Thursday, December 29, 2016

மிரட்டுவது யார்!
கொலை செய்து விடுவதாக
மிரட்டுவது யார்: ராவ் பரபரப்பு பேட்டி

சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் அமரவைக்க, அவரது சொந்தங்கள் மும்முரம் காட்டி வருவதால், தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

இந்தச் சூழலில், ஜெ., ஆட்சிக்காலத்தில், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு, சமீப நாட்கள் வரை, அந்தப் பதவியில் தொடர்ந்த ராமமோகன ராவின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, ஒட்டு மொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

வருமான வரித்துறை சோதனையால் அதிர்ச்சி அடைந்த ராவ், அந்த சோதனையை ஒரு சதித்திட்டம் என்றும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார். 

இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

பத்திரிகையாளர்களை செவ்வாய்கிழமை சந்தித்தபோது, உங்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூட, தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்கிறீர்களே; ஏன் இந்த ஆவேசம்?

அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.ஆறு நாட்கள் நான் பட்ட மன வேதனை, இதய வலி... அதனால் ஏற்பட்ட ஆவேசத்தில் 

பேசிவிட்டேன். அரசுக்கு, 'கட்ஸ்' இருக்கிறதா என, இரண்டு முறை கூறியதை வாபஸ் பெறுகிறேன்.

வருமான வரித்துறையினரிடம், உங்கள் வங்கி, 'லாக்கர்' விபரங்களை தந்திருக்கிறீர்களா?

எனக்கும், என் மனைவிக்கும் எந்த வங்கியிலும் லாக்கர் கிடையாது. என் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. நிரந்தர வைப்புநிதி எதுவும் இல்லை. சொந்தமாக காரும் இல்லை. 

கடந்த, 10 ஆண்டு களாக, என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, எந்த சொத்துக்களும் வாங்கப் பட வில்லை. என் சொத்து விபரத்தை அரசுக்கு தெரிவித்துள்ளேன். அதை, ஐ.ஏ.எஸ்., இணைய தளத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளேன்.

உங்களை காத்திருப்போர் பட்டியலில், அரசு வைத்துள்ளது தவறு என்கிறீர்களா?

அதை தவறு என்று சொல்லவில்லை; அதை செய் வதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதற்கான உத்தரவு எனக்கு தரப்படவில்லை என்பதே, என் ஆதங்கம்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, 'இப்போதும் நான் தான் தலைமை செயலர்' என்று கூறியதற்கு என்ன காரணம்?

அது, எனக்கு ஏற்பட்ட இதய வலியில் கூறிய வார்த்தை. எனவே, அந்த வார்த்தையையும் நான் திரும்பப் பெறுகிறேன். இப்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மிகச்சிறந்த அதிகாரி. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.

உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல் கிறீர்களே; யாரால் ஆபத்து? யாரும் உங்களை மிரட்டுகிறார்களா?

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான்.ஆனால்,யாரால் ஆபத்து என, வெளிபடையாக

சொல்ல மாட்டேன். அதற்காக நான் பயந்தாங்கொள்ளி இல்லை.

உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வர என்ன காரணம்?

நான் தலைமைச் செயலராக இருப்பது பலருக்கு இடைஞ்சல்.

உங்களை அச்சுறுத்துவது அரசியல்வாதிகளா; அதிகாரிகளா?

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான். மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக் கப்பட்ட நாளில் இருந்தே, தலைமை செயலர் பதவியில் என்னை நீடிக்க விட மாட்டார்கள் என, நினைத்தேன்; அது, நடந்தே விட்டது.

உங்கள் மகன் என்ன, 'பிசினஸ்' செய்கிறார்?

அவர், பெரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் களை அனுப்பி வைக்கும் மனித வள மேம் பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அது தவிர, எங்களின் பூர்வீக தொழில்களான நிலக் கரி உட்பட, சரக்குகளை கொண்டு செல்வது, துறை முகங்களில் சரக்குகளை கையாளுதல் என, சில தொழில்களை செய்து வருகிறார். அதற்கு, அவரின் மாமனார் குடும்பம் உறு துணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...