Monday, April 25, 2016

பாஸ்போர்ட் முடக்கம்: இங்கிலாந்திலேயே விஜய் மல்லையா தங்கி இருக்க முடியுமா? புதிய தகவல்


புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாஸ்போர்ட்டை முடக்கிய நிலையிலும் விஜய்மல்லையாவால் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்கி இருக்க முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தான் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் வகையிலான அனுமதியை விஜய் மல்லையாவால் கோர முடியும். இதேபோல் அங்கிருந்தவாறே தனது பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து இந்திய கோர்ட்டுகளில் அவரால் வழக்கு தொடரவும் இயலும்’’ என்று தெரிவித்தன.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...