Friday, December 30, 2016

Clear NEXT for title of Doctor, MCI recommends Exit Tests for Medical Students


The Medical students will need to clear National Exit Test (NEXT) in order to be recognized as Doctor. According to the Indian Medical Council (Amendment) Bill 2016, unveiled by the Union health ministry, the medical aspirants will need to clear the National Exit Test (NEXT). The National Exit Test exam is being conducted to create a level-playing field in medical education and is increasingly privatized. The National Exit Test is being made to ensure the quality of teachers. The aspirants will need to clear the substitute three tests, which includes NEET for postgraduate admissions, recruitment for central health services and the foreign graduate medical examination.

The National Exit Test will be an outcome-based test. As per the latest changes aspirants are required to note that the results of how students from individual colleges have performed in NEXT will be made public. The college has stated that over 90% students cleared the test, which will automatically act as an indicator. According to a report, Dr P Shingare, who heads the state’s department of medical education and research, The Next exam will get about a standardization. ALSO READ: No NEET in Odia Language, Freethought Party of India urges CM to refrain from lobbying

Earlier with suggestions from the Medical Council of India (MCI) and the parliamentary standing committee on health and family welfare, the Centre was planning an exit examination for MBBS students passing out of government and private medical colleges. The MCI had recommended to the ministry in July 2015 that there should be an exit examination for MBBS students to ensure quality. This move is aimed to bring clear the disparities.

NEXT: Licence to practise MBBS

DECCAN CHRONICLE. | TEENA THACKER
NEW DELHI: Soon, medical graduates will have to clear a National level “exit test” (NEXT) to practise medicine in India. The uniform National Exit Test (NEXT) as proposed by the government will be the first ever, four-in-one test that will be conducted for MBBS graduates, foreign medical graduates, postgraduate aspirants, and the Union Public Service Commission-CMS (combined medical services) aspirants so as to become eligible to practise medicine in the country.

Serving four purposes, the exam therefore will substitute the existing All India Postgraduate Entrance Test conducted annually, the UPSC-CMS exam which is conducted to recruit medical graduates into a variety of central government organisations and the foreign graduate medical exam, mandatory for foreign medical graduates to practise in India.


Union health ministry officials believe that the move will standardise the medical education in India. It gains significance as earlier the parliamentary standing committee in its report had said there was an urgent need to introduce a common exit test for doctors, which would go a long way in standardising the passing out medical graduates and certify the competencies which are expected to be generated out of them.

Once introduced, the exam will also reduce the burden of multiple exams for medical aspirants in the country.

Medical Council invites suggestions
“The idea is to do away with multiple exams held for those wanting to practise medicine in India. This is set to reduce the burden on medical students,” said a senior official in the ministry. To introduce the new exam from next academic session, the Union health ministry has proposed amendments to the IMC (Amendment) Bill 2016 and has put it on their website, inviting suggestions by January 6, 2017.

The exit exam proposed from the 2017-18 academic session will also make it mandatory for the graduates to attain minimum prescribed percentiles to practise medicine.

Thursday, December 29, 2016

புதிய வேலைச் சந்தை: புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!

ம. சுசித்ரா

இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது!

பெண்களுக்கு முதல் இடம்

‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது. தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வங்கி இல்லாமலா!

அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம். இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?

மின்னஞ்சல் எழுதுதல்

ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.

எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல்

கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.

பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே!

ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.

இணையத்தைத் துழாவுதல்

இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.

பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல்

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.

ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி


டெல்லி: ரயில்களில் பயணம் செய்யும் போது, ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பின் டிக்கெட் புக் செய்தால் 10% தள்ளுபடி அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறப்பு சலுகை அளிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது, இடம் இருந்தால் உடனடியாக டிக்கெட் கிடைத்துவிடும். இல்லையெனில் அவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்க நேரிடும். இதற்கான ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்நிலையில் ரிசர்வேஷன் சார்ட் தயாரித்த பிறகும், சில இருக்கைகள் காலியாக இருக்கக்கூடும். எனவே சார்ட் தயாரித்த பிறகு, காலியான இருக்கைகளுக்கு ரிசர்வேஷன் செய்தால் அவர்களுக்கு 10% தள்ளுபடி அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஷதாப்தி, துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த பரிசோதனை முயற்சி அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

மேலும் அனைத்து ரயில்களிலும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், ஆறு மாதங்களுக்கு பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 10 % தள்ளுபடி, சார்ட் தயாரிக்கும் முன்பு, குறிப்பிட்ட வகுப்பு பெட்டியில் கடைசியாக விற்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தில் இருந்து அளிக்கப்படும்.

Aadhaar

மிரட்டுவது யார்!
கொலை செய்து விடுவதாக
மிரட்டுவது யார்: ராவ் பரபரப்பு பேட்டி

சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் அமரவைக்க, அவரது சொந்தங்கள் மும்முரம் காட்டி வருவதால், தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

இந்தச் சூழலில், ஜெ., ஆட்சிக்காலத்தில், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு, சமீப நாட்கள் வரை, அந்தப் பதவியில் தொடர்ந்த ராமமோகன ராவின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, ஒட்டு மொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

வருமான வரித்துறை சோதனையால் அதிர்ச்சி அடைந்த ராவ், அந்த சோதனையை ஒரு சதித்திட்டம் என்றும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார். 

இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

பத்திரிகையாளர்களை செவ்வாய்கிழமை சந்தித்தபோது, உங்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூட, தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்கிறீர்களே; ஏன் இந்த ஆவேசம்?

அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.ஆறு நாட்கள் நான் பட்ட மன வேதனை, இதய வலி... அதனால் ஏற்பட்ட ஆவேசத்தில் 

பேசிவிட்டேன். அரசுக்கு, 'கட்ஸ்' இருக்கிறதா என, இரண்டு முறை கூறியதை வாபஸ் பெறுகிறேன்.

வருமான வரித்துறையினரிடம், உங்கள் வங்கி, 'லாக்கர்' விபரங்களை தந்திருக்கிறீர்களா?

எனக்கும், என் மனைவிக்கும் எந்த வங்கியிலும் லாக்கர் கிடையாது. என் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. நிரந்தர வைப்புநிதி எதுவும் இல்லை. சொந்தமாக காரும் இல்லை. 

கடந்த, 10 ஆண்டு களாக, என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, எந்த சொத்துக்களும் வாங்கப் பட வில்லை. என் சொத்து விபரத்தை அரசுக்கு தெரிவித்துள்ளேன். அதை, ஐ.ஏ.எஸ்., இணைய தளத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளேன்.

உங்களை காத்திருப்போர் பட்டியலில், அரசு வைத்துள்ளது தவறு என்கிறீர்களா?

அதை தவறு என்று சொல்லவில்லை; அதை செய் வதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதற்கான உத்தரவு எனக்கு தரப்படவில்லை என்பதே, என் ஆதங்கம்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, 'இப்போதும் நான் தான் தலைமை செயலர்' என்று கூறியதற்கு என்ன காரணம்?

அது, எனக்கு ஏற்பட்ட இதய வலியில் கூறிய வார்த்தை. எனவே, அந்த வார்த்தையையும் நான் திரும்பப் பெறுகிறேன். இப்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மிகச்சிறந்த அதிகாரி. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.

உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல் கிறீர்களே; யாரால் ஆபத்து? யாரும் உங்களை மிரட்டுகிறார்களா?

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான்.ஆனால்,யாரால் ஆபத்து என, வெளிபடையாக

சொல்ல மாட்டேன். அதற்காக நான் பயந்தாங்கொள்ளி இல்லை.

உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வர என்ன காரணம்?

நான் தலைமைச் செயலராக இருப்பது பலருக்கு இடைஞ்சல்.

உங்களை அச்சுறுத்துவது அரசியல்வாதிகளா; அதிகாரிகளா?

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான். மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக் கப்பட்ட நாளில் இருந்தே, தலைமை செயலர் பதவியில் என்னை நீடிக்க விட மாட்டார்கள் என, நினைத்தேன்; அது, நடந்தே விட்டது.

உங்கள் மகன் என்ன, 'பிசினஸ்' செய்கிறார்?

அவர், பெரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் களை அனுப்பி வைக்கும் மனித வள மேம் பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அது தவிர, எங்களின் பூர்வீக தொழில்களான நிலக் கரி உட்பட, சரக்குகளை கொண்டு செல்வது, துறை முகங்களில் சரக்குகளை கையாளுதல் என, சில தொழில்களை செய்து வருகிறார். அதற்கு, அவரின் மாமனார் குடும்பம் உறு துணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி வைத்தியநாதன் தன் சொந்த கருத்தாக கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார்' என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...