Saturday, April 30, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 29 - பயன்தரும் ஆரம்பம்

டாக்டர் ஆ. காட்சன்

இணைய அடிமைத்தன பிரச்சினையில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது செயலியில் அதிக நேரத்தை விரயம் செய்தால், அதை ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் ஃபோனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (bookmarks and history) நீக்கிவிடலாம். மொத்தத்தில் கணினியை ரீஸ்டார்ட் செய்வதுபோலச் சமூக வலைதளங்களை பார்க்கும் நேரத்தைத் தலைகீழாக மாற்றுவது, பழக்கத் தோஷத்தில் நேரம் விரயமாவதைத் தடுக்க உதவும். உதாரணமாக, இரவில் நேரம்போவது தெரியாமல் பயன்படுத்துபவர்கள் பகலில் அவசியத் தேவைகளுக்குச் சிறிது நேரத்தைத் திருப்பலாம்.

மருந்து தேவைப்படலாம்

தற்போது மனநோய் வெளிப்பாடுகளும்கூட இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் முறையில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும்போது, இணைய அடிமைத்தனத்துக்கும் உட்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயால் (Mania) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்ஃபோன் கொடுக்காவிட்டால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளத்துக்கும் அடிமையாகவும் வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர்இளம் பருவத்தினர் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது இணைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ஐந்தில் வளையாதது

l சிறு குழந்தைகளை அமைதிப்படுத்தவும் தொந்தரவு இல்லாமல் இருக்கச் செய்யவும் மொபைல் ஃபோன்களை கொடுத்துப் பழக்குவதுதான் இணைய அடிமைத்தனப் பிரச்சினையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்பு அதிகம்.

l இணைய விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால், அவற்றை மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

l இணையம், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பில் குறைந்த நேரம் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

l பள்ளி, கல்லூரிகளில் கணினி குறித்த பாடங்களோடு அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் இணைய அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

l வீட்டில் இருக்கும்போது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறை செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனும், கல்லூரிகளில் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

l தேவைப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் இணையத் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்துப் பார்க்கும் எண்ணச் சுழற்சி குறையும்.

(அடுத்த வாரம்: இருதுருவ மனநிலை)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godson psychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!

1985-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து நடராஜர் சிலையை பரிசாக பெறுகிறார் மாண்டலின் னிவாஸ்.

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!


M.G.R. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.

நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்! ....சைபர் சிம்மன்

THE HINDU

பாஸ்வேர்டு தொடர்பாகப் பிரபலமான நகைச்சுவைத் துணுக்குகள் பல இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, ‘சரியில்லாதது' என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ‘இன்கரெக்ட்' எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன். ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.

இந்தத் துணுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.

ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக் கொள்வதற்கில்லை. அவைதான் உங்கள் இணையப் பாதுகாப்புக்கான சாவி. இந்தச் சாவியைக் கவனமாகக் கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

பொதுவாகப் பாதுகாப்பான பாஸ்வேர்டுக்குச் சொல்லப்படும் அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இணையம் வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இணையப் பாதுகாப்புக்கான சவால்களும் அதிகரித்துவருவதால் பாஸ்வேர்டு பாதுகாப்பையும் நீங்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பாஸ்வேர்டு நீளம்

உதாரணத்துக்கு வலுவான பாஸ்வேர்டுக்கான அடிப்படை விதியை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் நல்ல பாஸ்வேர்டு குறைந்தது ஆறு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கும் குறைவாக எழுத்துக்கள் இருந்தால், அவை எளிதாக ஊகிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்றைய ஹேக்கர்களோ, ஆறு எழுத்து பாஸ்வேர்ட்களைக்கூட மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய அளவுக்கு அவர்கள் கையாளும் கணினிகள் ஆற்றல் கொண்டிருக்கின்றன. எனவே இப்போது பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தால் இன்னும் நல்லது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்குகளுக்கானது என்றால் தயங்காமல் 14 முதல் 16 எழுத்துக்களில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம் என்று வல்லுந‌ர்கள் சொல்கின்றனர். ஆக, பாஸ்வேர்டுக்கான நீளம் பற்றிய உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டுக்குப் பதில் பாஸ்பிரேஸ்

அடுத்ததாகச் செய்ய வேண்டிய விஷயம், உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக் கூடாது. 1 முதல் 12 வரை கொண்ட எண்களை வைத்துக்கொள்வதோ, ஆங்கில அகர வரிசையில் முதல் 8 எழுத்துக்களை வைத்துக்கொள்வதோ நல்ல பாஸ்வேர்டாகிவிடாது. பாஸ்வேர்டு பூட்டை உடைக்கும் ஹேக்க‌ர்கள் இவற்றை எல்லாம் நொடியில் ஊகித்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க, வெறும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே பாஸ்வேர்டு அமைக்காமல், இடையே எண்கள், நிறுத்தல் குறிகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துங்கள்.

முதலில் சில எழுத்துக்கள் அதைத் தொடர்ந்து சில எண்கள், அதன் பிறகு சிறப்புக் குறியீடுகள், பின் மீண்டும் சில எண்கள் இறுதியில் சில எழுத்துக்கள்... இப்படி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பில் பல படிகளைக் கொண்டிருக்கிறது என பொருள்.

இதற்கான எளிய வழி, வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை யோசிக்காமல், ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம் என்கின்றனர். இந்த முறை ‘பாஸ்பிரேஸ்' (passphrase) எனக் குறிப்பிடப்படுகிறது.

பாஸ்வேர்டு பார்ப்பதற்குப் படு சிக்கலாகத் தோன்றும். ஆனால் அதன் அடிப்படையாக அமைந்த சொற்றொடரைக் கொண்டு பாஸ்வேர்டை மறக்காமலும் இருக்கலாம்.

தேவை தனித்தனி பாஸ்வேர்டு

நீளமான பாஸ்வேர்டுகளை அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்பதுதான். பாஸ்வேர்டு தொடர்பாகப் பலரும் செய்யும் இரண்டு தவறுகளுக்கு இது வழிவகுக்கலாம்.

ஒன்று, அதுதான் சூப்பர் ஸ்டிராங் பாஸ்வேர்டு உருவாக்கியாச்சே என்ற நம்பிக்கையில், எல்லா இணையச் சேவைகளுக்கும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தோன்றும். இது நடைமுறையில் எளிதாக இருக்கலாம் என்றாலும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு கள்ளச்சாவியைக் கொண்டே விஷமிகள் ஒருவரது மற்ற இணைய சேவைகளுக்கு உள்ளேயும் எளிதாக நுழைந்துவிடுவார்கள்.

இமெயிலுக்கான பாஸ்வேர்டு மெயிலுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். பேஸ்புக்கிற்கும், ட்விட்டருக்கும், இன்னும் பிற இணையச் சேவைகளுக்கும் கட்டாயம் தனித்தனி பாஸ்வேர்டு தேவை.

வேண்டுமானால், ஒரு அடிப்படை பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, ஒவ்வொரு சேவைக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டு மேனேஜர்

ஆனால், இப்படி தனித்தனியே பல பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளும்போது, அவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கும் எண்ணம் இயல்பாக எழலாம். இதைவிட ஆபத்தானது எதுவும் இல்லை என்று இணையப் பாதுகாப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.

ஹேக்க‌ர்கள் உங்கள் சிஸ்டத்தில் கைவரிசை காட்டலாமே தவிர, உங்கள் மேஜையில் கைவிட்டு இந்தக் காகிதத்தை எடுக்க முடியாதுதான். ஆனால் உங்கள் வீட்டிற்கு வரும் வேறு யாரேனும் கையில் கிடைத்தால் சிக்கலாகலாம். நினைவில்லாமல் இவற்றைத் தூக்கி வீசினாலும் பிரச்சனை ஆகலாம். நிறைய பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகளை நாடலாம். இணையத்தில் நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகள் உள்ளன. அவற்றைப் பரிசீலித்துப் பாருங்கள்.

பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி, பாஸ்வேர்ட்களை நீங்கள்தான் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

அதாவது, தேவை எனில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

என்றாலும், நிச்சயமாக ஆண்டுக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது பாதுப்பானது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் உங்கள் பாஸ்வேர்டை தூசி தட்டி அப்டேட் செய்துவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, இமெயில் சேவைகளிலிருந்து ‘உங்கள் கணக்கில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நிகழ்ந்துள்ளது, பாஸ்வேர்டை மாற்றுங்கள்' என எச்சரிக்கை வந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.

மண்டை ஓடு பாஸ்வேர்டு

நிற்க, இணையவாசிகளை இத்தகைய சிக்கல்கலிருந்து எல்லாம் விடுவிக்கும் வகையில், ஓயாமல் பாஸ்வேர்டு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பயனாளிகளுக்கு எளிதான ஆனால், ஹேக்க‌ர்கள் கைவைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்குவது தொடர்பாக மாற்று வழி சாத்தியமா எனும் திசையிலும் ஆய்வுகள் நடக்கின்றன.

இவற்றில் சுவாரஸ்யமான ஒன்று, பயனாளிகளின் மண்டை ஓட்டை பாஸ்வேர்டுக்கான மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்பதாகும். அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபலங்கள், உணவு வகைகள் போன்ற ஒளிப்படங்களைப் பார்க்கும்போது மூளை அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையே பாஸ்வேர்டாக்க முடியுமா எனும் கேள்வியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரது மூளையும், இந்தத் தகவல்களை எதிர்கொள்ளும் விதம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதால், இந்த முறையையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும் என கருதுகின்றனர்.

இதே போல ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மண்டை ஓட்டுக்குள் ஒலி மோதி திரும்பும் வித்தியாசங்களைக் கணக்கிட்டு அதை பாஸ்வேர்டாக மாற்ற முடியுமா என ஆய்வு செய்துவருகின்றனர்.

CET students lose sleep over 1st phase of NEET tomorrow Bengaluru: April 30, 2016, DHNS:


For students who aspire to study MBBS or BDS course in Karnataka, cracking the Common Entrance Test (CET) has been their first priority. Probably, not anymore.

With the Supreme Court ruling on National Eligibility cum Entrance Test (NEET), many students have been forced to concentrate — at a short notice — on an entrance exam that was at the bottom of their priority list just a few days ago.

As per the court’s direction, the existing All India Pre-Medical/Pre-Dental Entrance Test (AIPMT), scheduled for Sunday, will be the first phase of NEET. Students who are unable to take this exam can appear for NEET-II on July 24.

Confusion prevails

Students, however, remain confused. Since a number of MBBS/BDS aspirants didn’t register for the AIPMT, they fear that if they don’t take it on Sunday, they will become ineligible and cannot get another chance.

Abdul Qadeer, secretary, Shaheen PU College, Bidar, said that a number of students were asking him about the possibility of skipping NEET-I in the hope they can register for and take NEET-II.

Vaishnavi Prakash, a student at Little Rock Indian School, Brahmavar in Udupi district, said she had been mainly preparing for the CET given its several advantages.

“I registered for the AIPMT too, but didn’t prepare much for it. The CET it is easier than the AIPMT. The CET doesn’t have negative marks but the AIPMT does,” she said. “I am in a complete state of shock given the short notice of the exam.”

‘Undue advantage’

Many students also feel that those who take NEET-II (on July 24) will get an undue advantage, as they will have at least two months to prepare. Krishnappa Shivapappa, another student, has not registered for NEET-II.

“All of this has happened so sudden. Karnataka CET was my first preference. It is more entwined with the state’s pre-university syllabus. I wonder how poor people living in rural areas like me will appear for the AIPMT or NEET. I am very disturbed,” he said.

He said it would be “serious injustice” if some students got three months to prepare and others just three days.

Natl entrance merit list sole criterion for MBBS’

TIMES OF INDIA

On the day the Supreme Court clarified that it will not modify the order on a national common entrance test, Medical Council of India vice-president Dr C V Bhirmanandham said the merit list based on the test to be conducted by CBSE will be sole criterion for MBBS admissions across the country. In an interview with TOI, he said NEET exams will be mandatory for all states and any violation will amount to contempt of court.

What will MCI do to bring on board states like Tamil Nadu that oppose NEET?

There is no option for states. The SC has made it clear that the exam must be held in two phases. The first will be held this Sunday as per schedule. The second phase will be held on July 24. Even today the SC said it will not modify its order. Any violation will amount to contempt of court.

Will this examination be a qualifying test for admissions or the sole criterion for medical admission?

Going by the SC, order it will be the sole criterion. CBSE will release the combined result on August 17. The court has said it will provide the all India rank too. The state selection committee in Tamil Nadu has to admit students after counselling and merit list should be drawn based on the rank list CBSE releases.

Can states reduce weightage of NEET and combine it with Class 12 marks or with their own entrance tests?

No. There will be no question of reducing weightage given to the rank list. Our job will be to check whether admissions are done as per the rank list. States like Tamil Nadu will be allowed to use 69% reservation, but they will not be allowed to tamper with the merit list. With the present order, we have the powers to declare any admission as void if the central merit list is not followed.

Don't you think it will be tough for state board students to prepare for the examination at such short notice?

It may be tough. We have different systems of education and different boards in different states. While in Tamil Nadu students write the Class 12 exams in school, their counterparts in Karnataka and Andhra Pradesh attend pre-university or intermediate college. We need a level playing field. NEET offers it. Over a period of time we will have to uniform standards in school education.

What will students who learn in different languages do? What will the medium of NEET be?

This being the first year, CBSE is considering examinations in different regional languages. But students will study MBBS only in English.

Phase 2 only for new candidates, says official

THE HINDU

The Health Ministry on Friday said candidates who have registered for the All India Pre-Medical Test (AIPMT) — now known as NEET phase 1 — will not be eligible to appear for phase II, if they skip the test on May 1.

Flooded with queries from students who want to use the next two months to prepare for Phase II rather than take Sunday’s test, a senior Ministry official said: “Many are looking at using the opportunity to prepare. We want it to be clear that the second phase test is only for students currently appearing in State examinations. If a student has been given an admit card, and does not take the test on May 1, he/she will not get another opportunity.


“The second phase is only for students who did not register for AIPMT. In some States, particularly Tamil Nadu, students are evaluated on the basis of marks they get in Class 12 Board exams and they will have to take the second phase of NEET,” said the official.

Friday, April 29, 2016

எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்! ....தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்கிறாரோ? ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

- தொடரும்...

எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.

NEWS TODAY 2.5.2024