Friday, April 22, 2016

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் கடும் வறட்சியால் இறுதிச் சடங்குகள் பாதிப்பு ... ஷரத் வியாஸ்

வறண்டு போன கோதாவரி ஆற்றங்கரையில் மரண இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோர் தண்ணீரின்றி அவதியுறுகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தனது உறவினரை இழந்த பீமாராவ் அகார்கர், கோதாவரி அருகே நின்று கொண்டு தனது உறவினர் இறுதிச் சடங்குக்கு ஆன செலவை கணக்கிட்டுக் கொண்டிருந்த போது 3,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,600 கொடுத்ததை நினைத்துக் கொண்டிருந்தார்.

மரண இறுதிச் சடங்கு நிறைவேற்றுவோருக்கான புனித இடம்தான் பீட். இங்கு 42 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது, கோதாவரி நதி சுத்தமாக வறண்டு காணப்படுவதால் இறுதிச் சடங்குக்கு வருவோருக்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

சுமார் 300 உறவினர்களுடன் இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோருக்கு சாப்பாடு, குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. குடிநீருக்கு மினரல் வாட்டர் வாங்க முடிகிறது, ஆனால் சடங்குக்கு தேவைப்படும் தண்ணீர், அனைவரும் குளிக்க தேவைப்படும் தண்ணீர் ஆகியவற்றை வெளியிலிருந்து லாரியில்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழை பொய்த்துப் போனது. இதனால் புனிதத் தல நதி வறண்டு போயுள்ளது. இதனால் இறுதிச் சடங்கு தொடர்பாக நடைபெறும் சிறுசிறு வியாபாரங்கள் பாதிப்படைந்து அவர்களும் வாழ்வாதாரத்திற்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளின் போது தலைக்கு மொட்டை அடிக்கும் நாவிதரின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. நாளொன்றுக்கு 25 பேருக்கு மொட்டை அடிக்கும் நாவிதர் அசோக் வாக்மரே தற்போது 5 பேர் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார்.

டேங்கர் லாரியில் தண்ணீர் வரவழைப்பதில் உள்ள சிக்கல் என்னவெனில் அதனைப் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு அனைவரும் வசதி படைத்தவர்கள் என்று கூற முடியாது.

இங்கு மட்டுமல்ல பீட் நகரின் பல தாலுக்காக்களும் டேங்கர் லாரியையே தண்ணீருக்காக நம்பியிருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

நிர்வாகமும் இயற்கையும் தங்களை வாட்டி வதைப்பதாக பீட் வாசிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...