Sunday, December 25, 2016

சேகர் ரெட்டியின் வங்கி லாக்கர்களுக்கு ‘சீல்’: பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகர் சிக்குகிறார்?


சேகர் ரெட்டிக்குச் சொந்தமான லாக்கர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். ரூ.24 கோடி பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு தொழிலபதிபர்கள் பலர் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்த னர். மேலும், வங்கிகள் மூலம் முறை கேடாக கருப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினர்.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி அவரது நண்பர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோருக்குச் சொந்த மான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் நடந்த சோதனையில், 177 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி ரொக்கம், ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பறி முதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத் தில் ரூ.24 கோடிக்கு ரிசர்வ் வங்கி யால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை நடந்தபோது காட்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்த தாரர் ஒருவருக்குச் சொந்தமான லோடு ஆட்டோவில் கடத்திச் சென்ற ரூ.24 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி யின் செல்வாக்கில் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகள் பலவற்றை அவர் பெற்றுள்ளார். சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணத்தை அவர் ஆட்டோவில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

இந்தப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், பணத்தை பதுக்க உதவிய அதிமுக பிரமுகரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சிபிஐ அதிகாரிகள் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வங்கி லாக்கருக்கு ‘சீல்’

சேகர் ரெட்டி கைது செய்யப்பட் டுள்ள நிலையில் காட்பாடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லாக்கர்கள் பயன்படுத்துவதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்த லாக்கரில் இருந்த பணம், தங்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த லாக்கர்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...