Sunday, December 25, 2016

தமிழகத்தில் வருமான வரி சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு: ஹைதராபாத் சிறப்புக் குழு சென்னையில் ஆலோசனை

ராமமோகன ராவ் | கோப்பு படம்


ராமமோகன ராவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரம் | சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக்குழு

தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மேலும் 60 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல் கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 144 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது.

ராமமோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம் (புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட) ரொக்கம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பல கோடி பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்பட்டது.

சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள், உறவினர்கள், ராமமோகன ராவ், அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் கோடிக்கணக் கான மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. எனவே, தமிழகத்தில் சோதனை மற்றும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 60 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை யிலான தனிப்படையினர் தமிழகத் தில் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக மேலும் பலரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இருந்து 60 அதிகாரிகளை வரவழைத் துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவல கத்துக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரி, அவரது அலுவல கத்தில் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகிய வற்றில் பதிவாகி இருந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வியூகம் அமைத்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, நெஞ்சுவலி என்று கூறி போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை எந்த நேரத்திலும் கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து மேலும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் வீடுகளில் அடுத்தடுத்து எந்த நேரமும் சோதனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு தமிழக போலீஸார் ஒத்துழைக்க மறுத்தால், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே ராமமோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போதும் துணை ராணுவத்தினர் தான் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர்.

அதேபோல இனிவரும் காலங் களிலும் துணை ராணுவத்தினரின் துணையுடன் சோதனைகளை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள் ளதாகவும் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டதா கவும், 20 கம்பெனி துணை ராணுவத் தினர் தயார் நிலையில் உள்ளதா கவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி முடிவால் முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வருமான வரித் துறையினர் சோதனை குறித்து ஊர்ஜிதப்படுத்தப்படாத பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. ‘ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய சொத்து ஆவணங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அவர், ரூ.1,700 கோடி மதிப்பில் துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார்’ என்றெல் லாம் பல தகவல்கள் வருகின்றன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள், சொத்து மதிப்பு குறித்த உண்மையான தகவல்களை வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமமோகன ராவுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி

சோதனையில் சிக்கிய பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதில், அமலநாதன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 55 கேள்விகளை கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில்களை பெற்றுள்ளனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராமமோகன ராவும் அவரது மகனும் விசாரணைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. மற்றொரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறோம் என வேறு நபர் மூலம் தகவல் அனுப்பியதாகவும், அதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராமமோகன ராவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.






விவேக், தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ராமமோகன ராவுக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உளவுப் பிரிவு போலீஸார் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர். எந்த நிலையிலும் விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...