Thursday, April 14, 2016

: காணாமல் போன காளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு உரிமையாளரின் ஆச்சரிய அறிவிப்பு

DAILY THANTHI 14.4.2016

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் 3 வயதான காளை ஒன்றை வளர்த்து வந்தார். கம்பீரமாக காட்சியளித்த அந்த களைக்கு ‘பாட்ஷா’ என பெயரிட்டு அவர் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.

மேலும் அதன் கழுத்தில் கயிறு எதுவும் கட்டாமல் தனது குடும்ப உறுப்பினர் போல சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார். இதனால் அதுவும் அந்த பகுதியில் சுதந்திரமாக சுற்றி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘பாட்ஷா’ திடீரென காணாமல் போய்விட்டது. இது மனோஜ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. எனவே இது குறித்து சார்நாத் போலீசில் புகார் செய்தார்.

அத்தோடு நில்லாமல், தனது செல்ல ‘பாட்ஷா’வை பற்றிய துப்பு கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என விளம்பரமும் செய்துள்ளார். அதன்படி காளையின் நிறம், அளவு, தோற்றம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வாரணாசி பகுதி முழுவதும் ஒட்டி வைத்துள்ளார்.

மனோஜ் குமாரின் இந்த அறிவிப்பு வாரணாசி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
[07:07, 4/14/2016] +91 98406 53153: ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

DINAMANI 14.4.2016

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
 ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.
 இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
 அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, "சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...