Tuesday, December 27, 2016

மிஸ்டர் ராம மோகன ராவ்!- விளாசும் தமிழிசை 


தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர் என ராம மோகன ராவ் கூறியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

"என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர்" என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராம மோகன ராவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்ல ராம மோகன ராவ் யார்? அதற்கு அவருக்கு உரிமையில்லை. பாதுகாப்பு இல்லாத இடத்தில் அமர்ந்திருந்தால், உயிருக்கு ஆபத்து வரதான் செய்யும். துப்பாக்கியை வைத்திருந்தாலே, துணை ராணுவம் சுட்டுவிடுவார்களா? பதவியில் இல்லாத போதே, ராம மோகன ராவ் இப்படி பேசுகிறார்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், ராம மோகன ராவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா இருந்திருந்தால் நுழைந்திருக்க முடியாது என ராவ் சொல்வது சரியே. யாரை மிரட்ட பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ராம மோகன ராவ் மற்றும் அ.தி.மு.க.வின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...