Thursday, April 14, 2016

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

DINAMALAR 14.4.2016

சென்னை, இன்ஜி., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்; இதற்கான அறிவிக்கையை, இன்று அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அண்ணா பல்கலை, இன்று வெளியிடுகிறது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் இணையதளத்தில், https:/www.annauniv.edu/, TNEA 2016 என்ற தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பணிக்கான, 'லிங்க்' இணைக்கப்படுகிறது. இதில், மாணவர்கள், தங்கள் பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வராத நிலையிலும், மற்ற விவரங்களை நிரப்பி விடலாம்.
தேர்வு முடிவு வந்ததும், 'ஆன்லைனில் விண்ணப்பங்களை, 'எடிட்' செய்ய முடியும். மதிப்பெண் விவரங்களை, தேர்வுத் துறை மூலம் அண்ணா பல்கலை நேரடியாக பெற்று, மாணவர்களின் மதிப்பெண்களை இணைத்து விடும்.
இந்த விண்ணப்ப பதிவை, தனியார் இணைய மையங்கள், தங்கள் சொந்த கணினி மற்றும் அரசின், இ - சேவை மையங்கள் மூலமும் மேற்கொள்ளலாம். இதேபோல், விண்ணப்ப கட்டணத்தை, டி.டி.,யாகவும் எடுக்கலாம். அதற்கு பதில், 'ஆன்லைனில் நெட் பேங்கிங்' முறையிலும் பணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...