Monday, April 25, 2016

வரவிருக்கும் விசேஷங்கள்..2016


DINAMALAR

மே 01 (ஞா) மே தினம்
மே 04 (பு) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 09 (தி) அட்சய திரிதியை
மே 11 (பு) ஆதிசங்கரர் ஜெயந்தி
மே 20 (வெ) நரசிம்ம ஜெயந்தி
மே 21 (ச) வைகாசி விசாகம்

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு


DINAMALAR

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.- நமது நிருபர் -

வேலூர் வாலிபர்கள் நடு ரோட்டில் 'ஆம்லெட்'


வேலுார்:கொளுத்தும் கோடை வெயிலில், நடு ரோட்டில் முட்டையை உடைத்து, வாலிபர்கள், 'ஆம்லெட்' போட்டனர்.தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியிருக்கிறது. கொளுத்தும் வெயில் ஒரு புறமும், அனல் காற்று மறுபுறமும், பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.வேலுார் மாவட்டத்தில் தான், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம், 109.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இந்த வெயிலுக்கு, சத்துவாச்சாரி பகுதியில் வண்டியை இழுத்துச் சென்ற மாடு, நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.அதைத் தொடர்ந்து, வேலுாரில் நேற்று, 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை அறிய, சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், சாலையில் முட்டைகளை உடைத்து, ஆம்லெட் போட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர்கள் சிலர் ஆம்லெட் போட்டதை, அப்பகுதியில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்து, வெயிலின் கொடூரத்தை பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்


சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் 3¼ லட்சம் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே மாதம்) 16–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 850 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. மேலும், 6 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாகவே பயன்படுத்தப்பட உள்ளன.

3,29,532 பேர் பங்கேற்பு

இந்தநிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. வாக்குச்சாவடியில் உள்ள பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட எல்லாவிதமான பணிகளும் அந்தந்த தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பணிகளின் போது ஏற்படும் பிரச்சினைகள், வாக்குப்பதிவு எந்திர கோளாறு உள்ளிட்டவைகளின் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நடந்த இந்த முதற்கட்ட பயிற்சி முகாமில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 532 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப். மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று பார்வையிட்டார். அவருடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேல் பாண்டியன், உதவி ஆணையர் (தேர்தல்) பரந்தாமன், துணை அதிகாரி எஸ்.ஜெகன்நாதன் உள்ளிட்டோரிடம் பயிற்சி முகாம் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

பயிற்சி முகாமில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து சந்திரமோகன் விளக்கி கூறினார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், அதன் மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டிருந்த பதிவு கூடம், உதவி மையம், மருத்துவ உதவி மையம், உணவு வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சந்திரமோகன் பார்வையிட்டார்.

உறுதிமொழி
இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியின் போது இவர்களுக்கு நேர்மையாக பணிபுரிவோம் என்ற உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாக்குச்சாவடி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த பயிற்சி முகாம்களில் முழுமையாக பயிற்சி அளித்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கட்ட முகாம்கள்
மே 16–ந்தேதி அன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி அவர்களுக்கு நேற்றைய பயிற்சி முகாமின்போது, ‘படிவம்–12’ வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடுத்த கட்ட தேர்தல் பயிற்சி முகாம் மே 7, 12 மற்றும் 15–ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது. 15–ந்தேதி மாலை பயிற்சி முடிந்ததுமே, தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் இரவு முழுவதும் அங்கு தங்கி, மறுநாள் மே 16–ந்தேதி அதிகாலையே தேர்தலுக்கு தயாராகி விடுவார்கள்.

அடுத்த அரசாங்கத்தின் முதல் வேலை

DAILY THANTHI...THALAYANGAM

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 16–ந் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் கடுமையான கோடைகாலத்தில் நடக்க இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்ததோடு மட்டுமல்ல, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினரும் கொதிக்கும் வெயிலில் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. ‘நாங்கள் ஆட்சிக்குவந்தால், இதைச்செய்வோம், அதைச்செய்வோம்’ என்று எல்லாகட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்சி அமைத்தவுடன் அவர்கள் செய்வதற்காக காத்து கொண்டிருக்கும் முதல் வேலை, வரலாறு காணாத கோடையை சமாளிப்பதும், குடிநீர்பற்றாக்குறையை போக்குவதும் ஆகும்.

1991–ம் ஆண்டு முதல் இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டுதான் கடும் வெப்பத்தை எதிர்நோக்கும் 3–வது ஆண்டாகும். கடந்த 2 ஆண்டுகளாகவே கோடையின் வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தாலும், இந்த ஆண்டு வெப்பம் அதையெல்லாம் தாண்டிவிடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014–ம் ஆண்டு இருந்த வெப்பத்தைவிட, 2015–ம் ஆண்டு இருந்த வெப்பம் அதிகமாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே 8 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தை தந்திருக்கின்றன. சென்னை மாநகரை பொருத்தமட்டில், 1908–ம் ஆண்டு ஏப்ரல் 27–ந் தேதியில்தான் 109.04 டிகிரி வெயிலை சந்தித்திருக்கிறது. இப்போது சென்னையில் 107 டிகிரியையும், வேலூரில் 109 டிகிரியையும், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் அதிக வெயிலையும் பார்த்தபிறகு, வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமான கோரவெயிலை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும். வேகாத இந்தவெயிலில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், கால்நடைகள், பறவைகள், ஏன் மீன்பண்ணைகளிலுள்ள மீன்களும் வெப்பத்தை தாங்கமுடியாமல் துடிதுடித்துப்போகின்றன. நீர்த்தேக்கங்களில் எல்லாம் தண்ணீரின் மட்டம் மிகவேகமாக குறைந்து வருகிறது. வருகிற ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகமாக, அதாவது 106 சதவீத மழை இருக்கும் என்பது ஆறுதலாக இருந்தாலும், அந்த மழை வருவதற்கும் சில நாட்கள் தாமதமாகும் என்று வரும் தகவல்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

தென்மேற்கு பருவமழை வழக்கமான காலங்களில் பெய்யும் என்றால் முதலில் ஜூன் 1–ந் தேதி கேரளாவில் பெய்யத்தொடங்கும். அங்கிருந்து படிப்படியாக நகர்ந்து தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதத்திற்கு மேல்தான் தீவிரமழை பெய்யத்தொடங்கும். ஐப்பசி மாதத்தில்தான் அடைமழை என்பார்கள். ஆனால், பருவகாலத்திற்கு முந்தைய மழையாக ஏப்ரல் 21–ந் தேதி மழைபெய்தால்தான் ஜூன் 1–ந் தேதி பருவமழை பெய்யத்தொடங்கும். இல்லையென்றால், சிலநாட்கள் தாமதமாகும் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் மரபாகும். ஆனால், கடந்த 21–ந் தேதி மழை பெய்யவில்லை. பொதுவாக எல்–நினோ தாக்குதல் இருந்த ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டு தாமதமாகவே தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். 2002–ம் ஆண்டு எல்–நினோ தாக்கம் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் 9–ந் தேதியும், அதற்கடுத்த ஆண்டு ஜூன் 13–ந் தேதியும்தான் பருவமழை தொடங்கியது. இதேபோல, பல ஆண்டுகளில் தாமதமாக மழைபெய்திருக்கிறது. 2015–ம் எல்–நினோ ஆண்டாகும். கடந்த ஆண்டு ஜூன் 5–ந் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் பருவமழை ஜூன் 1–ந் தேதிக்கு பதிலாக, 10 நாட்களுக்கு மேல் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியானால், இன்னும் சில மாதங்கள் கோடையை தாங்கித்தான் ஆகவேண்டும். வழக்கமாக கோடைகாலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பயனளிக்கும் தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அரசியல்கட்சிகள் தண்ணீர்பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப்பணியை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும், ஏன் பொதுமக்களுமே செய்யலாம். நீர்நிலைகளையெல்லாம் ஆழப்படுத்தும் பணிகளையும், மழைபெய்யும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்கும் பணிகளையும் முதல் வேலையாக புதிய அரசாங்கம் செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி

DINAMALAR

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும், தேர்தலில் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, முதல் சட்டசபை தேர்தலை சந்திக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, எனக்கு இது முதல் சட்டசபை தேர்தல் தான். ஆனால், 1996 சட்டசபை, 1998 லோக்சபா தேர்தல், 2001, 2006 சட்டசபை, 2009 லோக்சபா தேர்தல்களில், மாவட்ட தேர்தல் அதிகாரியாக பணியாற்றி உள்ளேன். எனவே, தேர்தல் பணி பழக்கமானதே.

பொதுமக்களிடம் இருந்து எந்த மாதிரியான புகார்கள் அதிக அளவில் வருகின்றன?

முதலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக விளக்கம் கேட்டு போன் செய்தனர். இது தொடர்பான புகார்களும் வந்தன. தேர்தல் அறிவிப்புக்கு பின், சுவரொட்டி, பேனர் தொடர்பான புகார் வந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் வருகின்றன.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என, ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?

தேர்தல் அறிவித்த மூன்று நாட்களுக்குள், சுவரொட்டி, பேனர்களை அகற்றினோம். பொதுவாக இப்பணி முடிய, ஒரு மாதமாகும். ஆனால், மூன்றே நாட்களில் லட்சக்கணக்கான சுவர் விளம்பரங்களை அழித்தோம். தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 2,800 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

ஆளுங்கட்சி மீதும், நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரத்திக்கு பணம் கொடுப்பதாக வரும் புகார் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்கிறோம்.தீவுத்திடலில் ஆளுங்கட்சி கூட்டம் நடந்தபோது, அதிக பேனர்கள் வைத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதை விளம்பரப்படுத்தாததால், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்துஇருக்கலாம். கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.குறிப்பிட்ட இடத்தில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சந்தேக அடிப்படையில் புகார் கூறியபோது, நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். இதுபோன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் நேரடியாக நடவடிக்கை எடுக்காது. மற்ற துறைகளை நடவடிக்கை எடுக்க வைப்பதுதான், தேர்தல் கமிஷன் பணி. இரண்டாவதாக, அதிகாரிகளை மாற்றும்படி கூறினர். ஆனால், 22ம் தேதிக்கு பின் தான், அதிகாரிகள் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, மாதந்தோறும் தேர்வு வைப்பர். அதில் பாஸ், பெயில் இருக்கும். ஆனால், இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை தான் கணக்கில் கொள்வர். அதேபோல், மே, 16க்கு பின்இறுதி மதிப்பீடு செய்யுங்கள்.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு பிறகும், தேர்தலுக்காக பண நடமாட்டம் அதிகரித்து உள்ளதே?

பண நடமாட்டத்தை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தேர்தல் கமிஷனர் வந்தபோது, அரசியல் கட்சிகள் இதே புகாரை கூறின. பணத்தை தடை செய்ய, முயற்சி எடுத்து வருகிறோம். பறக்கும் படை போட்டு, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. எனினும், புது வழியில் பணம் கடத்தப்படுவதாக புகார் வருகிறது.'பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம்' என, மக்கள் நினைக்க வேண்டும். அதற்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டில் குடியிருக்கும் நபர், 'எனக்கு, 500 ரூபாய், 'டாப் அப்' செய்தனர்' என, கூச்சமின்றி கூறுகிறார். அதை அவர் தவறாக உணரவில்லை. இந்நிலை மாற வேண்டும்.

கடந்த முறைபோல், இந்த முறை தேர்தலுக்கு முன், 144 தடை சட்டம் அமல்படுத்தப்படுமா?

அப்படி எந்த எண்ணமும் இல்லை.

தேர்தலை மையமாக வைத்து பரப்பப்படும் வதந்திகளை எப்படி தடுப்பீர்கள்?

'வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி பரவுகிறது. இதற்கு உடனுக்குடன் பதில் சொல்கிறோம். வதந்தி பரப்புவோரை, கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். சமூக வலைதளங்களில், 'சைபர் நெட்' மூலம் புகார்களை கண்காணிக்கிறோம். தவறாக பிரசாரம் செய்த, 50 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

ஆள் பிடித்து வந்து பிரசாரம் நடத்துவதை தடுக்க முடியுமா?

பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்கள் அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த செலவை தேர்தல் செலவில் சேர்க்கத் தான் வாய்ப்பு உள்ளது. வண்டி செலவு, ஆட்களை கூட்டி வரும் செலவு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், வீடியோ எடுக்க உத்தரவிட்டுள்ளோம். வந்தவர்களிடம் பேட்டி எடுத்து, அவர்கள் எவ்வளவு வாங்கினர் என்றால், அந்த தொகையை கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்ப்போம். ஒரு கோடி ரூபாய் செலவு என்றால், 10 வேட்பாளராக இருந்தால், அவர்கள் செலவு கணக்கில், 10 லட்சம் ரூபாய் சேர்க்கப்படும்.போலீசார் அதிகம் பேர் ஆளும் கட்சி கூட்டத்தில் உள்ளனர். மற்ற கட்சி கூட்டத்திற்கு செல்வதில்லை என புகார் வந்துள்ளது.இப்போது சர்குலர் அனுப்பி உள்ளோம். அனைத்து தலைவர்களுக்கும் எந்த மாதிரியான பாதுகாப்போ, அதை வழங்க வேண்டும். பொதுக்கூட்டத்தில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடக் கூடாது.

தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரசாரம், வெற்றி இலக்கை எட்டி விட்டதா?

வெற்றி இலக்கு மே, 16 மாலை தான் தெரியும்.

அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு உள்ளதா?

சில சமயங்களில் உள்ளுக்குள் கோபம் வரும். நாம் பதிலும் கூற முடியாது. இருந்தாலும், வெளிக்காட்டாமல் உள்ளேன். நாம் தவறு செய்யவில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்து அமைதியாகி விடுகிறேன்.

விகிதாச்சார அடிப்படையில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?

இதற்கு தேர்தல் நடத்தை விதி அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு முறையும் குளறுபடி ஏற்படுவது ஏன்?

வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு காரணம், சிலர் முகவரி மாறி செல்லும்போது, பழைய இடத்தில் பெயர் நீக்காமல், புதிய முகவரியில் பெயர் சேர்க்கின்றனர். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் உள்ளது. தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கல் மூலம் தவறு களையப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் சரியாகி விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தும், கள்ள ஓட்டு தொடர்கிறதே?

கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தி, நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், வேட்பாளர்களின் தேர்தல் ஏஜன்டுகள் உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், கள்ள ஓட்டு போட முடியாது. அவர்கள் சரியாக செயல்பட்டால், கள்ள ஓட்டு போட வாய்ப்பில்லை.

அரசு அதிகாரிகள் அனைவரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் எப்படி நியாயமாக இருக்கும்?

அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக, பாதகமாக இருக்கிறார் என்பதை, எப்படி முடிவு செய்வது என்பதில் தர்மசங்கடம் உள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் என, பெரிய பட்டியல் கொடுக்கின்றனர். அதிகாரிகளோ, தாங்கள் நல்ல பொறுப்பில் இருப்பதால், புகார் கூறுகின்றனர். என்ன தவறு செய்தோம் என காரணம் கூறுங்கள் என கேட்கின்றனர்.அவர்கள் சாதகமாக செயல்படுவது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். 1950ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களை வைத்து தான், தேர்தல் நடத்துகிறோம். அவர்கள் ஒரே கட்சிக்கு சாதகமாக இருந்தால், ஆட்சி மாற்றம் இருக்காது. அதிகாரிகளும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல், 'சார்ஜ்' கிடைத்தால், பதவி உயர்வு பாதிக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமாக செயல்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் கமிஷன் தயார் செய்த விழிப்புணர்வு பிரசார படங்களில், ரஜினி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் யாரும் நடிக்க முன்வரவில்லையே?

எல்லாரிடமும் முயற்சித்தோம். தேர்தல் இருப்பதால், எல்லாரும் தயக்கம் காண்பிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை எனக் கூறினாலும், சிலர் பயப்படுகின்றனர். ஒரு நடிகை தேர்தல் இல்லாத விளம்பரத்திற்கு வருகிறேன் என்றார். எனினும், நிறைய பேர் முன்வந்து நடித்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

வாகன சோதனையில் அரசியல்வாதிகள் மட்டும் சிக்குவதே இல்லையே ஏன்?

சோதனை செய்யாமல் இருந்தால், பணம் பட்டுவாடா தாராளமாக இருக்கும். பத்திரிகை, வெளி மாநிலம் என எல்லா இடத்திலும், பணம் குறித்து பேசுகின்றனர். பணம் பட்டுவாடாவை தடுக்க,

இச்சோதனை அவசியம். சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இம்முறை உடனடியாக உரிய ஆவணங்களை காண்பித்தால், பணத்தை திரும்ப கொடுக்கிறோம்.

ஆன்லைனில் ஓட்டளிக்கும் வசதி வருமா?

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆன்லைனில் ஓட்டளிக்க, கமிட்டி அமைத்து, சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையில், மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவது, மாநில அரசு அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிப்பதாக உள்ளதே?

மாநில அதிகாரிகளை சந்தேகிக்கவில்லை. பறக்கும் படை செயல்பாட்டில் பாரபட்சம்

இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கிறோம். யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்களை நியமிக்கிறோம்.

இளைய தலைமுறையினரிடம் தேர்தல் விழிப்புணர்வு எப்படி உள்ளது?

அவர்கள் ஓட்டளிக்க, சமூக வலைதளங்களில், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

இளைஞர்களை கவரும் வகையில் பேசி வருகிறோம். கல்லுாரிகளில் சென்று பிரசாரம் செய்கிறோம். இம்முறை ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்ற பின், புகுத்திய புதுமைகள் என்ன?

புதுமையாக இளைஞர்களை ஓட்டு போட வைக்க, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே, தேர்தலில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளோம். ஓட்டுச்சாவடியில் எத்தனை பேர்

வரிசையில் உள்ளனர் என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய ஏற்பாடு செய்து உள்ளோம்.

'மொபைல் ஆப்ஸ்' அறிமுகப்படுத்தி உள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்து வதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு, இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, 13 ஆயிரம் சக்கர நாற்காலிகள் பயன்படுத்த உள்ளோம்.

இப்பதவி மூலம் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாதிக்க ஆசை. 100 சதவீதம் நேர்மையாக, எந்த புகாரும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் தண்டனை இல்லாதது தான் தேர்தல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணமா?

அதிக தண்டனை, குற்றத்தை தடை செய்ய உதவும். அதேநேரம் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இருக்கிற சட்டத்தை பயன்படுத்தி, 100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடத்துவது சாத்தியம்.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்து இருப்பதால், தேர்தல் பணிகள் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து...

தனிப்பட்ட நபரின் விருப்பு வேறு; பொறுப்பில் இருப்பது வேறு. அரசு ஊழியர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். தவறு செய்ய வாய்ப்பு குறைவு.

அரசியல் கட்சிகள், எப்படி ஒத்துழைப்பு தருகின்றன?

நல்ல விதமாகவே உள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மனசாட்சிப்படி செயல்படுங்கள். இதையே, எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்.

சமீபத்தில் ரசித்த திரைப்படம் குறித்து?

சமீபத்தில், 'தெறி' படம் பார்த்தேன். நன்றாக இருந்தது.

உங்கள் சொந்த மாநிலம்?

சத்தீஸ்கர்.

தமிழக மக்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம்?

தமிழக மக்கள் ரொம்ப நல்லவர்கள். பாசத்துடன் உள்ளனர். நான் தொடர்ந்து, சென்னையில்தான் வசிக்கப் போகிறேன். சொந்த ஊர் இனி சென்னை தான்.

பயோ - டேட்டா

பெயர் : ராஜேஷ் லக்கானி

வயது : 46

கல்வி தகுதி : பி.இ., ஐ.ஏ.எஸ்.,

பொறுப்பு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சொந்த ஊர் : ராய்ப்பூர், சத்தீஸ்கர்

-நமது சிறப்பு நிருபர் -

Sunday, April 24, 2016

HC flays Bar Council of India on the issue of law degree study

Chennai, Apr 23 () Criticizing Bar Council of India for being a mute spectator to selling of law degrees by 'letter pad' colleges, the Madras High Court today directed Bar Councils to ensure they do not enrol applicants if they were found to have obtained law degrees while in service.

A division bench, comprising Justices V Ramasubramanian and N Kirubakaran, gave the direction on a petition by one P Ramu, a Junior Engineer in Agricultural Engineering Department, Thanjavur, from March 17 1966 to October 31 2001, challenging the July 24, 2006 enrolment rules of the Bar Council of Tamil Nadu.

It directed Bar Councils to verify if candidates applying for enrolment after crossing 40 years of age had rightly got law degrees and not enroll them if found otherwise.

It also directed the Councils to verify the ration card, pan card and Aadhar Card of candidates to ascertain their address, social status and income at the time of enrolment.

The Councils should also get affidavits from candidates who crossed 40 years of age at the time of enrolment, stating that they have not obtained law degree while in service.

The petitioner had obtained a law degree to state as if he had undergone the course from 1998-2001, as a regular student in Dr. Ram Manohar Lohia College of Law, Bangalore University.

Ramu said he joined the Department in 1966 and superannuated in the year 2001. After retirement, he applied for enrolment with the Bar Council of Tamil Nadu (BCTN) he said and claimed he had clearly stated his employment details to it. The BCTN sought to know how he had taken the course, especially when he was employed as a Junior Engineer in Thanjavur.

Ramu said he filed an affidavit stating that he applied for leave and availed loss of pay to attend regular college during 1999 and 2001. But he did not furnish details. The BCTN then directed him on October 17, 2002 to produce all relevant documents before the Enrolment Committee as proof.

Since he still did not do so, the Council on May 13, 2003 rejected his application and referred the case to the Bar Council of India which directed the BCTN on June 14, 2003 to give Ramu a chance to produce the records from the University to back his claims. If he did so and its genuineness was accepted by the Enrolment Committee, then they could take appropriate action. On June 21, 2004, the Bar Council of Tamil Nadu directed Ramu to produce the documents but he did not do so. Ramu then moved the High Court challenging the Bar Council rules, which was dismissed by the bench. The bench observed that it was shameful for the Bar Council to remain a mute spectator to sale of law degrees by 'Letter Pad' colleges and called for urgent remedial steps to contain the menace. "Otherwise, criminal elements and undesirous people will hijack the very system. In fact, criminalization of the Bar has already started," it said.This case was only the tip of the iceberg, showing how full-time salaried employees/staff were working and simultaneously doing law degrees elsewhere, it said. COR APR PAL

(This story has not been edited by timesofindia.com and is auto–generated from a syndicated feed we subscribe to.)

NEWS TODAY 2.5.2024