Thursday, April 14, 2016

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

DINAMALAR
சண்டிகர்:யூனியன் பிரதேசமான சண்டிகரில், கடுமையான கோடை காரணமாக தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீரை சேமிக்க, மாநகராட்சி
நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் நேரமான, காலை 5:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, நீரை வீணாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில், கார்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 15 முதல், ஜூன் 30ம் தேதி வரை, இந்த தடை அமலில் இருக்கும். தொடர்ந்து தண்ணீரை வீணாக்குவது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...