Thursday, April 14, 2016

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

DINAMALAR
சண்டிகர்:யூனியன் பிரதேசமான சண்டிகரில், கடுமையான கோடை காரணமாக தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீரை சேமிக்க, மாநகராட்சி
நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் நேரமான, காலை 5:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, நீரை வீணாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில், கார்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 15 முதல், ஜூன் 30ம் தேதி வரை, இந்த தடை அமலில் இருக்கும். தொடர்ந்து தண்ணீரை வீணாக்குவது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...