Monday, April 25, 2016

வேலூர் வாலிபர்கள் நடு ரோட்டில் 'ஆம்லெட்'


வேலுார்:கொளுத்தும் கோடை வெயிலில், நடு ரோட்டில் முட்டையை உடைத்து, வாலிபர்கள், 'ஆம்லெட்' போட்டனர்.தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியிருக்கிறது. கொளுத்தும் வெயில் ஒரு புறமும், அனல் காற்று மறுபுறமும், பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.வேலுார் மாவட்டத்தில் தான், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம், 109.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இந்த வெயிலுக்கு, சத்துவாச்சாரி பகுதியில் வண்டியை இழுத்துச் சென்ற மாடு, நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.அதைத் தொடர்ந்து, வேலுாரில் நேற்று, 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை அறிய, சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், சாலையில் முட்டைகளை உடைத்து, ஆம்லெட் போட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர்கள் சிலர் ஆம்லெட் போட்டதை, அப்பகுதியில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்து, வெயிலின் கொடூரத்தை பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...