றார்.
உங்கள் திட்டத்தை எப்போது தொடங்கபோகிறீர்கள்?
- karthikeyan.v@thehindutamil.co.in

Monday, February 22, 2016

களம் புதிது: விருது வென்ற விவசாயி!

Return to frontpage

இதை ஆண்களால் மட்டும்தான் செய்ய முடியும், பெண்கள் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்ற கற்பிதம் விவசாயத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாற்று நடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு என்று பல்வேறு விவசாய வேலைகளில் பெண்கள் ஈடுபட்டாலும் விவசாயத்தை முழுமையாக செய்துமுடிக்கும் திறமையும் தெளிவும் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்ற எண்ணத்தைத் தன் மகத்தான வெற்றியால் தவிடுபொடியாக்கியிருக்கிறார் பிரசன்னா. நெல் சாகுபடியில் தமிழக அளவில் முதலிடம் பெற்று, சிறந்த விளைச்சலுக்கான விருது பெற்றிருப்பது இவரது விவசாய திறமைக்கு ஒரு சோற்றுப் பதம்.

மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னாவுக்கு 32 வயது. முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் படிப்பும் முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டியவர் ஏன் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்? இதற்கான விடையை பிரசன்னாவே சொல்கிறார்.

“விவசாயம்தான் எங்கள் குடும்பத் தொழில். அதனால் ஓடியாடி விளையாடுகிற வயதிலேயே என் பெற்றோருடன் வயலில் இறங்கி, கூட இருந்து உதவுவேன். வயல்களைச் செழிப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே எனக்கு வந்துவிட்டது. அதோடு விவசாயத்தை இப்படித்தான் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்ற ஆசையும் வந்தது. என் கணவர் பத்மநாபன் என்னை மனைவியாக ஏற்க முக்கியமான காரணமே, நான் வயல் வேலையில் ஆர்வம் காட்டியதுதான்” என்று சொல்லும்போதே பெருமிதத்தில் மின்னுகின்றன பிரசன்னாவின் கண்கள்.

பல லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும் டெல்டா பகுதியில், திட்டமிட்டு விவசாயம் செய்யும் பெரும் நிலச்சுவான்தார்கள்கூட நெல் விளைச்சலில் பிரசன்னாவின் சாதனையை நெருங்க முடியவில்லை. நம் பாரம்பரிய விவசாய முறைகளை விட்டுவிடாமல், காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிற நேர்த்தியும்தான் பிரசன்னாவுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

“விவசாயம்தான் என் தொழில்னு முடிவு பண்ணிட்ட பிறகு, அதில் என் தனித்துவத்தைக் காட்ட வேண்டாமா? ஒவ்வொரு வருஷமும் மாநில அளவில் நெல் விளைச்சலில் சாதனை படைக்கிறவர்களுக்கு விருது தருவதோடு ஐந்து லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் தருவதைக் கேள்விப்பட்டேன். எப்படியாவது இந்த விருதை வாங்கியே ஆகணும்னு உழைச்சேன். என் கணவர் அதுக்கு பக்க பலமா இருந்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மூணு முறையும் தோல்விதான் எனக்குப் பரிசா கிடைச்சுது. அதுக்காக விவசாயத்தை விட்டுட முடியுமா என்ன? அந்தத் தோல்விகளையே அனுபவமா ஏத்துக்கிட்டு, எங்கே எல்லாம் சறுக்கல் நடந்திருக்குன்னு பார்த்து, அதையெல்லாம் சரிபடுத்தினேன்” என்று சொல்லும் பிரசன்னா, தன் நான்காவது முயற்சியில் வாகை சூடிவிட்டார்!

சின்னப்பட்டி கிராமத்திலிருக்கும் தனது வயலில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்தார். வயலில் ஆட்டுக்கிடை அமைத்து, ஏற்கெனவே விதைத்திருந்த தக்கைப் பூண்டு செடிகளை மடக்கி உழுது உரமாக்கினார். மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து, தான் வளர்த்த கால்நடைகளிலிருந்து கிடைத்த உரத்துடன் மண் புழு உரத்தையும் சேர்த்து இட்டார். விதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, நாற்றுகளுக்கான இடைவெளிவரை அனைத்தையும் திட்டமிட்டுச் செய்தார். சீரான இடைவெளியில் களை எடுத்தார். களைகளின் வேர்கள் அறுபட்டு வயலிலேயே விழுந்ததைல் அவையும் உரமாகின. இடையிடையே உரங்களும் இட, இந்தப் பணிகள் அனைத்தையும் வேளாண் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். எதிர்பார்த்தபடி பயிர் செழிப்பாக வளர்ந்தது. ஒரு குத்து நாற்றில் 49 சிம்புகள் உருவாயின. இவை தரமான, அதிக எண்ணிக்கையான மணிகள் கொண்ட மகசூல் அளிக்கும் கதிர்களாக உருவாயின. இதே நேரத்தில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல் தென்பட, வேப்பெண்ணெய் மூலம் அதையும் சமாளித்தார்.

“‘நீர் மறைய நீர் கட்டு’ என்று சொல்வார்கள். அதை நான் மிகச் சரியாகப் பின்பற்றியதால், குறைந்தளவு தண்ணீரில் நல்ல விளைச்சலைத் தர முடிந்தது. வேளாண் அதிகாரிகள் பலர் நடுவர்களாக இருந்த நிலையில், கதிர் அறுவடை நடந்தது. ஒரு ஹெக்டேரில் 16,115 கிலோ மகசூல் கிடைத்தது. எதையும் சரியாக திட்டமிட்டுச் செய்தால் சாதிப்பது எளிது” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார் பிரசன்னா.

மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ், “ஏனோதானோ என்றில்லாமல் விவசாயத்தை முழுமையாக நம்பினார் பிரசன்னா. அனுபவம் மிக்க விவசாயிகளைவிட மிக நேர்த்தியாகத் தொழிலை மேற்கொண்டதுடன், இயற்கை விவசாயத்தை நம்பியதால் சாதனை அவருக்கு வசமானது. 150 பேரை பின்னுக்குத் தள்ளி, இந்த விருதைப் பெற்ற முதல் பெண் பிரசன்னாதான்” என்றார்.

விவசாயத்திலும் சாதிக்கலாம்!

உயர் கல்வி படித்துவிட்டு வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருப்பதை விட நம் அனைவரின் உயிர் வளர்க்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்கிறார் பிரசன்னா. “நலிந்துவரும் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் உண்டு. விவசாயம் பொய்த்துப் போவதும் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளும் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் என்ற இலக்குடன் செயல்பட்டால் விவசாயத்தில் வெற்றி நிச்சயம். பல்வேறு தொழில்களில் செய்யும் முதலீட்டில் 10 சதவீதம் இருந்தால்போதும் விவசாயத்துக்கு. சொந்த நிலம் இல்லாவிட்டாலும், விவசாய நிலங்களை வாடகைக்கும் ஒத்திக்கும் மிக எளிதாகப் பிடித்து தாராளமாக விவசாயம் செய்யலாம். இளைஞர்கள், இளம்பெண்களின் பார்வை மாறினால் விவசாயத்தால் நாடும் செழிக்கும், நாமும் நலம் பெறலாம்” என்கிறார் பிரசன்னா நம்பிக்கையுடன். ஜெயித்தவர்கள் சொல்வது பொய்க்காது!

25 லட்சம் பேருக்கு மட்டுமே ‘பிரீடம் 251’ ஸ்மார்ட்போன்


பிரீடம் 251 ஸ்மார்ட்போனுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களில், பணம் செலுத்தும் முதல் 25 லட்சம்பேருக்கு மட்டுமே மொபைல் வழங்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை மாலைவரை பிரீடம் 251 ஸ்மார்ட்போன் கோரி, 7 கோடி முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. போனுக்காக பணம் செலுத்தும் முதல் 25 லட்சம் பேருக்கு மட்டும் கூரியர் மூலம் ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு போன் கிடைக்காது. வரும் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும் மொபைல் விநியோகம், ஜூன் 30-ம் தேதி நிறைவு பெறும். 30 ஆயிரம் பேர் பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான இணையபக்கம் திணறிப்போய், முடங்கியது. பணம் பெறுவதை நேரடியாக செய்யவில்லை. எந்த ஆவணங்களையும் கொடுக்கவில்லை. ஆன்லைனில் மட்டுமே பணப்பரிவர்த்தனை நடக்கிறது. ஏதேனும் படிவங்கள் கொடுக்கப்பட்டு, பணம் பெறப்பட்டதா என எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு: பாக். உட்பட பல நாடுகளில் நடக்கிறது

Return to frontpage

அடுத்த ஆண்டுமுதல் வெளி நாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளில் நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மத்திய மனித ஆற்றல் மேம் பாட்டுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் பங் கேற்ற உயர்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் ஐஐடி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகள் மற்றும் சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

முதல்முறையாக வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் ஜேஇஇ/கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது 18 ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிப்பெண்கள் நியமனம்

பிடிஐ

விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப்பெண்கள் நியமிக்கப் பட உள்ளனர்.

மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற்பார்கள். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

டெல்லி-ஆக்ராவை தொடர்ந்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் கேட்டி மேன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...